Showing posts with label *துளசி தளமுலசே சந்தோஷமுகா. Show all posts
Showing posts with label *துளசி தளமுலசே சந்தோஷமுகா. Show all posts

Friday, December 31, 2010

New Year! துளசி தளம்! உன்னால் முடியும் தம்பி!

அனைவருக்கும் & கண்ணன் பாட்டு நேயர்களுக்கும்...,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)
Wish You All A Very Happy New Year-2011
புத்தாண்டில், "நிம்மதியான சந்தோஷங்கள்", உங்களைப் பூப்போலச் சூழட்டுமென என் முருகனிடம் சொல்லிக் கொள்கிறேன்! :)




அது என்ன "நிம்மதியான" சந்தோஷம்? :)
மனசுக்கு நிம்மதி இருந்தாலே, பாதி சந்தோஷம் வந்துரும்! மீதி சந்தோஷம், நாம் தேடி அடைஞ்சிக்குவோம்! என்ன சொல்றீங்க? :)

சந்தோஷம்-மகழ்ச்சி என்பதால், புத்தாண்டு அன்று ஒரு "சந்தோஷமுகா" பாட்டு(லு) இப்புடு சூஸ்தாவா? :)

கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்பதற்கு ஏற்றவாறு,
ஒரு அழகிய தியாகராஜ கீர்த்தனை!
அதை மெட்டு மாறாமல், தமிழாக்கி இதோ! = சந்தோஷமுகா! சந்தோஷமுகா!

சந்தோஷம்-ன்னா கூடவே துளசி தளம் வருது பாருங்க! :)
அலைச்சலுக்கும், பெரும் காத்திருப்புக்கும் பிறகு, காற்றில் மெல்லீசாய் வரும் துளசி வாசமே ஒரு தனி சந்தோஷம் தானே!
கூடவே பல பூக்களின் வாசமும் பாட்டில் வீசுது! கேட்டுக்கிட்டே படிங்க!


துளசி தளமுலசே
சந்தோஷமுகா...பூஜிந்து

துளசி தளம் அதினால்
மகிழ்ச்சியுடன்...பூசித்து

பலுமாரு சிறகாலமு
பரமாத்முனி பாதமுலனு
(துளசி தளமுலசே)

பல்லாண்டு பல்லாண்டே
பெருமாளின் திருவடிக்கே!
(துளசி தளம் அதினால்)

சரசீருஹ புன்னாக சம்பக
பாடல குருவக
கரவீர மல்லிக சுகந்த
ராஜ சுமமுல
(துளசி தளமுலசே)

தாமரை புன்னையும் சண்பகமும் - தரு
பாதிரி குருந்தை மலருடனே
அரளியும் மல்லியும் மணங்கமழும் -என்
மனம் மலர் பூக்கள் பலவுடனே
(துளசி தளம் அதினால்)

தரணி வி ஒக்க பர்யாயமு
தர்மாத்முனி சாகேத
புர வாசுனி ஸ்ரீ ராமுனி
வர தியாகராஜ நுதுனி
(துளசி தளமுலசே)

தரணியில் எழுஎழு பிறவி தனில் - அற
ஆழியை அயோத்தி ஆள்பவனை
மனமதில் வாழுமென் ராகவனை - உனை
தியாக ராசன் தினம் பாடி மகிழவே
(துளசி தளம் அதினால்)



பாட்டில் வரீசையா, பல பூக்களைச் சொல்லி அர்ச்சிக்கிறாரே தியாகராஜர்!
லேடீஸ் & ஜென்டில் லேடீஸ்...
அத்தனை பூவையும் நோட் பண்ணீங்களா?
அதுல, சில பூவை எல்லாம் கண்ணுல பார்த்தாச்சும் இருக்கீங்களா? :))

1. தாமரை
2. புன்னை
3. சண்பகம்
4. பாதிரி
5. குருந்தை
6. அரளி
7. மல்லி
8. துளசீ தளம்
&
9. மனப் பூ


எனக்குக் கடைசிப் பூவை நல்லாவே தெரியும்-ப்பா! ஏன்-ன்னா அது தான் நான் சொல்லும் பேச்சைக் கேட்கவே கேட்காது! :)



உம்.....தமிழாக்கம் என்பதால் என்னோட குரலில் கேட்டீங்க! உங்க விதி! :)
ஆனா மூலப் பாடலை நல்ல குரலில்...இசைக் கருவிகளில் கேட்போமா? One Stop Shop for this Song!

திரைப்படம்: உன்னால் முடியும் தம்பி! ஜேசுதாஸ் குரலில்...



* நித்ய ஸ்ரீ
* Hyderabad Brothers

படம்: ப்ரணய காலம் (Dont Miss; Again Yesudass, but in a different tone)



வீணை:



கொல்கத்தா கலா-சித்ரா




மகரந்தம் மணக்க...
மலர்கள் பூத்துக் குலுங்க...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)துளசி தளமுலசே, சந்தோஷமுகா....

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP