Showing posts with label *செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா. Show all posts
Showing posts with label *செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா. Show all posts

Friday, December 15, 2006

5. செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா!

இப்பதிவு அன்பர் மதுமிதா அவர்களின் சார்பாக!
அவரே கண்ணனுக்காக எழுதிய பாடல்!
இந்தப் பாடல் மதுரை வானொலியில் இசையமைக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. நாள்: Oct 19, 1996 - மாலை 6.45 மணி

இந்தப் பாடலை, இன்று மார்கழி முதல் நாளில்,
கண்ணன் பாட்டு வலைப்பூவில், முதல் மாலையாகச் சமர்ப்பிக்கிறோம்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!



சின்ன சின்ன கண்ணா



கண்ணா கண்ணா கண்ணா கண்ணா
சின்னச் சின்ன கண்ணா
கோகுல மன்னா
செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா
செம்பவள வாய்திறவாய் கோகுல மன்னா



வெண்ணைய் உண்ட கண்ணனே
உனைக் காணவந்த அன்னைக்கு
சிறுவாய் திறந்து அற்புதமாய்
அகிலம் தனைக் காட்டினாய்


காளிங்கன் தலைமீது களிநர்த்தனம் செய்து
நச்சுப்பொய்கை தனையே பரிசுத்தம் செய்தாய்
கோபம்கொண்ட இந்திரனும் கொடுமழை தந்தான்
கோவர்த்தன கிரிஎடுத்து யதுகுலம் காத்தாய்


பாஞ்சாலியின் மானத்தைப் பெருஞ்சபையில் காத்தாய்
பார்த்தன்தன் மயக்கத்தை குருஷேத்திரத்தில் தீர்த்தாய்
பெற்றோம் உன் கீதை
கண்டோம் உன் லீலை
நல்வாழ்க்கை வாழத் தந்தாய் புதுப்பாதை,

தந்தாய் புதுப்பாதை...
கண்ணா கண்ணா

செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா
செம்பவள வாய்திறவாய் கோகுல மன்னா


குறிப்பு:
1. பாடல், கேசட்டில் இருப்பதால் வலையேற்ற இயலவில்லை
2. ஒரு கோகுலாஷ்டமி இரவில் உள்ளம் உருக, அதிகாலையில் எழுதியது.
3. கண்ணன் "வாய் திறவாய்" படம் - நன்றி: krishna.com

மதுமிதா அவர்கள் தொடர்புடைய சுட்டிகள்:
வலைப்பூ-காற்றுவெளி
மரத்தடி ஆக்கங்கள்
நிலாச்சாரல் பேட்டி
திண்ணை ஆக்கங்கள்



மார்கழி 1 - மார்கழித் திங்கள் - முதல் பாமாலை

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP