Showing posts with label பாபநாசம் சிவன். Show all posts
Showing posts with label பாபநாசம் சிவன். Show all posts

Thursday, December 09, 2010

பாலகிருஷ்ணன் பாத மலர் பணிவோம்


வியாசர் முதல் கண்ணதாசன் வரை கண்ணன்மீது படாதவர்களே கிடையாது.இதில் தமிழ்த்தியகய்யாவான பாபநாசம் சிவனும் விதிவிலக்கல்ல. சினிமா இசையிலும் சரி கர்நாடக இசையிலும் சரி முத்தான பாடல்களை வாரி வழங்கியுள்ளார்.எளிமையான தமிழில் உள்ளத்தை உருக்கி அவனிடத்தில் வசப்படும் விதத்தில் இருக்கும் அவரது பாடல்கள்.அந்த முத்துக்களில் எனக்கு பிடித்த ஏன் கேட்ட பிறகுஉங்களுக்கும்பிடிக்கும் பாடல் ஒன்றைப்  பார்ப்போமா .என்னைவிட இந்தப்பாடலை மிகவிரும்பிக் கேட்டவர் சமீபத்தில் அகல மரணத்தைதழுவிய என் மைத்துனியின் கணவரான திரு.ரகுராமன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய அர்பணிக்கிறேன் . கடந்த 30 வருடங்களாக என்னுடன் கச்சேரிக்கு வந்து இசையை ரசித்துக்கொண்டு இருந்தவர்.

சிவன் அவர்களுக்கு மிகவும் பிடித்த வார்த்தை இறைவனின் பதத்தைப் பற்றி பாடுபவது. பாதமே கதி பரமசிவா, பார்த்த சாரதி உன் பாதமே கதி, ஏழையாகிலும் உன் பாதம் பணியும் என் பவ வினைகள் தீரும் கருணைக்கண் பாரும் சம்போ...இப்படி பல பாடல்கள்.அந்த  வரிசையில்தான் இந்த பாலகிருஷ்ணன் பாதமலர் பணிவோர்க்கிடரில்லை பாடலும்

கண்ணன் எங்கே இருப்பான் கோகுலத்தில் ஆயர்குல சிறுவர்களோடு ,ராதையோடு பிருந்தாவனத்தில் , காளிங்கநின்மீது நடமாடிக்கொண்டு யமுனையின் நதியின் நடுவில் ,பசுக்களை மேய்த்துக்கொண்டு கோகுலத்தில் இப்படி எங்கும் இருப்பான்.
அது மட்டுமா தன்னையே கண்ணனிடம் அர்பணித்துக்கொண்ட கோபிகைகளுக்காக அவர்களின் மனதை மயக்கும் வண்ணம்
மாம்பழ வாயினிலே கண்ணன் குழல் இசைத்திடுவான் . நம்மைப்போன்ற மனிதர்களுக்காக நமது துன்பத்தையெல்லாம் தவிர்த்துவாழவைக்கும் கருணை கொண்ட பாலன். சரி பாலன் என்றால் குழந்தையாக இருப்பானே அவன் எப்படி கடினமான வேலைகள் செய்து நம்மைக் காப்பாற்றுவான் என்ற கவலை வேண்டாம். பக்தர்களுக்கு கஷ்டம் என்றால் கோவர்த்தன மலையையே எடுத்து மழையிலிருந்து காப்பாற்றும் சக்தி படைத்த திண்மையான தோள்வலிமை படைத்தவன். அன்பர்களின் பிழைகளை பொறுத்து அருள் மழை பொழியும் தயாளகுணம் படைத்தவன். பிரும்மா வணங்கும் பூப்போன்ற பாதங்களை உடையவன்.
 இப்படி பாதங்களின் புகழைப் பற்றி பாடுகிறார். பாலகிருஷ்ணனின் பாதங்களின் மஹிமையைப் பற்றி ஆதி சங்கரர் சொல்லும் பொழுது கண்ணனே இந்தப் பாதத்தில்தனே பக்தர்கள் தலைவைத்து வணங்கி பக்தி
செலுத்துகிறார்கள் அவர்களுடைய பக்தி சுவை எப்படி இருக்கும் என்று தாமரைப் போன்ற கையினால் தாமரைப் போன்ற சிறிய பாதங்களை எடுத்து தாமரைப் போன்ற முகத்தில் இருக்கும் அழகிய வாயினில்
வைத்து சுவைத்துக் கொண்டு இருக்கும் ஆலிலையின் நடுவில் படுத்துக்கொண்டு இருக்கும் பாலகிருஷ்ணனை மனத்தால் வணங்குகிறேன் என்கிறார்


பாதத்தையே வணங்கிக்கொண்டு இருந்தால் போதுமா
 அவன் முகம் எப்படி இருக்கும் என்பதையும் விவரிக்கிறார்
நீலவானம் போன்ற நிறத்தழகன் அதில் முழுநிலவு போன்ற முகத்தில் சந்திர ஒளியோடு புன்னகை பூத்து உள்ளம் கவர்கள்வன்.
இப்படிப்பட்ட பாலகிருஷ்ணனின் பாதங்களை பணிகின்றவர்களுக்கு எந்தவித துன்பங்களும் கிடையாது என்று அடித்துக் கூறுகிறார்
இனி பாடலைப் பார்ப்போமா.
பாடல்களைப் பாடியவர்கள் திருமதி மும்பை ஜெயஸ்ரீ மற்றும் திருமதி.வித்யாவும். இருவருமே வயலின் மேதை திரு லால்குடி ஜெயராமனின் சீடர்கள்.

ராகம் :தன்யாசி தாளம் : ரூபகம்
பல்லவி
பாலகிருஷ்ணன் பாதமலர் பணிவோர்க்கு இடரில்லை
வரகுண பாலகிருஷ்ணன் பாதமலர்.....
அனுபல்லவி
நீலமுகில்போலழகன் நிறைமதி வதனமதனில்
இளநகை நிலவருள் ஒளி தவழும்....... (பாலகிருஷ்ணன்)
சரணம்
கோகுலம் பிருந்தாவனம் யமுனாவிஹாரி கோபாலன்
கோபிஜன மன மோஹன முரளி கான விலோலன்
வியாகுலம் தவிர்த்து அன்பர் மனதில் வாழ் கருணாளால பாலன்
மழை தடுக்க கோவர்தனமலை எடுத்த திண்தோளன்
பிழைபொறுத்தருள் தயாளன் பிரமன் பணி மலர்த்தாளன்...(பாலகிருஷ்னன்)





Tuesday, December 22, 2009

நீ இரங்காயெனில் புகல் ஏது ?




இரண்டாவது பதிவு டகால்டி பதிவு மாதிரி இருந்தால் அதற்கு சகவாச தோஷம் தான் காரணம். :)

"ஜகன் நாதன்" என்று பாடலில் வருவதால் கண்ணன் பாடல் என்று கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். :)
[பக்த மீராவின் அடிகளை தலையில் சுமந்து,  தாயாரை அடைந்து அதன் பின்னரே கண்ணன் பாடல்கள் வருமாம். :)]





கவிஞர்: ப்ரஹ்மஸ்ரீ பாபநாசம் சிவன்
ராகம்: அடாணா
தாளம்: ஆதி

பல்லவி:
நீ இரங்காயெனில் புகல் ஏது ? அம்பா !!
நிகில ஜகன் நாதன் மார்பில் உறை திரு (அம்பா நீ)

அனுபல்லவி:
தாய் இரங்காவிடில் சேய் உயிர் வாழுமோ ?!!
ஸகல உலகிற்கும் நீ தாய் அல்லவோ !!!

சரணம்:
பாற்கடலில் உதித்த திருமணியே ! - ஸௌ
பாக்யலக்ஷ்மி,  என்னை கடைக்கணியே !!

நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் - மெய்
ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் (அம்பா நீ)




பாடலை திருமதி  எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி  அவர்களின் இனிய குரலில் இங்கு கேட்கலாம்.
நம்மைப் பெற்ற தாயாரின் அன்பை இந்த  மார்கழியில் நினைவோம்.



~
கிரிதாரியின்,
ராதா

Thursday, August 13, 2009

Rock இசையில்....கிருஷ்ணா முகுந்தா முராரே!

கிருஷ்ணா முகுந்தா முராரே! - கந்தா கடம்பா கதிர்வேலா-ன்னு மாத்திப் பாடி கலாட்டா பண்ணிய கல்லூரிக் காலங்கள் எல்லாம் உண்டு! தேவா கூட இப்படி மாத்திப் பாடி மண்ணாங்கட்டித்தனமா ஒரு பாட்டு போட்டிருக்காரு! :)

MK தியாகராஜ பாகவதர்-ன்னாலே, அலறி அடிச்சிக்கிட்டு ஓடும் இளைய தலைமுறை கூட அவரின் ஒரே ஒரு பாட்டை மட்டும் விரும்பிக் கேட்கும்! கும்மியும் அடிக்கும்! :)
அதை ரீ-மிக்ஸ் எல்லாம் பண்ணாம, கொஞ்சம் Rock இசையில் கிண்டலாப் போட்டா? Rock-முத்து-Rocku! கண்ணா Rock-கொடியைச் சூட்டு :)

கண்ணன் பிறந்த நாள், இரவுப் பதிவுகளின் தொடர்ச்சியாக, இன்று கண்ணன் பாட்டு வலைப்பூவில்.....
The Ever Green கிருஷ்ணா முகுந்தா முராரே! = பாடலுக்கு இசை: ஜிரா! :))

அட நம்ம பதிவர் ஜிரா இல்லீங்க! இவரு வேற ஜிரா! ஜி.ராமநாதன்! :))
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணா! Happy Birthday!
ஊரு ஃபுல்லா Swine Flu ஏவி விட்டிருக்கான் கம்சன்! பார்த்து! ஜாக்கிரதையா இரு! தண்ணி காய்ச்சிக் குடி! முகமூடி போட்டுக்கிட்டு புல்லாங்குழல் வாசி! :)



நம்ம துளசி டீச்சருக்குப் புடிச்ச பாட்டாம்-ல?
மொதல்ல ராக் மீஜிக்-ல கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க! :)
KrishnaMukundaMura...


1944-இல் வந்த படம் ஹரிதாஸ்! ப்ளாக் & வொயிட் அலர்ஜி இல்லாதவங்க, அந்தச் சூப்பர் ஹிட் படத்தை இன்னிக்கும் பார்க்கலாம்! :)
அதிலும் தேவதாசியா நடக்கும் டி.ஆர்.ராஜகுமாரி அவர்களின் வில்லித்தனமான ரோலுக்காகவே பார்க்கலாம்! நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் எல்லாம் பிச்சை வாங்கணும்! :)

அப்போது வந்த படங்கள் எல்லாம் நாலு மணி நேரம் ஓடும்! ஆனா அப்பவே ஹரிதாஸ் பண்ணுச்சி புரட்சி! ரெண்டே மணி நேரம் தான்! நம்ப முடியல-ல்ல? ஆனா ரெண்டே மணி நேரத்தில் மொத்தம் 18 பாட்டு! :))))) ஆனா படம் செம ஹிட்டு! ரெண்டு தீபாவளி வரைக்கும் படம் ஓடிச்சி!

புராணப் படமாவும் இல்லாம, பக்திப் படமாவும் இல்லாம, ஒரு சமூகப் படமா எடுத்திருக்காங்க!

ஓவராப் பெண்ணாசை வீக்னஸ் உள்ள வாலிபன், அதே சமயம் வாய்த் துடுக்கும் எக்கச்சக்கம்! அவன் எப்படியெல்லாம் சிக்கல்-ல மாட்டிப்பான்? ஆண்-பெண் உறவுகளை வெளிப்படையாப் பேசத் தயங்கிய அந்தக் காலத்தில் வந்த நல்ல சமூகப் படம்!

ஒரு தேவதாசியின் மாயையில் விழுந்த ஹரிதாஸ், சொத்தை இழந்து, மனைவியை இழந்து, ஆனாலும் வயசான அம்மா அப்பாவை முதியோர் இல்லத்தில் வைக்காம, தானே எப்படி வச்சிக் காப்பாத்தறான் என்பது தான் கதை!

முதல் பாதி அருணகிரிநாதரின் இளவயது வீக்னெஸ்களைப் போல் சொல்லி, இரண்டாம் பாதியில் பாண்டுரங்கன் கதையில் வருவது போன்ற சில காட்சிகள்! பெற்றோருக்காக கண்ணனையே செங்கல் வீசி உட்கார வைச்ச புண்டரீகன் கதை போல முடியும்!





கேட்க மட்டுமான ஒலிச்சுட்டி!
(பாடலின் ஓப்பனிங் ம்யூசிக்கைக் கட்டாயம் கேளுங்க - அருமையான புல்லாங்குழல்!)

கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
(கிருஷ்ணா முகுந்தா முராரே)

கருணா சாகர கமலா நாயக
கருணா சாகர கமலா நாயக
கனகாம்பர தாரி கோபாலா

(கிருஷ்ணா முகுந்தா முராரே)
(கருணையின் கடலே, திருமகள் தலைவா - பொன் ஆடை சூடி, கோபாலா)

காளிய மர்த்தன கம்சனி தூஷண
காளிய மர்த்தன கம்சனி தூஷண
கமலாதள நயனா கோபாலா

(கிருஷ்ணா முகுந்தா முராரே)
(காளிங்க ஆட்டம், கம்சனின் ஓட்டம் - தாமரை தளக் கண்ணா, கோபாலா)

குடில குண்டலம் குவலய தள நீலம்
மதுர முரளீர் அவ லோலம்
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜாமி கோபாலம்

(வளைந்த காதணி, குவளையின் நீலம்
இனிய குழலோ மயக்கும் நாதம்
கோடி மன்மத அழகு மோகம்
கோபியர் வரமே, பஜனை செய்வோம் கோபாலம்)

கோபி ஜன மனமோகன வியாபக
கோபி ஜன மனமோகன வியாபக
கோபி ஜன மனமோகன வியாபக
குவலய தள நீலா கோபாலா...
குவலய தள நீலா கோபாலா...
குவலய தள நீலா கோபாலா...

(கிருஷ்ணா முகுந்தா முராரே)
(கோபியர் மனத்தின் மோகனன் நீயே!
குவளை நிறக் கண்ணா - கோபாலா)

குரல்: எம்.கே.டி (தியாகராஜ பாகவதர்)
இசை: ஜி.ராமநாதன்
வரிகள்: பாபநாசம் சிவன்
படம்: ஹரிதாஸ் (1944) - 768 நாட்கள் ஓடியது.
ராகம்: நவ்ரோஜ்


பாட்டு-ல தமிழ்ச் சொற்கள் இல்லீன்னாக் கூட, இந்தப் பாடல் ஒரு பெரிய ஹிட் என்பதால் இங்கிட்டு கொடுத்தேன்! ஆனால் இதை எழுதிய பாபநாசம் சிவன் அவர்கள் சிறந்த தமிழ் மேதை!

தமிழிசைப் பாடல்கள் செய்து கொடுத்து, தமிழ்த் தியாகராஜர் என்ற சிறப்பு பெற்ற தமிழ்க் கவிஞர்! அவரு சினிமாவில் பாப்புலர் ட்யூனுக்கும் என்ன அருமையா பாடல் பண்ணிக் கொடுத்திருக்கார் பாருங்க! அதுவும் நவ்ரோஜ் ராகத்துல!

இதைக் குத்துப்பாட்டு-ன்னு கூட ஒரு வகையில் சொல்லலாம்!
இந்தப் பாட்டு வந்த காலத்தில், குத்துப்பாட்டுக்கு இலக்கணம் கூட இருந்திருக்காது! ஆனா குத்துக்கு உரிய அதே துள்ளல், ஸ்பீடு, ஆட்டம்-னு எல்லா இலக்கணமும் இந்தப் பாட்டுக்கும் இருக்கு! அதான் Rock Version-ல கேட்டீங்க-ல்ல? மயங்காத மனமும் உண்டோ?

Dandiya, Garba, கோலாட்டத்துக்கு மட்டும் இந்தப் பாட்டை வச்சாக்கா எப்படி இருக்கும்?...ஆகா! ஆடிப் பாருங்க! ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே!

Tuesday, September 02, 2008

கண்ணனைப் பணி மனமே!



நமக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். எதிரிகளே இல்லை என்று எண்ணிக் கொள்ளத் தான் ஆசை; ஆனால் இல்லாமலா இருக்கிறார்கள். அவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் நண்பர்களும் பகைவர்களும் இல்லை என்று ஆன்றோர்களும் ஆசாரியனும் சொல்கிறார்கள். அவர்கள் இல்லை என்றால் வேறு யார் தான் நண்பனும் பகைவனும்?

'தாமே தமக்கு சுற்றமும்' என்கிறார் மாணிக்கவாசகர். 'ஆத்மைவ ஹி ஆத்மனோ பந்து: ஆத்மைவ ரிபு: ஆத்மன: - தனக்குத் தானே உறவு; தனக்குத் தானே பகை' என்கிறான் கீதாசாரியன்.

இப்படி தனக்குத் தானே உறவாகவும் பகையாகவும் எப்படி இருக்க முடியும்? அதற்கும் விளக்கம் சொல்லியிருக்கிறார்கள் பெரியவர்கள்.

திருப்பாவையில் ஆறாம் பாசுரம் முதல் பதினைந்தாம் பாசுரம் வரை தோழியரை எழுப்பும் பாசுரங்களாக அமைந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் மனமென்னும் தோழிக்கு அறிவென்னும் தோழி கூறும் அறிவுரைகள் என்று பெரியவர்கள் பொருள் சொல்லுவார்கள். இது சரி இது தவறு என்பது அறிவிற்குத் தெரிகிறது; இது பிடிக்கும் இது பிடிக்காது என்பது தான் மனதிற்குத் தெரிகிறது. மனதிற்குப் பிடித்ததெல்லாம் நன்மை அளிப்பன இல்லை. அதனால் தான் அடிக்கடி அறிவு நடுவே வந்து எது நலமோ அதனைச் சொல்ல வேண்டியிருக்கிறது. நல்லதொரு தோழன் என்பான் நம் நலம் விரும்புபவன். அதனால் மனத்திற்கு நல்லதொரு தோழன் அறிவே.

அறிவு சொல்வதை மனம் கேட்டு நடக்கும் போது நமக்கு நாமே நண்பன். அப்படி சொல் பேச்சு கேட்காமல் மனம் போன படி நடந்து கொள்ளும் போது நமக்கு நாமே எதிரி. ஒரு தடவை சொன்னால் கேட்க மாட்டாயா? போகட்டும். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். அப்போதாவது கேட்கிறாயா பார்க்கிறேன் - என்று சொல்வது போல் நிறைய பாடல்கள் மனத்திற்குச் சொல்பவையாக அமைந்திருக்கின்றன.

நம்மாழ்வாரின் முதல் பாசுரமே 'துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே' என்று மனத்திற்குச் சொல்லும் அறிவுரையாகத் தான் அமைந்திருக்கின்றது. நாயகி சுவாமிகளின் கீர்த்தனைகளிலும் பல மனத்திற்குச் சொல்லுவதாகவே அமைந்திருக்கின்றன.

அப்படி மனத்திற்குச் சொல்லுவதாக அமையும் பாடல்கள் பல தத்துவங்களைச் சொல்லிச் செல்வதையும் பார்க்கலாம். அப்படி இன்றி எளிமையாக ஒரு நாமசங்கீர்த்தனமாக நாமாவளியாக ஒரு கீர்த்தனையை திரு. பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றியிருக்கிறார்கள். மருகனுக்குப் பிடித்த இராகத்தில் மாமனைப் போற்றும் அந்தப் பாடலை இங்கே பார்ப்போம்.

கண்ணனை பணி மனமே - தினமே
கண்ணனை பணி மனமே

மண்ணில் யசோதை செய் புண்ய ஸ்வரூபனை
மாதவனை நமது யாதவ தீபனை (கண்ணனை)

பாண்டவர் நேயனை பக்தர் சகாயனை
பவள செவ்வாயனை பரமனை மாயனை (கண்ணனை)

மங்கள மூலனை கோகுல பாலனை
மனம் மிகு துளசி மாலனை பாலனை (கண்ணனை)

விண்ணவர் போற்றவே மண்ணில் வரும் வேத
பண்ணனை ஸ்யாமள வண்ணனை தாமரைக் (கண்ணனை)



இராகம்: ஷண்முகப்ரியா
தாளம்: ஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
பாடியவர்கள்: கே.எஸ். சித்ரா, எஸ்.காயத்ரி, நித்யஸ்ரீ, ப்ரியா சகோதரிகள்

Sunday, August 24, 2008

கண்ணன் பிறந்த இரவு-2: தமிழ்த் தியாகராஜர் தாலாட்டு!

இன்னிக்கு கண்ணன் பிறந்த இரண்டாம் இரவு! வாங்க ஒரு அருமையான தாலாட்டை, தமிழில் தாலாட்டை, இன்னிக்கி இரவு கேட்டுக் கொண்டே தூங்குவோம்!
* நேற்று சிறையில்! இன்று ஆயர் துறையில்!
* நேற்று தேவகி! இன்று யசோதை!
* நேற்று தனிமை! இன்று கோகுலக் கூட்டம்!
* நேற்று புயல் வெள்ளம்! இன்று இன்ப வெள்ளம்!
இப்படி ஒரே நாளில், ஒரே இரவில், எப்படி எப்படியெல்லாம் மாற்றம்!

பொதுவாக பெரிய இசைக் கலைஞர்களிடம் ஒன்றைக் கவனித்திருக்கலாம்! விருத்தம் என்ற இயற்பாவைப் பாடி விட்டு, அப்புறம் இசைப்பாவை பாடுவாங்க!
இங்கும் அதே போல் திருப்பாணாழ்வார் விருத்தத்தை முதலில் பாடி விட்டு, அப்புறம் கிருதியைப் பாடுறாங்க நித்யஸ்ரீ!

திருப்பாணாழ்வாரைப் பற்றிப் பலரும் அறிந்திருக்கலாம்! தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து, அரங்கன் மேல் கொண்ட காதலால், அர்ச்சகரிடம் கல்லடி வாங்கியவர்! பாணர் மேல் பட்ட கல்லால், அரங்கன் நெற்றியில் இரத்தம்!
பிழையுணர்ந்த அர்ச்சகர், பாணரைத் தோள் மேல் தூக்கி வைத்து, சன்னிதிக்குள் அழைத்து வருகிறார்! பாணரும் அமலன் ஆதிப் பிரான் என்னும் பாசுரம் பாடி, பெருமாளின் அடி முடி சேவையைச் சேவிக்கிறார்!

அதில் இருந்து ஒரு விருத்தம் + பின்னால் ஒரு கிருதி!
கிருதி என்னும் கீர்த்தனையைப் பாடியது தமிழ்த் தியாகராஜர்!
தமிழ்த் தியாகராஜரா? யாருங்க அவரு?

பாபநாசம் சிவன் என்னும் பெரும் இசைக்கலைஞர்! இசைப்பாடல்கள் புனைந்தவர்! நம் அண்மைக் காலத்தில் வாழ்ந்தவர்! தமிழிசைக்குப் பெரும் தூண்!
பல தமிழிசைப் பாடல்களை ராகங்களோடு எழுதிக் குவித்தவர்! அவர் தரும் அருமையான தமிழ்த் தாலாட்டு! அதுவும் தமிழ் இராகமான குறிஞ்சியில்!

குறிஞ்சிப் பாட்டைக் கேட்டுக்கிட்டே தூங்கலாமா?
அப்படியே கண்ணனின் தொட்டிலை ஆட்டி விட்டுக் கொண்டே நீங்களும் தூங்குங்க!
இன்னிக்கி காலை முழுதும் கோகுலத்தில் கண்ணன் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்! ஓய்வு ஒழிச்சலே இருந்திருக்காது உங்களுக்கு!
இதோ பாட்டு, நித்யஸ்ரீ அவர்களின் ஏகாந்தமான குரலில்!

ஆலமா மரத்தின் இலைமேல், ஒரு பாலகனாய்,
ஞாலம் ஏழும் உண்டான், அரங்கத்து அரவின் அணையான்,
கோல மாமணி ஆரமும், முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில்,
நீல மேனி ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே!


இங்கே ஐயோ என்பது ஆனந்த ஐயோ! நீல மேனி ஐயோ!
ஆலமர இலை! பாலகன்! உலகமேழும் உண்டான்! உண்டு விட்டு அரங்கத்துப் பாம்பில் தூங்குகின்றான்! அவன் மணியாரம்! முத்துமாலை! முடிவில்லாத அழகு!
நீல மேனி ஐயோ! என் நெஞ்சினையே எடைக்கு எடை நிறை கொண்டு, நிறைத்து விட்டதே!

கண்ணே என் கண்மணியே! கண்ணனே கண் வளராய்!
மண்ணுலகில் என் வாழ்வு, வளம் பெற வந்துதித்த

(கண்ணே)

குயிலிசை குழலோசை உன் கொஞ்சு மொழிக்கு இணையாமோ?
கொண்ட மனச் சஞ்சலங்கள் பஞ்சாய்ப் பறந்திடுமே!

(தாலோ தாலேலோ)

தேடாத என் நிதியே! திகட்டாத தெள்ளமுதே!
வாடாத மென் மலரே! மனத்துள் இனிக்கும் தனித்தேனே!

(தாலோ தாலேலோ)

ராகம்: குறிஞ்சி
தாளம்: திஸ்ர ஆதி
வரிகள்: பாபநாசம் சிவன்

Thursday, December 20, 2007

72. இது கண்ணன் குத்துப் பாட்டா? - கிருஷ்ணா முகுந்தா முராரே!

சென்ற ஆண்டு மார்கழி மாதம், கண்ணன் பாட்டு வலைப்பூவில், தினம் ஒரு கண்ணன் பாட்டாய் போட்டு, பாவம் தமிழ்மணத்தைக் கலங்கடித்துக் கொண்டு இருந்தோம்! :-)
இதைப் பார்த்து விட்டு, சக பதிவர்கள் மற்றும் பெனாத்தலார் எல்லாம், "வா முனிம்மா வா" எல்லாம் நேயர் விருப்பமாய் போட மாட்டீங்களா-ன்னு கலாய்ச்சிக்கிட்டு இருந்தாங்க முருகபிரான் ராம் சங்கர் (MRS) என்கிற ஒரு பதிவரை! :-)

சரி, இந்த வருஷம், அதே கொலை வெறியோட எறங்கலாமா-ன்னு ஒரு எண்ணம்!
தலைவர் குமரன், தளபதி ஜிரா எல்லாரும் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்!!

சிங்கம் சிங்களா இல்ல, மேரீட் ஆகவும் வரும்-னு வந்த வெட்டிப்பயலாரைப் பாட்டு போடச் சொல்லலாம். ஆனா அவுரு தில்லாலங்கடி தாங்கு, கண்ணா திருப்பிப் போட்டு வாங்கு-ன்னு பாட்டைப் போடுவாரு!
அந்தப் பாட்டுக்கு நான், நரிமேல்குழகர் உரையை வாங்கிப் படிச்சாலும், என் போன்ற ஞான சூன்யங்களுக்கு ஒன்னும் புரியாது! சரி அவரையும் இஸ்துக்கலாம்! :-)

கண்ணன் பாட்டில் உள்ள அன்பர்கள் ஷைலஜா, டிடி அக்கா, திராச, மலைநாடான் ஐயா, மடல்காரன்-ன்னு எல்லோரும் ஒரு ரவுண்டு கட்டி வாசிக்கத் தொடங்கியாச்சுன்னா, பிச்சிக்கிட்டு போயிடாதா!
சரி, தினம் ஒன்னா இல்லீன்னாக் கூட, அடிக்கடி வந்து மார்கழி பூச்சாண்டி காட்டி பயமுறுத்தலாம்! என்ன சொல்றீங்க மக்களே?
அக்கவுண்ட்டை இதோ நானே ஓபன் பண்ணறேன்! ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே!!
நம்ம டீச்சருக்குப் புடிச்ச பாட்டாம்-ல?



பாடலை இங்கு கேட்கவும்!
இதையே கொஞ்சம் மறுகலவை செய்து (Remix) பாடியிருக்காங்க! அதுவும் நல்லாத் தான் இருக்கு! இதோ..
KrishnaMukundaMura...


(பாடலின் ஓப்பனிங் ம்யூசிக்கைக் கட்டாயம் கேளுங்க - அருமையான புல்லாங்குழல்!)
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
(கிருஷ்ணா முகுந்தா முராரே)

கருணா சாகர கமலா நாயக
கருணா சாகர கமலா நாயக
கனகாம்பர தாரி கோபாலா

(கிருஷ்ணா முகுந்தா முராரே)
(கருணைக் கடலே, கமலை மணாளா - பொன்னாடை சூடி, கோபாலா)

காளிய மர்த்தன கம்சனி தூஷண
காளிய மர்த்தன கம்சனி தூஷண
கமலாதள நயனா கோபாலா

(கிருஷ்ணா முகுந்தா முராரே)
(காளிங்க நடனா, கம்சனை வென்றாய் - தாமரைதளக் கண்ணா, கோபாலா)

குடில குண்டலம் குவலய தள நீலம்
மதுர முரளீர் அவ லோலம்
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜாமி கோபாலம்

(வளைந்த காதணி, குவளையின் நீலம் - இனிய குழலின் மயக்கும் நாதம்
கோடி மன்மத அழகு மோகம் - கோபியர் வரமே, பஜனை செய்வோம் கோபாலம்)

கோபி ஜன மனமோகன வியாபக
கோபி ஜன மனமோகன வியாபக
கோபி ஜன மனமோகன வியாபக
குவலய தள நீலா கோபாலா...
குவலய தள நீலா கோபாலா...
குவலய தள நீலா கோபாலா...

(கிருஷ்ணா முகுந்தா முராரே)
(கோபியர் மனத்தை மோகித்து நிறைந்தாய் - கருங்
குவளை நீலக் கண்ணா - கோபாலா)

குரல்: எம்.கே.டி (தியாகராஜ பாகவதர்)
இசை: ஜி.ராமநாதன்
வரிகள்: பாபநாசம் சிவன்
படம்: ஹரிதாஸ் (1944) - 768 நாட்கள் ஓடியது.
ராகம்: நவ்ரோஜ்




பாட்டு-ல தமிழ்ச் சொற்கள் இல்லீன்னாக் கூட, இந்தப் பாடல் ஒரு பெரிய ஹிட் என்பதால் இங்கிட்டு கொடுத்தோம்! இதை எழுதிய பாபநாசம் சிவன் அவர்கள் தமிழ் மேதை; தமிழில் பல இசைப்பாடல்கள் செய்து கொடுத்து, தமிழ்த் தியாகராஜர் என்ற சிறப்பு பெற்ற தமிழ்க் கவி!
அவரு சினிமாவில் பாப்புலர் ட்யூனுக்கும் என்ன அருமையா பாடல் கொடுத்திருக்கார் பாருங்க! அதுவும் நவ்ரோஜ் ராகத்துல!

இதைக் குத்துப்பாட்டு-ன்னு எப்படி மாப்ள சொன்னே-ன்னு என் கிட்ட சண்டைக்கு வராதீங்க மக்கா!

இந்தப் பாட்டு வந்த காலத்தில், குத்துப்பாட்டுக்கு இலக்கணம் கூட இருந்திருக்காது! ஆனா குத்துக்கு உரிய அதே துள்ளல், ஸ்பீடு, ஆட்டம்-னு எல்லா இலக்கணமும் இந்தப் பாட்டுக்கும் இருக்கு! இதில் மயங்காத மனமும் உண்டோ?
Dandiya, Garba, கோலாட்டத்துக்கு மட்டும் இந்தப் பாட்டை வச்சாக்கா எப்படி இருக்கும்! ...ஆகா!

Saturday, August 11, 2007

ஆயிரம் பெயரால் அழைப்பினும் ஆயிரம் உரு மாறினும் ...


சிவனையும் விஷ்ணுவையும் ஓருருவாகப் பாடும் ஒரு கர்நாடக இசைப் பாடல். திரு. பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றியது. வார்த்தை விளையாட்டு இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்தது.

பல்லவி:

மா ரமணன் உமா ரமணன்
மலரடி பணி மனமே தினமே (மா ரமணன்)

அனுபல்லவி:


மார ஜனகன் குமார ஜனகன்
மலை மேல் உறைபவன் பாற்கடல்
அலை மேல் துயில்பவன் பாவன (மா ரமணன்)

சரணம்:

ஆயிரம் பெயரால் அழைப்பினும்
ஆயிரம் உரு மாறினும் உயர்
தாயினும் மிகு தயாபரன் பதம்
தஞ்சம் என்பவரை அஞ்சல் என்றருளும் (மா ரமணன்)

பல்லவி:

மா என்றால் திருமகள். மா ரமணன் என்றால் திருமகள் மணவாளன் திருமாலவன். உமா ரமணன் என்றால் உமையன்னையின் மணவாளன் சிவபெருமான். அவன்(அவர்கள்) மலரடி பணி மனமே. தினமே.

அனுபல்லவி:

மாரன் என்றால் மன்மதன். அவன் தந்தை கண்ணன். அதனால் மார ஜனகன் விஷ்ணு. குமார ஜனகன் குமரனின் தந்தையான நடராஜன். கைலாய மலை மேல் உறைபவன் முக்கண்ணன். பாற்கடல் அலை மேல் துயில்பவன் மாயவன். தூயவர்கள் இவர்கள்.

சரணம்:

ஆயிரம் பெயர் கொண்டு அழைத்தாலும், ஆயிரம் உருவங்களால் வழிபட்டாலும், உயர்ந்த தாயை விட கருணையுடைய தயாபரன் அவன். அவனுடைய திருவடிகளைத் தஞ்சம் என்று வந்தவர்களை அஞ்சேல் என்று அருளுபவன் அவன்.

பாடலை பிரியா சகோதரிகள் பாடி இங்கே கேட்கலாம்.

Thursday, February 15, 2007

தீனன் எனைப் போல் வேறெவர் கண்டாய்?





ஸ்ரீநிவாச திருவேங்கடமுடையாய்!
ஜெய கோவிந்த முகுந்தா அனந்தா!
தீன சரண்யன் எனும் பெயர் கொண்டாய்!
தீனன் எனைப் போல் வேறெவர் கண்டாய்?
(ஸ்ரீநிவாச)



ஜகம் புகழும் ஏழுமலை மாயவனே!
திருமகள் அலர்மேல் மங்கை மணாளனே!
ஜகன்னாதா சங்க சக்ர தரனே!
திருவடிக்கு அபயம் அபயம் ஐயா!
(ஸ்ரீநிவாச)



இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இராகம்: ஹம்ஸானந்தி
தாளம்: ஆதி
பாடியவர்: எஸ்.பி.இராம்

பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்.

இந்தப் பாடலை எம்.எஸ். பாடித் தான் முதலில் கேட்டேன். அதைத் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை.

Saturday, December 30, 2006

20. என்ன தவம் செய்தனை யசோதா!!!

இது நம்ம dubukudisciple (சுதா) தயாரித்த பதிவு!
அவர் தமிழ்மணத்துக்கு அனுப்பும் படி என்னிடம் கேட்டுக் கொண்டார்! Post-இல் அவர் பெயர் தெரிந்தாலும், தமிழ்மணம் மட்டும் அவர் பெயரில் ஏனோ எடுத்துக் கொள்ளவில்லை! எல்லாப் புகழும் dubukudisciple க்கே!

பாபநாசம் சிவன் அவர்களின் அருமையான தமிழிசைப் பாடல் இது!
Fusion Music இல் மாதங்கி அவர்கள் பாடிக் கேட்க இங்கே சொடுக்கவும்!
S. காயத்ரி அவர்களில் குரலில் சம்பிரதாய மெட்டில் கேட்க இங்கே சொடுக்கவும்!
மற்ற கலைஞர்கள் பாடியது/இசைத்தது பதிவின் இறுதியில்!

இதன் வீடியோ ஒன்று, ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் ஆடும் பரதம்!
காண வேண்டுமா? திராச ஐயாவின் பதிவுக்குச் செல்லுங்கள்! இதோ சுட்டி




என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை
எங்கும் நிறை பரப்ரம்மம் - அம்மா வென்றழைக்க

(என்ன தவம்)

ஈரேழு புவனங்கள் படைத்தவனைக் - கையில்
ஏந்திச் சீராட்டி பாலூட்டி தாலாட்ட - நீ

(என்ன தவம்)


பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள - உரலில்
கட்டி வாய் பொத்திக் கெஞ்ச வைத் தாயே - நீ

(என்ன தவம்)

சனகாதியர் தவ யோகம் செய்து வருந்திச் சாதித்ததை
புனித மாதே எளிதில் பெற - நீ

(என்ன தவம்)
-----------------

திரைப்படங்களில்:
ஹரிணி படம்: பார்த்திபன் கனவு (முதல் சில வரிகள் மட்டும்)

கர்நாடக இசை/ஹிந்துஸ்தானி/மெல்லிசை:
S.P. Ram
Veenai - Nirmala Rajasekar
Violin
Flute - Ramani
Saxophone - Kadri Gopalnath

மார்கழி 16 - நாயகனாய் நின்று - பதினாறாம் பாமாலை.


எழுதியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: காபி
தாளம்: ஆதி

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP