Showing posts with label *ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை. Show all posts
Showing posts with label *ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை. Show all posts

Friday, May 27, 2011

ஜிரா பிறந்தநாள்! சுந்தராம்பாள் பாடிய பெருமாள் பாட்டு!

இன்று, இனியது கேட்கின் தலைமகனுக்கு இனிய பிறந்தநாள்!

எனக்கும் இன்று பிறந்தநாள் தான்! = மீண்டும் முருகனருள்/கண்ணன் பாட்டில் எழுதவொரு இனிய பிறந்தநாள்!:)
இரண்டுக்கும் ஒன்றாய்........முருகா என்று வாழ்த்துவோமா? :)

இவனுக்கு மூன்று முகம் :)
இவன் தலைவனுக்கு ஆறு முகம்! :)


நம்ம ஜிரா என்னும் கோ.இராகவனுக்கு
இன்று,
(May-27-2011)
இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க, மக்கா! :)




ஒரு ஊர்ல...ஒரு நாள்....சில்க் ஸ்மிதா + முருகன் + ஜிரா - மூவரும் சந்தித்த பதிவு இங்கே! :) Happy Birthday Ragava :)


கே.பி. சுந்தராம்பாள் - என்னை மிகவும் பாதித்து விட்ட ஒரு பெயர்!
காதல் மனம் என்றால் என்ன?
Kodumudi Balambal Sundarambal! அவருடைய "அக வாழ்வை" ஒட்டி, முன்பு இட்ட பதிவு இங்கே!

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
பின்னம் அவனுடைய ஆரூர் கேட்டாள்
பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்!
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!

KBS அம்மாவின் முருகக் குரலில், பெருமாள் பாட்டா?
அம்மா வாயில் சதா முருகா என்று மட்டும் தானே வரும்? மறந்தும் புறம் தொழுவார்களா என்ன? :)




ஒரு வகையில் KBS அம்மாவின் காதல் கெட்டிப்பட, கண்ணனே ஒரு "பாழும்" காரணமாகப் போய்விட்டான்! முன்பு குடுத்த வரலாற்றுப் பதிவைப் படிச்சிப் பாருங்க, தெரியும்!
திருநீற்றையே நீரில் குழைத்து, நெடுக்காக நாமம் போல் இட்டுக் கொண்டு, அவர்கள் நடித்த படம்: திருமலை தென்குமரி! அதில் தான் KBS கண்ணன் பாட்டு!

பிறந்த நாள் பஞ்சாமிர்தம் சாப்பிடுவோமா? இதோ பாடுறாங்க பாருங்க..."ஏழுமலை இருக்க எனக்கென்ன மனக் கவலை?"




ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை? ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை!
(ஏழுமலை இருக்க)


பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு!
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு!
(ஏழுமலை இருக்க)

கால்வண்ணம்...அகலிகைக்கு வாழ்வு தந்தது!
கைவண்ணம்...திரெளபதையின் மானம் காத்தது!
மால்வண்ணம்...திருமகளின் மனம் கவர்ந்தது!
மணிவண்ணன்...கருணை நம்மை மகிழ வைத்தது!
(ஏழுமலை இருக்க)


ஒரு பிடி அவல் கொடுத்தே, குசேலன் உறவு கொண்டான்!
ஓடத்தில் ஏற்றி வைத்தே, குகன் உடன் பிறப்பானான்!
தான் சுவைத்த பழங்களையே, தந்தனள் தாய் சபரி!
தருவதற்கு ஒன்றுமில்லை, தலைவனே எமை ஆதரி!
(ஏழுமலை இருக்க)

படம்: திருமலை தென்குமரி
குரல்: கே.பி.சுந்தராம்பாள்
வரி: கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்


இது தான், KBS அம்மாவின் முருகக் குரலில், பெருமாள் பாட்டு!


அப்பா...
என் நினைவுக்குத் தெரியாத காலத்தில் இருந்து எனக்கு நின்று விட்ட திருவேங்கடமுடையானே!
நாயேன், உன் வீட்டு வாசலை வந்தடைந்தேன்....
அடியேனை அணைத்து, ஆட்கொண்டு அருளே! என் முருகனோடு என்னை ஏழேழ் பிறவிக்கும் சேர்த்தருளே!

Monday, June 04, 2007

54. கே.பி.சுந்தராம்பாளா?



ஏலா ஒனக்குக் கே.பி.சுந்தராம்பாள் தெரியுந்தானே?

ஆமு. தெரியும்.

எப்படில தெரியும்.

அவங்கதானல ஔவையாரு.

அவங்க ஔவையாரா? ஒரு விதத்துல அப்படித்தாம்ல. ஆனா அவங்க ஔவையாரா நடிச்சவங்க. நெறைய பாட்டுக பாடியிருக்காங்க.

ஆமு. ஆமு. தெரியும். முருகன் பாட்டுக எக்கச்சக்கமா பாடியிருக்காங்க. நாங்களும் கேட்டுருக்கம்லேய்! கேட்ருக்கம். வாழைப்பழத்தைப் பிழிந்து....

ஏலேய் நிப்பாட்டு....தெரியலைன்னா வாயப் பொத்து...அப்பு அப்புனேன்னா...யாரு பாட்டல கிண்டல் பண்ணுத..அது வாழைப்பழமில்ல...ஞானப்பழம்.

என்ன...கோவிக்க..உண்மைக்குந் தெரியாமத்தாம்ல பாடுனேன். தப்புன்னா திருத்தாம கோவிக்கான். அவங்கதான் முருகன் பாட்டு பாடியிருக்காங்கன்னு சொன்னம்லா. அது சரிதான.

அது என்னவோ சரிதான். அவங்க முருக பக்தை. முருகன் மேல நெறைய பாட்டுப் பாடியிருக்காங்க. திருவிளையாடல் படத்துல....காரைக்கால் அம்மையார் படத்துல.....சிவபெருமான் மேலையும் பாடியிருக்காங்க. சக்திலீலை படத்துல அம்மன் மேல பாடியிருக்காங்க....அதெல்லாம் எப்ப? எழுவது வயசுக்கு மேல. ஆனா....அவங்க ஏழுமலை மேலையும் பாடியிருக்காங்க தெரியுமா!

என்னல சொல்லுத! ஏழுமலைல இருக்காரே வெங்கடேசரு. அவரு மேலையா....ஆச்சிரியமா இருக்கே! என்ன பாட்டு? வெவரமாச் சொல்லுல!

திருமலைத் தெய்வம்னு ஒரு படம். ஏ.பி.நாகராஜன் எடுத்தாரு. அதுல கே.பி.சுந்தராம்பாள் நாராயணியம்மா அப்படீங்குற பாத்திரத்துல நடிச்சாங்க. அந்தப் பாத்திரத்துக்காகத்தான் ரெண்டு பாட்டு பாடியிருக்காங்க. ஒன்னு "நாளெல்லாம் உந்தன் திருநாளே மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே"ங்குற பாட்டு. இது அவங்க ஏற்கனவே பாடுன "நாளெல்லாம் பூசம் திருநாளே"ங்குற பாட்டு மெட்டுதான். ஆனா இன்னொரு பாட்டு செம பாட்டு. அப்ப புதுப்பாட்டு. குன்னக்குடி இருக்காரு தெரியும்ல..

யாரு...சிலுக்குச் சட்டை போட்டுக்கிட்டு வருவார்ல...பிடில் வாசிப்பாரே?

அவரேதான். அவரு இசையமைச்ச படம் அது. அந்தப் பாட்டு "ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை"ன்னு ஜம்முன்னு இருக்கும்லா! கேட்டுப் பாக்கியா?

சரி போடு, கேக்கேன். மாட்டேன்னா விடவா போற?






ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை
ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை


பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு
ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை

கால்வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது
கைவண்ணன் திரவுபதையின் மானம் காத்தது
மால்வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது
மணிவண்ணன் கருணை நம்மை மகிழவைத்தது
ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை

ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான்
ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன் பிறப்பானான்
தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி
தருவதற்கொன்றுமில்லை தலைவனே எமை ஆதரி
ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை


அன்புடன்,
கோ.இராகவன்

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP