Showing posts with label *லீலைகள் செய்வானே. Show all posts
Showing posts with label *லீலைகள் செய்வானே. Show all posts

Sunday, September 19, 2010

மீரா இதயம் கோவில் கொண்டான்

பக்த மீரா படத்தில் வரும் ஓர் இனிய பாடல்.
அமரர் கல்கி எழுதிய  இந்தப் பாடலை எம்.எஸ் அவர்கள் பாடி இங்கே கேட்கலாம்.



லீலைகள் செய்வானே - கண்ணன்
மாயைகள் புரிவானே!
லீலைகள் செய்வான் பாலகோபாலன்
நீலமுகில் மணிவண்ணன் - கண்ணன் (லீலைகள்)

கானக மடுவில் காளியன் தலையில்
களிநடம் புரியும் பாதன் !
வானவர் வாழ மாநிலம் மீது
ஆனிரை மேய்த்த என் நாதன் - கண்ணன் (லீலைகள்)

ஆயர் மனையில் வெண்ணைய் திருடுவான்
அகமும் கவர்ந்திடுவானே !
மாய புன்னகை செய்து மயக்கும்
மீராவின் ப்ரபு தானே ! - கண்ணன் (லீலைகள்)

ப்ரேம நதியின் தீரமதனில்
மீரா ப்ரபுவும் வருவான் !
திருமுகம் அதனில் குறுநகை மலர
அகமும் புறமும் நிறைவான் - கண்ணன் (லீலைகள்)

மாயனைக் காண மாமுனியோர்கள்
பாற்கடல் தேடியே வந்தார் !
ஆலிலை மேலே துயில் கொள்ளும் அமுதை
காண்கிலம் என்று வியந்தார் !

சங்கரன் வந்தான் இந்திரன் வந்தான்
சந்திர சூரியர் வந்தார் !
அங்குமிங்குமாய் ஐயனைத் தேடி
ஆயர் மனைதனில் கண்டார் !

மீரா ஹிருதயம் கோவில் கொண்டான் !
மீளா அடிமை கொண்டான்  - பேதை
மீரா ஹிருதயம் தனில் - அடியாள் மீரா...
 
மீரா ஹிருதயம்  கோவில் கொண்டான் !
மீளா அடிமை கொண்டான் !
மாறி மாறி வரும் பிறவிகள் தனிலும்
மாறா ப்ரேமையைத் தந்தான் - கண்ணன் (லீலைகள்)

 

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP