29. நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!
கண்ணே கனியமுதே என்ற ஒரு படம் வந்தது! ஞாபகம் இருக்கா? அதில் வரும் இந்தப் பாரதியார் பாடல் மிகவும் இனிமை! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில், ஜேசுதாஸின் தேன் குரல்!
எப்பவும் ராதை தானே கண்ணனுக்கு ஏங்குகிறாள்!
அடுத்த கண்ணன் பாட்டில், ராதைக்காக அந்தக் கண்ணன் ஏங்க வேண்டும், சொல்லிட்டேன், ஆமா! - அப்படின்னு நம்ம திருவரங்கப்ரியா ஒரு போடு போட்டார்கள்! இதோ நிறைவேற்றியாகி விட்டது அரங்கன் ஊர் ஆணையை! :-)
பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்! (Opens in Real Player)
கண்ணம்மா, கண்ணம்மா என்று கண்ணன் துடிக்கிறானே! பாவம்பா அந்தக் கண்ணன்! :-)
நண்பர் இலவசக்கொத்தனார், மகராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடிய mp3 ஒன்றைத் தனி மடலில் அனுப்பியுள்ளார்; அவருக்கு நம் நன்றி. இதோ சுட்டி!
San Diegoவில் சந்தானம் அவர்கள் பாடுவது என்று நினைக்கிறேன். ராகம்: பாகேஸ்ரீ
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா
தன்னையே சசியென்று சரணம் எய்தினேன்
(நின்னையே)
பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே
கண்ணம்மா
மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீசநீ
கண் பாராயோ வந்து சேராயோ
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
(நின்னையே)
மார்கழி 25 - ஒருத்தி மகனாய்ப் பிறந்து - இருபத்தி ஐந்தாம் பாமாலை
வரிகள்: சுப்ரமணிய பாரதியார்
குரல்: கே.ஜே ஏசுதாஸ், S.சசிரேகா
படம்: கண்ணே கனியமுதே
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
