Showing posts with label ML Vasantha Kumari. Show all posts
Showing posts with label ML Vasantha Kumari. Show all posts

Friday, July 16, 2010

விடியற்காலை எம்.எஸ்: ஸ்ரீமன் நாராயண! ஸ்ரீமன் நாராயண!

கண்ணன் பாட்டில பதிவிட்டு ரொம்ப நாளாயிரிச்சி போல! முருகனருள் மோகத்திலேயே இருந்தா எப்படி? :) பொறந்த வீட்டையும் கொஞ்சம் பார்க்கணும்-ல்ல? :))இதோ...மிகவும் பிரபலமான பாட்டு, பிரபலமான பாடகர், பிரபலமான கவிஞர்!
இது ஒரு வைகறைப் பாட்டு! விடியற்காலைப் பாட்டு!
அதுவும் எம்.எஸ்.அம்மா குரலில் கேட்டால்...நள்ளிரவு கேட்டாலும் சிற்றஞ் சிறுகாலே தான்! எனக்கு மிகவும் பிடித்த எளிமையான பாட்டு!

மெட்டு மாறாமல், தமிழிலும் மொழியாக்கி உள்ளேன்!
வாய் விட்டுப் பாடி/படித்துப் பார்த்து, பொருந்தி வருதா-ன்னு சொல்லுங்க!
எங்கே...உரக்கச் சொல்லுங்க பார்ப்போம்...

ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே!
ஸ்ரீமதே நாராயணாய நம:


மேற்சொன்ன த்வய மந்திரத்தை, அன்னமய்யா இசை வடிவில் எழுதி வச்சாப் போலவே இருக்கும் பாட்டு!
பாடல்: ஸ்ரீமன் நாராயண! ஸ்ரீமன் நாராயண!
குரல்: எம்.எஸ்.சுப்புலட்சுமி
வரிகள்: அன்னமாச்சார்யர்




ஸ்ரீமன் நாராயண! ஸ்ரீமன் நாராயண!
ஸ்ரீமன் நாராயண நீ ஸ்ரீபாதமே சரணம்!


திருநாரணன் திரு! திருநாரணன் திரு!
திருநாரணன் திரு! திருவடிகளே சரணம்!



கமலா சதீ, முக கமல, கமல ஹித!
கமல ப்ரியா, கமலேக்ஷனா!
கமலாசன ஹித, கருட கமன ஸ்ரீ!
கமல நாப நீ பத கமலமே சரணம்!

(ஸ்ரீமன் நாராயண)

தாமரை யாள் அவன், தாமரை முகம்-அகம்!
தாமரை வேள், செந் தாமரைக் கண்ணா!
தாமரை யில் உறை, கருடனின் மேல் நிறை
தாமரை உந்தி, உந்தன் மலரடிகளே சரணம்!

(திருநாரணன் திரு)

பரம யோகிஜன பாகதேயஸ்ரீ
பரம புருஷா பராத்பரா!
பர மாத்மா பரமாணு ரூபஸ்ரீ
திருவேங்கடகிரி தேவா சரணம்!
(ஸ்ரீமன் நாராயண)

பரமான அன்பருக்கு வரமான வரதனே
பரமான பரமே, பரம் பொருளே!
பரமானே, பரம அணுவில் அணுவே
திருவேங்கடம் உடையானே சரணம்!

(திருநாரணன் திரு)

திருநாரணன் திரு! திருநாரணன் திரு!
திருநாரணன் திரு! திருவடிகளே சரணம்!

மூலம்: வடமொழி
(தெலுங்கில் அன்னமய்யா நிறைய கவிதைகள் செய்திருந்தாலும், அவரின் வடமொழிக் கீர்த்தனைகளும் மிகவும் ஆழ்ந்தவை! அதில் இது மிகவும் பிரபலமானது)
தலம்: திருமலை-திருப்பதி
ராகம்: பெளளி
தாளம்: ஆதி


இசைக் கருவிகளில்:

நாதசுரம் - MPN சேதுராமன்
வயலின் - குன்னக்குடி
வீணை - காயத்ரி
புல்லாங்குழல்-சிக்கல் சகோதரிகள்

இசையரசி எம்.எஸ் இந்தப் பாடலின் ஆத்மா என்றாலும்...
இதர கலைஞர்களின், அவர்களுக்கே உரிய குரலில்/நடையில்...

எம்.எல்.வசந்தகுமாரி:


சுதா ரகுநாதன்:


நடனம்:


குழந்தை நடனம்:


வீட்டு மாடி நடனம்:


சிறுவன் - ஆதித் மூர்த்தி

Monday, May 03, 2010

MLV & S.ஜானகி: கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்!

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் - இது பாரதியார் பாடல்-ன்னு பலருக்கும் தெரியும்!
ஆனால், சினிமாவில், இதை இரண்டு பெரும் பாடகிகள் பாடியுள்ளனர் என்று தெரியுமா? = எம்.எல்.வசந்தகுமாரி (ஸ்ரீவித்யா அவர்களின் தாயார்) & எஸ்.ஜானகி!

இருவரும், அவர்களுக்கே உரித்தான குரல் வெளிச் சோலைகளில்! கேட்டீங்க-ன்னா உங்களுக்கே தெரியும்! ஒன்று கம்பீரக் குரல், ஒன்று கண்ண்ணன்ன்ன் என்னும் மென் குரல்! :)

சரி, அது என்ன தங்கமே தங்கம்? யார் அது?
பாரதியார் யாரைத் "தங்கமே தங்கம்"-ன்னு கூப்பிடுகிறார்?
= கண்ணனையா? ராதையையா?
ரெண்டு பேரையுமே இல்லை! யாரை-ன்னு சொல்லுங்க பார்ப்போம்!

இந்தப் பாட்டை, கண்ணன் பாட்டுக் குழுவில் ஒருவரான ராதாமோகன் அவர்களுக்குச் சமர்பிக்கின்றேன்! :)
அவரு தான் அடிக்கடி தங்கமே தங்கம்-ன்னு மின்னஞ்சல் போடுவாரு! நாங்க வெள்ளியே வெள்ளி-ன்னு பதில் போடுவோம்! சரி தானே இராகவ்? :)



படம்: ஏழை படும் பாடு / தெய்வத்தின் தெய்வம்
குரல்: எம்.எல்.வசந்தகுமாரி / எஸ்.ஜானகி
இசை: CR சுப்பராமன் / ஜிரா (எ) ஜி.ராமநாதன்
வரிகள்: சுப்ரமணிய பாரதியார்

MLV அம்மா பாடுவது:

ஜானகி பாடுவது:
கண்ண்ண்ண்ண்ண்ண்ணன்-ன்னு குழையும் போது, குழலோசை மட்டும் கேட்கும்! அப்படியே தந்தி இழுக்க...வீணை இசையைக் கேட்கத் தவறாதீர்கள்!
அதே போல், தங்கம்ம்ம்ம்-ன்னு முடிக்கும் போது, டொய்ங்க்-ன்னு ஒத்தை இழுப்பு வீணைத் தந்தியும் மறவாது கேளுங்கள்!


கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர்
ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம்!
(கண்ணன் மனநிலையை..)

ஆற்றங்கரை அதனில் முன்னம் ஒருநாள் - எனை
அழைத்துத் தனி இடத்தில் பேசியதெல்லாம்
தூற்றி நகர் முரசு சாற்றுவேன் என்று
சொல்லி வருவாயடி தங்கமே தங்கம்!
(கண்ணன் மனநிலையை..)

சோரம் இழைத்து இடையர் பெண்களுடனே - அவன்
சூழ்ச்சித் திறமை பல காட்டுவ தெல்லாம்
வீர மறக் குலத்து மாதரிடத்தே
வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ!

பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் - மிகப்
பீழை இருக்குதடி தங்கமே தங்கம்
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் - அதைப்
பற்றி மறக்கு தில்லை பஞ்சை உள்ளமே.


நேர முழுதிலும் அப்பாவி தன்னையே - உள்ளம்
நினைந்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால்
பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்!
(கண்ணன் மனநிலையை..)

மரபிசையில்...நித்ய ஸ்ரீ பாடுவது:



இவை பாரதியாரின் "கண்ணன் என் காதலன்" பாடல்கள்!

"தங்கமே தங்கம்" யாரு-ன்னு கண்டு புடிச்சாச்சா? அவள் தான், தூது செல்லும் உற்ற தோழி! அவள் பேர் என்ன?
தன் பாங்கியை (தோழியை) அனுப்பப் பார்க்கிறாள்! தோழியோ தயங்குகிறாள்!
"தங்கமே தங்கம்" என்று அவளைக் கெஞ்சி, சென்று, பார்த்து வரச் சொல்கிறாள்!
கண்ணனின் மனநிலை எப்படி இருக்கு என்று கண்டு வரச் சொல்கிறாள்!

அய்யய்யோ, கண்ணனோட மனநிலையா? மனநிலை சரியில்லாதவன் ஆயிட்டானா என்ன கண்ணன்?

ஹா ஹா ஹா!
அடிப் பாவி, நீ தான்டி மனநிலை சரியில்லாதவளா ஆயிட்ட!
ஒரு நாளைக்கு ஒரு வேளை - மதிய வேளை உணவு மட்டும் தான்!
உறக்கம் இல்லை! விழிப்பும் இல்லை! ஒப்புக்கு வாழ்ந்துகிட்டு இருக்க!
கண்களிலோ தினப்படிக்கு வற்றாத குற்றாலம்!
அவன் பழைய மடல்களை எல்லாம் தேடித் தேடி எடுத்துப் படிச்சிக்கிட்டு இருக்க!

இதுல உன் மனநிலையைத் தான் முதலில் செக் பண்ணனும்! நீ என்னடா-ன்னா கண்ணன் மனநிலையைக் கண்டு வரச் சொல்லுறியே! ஏய், இனி என்னடீ பண்ணப் போற நீயி?

தீர ஒருசொல்...இன்று...கேட்டு வந்திட்டால்...
பின்பு...தெய்வம் இருக்குதடி, தங்கமே தங்கம்!
முருகத் தெய்வம் இருக்குதடி, தங்கமே தங்கம்!

Wednesday, February 04, 2009

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா - என்பவள் யார்?

இன்னிக்கி கண்ணன் பாட்டுக்குள்ள ஒரு "கண்ணன் பாட்டு"! பாரதியாரின் கண்ணன் பாட்டு நூலில் இருந்து சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா என்னும் சூப்பர் பாட்டு!
* இதைச் சினிமாவிலும் பாடுவாங்க! கர்நாடக சங்கீதத்திலும் பாடுவாங்க!
* தமிழ் இசையிலும் பாடுவாங்க! மெல்லிசைக் கச்சேரியிலும் பாடுவாங்க!
அப்படி என்ன தான் இருக்கு இந்தப் பாட்டில்? பார்க்கலாமா?

"சரி...மொதல்ல இது கண்ணன் பாட்டு தானா?"

"அட என்ன கேள்வி இது? பாரதியாரின் கண்ணன் பாட்டு என்னும் தொகுப்பில் தானே இருக்கு! கண்ணன் பாட்டே தான்!"

"இல்லை! இது பராசக்தி பாட்டு!"

"அடிங்க! இதைக் கண்ணன் பாட்டில் தானே பாரதி பாடுறான்?
* இதுக்கு முந்தன பாட்டு = கண்ணன் என் சத்குரு!
* இதுக்கு அடுத்த பாட்டு = தீராத விளையாட்டுப் பிள்ளை!
அப்புறம் எப்படி இது பராசக்தி பாட்டு ஆகும்? கொழப்பம் பண்றதே பொழைப்பாப் போச்சு கேஆரெஸ் ஒனக்கு! "

"ஹிஹி! ஆனால் பாரதியார், இதுக்கு முன்னுரை எழுதும் போது,
"பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு"
-ன்னு எழுதறாரே!"

"ஆகா! அப்படியா சேதி! இது எனக்குத் தெரியாதே! கண்ணன் பாட்டுத் தொகுப்பில் பராசக்தி எங்கே வந்தா? எப்படி வந்தா?"

"அப்படிக் கேளு! அதை விட்டுப்போட்டு, கொழப்பம் பண்றேன், கொய்யாப் பழம் பண்றேன்-ன்னு சொன்னா எப்படி?" :)

"சரி, சரி...கோச்சிக்காதே! சொல்லுடா"

"இது பாரதியார் எழுதினாப் போல, "பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு" தான்! எதுக்கு அவர் கண்ணன் பாட்டில் பராசக்தியைப் பாடணும்?"



கண்ணனுடன் பிறந்த குழந்தை பராசக்தி!
* அவன் கிருஷ்ணன் என்றால், இவள் கிருஷ்ணை!
* அவன் சியாமளன் என்றால், இவள் சியாமளை!
* அவன் கருப்பன் என்றால், இவள் கருப்பி!

கண்ணன், ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒருத்தி மகனாய் ஒளிந்து விளையாடினான்! ஆனால் அவள்?
பெற்ற தாயான யசோதை, பார்க்கக் கூடக் கொடுத்து வைக்காமல், கை மாறிய குழந்தை!

பெண் குழந்தையாச்சே விட்டுருவான் என்று நினைத்தார்கள் அடியவர்கள்! ஆனால் கருத்துப் பிழை கொண்ட கம்சன் விடுவானா என்ன?
மூர்க்கத்தனமான பிடிப்புக்கு ஆண் என்ன? பெண் என்ன?
குழந்தையைக் கொல்ல உசரத் தூக்கினான்! உதை வாங்கினான்!
கம்சன் கையில் சிக்காமல், வானில் பறந்தாள் மாயா! காத்யாயினி! காற்றில் தெய்வமாய்க் கலந்தாள்!

இன்னிக்கும் ஆயர்/கோனார் வீடுகளில் (எங்க வீட்டில் உட்பட), மணம் ஆகாமல் மறைந்து போகும் இளம் பெண்களுக்கு, ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் அன்று படையல் போடுவார்கள்! புதுப் புடவையை ஒரு பொண்ணு போல சுத்தி, அதற்கு காதோலை-கருக மணி மாட்டி, நகை போட்டு, அதன் மடியில் தேங்காய் பூ பழம் வச்சி, பூசை போடுவார்கள்!

பாரதியும் அதையே செய்கிறான்!
பாரதியின் கண்ணன் பாட்டில் கண்ணக் குழந்தை ஓடி விளையாடுகிறது! ஓடி விளையாடு பாப்பா, ஒரு குழந்தையை வையாதே பாப்பா அல்லவா?
எனவே இன்னொரு குழந்தையான, இரவில் இடம் மாறிய பராசக்திக் குழந்தையை, கண்ணனின் தங்கச்சியை, கண்ணனுடன் ஓடி விளையாடச் செய்கிறான்!
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே! என்னைக் கலி தீர்த்தே, உலகில் ஏற்றம் புரிய வந்தாய்!

சின்னஞ்சிறு கிளியான ஒரு குழந்தை பாடுவது...பேத்துவது :)) Dont Miss!



பிடிச்சமான ஒரு சுட்டியைக் கேட்டுக்கிட்டே படிங்க! பதிவின் கீழே இன்னும் பல சுட்டிகள், அசைபடங்கள் இருக்கு!

திரைப்படங்களில்:
* கலைஞரின் நீதிக்குத் தண்டனை படத்தில் இருந்து...சொர்ணலதாவின் முதல் பாடல்-எம்.எஸ்.வி இசையில்
* மணமகள் படத்தில் இருந்து...எம்.எல்.வசந்தகுமாரி

தமிழிசை-கர்நாடக இசைகளில்:
* மகாநதி ஷோபனா
* சாக்சோஃபோன்
* மகராஜபுரம் சந்தானம்
(பாரதி இட்ட ராகம் - பைரவி, தாளம் - ரூபகம்)
இந்தப் பாடல் ஒரு நவரசப் பாடல்! மகிழ்ச்சி-சோகம், சிரிப்பு-அழுகை, வெற்றி-ஏக்கம்-ன்னு விதம் விதமா பிரதிபலிக்கும்!
இதுவும் "கிருஷ்ணை" பாட்டே! "கிருஷ்ணன்" பாட்டே! கண்ணன் பாட்டே!


சின்னஞ்சிறு கிளியே, கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே, உலகில் ஏற்றம் புரிய வந்தாய்!


பிள்ளைக் கனியமுதே! கண்ணம்மா! பேசும் பொற் சித்திரமே!
அள்ளி அணைத்திடவே, என் முன்னே ஆடி வரும் தேனே!

ஓடி வருகையிலே, கண்ணம்மா உள்ளம் குளிருதடி!
ஆடித் திரிதல் கண்டால், உன்னைப் போய் ஆவி தழுவுதடி!


உச்சிதனை முகர்ந்தால், கருவம் ஓங்கி வளருதடி!
மெச்சி உனை ஊரார், புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி!
கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி!
உன்னைத் தழுவிடலோ, கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி!

சற்று உன் முகம் சிவந்தால், மனது சஞ்சலம் ஆகுதடி!
நெற்றி சுருங்கக் கண்டால், எனக்கு நெஞ்சம் பதைக்குதடி!

உன் கண்ணில் நீர் வடிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி!
என் கண்ணிற் பாவையன்றோ? கண்ணம்மா! என்னுயிர் நின்னதன்றோ!

சொல்லும் மழலையிலே, கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய்!
முல்லைச் சிரிப்பாலே, எனது மூர்க்கம் தவிர்த்திடுவாய்!


இன்பக் கதைகளெல்லம், உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ?
அன்பு தருவதிலே, உன்னை நேர் ஆகுமோர் தெய்வம் உண்டோ?


மார்பில் அணிவதற்கே, உன்னைப்போல் வைர மணிகளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே, உன்னைப்போல் செல்வம் பிறிதுமுண்டோ?


வாய்ப்பாட்டுகளில்:
* டி.என்.சேஷகோபாலன்
* செளம்யா
* உன்னி கிருஷ்ணன்
* பம்பாய் சகோதரிகள்

இசைக் கருவிகளில்:
* புல்லாங்குழல் - டி.ஆர்.மகாலிங்கம்
* மேண்டலின் - ஸ்ரீநிவாஸ்
* வீணை - ராஜேஷ் வைத்யா
* சாக்சோஃபோன் - கத்ரி கோபால்நாத்

நித்ய ஸ்ரீ
பாரதியார் பைரவியில் இதை இட்டாலும்...ஒவ்வொரு பத்திக்கும் ஒரு ராகமாக, ராக-மாலையாகப் பாடப்படுவதும் உண்டு!
காபி, மாண்ட், வசந்தா, திலாங், ஹிந்தோளம், நீலாமணி, நீலாம்பரி, வலாசி, மத்யமாவதி


TM கிருஷ்ணா - சஞ்சய் வாணன் (சின்னஞ் சிறு பையன் :)


வீணை சிட்டிபாபு


சுதா ரகுநாதன்


நடனம்

Monday, December 25, 2006

15. தாயே யசோதா!

இப்பதிவு அன்பர் Dubuku Disciple - சுதா பிரசன்னா அவர்களின் சார்பாக!
பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - ஊத்துக்காடு வேங்கட கவி எழுதி, சுதா ரகுநாதன் பாடியது
மற்ற கலைஞர்கள் பாடியது/இசைத்தது பதிவின் இறுதியில்!



தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி
(தாயே)

தையலே கேளடி உந்தன் பையனைப் போலவே இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை
(தாயே)

காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்
காலசைவும் கையசைவும் தாளமோடு இசைந்து வர
நீலவண்ணக் கண்ணன் இவன் நர்த்தனம் ஆடினான்


பாலனென்று தாவி அணைத்தேன் அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் வாயில் முட்டமிட்டாண்டி
பாலனல்லடி உன் மகன் ஜாலம் மிக செய்யும் கிருஷ்ணன்
நாலு பேர்கள் கேட்கச் சொல்ல நாணமிக ஆகுதடி
(தாயே)

முந்தாநாள் அந்தி நேரத்தில் சொந்தமுடன் கிட்டே வந்து
விந்தைகள் அனேகம் செய்து விளையாடினான் ஒரு
பந்தளவாகிலும் வெண்ணை தந்தால்தான் விடுவேன் என்று
முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான்




அந்த வாசுதேவன் இவன் தான் அடி யசோதா!
மைந்தன்என்று தொட்டுஇழுத்து மடிமேல் வைத்து
சுந்தர முகத்தைக் கண்டு சிந்தை மயங்கும் நேரம்
அந்தர வைகுந்தமோடு எல்லாம் காட்டினான் அடி!
(தாயே)

இந்தப் பாடல் இன்னும் பல பத்திகள் (சரணங்கள்) கொண்டு உள்ளது; மொத்தம் ஆறு சரணங்கள் என்றாலும், மிகப் பிரபலமாகப் பாடப் படும் சரணங்களே மேலே கொடுக்கப்பட்டுள்ளன. முழுதும் அறிய இங்கே செல்லவும்.



திரைப்படங்களில்:

எம்.எல்.வசந்தகுமாரி = படம்: குல தெய்வம்
சுதா ரகுநாதன், ரஞ்சனி ராமகிருஷ்ணன் = படம்: Morning Raga (Hindi)

கர்நாடக இசை/ஹிந்துஸ்தானி/மெல்லிசை:
Maharajapuram Santhanam
Sowmya
Bombay Sisters
Madurai Mani Iyer
Chembai Vaidyanatha Bhagavathar

Veenai - Karaikurichi Brothers


மார்கழி 11 - கற்றுக் கறவை - பதினொன்றாம் பாமாலை.

எழுதியவர்: ஊத்துக்காடு வேங்கட கவி
ராகம்: தோடி
தாளம்: ஆதி

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP