Showing posts with label பித்துக்குளி. Show all posts
Showing posts with label பித்துக்குளி. Show all posts

Sunday, August 21, 2011

கண்ணன் பிறந்த நாள்: பால் வடியும் முகம்!

கண்ணன் பாட்டு மக்களுக்கு....இனிய கண்ணன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்! (Aug-21, 2011)

கோகுலாஷ்டமி - கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!

இன்னிக்கி எனக்கு மிகவும் பிடிச்ச
பால் வடியும் முகம்...நினைந்து நினைந்து...என் உள்ளம்
பரவசம் மிகவாகுதே - கண்ணா!


பித்துக்குளி-ன்னாலே என்ன ஞாபகத்துக்கு வரும்?
எனக்கு முருகன் ஞாபகம் வருவான்! :)
அப்பறமா முருகதாஸ்-இன் கூலிங் க்ளாஸ், தலையில் காவி Scarf!
மனுசன் அப்பவே என்ன ஸ்டைலா இருக்காரு-ன்னு பாருங்க! :))

ஒத்தை ஹார்மோனியம் மட்டுமே வச்சிக்கிட்டு......இந்தக் கொங்கு நாட்டுத் தங்கம், எதையும் கொஞ்சம் வித்தியாசமா பண்ணும்!

கர்நாடக பாடல்களை, அப்படியே இழு இழு-ன்னு இழுக்காம, அதை வேறொரு ஸ்டைலில், மக்களோடு மக்களாச் சேர்ந்து, பாடிக் காட்டியவர்!
இதனால் தான், இந்தக் காலத்திலும், ஹார்மோனியம் மட்டுமே வச்சிக்கிட்டு, கல்லூரி மாணவர்களைக் கூடப் பித்துக்குளிக்கு, "ஓ" போட வைக்குது!

Fast Beat காவடிச் சிந்தை, செஞ்சுருட்டி/சுருட்டி/நாதநாமக் கிரியை-ன்னு போடறது தப்பில்லை!
ஆனா காவடிச் சிந்தின் அந்த ஜீவனான "துள்ளல்" போயிறக் கூடாதுல்ல? பண்டிதர்கள் அதை இழுத்து இழுத்தே ஜீவனைப் போக்கிருவாங்க! :)
ஆனால் நம்ம பித்துக்குளியார் காவடிச் சிந்தைக் கேளுங்க! சுருட்டி ராகமும் இருக்கும்! காவடியைச் "சுருட்டிக்"கிட்டு போகாமலும் இருக்கும்! :)

சான்றாக, இந்தப் பாட்டையே எடுத்துக்கோங்க!
பால் வடியும் முகம் - கண்ணா, என்பது ஊத்துக்காடு வேங்கட கவியின் கீர்த்தனை! நடனத்துக்குன்னே பாடப்பட்ட அழகான கண்ணன் பாடல்! இதை எப்படி முருகதாஸ் Handle பண்றாரு?

* முதலில் பச்சை மாமலை போல் மேனி-ன்னு, ஆழ்வாரை Hum பண்ணி ஆரம்பிக்கறாரு!
* அடுத்து, ஒரு டெம்ப்போ உருவாக்க, மெல்லிய பஜனை...மக்களோடு!
* அடுத்து, பாஆஆஆஆஆல் வடியும் முகம்...நினைந்து நினைந்து உள்ளம்.....பரவசம் மிகவாகுதே....கண்ணாஆஆஆஆ!

கேட்டுக்கிட்டே பதிவை வாசிக்க, இதோ சொடுக்குங்கள்: பித்துக்குளியின் மாயக்குரலில், மாயோன் பாட்டு - பால் வடியும் முகம்! Bhajan Version, here

பால் வடியும் முகம்...



பால் வடியும் முகம்
நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவசம் மிக வாகுதே - கண்ணா!
(பால் வடியும்)

நீலக் கடல் போலும் நிறத்தழகா - எந்தன்
நெஞ்சம் குடி கொண்ட
அன்று முதல் இன்றும்
எந்தப் பொருள் கண்டும்
சிந்தனை செலா தொழிய
(பால் வடியும்)
நீர் வடியும் முகம்...

வான முகட்டில் சற்றே
மனம் வந்து நோக்கினும்
மோன முகம் வந்து தோனுதே!

தெளிவான தண்ணீர் தடத்தில்
சிந்தனை மாறினும்
சிரித்த முகம் வந்து காணுதே!

கானக் குயில் குரலில்
கருத்(து) அமைந்திடினும் - உன்
கானக் குழலோசை மயக்குதே!

கருத்த குழலொடு நிறுத்த மயில் சிறகு - இறுக்கி அமைத்த திறத்திலே
கான மயிலாடும் மோனக்குயில் பாடும் - நீல நதியோடும் வனத்திலே
குழல் முதல் எழிலிசை, குழைய வரும் இசையில் - குழலொடு மிளிர் இளங் கரத்திலே
கதிரும் மதியும் என நயன விழிகள் இரு - நளினமான சலனத்திலே

காளிங்கன் சிரத்திலே
பதித்த பதத்திலே
என் மனத்தை இருத்திக்
கனவு நனவினொடு
பிறவி பிறவி தொறும்
கனிந்துருக வரம்தருக பரங்கருணை....
(பால் வடியும்)

வரிகள்: ஊத்துக்காடு வேங்கட கவி
ராகம்: நாட்டக் குறிஞ்சி
தாளம்: ஆதி
குரல்: பித்துக்குளி முருகதாஸ்

இசைக் கருவிகளில்:
* வயலின் - குன்னக்குடி
* நாதசுரம்
* வீணை

Friday, April 23, 2010

பித்துக்குளி ஹிட்ஸ்: பால் வடியும் முகம் நினைந்து நினைந்து!

கண்ணன் பாட்டு மக்களே, வணக்கம்!
இன்னிக்கி எனக்கு மிகவும் பிடிச்ச முருக-தாசர் ஒருத்தரு..."கண்ணா, என் பால், அன்-பால், உன் பால் வடியும் முகம், ஹைய்யோ"-ன்னு உருகிப் போயி பாடுறாரு! யாரு அந்த முருகதாசர்-ன்னு கேட்கறீங்களா?

நம்ம பித்துக்குளி முருகதாசரே தான்!
அவர் பாடுவது:
பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவசம் மிகவாகுதே - கண்ணா!

மொதல்ல பித்துக்குளியார் பற்றி லைட்டாப் பார்ப்போம்! அப்பாலிக்கா பாட்டுக்குப் போவோம்! ஓக்கேவா?
மொதல்ல எப்பமே அடியார்கள்! அடியார்கள் வாழ..அரங்கநகர் வாழ..சடகோபன் தண் தமிழ் நூல் வாழ :)



பித்துக்குளி-ன்னாலே என்ன ஞாபகத்துக்கு வரும்?
எனக்கு முருகன் ஞாபகம் வருவான்! :)
அப்பறமா முருகதாஸ்-இன் கூலிங் க்ளாஸ், தலையில் காவி Scarf! :)
மனுசன் அப்பவே என்ன ஸ்டைலா இருக்காரு-ன்னு பாருங்க! :))

பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் இயற்பெயர் பாலசுப்ரமணியம்! கோயம்புத்தூர் காரரு!

இந்தக் கொங்கு நாட்டுத் தங்கம், எதையும் கொஞ்சம் வித்தியாசமா பண்ணும்!
கர்நாடக பாடல்களை, அப்படியே இழு இழு-ன்னு இழுக்காம, அதை பஜனை ஸ்டைலில், மக்களோடு மக்களாச் சேர்ந்து, பாடிக் காட்டியவர்!
இதனால் தான், இந்தக் காலத்திலும், ஹார்மோனியம் மட்டுமே வச்சிக்கிட்டு, கல்லூரி மாணவர்களைக் கூடப் பித்துக்குளிக்கு, "ஓ" போட வைக்குது!

Fast Beat காவடிச் சிந்தை, செஞ்சுருட்டி/சுருட்டி/நாதநாமக் கிரியை-ன்னு போடறது தப்பில்லை! ஆனா காவடிச் சிந்தின் அந்த ஜீவனான "துள்ளல்" போயிறக் கூடாதுல்ல?
பண்டிதர்கள் அதை இழுத்து இழுத்தே ஜீவனைப் போக்கிருவாங்க! :)
ஆனால் நம்ம பித்துக்குளியார் காவடிச் சிந்தைக் கேளுங்க! சுருட்டி ராகமும் இருக்கும்! காவடியைச் "சுருட்டிக்"கிட்டு போகாமலும் இருக்கும்! :)

சான்றாக, இந்தப் பாட்டையே எடுத்துக்கோங்க!
பால் வடியும் முகம் - கண்ணா, என்பது ஊத்துக்காடு வேங்கட கவியின் கீர்த்தனை! நடனத்துக்குன்னே பாடப்பட்ட அழகான கண்ணன் பாடல்கள்! இதை எப்படி முருகதாஸ் Handle பண்றாரு?
* முதலில் பச்சை மாமலை போல் மேனி-ன்னு, ஆழ்வாரை Hum பண்ணி ஆரம்பிக்கறாரு!
* அடுத்து, ஒரு டெம்ப்போ உருவாக்க, மெல்லிய பஜனை...மக்களோடு!
* அடுத்து, பாஆஆஆஆஆல் வடியும் முகம்...நினைந்து நினைந்து உள்ளம்.....பரவசம் மிகவாகுதே....கண்ணாஆஆஆஆ!

கேட்டுக்கிட்டே பதிவை வாசிக்க, இதோ சொடுக்குங்கள்: பித்துக்குளியின் மாயக்குரலில், மாயோன் பாட்டு - பால் வடியும் முகம்! Bhajan Version, here

பால் வடியும் முகம்...



பால் வடியும் முகம்
நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவசம் மிக வாகுதே - கண்ணா!
(பால் வடியும்)

நீலக் கடல் போலும் நிறத்தழகா - எந்தன்
நெஞ்சம் குடி கொண்ட
அன்று முதல் இன்றும்
எந்தப் பொருள் கண்டும்
சிந்தனை செலா தொழிய
(பால் வடியும்)
நீர் வடியும் முகம்...

வான முகட்டில் சற்றே
மனம் வந்து நோக்கினும்
மோன முகம் வந்து தோனுதே!

தெளிவான தண்ணீர் தடத்தில்
சிந்தனை மாறினும்
சிரித்த முகம் வந்து காணுதே!

கானக் குயில் குரலில்
கருத்(து) அமைந்திடினும் - உன்
கானக் குழலோசை மயக்குதே!

கருத்த குழலொடு நிறுத்த மயில் சிறகு - இறுக்கி அமைத்த திறத்திலே
கான மயிலாடும் மோனக்குயில் பாடும் - நீல நதியோடும் வனத்திலே
குழல் முதல் எழிலிசை, குழைய வரும் இசையில் - குழலொடு மிளிர் இளங் கரத்திலே
கதிரும் மதியும் என நயன விழிகள் இரு - நளினமான சலனத்திலே

காளிங்கன் சிரத்திலே
பதித்த பதத்திலே
என் மனத்தை இருத்திக்
கனவு நனவினொடு
பிறவி பிறவி தொறும்
கனிந்துருக வரம்தருக பரங்கருணை....
(பால் வடியும்)

வரிகள்: ஊத்துக்காடு வேங்கட கவி
ராகம்: நாட்டக் குறிஞ்சி
தாளம்: ஆதி
குரல்: பித்துக்குளி முருகதாஸ்

இசைக் கருவிகளில்:
* வீணை

பாடகர் குரலில்:
* மகராஜபுரம் சந்தானம்
* சுதா ரகுநாதன்
* நித்யஸ்ரீ
* செளம்யா



பித்துக்குளியாருக்கு இப்போ வயசு 95 இருக்கும்-ன்னு நினைக்கிறேன்! அன்பர்களால், "முருகா"-ன்னே அழைக்கப்படுகிறார்!
"நான்" என்ற சொல்லே அவர் வாயில் வராது! ஒன்லி "அடியேன்"! இல்லீன்னா தன்னையே கூட "அவன்"-ன்னு தான் சொல்லிப்பாரு! :)
எளியோர்களின் தத்துவத்தால் வைணவம் பிடிச்சிப் போய், அடியேன், அடியேன்-ன்னு சொல்லிக்கிட்டாலும், முருகன் தான் மனத்துக்கு இனியான்! என்னையப் போலவோ? :)

பாடிய கேசட்டுகளில் எக்கச்சக்கமான கண்ணன் பாடல்கள்! அது என்னமோ தெரியலை........பஜனை-ன்னு வந்துட்டாலே, இந்தக் கண்ணன் தான் சரியான பஜனை பார்ட்டி போல! :)

திருப்புகழ் பாடல்கள் பலவும், தன் ஸ்டைலில் பாடி இருக்கார்! ஆழ்வார் பாசுரங்களும் அப்படியே! ரொம்ப அருமையா இருக்கும்! ஆனால் மிகவும் ஹிட்டானது என்னவோ..கார்த்தி கேயா, கலியுக வரதா பாட்டு தான்! முருகனருள் வலைப்பூவில் அப்பறமா இடறேன்!
சினிமாவிலும் பாடி உள்ளார் - நாடறியும் நூறுமலை! குன்னக்குடி இசையில், தெய்வம் படத்துக்காக!

சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடித் துறவறத்தில் திளைத்தவர்........சுமார் அறுபது வயதில், உடன் பாடிடும், தேவி சரோஜா என்ற அம்மையாரை மணந்து கொண்டார்!
முதலில் சாஸ்திரோத்காரமான மடங்களில் எதிர்ப்பு கிளம்பினாலும், கண்ணன் அருளால், எதிர்ப்புகள் அடங்கின! தேவி முருகதாஸ் + பித்துக்குளி முருகதாஸ் இணைந்து, ராதா கல்யாணம் பாடல்களை எல்லாம் பாடிப் பிரபலம் ஆக்கினர்!

எல்லாஞ் சரி! "ஊத்துக்குளி" வெண்ணெய் தெரியும்! அது என்ன "பித்துக்குளி"?
சின்ன வயசில், தெருவில் விளையாடும் போது, ரோட்டுல போற ஒருவர் மேல கல்லெறிஞ்சி இருக்கான் இந்த வாலுப்பையன்!
அடிபட்ட பெரியவரோ பரம பெருமாள் பக்தரும், மகா ஞானியுமான பிரம்மானந்த பரதேசியார்! நெற்றியில் இரத்தம் வடிய...
"அடேய்...நீ என்ன பித்துக்குளியா (பைத்தியமா)? ஒரு நாள் இல்லை ஒரு நாள், என்னையப் போலவே நீயும் ஆகப் போற பாரு!"-ன்னு சொல்ல...

* அப்படியே ஆகி,
* பித்துக்குளியாகி,
* கண்ணன்-முருகனில் நம்மையும் பித்துக்குளியாக்கும்,
பித்துக்குளி முருகதாசர் திருவடிகளே சரணம்!!!

இவர் கச்சேரிக் காசு பலவும் போகுமிடம் = அனாதைச் சிறார் விடுதிக்கு! எங்கூருக்கு அருகில் உள்ள வாலாஜாப்பேட்டை "தீனபந்து அனாதைச் சிறுவர் ஆசிரமம்" தான் அது!
பித்துக்குளி ஐயா-அம்மா! உங்கள் சிறியேனை ஆசீர்வதியுங்கள்! - பெருகாதல் உற்ற தமியேனை, முருகா நீ, பிரியாது பட்சம் மறவாதே! பிரியாது பட்சம் மறவாதே! முருகாஆஆஆ...எந்தப் பொருள் கண்டும் சிந்தனை செலா தொழிய......

Thursday, July 17, 2008

மாமனை மறந்த மருகன் அடியார்கள்...



" என்ன இது... பெருமாள் தனியாக இருக்கிறாரே?! "

ஸ்ரீதேவி, பூமிதேவி, நீளாதேவி, ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், முனிவர்கள், தேவாதி தேவர்கள் உனது தாள் தொழ.. கமலக் கண்ணாடி கண்டருளும்.. எங்கள் கண்ணா, கார்மேக வண்ணா..

இன்றோ உன்னை விட்டு எக்கணமும் பிரிந்திராத ஆதிசேஷன் மட்டும் இருக்க, மலர்மாலை கூட இல்லாமல் இருப்பதன் காரணம் என்னவோ.. ??


ஆதிசேஷனே, நீ மீண்டும் ஒருமுறை முருகனருள் சென்று விட்டு வாயேன்.. என் மருகனுக்கு பாம்பு-அணியாய் இருந்து விட்டு வரலாம்.


அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகா!,
"சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரஅடியாம் நீள்கடலுள்- என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு"
என்றிருக்க நான் எப்படி உங்களை விட்டு விலக முடியும்.. வேண்டுமானால் நாம் இருவரும் செல்வோம்..
இப்படி உரையாடிக் கொண்டிருந்த கண்ணன், வேறொருவர் குரல் கேட்டு திரும்புகிறான்..

சரி கதையை தொடரும் முன் சிறு விண்ணப்பம்.. அடியேன் இராகவன்.. ரவி அண்ணாவுக்கு மட்டும் ராகவ். கண்ணன் பாட்டு நூறை தொட்டு இரண்டு வாரம் ஆகி விட்டது. முருகனருளும் நூறை தொட்டு விட்டது. கண்ணன் பாட்டின் 101வது பாடலாக.. இந்த கந்தவடி பதிவு.
சரி கதைக்கு வருவோம். முருகனருளின் 100 வது பதிவை அனைவரும் சேர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, பெருமாள் மட்டும் வைகுண்டம் திரும்பி விட்டார். தற்போது தொடருவோம்..
"பெருமாளே ஏன் இந்த கோலம்? .. நாடு தோறும் வீடு தோறும் .. உன்னைத்தேடி ஓடி வந்துள்ளேன்.. அருள் புரிய வேண்டும். "




பக்தனே யார் நீ? என் மருகன் 100 வது பதிவு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வரும் வழியில் பாதை மாறி வந்து விட்டாயா?



இல்லை பரந்தாமா. .உன் மருகன்.. இந்த பித்தன் முருகதாஸனை, உன்னை சந்தித்து வரத்தான் இங்கு அனுப்பியுள்ளான். உலகத்தின் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் பரந்தாமன் நீ..
உன்னை அலங்காரப்பிரியன் என்றல்லவோ பூஜிக்கிறோம். இன்று தாங்கள் தனியே, மலர்மாலை கூட சூடாமல் இருப்பதன் காரணம் தெரியவில்லை.



முருகதாஸா, நான் உட்பட அனைவரும் என் மருகன், முருகனின் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டோம். உலக ஷேமத்திற்காக நான் விரைவில் வந்து விட்டேன். தேவியர்களுக்கு இன்னும் அங்கிருந்து வர மனமில்லை.. என்ன இருந்தாலும் தமிழர் விருந்தோம்பலில் சிறந்தவன். அது தான் அனைவரும் அங்கேயே உள்ளனர்.
ஆறுமுகத்தானின் கொண்டாட்டத்திற்கு நிறைய மலர்கள் தேவை, அதனால் தான் எனக்கு கூட மாலை இல்லா பற்றாக்குறை
.




கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயா, "பூமாலைக்கு பதிலாக என் பாமலையை சூட்டிக்கொள்ள வேண்டுகிறேன்."








ம்ம்.. முன்பெல்லாம் பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கலாம் என்பர்... இன்று அதுவும் போய்.. பூமாலை வைக்கும் இடத்தில் பாமாலை வைக்கிறாய்.

சரி இந்த அலங்கார பிரியனுக்கு உன் பாடல்களே அழகு சேர்க்கட்டும்.


நாடே நாடாய் வீடே வீடாய் நாடி தேடினேன் கண்ணா!
நாளும் உன்னை பாடிப்பாடி நானோர் பைத்தியம் ஆனேன் கண்ணா !
நாடே நாடாய் வீடே வீடாய் நாடி தேடினேன் கண்ணா!
நாளும் உன்னை பாடிப்பாடி நானோர் பைத்தியம் ஆனேன் கண்ணா !


கண்ணா.... கண்ணா....கண்ணா....கண்ணா...

கூடிக் குலாவ குதித்தே வந்தேன்!
கூடிக் குலாவ குதித்தே வந்தேன்!
கொஞ்சியே உன்னோடு ஆட வந்தேன்.


கூடிக் குலாவ குதித்தே வந்தேன்!
கொஞ்சியே உன்னோடு ஆட வந்தேன்.


வேடிக்கை உலக மாயையினாலே
வேடிக்கை உலக மாயையினாலே
வேதனை கண்ணீர் ஒன்றே கண்டேன்..


நாடே நாடாய் வீடே வீடாய் நாடி தேடினேன் கண்ணா!
நாளும் உன்னை பாடிப்பாடி நானோர் பைத்தியம் ஆனேன் கண்ணா !
நாடே நாடாய் வீடே வீடாய் நாடி தேடினேன் கண்ணா!


கண்ணா.... கண்ணா....கண்ணா....கண்ணா...

குழலினால் இனிய கானம் இசைத்தாய்
கண்ணா கீதையும் உன் அருள் தானே
கண்ணா கீதையும் உன் அருள் தானே


மழலை பேசி மகிழ்வாய் வருவாய்
மழலை பேசி மகிழ்வாய் வருவாய்
மாதவனே எனை ஆண்டிட வேண்டும்..



நாடே நாடாய் வீடே வீடாய் நாடி தேடினேன் கண்ணா!
நாளும் உன்னை பாடிப்பாடி நானோர் பைத்தியம் ஆனேன் கண்ணா !
நாடே நாடாய் வீடே வீடாய் நாடி தேடினேன் கண்ணா!



கண்ணா.... கண்ணா....கண்ணா....கண்ணா..



Get this widget Track details eSnips Social DNA


சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..

காத்திருக்கோம் காத்திருக்கோம் கமலக் கண்ணா வா வா!
பார்த்திருப்போம் உன் வரவை குழழ்ஊதி வா வா!
கால் சிலம்பு கொஞ்சிடவே கமலக் கண்ணா வா வா!
கானக்குரல் கேட்க வேண்டும் கமலக் கண்ணா வா வா!

Tuesday, January 02, 2007

23. ஆடாது அசங்காது வா கண்ணா!

இப்பதிவு அன்பர் பிரேம்குமார் சண்முகமணி அவர்களின் சார்பாக!
பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - K.J. ஜேசுதாஸ் பாடியது
அன்பர் மலைநாடான் ஐயா, பித்துக்குளி முருகதாசர் பாடிய சுட்டியும் கொடுத்துள்ளார்; இதோ!

மற்ற கலைஞர்கள் பாடியது/இசைத்தது பதிவின் இறுதியில்!




ஆடாது அசங்காது வா கண்ணா...
உன் ஆடலில்
ஈரேழு புவனமும்
அசைந்து அசைந்தாடுதே - எனவே
ஆடாது அசங்காது வா கண்ணா


ஆடலைக் காணத் தில்லை அம்பலத்து இறைவனும் தன்
ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான்
ஆதலினால் சிறு யாதவனே - ஒரு
மாமயில் இறகுஅணி மாதவனே - நீ

(ஆடாது அசங்காது வா)

சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித் திடுமே - அதைச்
செவிமடுத்த பிறவி மனங்களித் திடுமே
பின்னிய சடைசற்றே வகைகலைந் திடுமே - மயில்
பீலி அசைந்தசைந்து நிலைகலைந் திடுமே


பன்னிரு கைஇறைவன் ஏறுமயில் ஒன்று
தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளித்திடுமே



பாடி வரும் அழகா
உனைக் காணவரும் அடியார் எவராயினும்
கனக மணிஅசையும் உனது திருநடனம்
கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே

(ஆடாது அசங்காது வா)




கர்நாடக இசை/ஹிந்துஸ்தானி/மெல்லிசை:

SP Ram
Maharajapuram Santhanam
Sudha Raghunathan
Bombay Sisters
Sowmya

மார்கழி 19 - குத்து விளக்கெரிய - பத்தொன்பதாம் பாமாலை

இன்று மார்கழித் திருவாதிரையும் கூட! தில்லை ஆருத்ரா தரிசனம்!
முனியே நான்முகனே முக்கண்ணப்பா!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!!




எழுதியவர்: ஊத்துக்காடு வேங்கட கவி
ராகம்: மத்யமாவதி
தாளம்: ஆதி

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP