24. கண்ணன் ஒரு கைக்குழந்தை!
பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - கவிஞர் வாலி எழுதி, ஜேசுதாஸ்-பி.சுசீலா பாடியது! இளையராஜவின் ஆரம்ப கால ஹிட்களில் இதுவும் ஒன்றல்லவா?
படத்தின் பெயர் பத்ரகாளி என்று நினைக்கிறேன்! தவறு என்றால் சொல்லவும்!
![]() |
கண்கள்சொல்லும் பூங்கவிதை
கன்னம்சிந்தும் தேனமுதை
கொண்டுசெல்லும் என்மனதை
கையிரண்டில் நானெடுத்துப்
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ
உன்மடியில் நானுறங்க
கண்ணிமைகள் தான்மயங்க
என்னதவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ
ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தமிந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள்வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா
அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளையிது
உன்னருகில் நானிருந்தால்
ஆனந்தத்தில் எல்லையது
காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும்வரம் கிடைக்கும்வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா
மஞ்சள்கொண்டு நீராடி
மைக்குழலில் பூச்சூடி
வஞ்சிமகள் வரும்போது
ஆசைவரும் ஒருகோடி
கட்டழகன் கண்களுக்கு
மையெடுத்து எழுதட்டுமா
கண்கள்படக் கூடும்என்று
பொட்டுஒன்று வைக்கட்டுமா
(கண்ணன் ஒரு)
![]() |
ஆராரிரோ ஆராரிரோ
மார்கழி 20 - முப்பத்து மூவர் - இருபதாம் பாமாலை.


