பாப்பா ராமாயணம்
(ஸ்ரீராமநவமி எனும் புனிததினமான இன்று, முதல் பகுதியிலிருந்து இந்த பன்னிரண்டாவது பகுதிவரை ஒருவரிவிடாமல் ஒருமுறை படிப்பவர்கள், 1008 முறை ராமநாம உச்சாரணம் செய்த திருப்தியையும் பெறலாம்)
நாயகனைப் புகலடைந்தனராம்;
நடந்ததை அவருக்கு நவின்றனராம்.
அனைவரும் கற்கள் சுமந்தனராம். .
பாலம் அமைக்க முனைந்தனராம்;
அணிலாரும் மண் தந்து உதவினராம்.
அதன் செயலை ராமர் புகழ்ந்தனராம்.
அன்பாய் அணிலைத் தடவினராம்;
முதுகில் முக்கோடுகள் பதித்தனராம்.
அனைவரும் பாடுபட்டுழைத்தனராம்;
கடல்மேல் பாலம் அமைத்தனராம்.
சுலபமாய்க் கடலைக் கடந்தனராம்;
லங்காபுரிதனை அடைந்தனராம்.
ராவணன் சேனையை அனுப்பினராம்;
வானரருடன் போர் தொடுத்தனராம்.
இந்த்ரஜித் லக்ஷ்மனனைத் தாக்கினராம்;
மூர்ச்சித்து லக்ஷ்மணன் சாய்ந்தனராம்.
மருத்துவர் நாடியைப் பார்த்தனராம்;
சஞ்சீவினி மூலிகை வேண்டினராம்.
அனுமன் வடதிசை பறந்தனராம்;.
சஞ்சீவினிமலை கொண்டு வந்தனராம்.
லக்ஷ்மணன் புத்துயிர் பெற்றனராம்;
கொடியோரைப் போரிட்டுக் கொன்றனராம்.
தசமுகன் தலைகள் தாழ்ந்தனராம்.
தாளாத் துயரத்தில் ஆழ்ந்தனராம்.
சினத்துடன் போர்க்களம் புகுந்தனராம்;
ராமருடன் கடும்போர் புரிந்தனராம்.
ராமர் பாணமழை பொழிந்தனராம்;
ராவணன் வலிமை இழந்தனராம்.
தீயோனை ராமர் வீழ்த்தினராம்;
தூயரை இன்பத்தில் ஆழ்த்தினராம்.
ஜானகி பதியோடிணைந்தனராம்.
ஆனந்தக் கடலில் நீந்தினராம்.
விபீஷணனை ராமர் அழைத்தனராம்;
இலங்கையின் வேந்தனாயமர்த்தினராம்;
அனைவரும் இலங்கை துறந்தனராம்;
அயோத்தி நோக்கிப் பறந்தனராம்.
பரதன் அண்ணனை அணைத்தனராம்;
அரச பொறுப்பை ஒப்படைத்தனராம்.
ராமரை வசிஷ்டர் அழைத்தனராம்;
அரியணையில் சீதையோடமர்த்தினராம்.
பட்டாபிஷேகம் செய்வித்தனராம்;
அனைவரும் கண்டு களித்தனராம்.
ராமர் ஆட்சிப்பொறுப்பேற்றனராம்
நீதிதவறாமல் நாடாண்டனராம்.
மக்களும் குறையின்றி வாழ்ந்தனராம்;
'ராம ராஜ்யம் ' என்று புகழ்ந்தனராம்.
ராம ராம ஜெய ராஜாராம்;
ராம ராம ஜெய சீதாராம்.
ராம ராம ஜெய ராஜாராம்;
ராம ராம ஜெய சீதாராம்.
----------

