Showing posts with label *கணபதியே வருவாய் அருள்வாய். Show all posts
Showing posts with label *கணபதியே வருவாய் அருள்வாய். Show all posts

Saturday, December 09, 2006

1. கணபதியே வருவாய் அருள்வாய்

அன்று பாரதி பாடினான் - கண்ணன் பாட்டு!
இன்று நாமும் பாடுகிறோம் - கண்ணன் பாட்டு!!

மார்கழி மாதத்தில் இந்தப் புதிய வலைப்பூ.
இதில், நம்மை உடையவன், நாராயணன் நம்பி!
அவனைக் குறித்த தமிழ்ப் பாடல்களின்

  • வரி (lyrics),
  • ஒலி (audio clips),
  • ஒளி (video clips).
எல்லாம் இடம் பெறப் போகின்றன! திரை இசை மட்டும் இல்லை, பிரபலமான எல்லாப் பாடல்களும் தான்!

இந்த வலைப்பூ நன்கு பூத்து, நாளும் மணம் தந்து மகிழ்விக்க,
கணபதியானை வணங்கித் துவங்குகிறோம்!
என்றும் போல் உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டுகிறோம்!

கூட்டு முயற்சியாக, குமரன், பாலாஜி மற்றும் அடியேன்;
நீங்களும் இந்த முயற்சியில் பங்கு கொண்டால் எல்லாரும் மகிழ்வோம்!
குழுவில் சேர வேண்டுமா?
வலப்பக்கச் சுட்டியை - சொடுக்குங்கள்!
நற்றமிழ்ப் பாடல்களை - அடுக்குங்கள்!!




பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும்

கணபதியே வருவாய் அருள்வாய்
(கணபதியே)

மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க
மங்கள இசை என்தன் நாவினில் உதிக்க

(கணபதியே)

ஏழு சுரங்களில் நான் இசைபாட
எங்குமே இன்பம் பொங்கியே ஓட
தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட
தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட

(கணபதியே)

தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க
தொனியும் மணியென கணீர் என்றொலிக்க
ஊக்குக நல்லிசை உள்ளம் களிக்க
உண்மை ஞானம் செல்வம் கொழிக்க

(கணபதியே)



பாடல்: கணபதியே வருவாய் அருள்வாய்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
எழுதியவர்:

ராகம்: நாட்டை
தாளம்: ஆதி
படம்:

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP