எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே!

எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே!
யதுவீரனை நந்தகுமாரனை நினைந்து
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே!
மலரே இருவிழி பங்கஜ மலரே திருமுகமும்
மலரே இருகரம் தாமரை மலரே திருவடிகள்
மந்தஹாசமும் தவழ்ந்த சுந்தர முகாரவிந்தம் நினைந்து
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே!
அன்னை தந்தை பதியும் அவன்
அருந்துணை நவநிதியும் அவன் (என்)
இன்பமும் அழகும் அவனே
எழில் தரும் மணி வடிவவனே
மீரா பிரபு கிரிதரகோபாலனை வரதனை நினைதொறும்
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே
பாடியவர்: எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி
திரைப்படம்: மீரா
வெளிவந்த வருடம்: 1945
இசையமைப்பாளர்: எஸ்.வி. வெங்கடராமன்
அருஞ்சொற்பொருள்:
யதுவீரன் - யாதவ குல வீரன்
நந்தகுமாரன் - நந்த கோப குமாரன்
பங்கஜமலர் - தாமரை மலர்
மந்தஹாஸம் - புன்னகை
சுந்தர - அழகிய
முகாரவிந்தம் - முக + அரவிந்தம் = முகமாகிய தாமரை
பதி - கணவன்

