Showing posts with label மருதகாசி. Show all posts
Showing posts with label மருதகாசி. Show all posts

Tuesday, September 06, 2011

நீல வண்ண கண்ணா வாடா !


அமைதியான இரவில் கேட்க  அருமையான இன்னொரு கண்ணன் பாடல். கிருஷ்ண ஜெயந்தியின் போது வானொலியில் கேட்க நேர்ந்தது.


நீல வண்ண கண்ணா வாடா !
நீ ஒரு முத்தம் தாடா !
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா வாடா !

பிள்ளையில்லாக்  கலியும் தீர
வள்ளல் உன் தன் வடிவில் வந்தான்

எல்லை இல்லாக்  கருணை தன்னை
என்னவென்று சொல்வேனப்பா !

வானம்பாடி கானம் கேட்டு
வசந்தகால தென்றல் காற்றில்
தேன் மலர்கள் சிரிக்கும் காட்சி
செல்வன் துயில் நீங்கும் காட்சி


தங்கநிறம் உன்தன் அங்கம்
அன்புமுகம் சந்திர பிம்பம்

கண்ணால் உன்னைக் கண்டால் போதும்
கவலை எல்லாம் பறந்தே போகும்

சின்னஞ்சிறு திலகம் வைத்து
சிங்காரமாய் புருவம் தீட்டி

பொன்னாலான நகையும் பூட்ட
கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு

நடுங்கச் செய்யும் வாடைக் காற்றே
நியாயமல்ல உன்தன் செய்கை
தடை செய்வேன் தாளைப் போட்டு
முடிந்தால் உன் திறமை காட்டு

விண்ணில் நான் இருக்கும் போது
மண்ணில் ஒரு சந்திரன் ஏது
"அம்மா என்ன புதுமை ஈது?!" என்றே
கேட்கும் மதியைப் பாரு

இன்ப வாழ்வின் பிம்பம் நீயே !
இணையில்லா செல்வம் நீயே!
பொங்கும் அன்பின் ஜோதி நீயே !
புகழ் மேவி வாழ்வாய் நீயே !

Monday, January 24, 2011

கண்ணா என் கையைத் தொடாதே!

இன்னிக்கி ஒரு டமாஷான கண்ணன் பாட்டைக் கேட்போமா? பதிவர் ராதாவின் நேயர் விருப்பம்! :)

அப்படி என்ன டமாஷா?
கண்ணா என் கையைத் தொடாதே-வாம்!
அப்படின்னா, கண்ணா என் கையைத் தொடாதே, இதழைத் தொடு-ன்னு அர்த்தம்! :))

இதோ கேட்டுக்கிட்டே படிங்க! சுசீலாம்மாவின் வித்தியாசமான-கீச்கீச் குரலில்




நீல வண்ணக் கண்ணனே
உனது எண்ணமெல்லாம் நானறிவேன்
கண்ணா என் கையைத் தொடாதே - மோகனக்
கண்ணா என் கையைத் தொடாதே!

தன்னந் தனியான என்னைத்
துன்புறுத்தல் ஆகுமோ?
நான் உனக்குச் சொந்தமோ
ராதை என்ற எண்ணமோ?

கண்ணைக் கண்ணைக் காட்டி என்னை
வம்பு செய்யல் ஆகுமோ?
இன்னும் இங்கு நின்று வம்பு செய்தால்
ஏளனம் செய்வேன் - கண்ணா என் கையைத் தொடாதே!
(நீல வண்ணக் கண்ணனே)

மல்லி என் கரத்தை விட்டு
வந்த வழி செல்லுவாய்!
நல்லதல்ல உன் செயலை
நாடறிய சொல்லுவேன்!

கள்ளனே உன்னை எல்லோரும்,
பொல்ல பிள்ளை என்று சொல்லி - கண்டபடி பேசுவார்!
இளம் கன்னி எந்தன் உள்ளம் தன்னை
துன்புறச் செய்யாதே - கண்ணா என் கையைத் தொடாதே!
(நீல வண்ணக் கண்ணனே)

படம்: மல்லிகா
குரல்: பி.சுசீலா
வரிகள்: ஏ.மருதகாசி
இசை: டி.ஆர்.பாப்பா


ஹே, பொற்க்கீ! கண்ணா, என் கையைத் தொடாதே! :)

Tuesday, January 11, 2011

சீர்காழி+TMS - சேர்ந்து பாடி இருக்காங்களா, கண்ணனை?

சீர்காழி + TMS = முருகனைச் சேர்ந்து பாடி இருக்காங்க! திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்-ன்னு! தெய்வம் படத்தில்...
* பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா-ன்னு அவர் எடுக்க
* கண்மலரில் தண்ணருளைக் காட்டி வரும் கந்தா-ன்னு இவர் முடிக்க...
ஆகா! கண்கொள்ளாக் கந்தக் காட்சி! என் முருகச் சொந்தக் காட்சி!

ஆனால் இந்த கலக்கல் ஜோடி, கண்ணனைச் சேர்ந்து பாடி இருக்காங்களா?
உம்...உம்...உம்...தனித்தனியாப் பாடி இருக்காங்க தெரியும்!
* புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-ன்னு TMS Hall of Fame!
* திருப்பதி மலை வாழும் வேங்கடேசா-ன்னு சீர்காழியின் பெருமை!

ஆனால் இருவரும் சேர்ந்து பாடினதா தெரியலையே! சேர்ந்து பாடி இருக்காங்களா என்ன, கண்ணனை?
ஒரு வேளை, முருகனருள் முன்னின்றது போல், கண்ணனருள் முன்னிற்கலையோ? :)




கண்ணன் அருள், மெய்யாலுமே "முன்" நின்றது!
முருகனைப் பாடும் முன்னரே...., கண்ணனைப் பாட ஜோடி சேர்ந்து விட்டனர் நம்ம சீர்காழி + TMS! அதுவும் சினிமாவில்! :)
முப்பத்து மூவர் அமரர்க்கும், "முன் சென்று" கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!

ஆகா! அது என்ன படம்? அது என்ன படம்?
நீங்களே பாருங்க! கேட்டுக்கிட்டே படிங்க!


பாதுகையே துணையாகும் எந்நாளும் உன்
பாதுகையே துணையாகும்!
பூவுலகெல்லாம் போற்றிடும் தேவா
(பாதுகையே துணையாகும்)

நீதியும் நேர்மையும் நெறியோடு இன்பமும்
நிலவிடவே எங்கள் மனத்துயர் மாறவே
(பாதுகையே துணையாகும்)

உனது தாமரைப் பதமே
உயிர்த் துணை யாகவே
மனதினில் கொண்டே நாங்கள்
வாழுவோம் இங்கே ராமா!
பதினான்கு ஆண்டும் உந்தன்
பாதுகை நாட்டை ஆளும்
அறிவோடு சேவை செய்ய‌
அருள் வாயே ராமா!


த‌யாள‌னே சீதா ராமா! சாந்த‌ மூர்த்தியே ராமா!
ச‌ற்குணாதிபா ராமா! ச‌ர்வ‌ ர‌ட்ச‌கா ராமா!

தந்தை சொல்லைக் காக்கும் த‌ன‌ய‌னான‌ ராமா!
தவசி போல கானிலே வாசம் செய்யும் ராமா!
தத்வ வேத ஞானியும் பக்தி செய்யும் ராமா!
சத்ய ஜோதி நீயே.......நித்யனான ராமா!
(நித்யனான ராமா......நித்யனான ராமா)

படம்: சம்பூர்ண ராமாயணம்
இசை: கே.வி. மகாதேவன்
வரி: மருதகாசி
குரல்: சீர்காழி, TMS

இறைவனின் திருவடி நிலைகளை, அழகான குழுப் பாடலாக (பஜனைப் பாடலாக) பாட, இந்தப் பாடலின் மெட்டு, பொருந்தி வருகிறது அல்லவா?

பாதுகை-ன்னா என்ன? வெறும் கால் செருப்பா? அது எப்படி ஒருவருக்குத் துணையாகும்?
பாதுகைகளின் பெருமை தான் என்ன? பின்னூட்டத்தில் பேசுங்களேன்! ஏதுமறியா என்னைப் போன்றவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும்!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP