9. குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்டான்!
இப்பதிவு அன்பர் Dubuku Disciple - சுதா பிரசன்னா அவர்களின் சார்பாக!
மேலும் சில அழகான பாடல் வரிகளும், படங்களும் அனுப்பி உள்ளார்; ஒவ்வொன்றாகப் பதிவில் இடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இன்று, "குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும், குறை ஏதும் எனக்கேதடி சகியே.... "

பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - K.S. Chitra பாடியது
மற்ற கலைஞர்கள் பாடியது/இசைத்தது பதிவின் இறுதியில்!
குழலூதி மனமெல்லாம் கொள்ளைகொண்ட பின்னும்
குறை ஏதும் எனக்கேதடி சகியே
(குழலூதி)
அழகான மயிலாடவும் - மிக மிக
அழகான மயிலாடவும்
காற்றில் அசைந்தாடும் கொடிபோலவும்
அகமகிழ்ந்து இலகும் நிலவொளி தனிலே
தனைமறந்து புள்ளினம் கூவ
அசைந்தாடி மிக இசைந்தோடி வரும்
நலம் காண ஒரு மனம் நாட
தகுமிது என ஒரு பதம் பாட
தகிட ததிமி என நடமாட
கன்று பசுவினமும் நின்று புடைசூழ
என்றும் மலரும் முக இறைவன் கனிவோடு
(குழலூதி)
மகர குண்டலம் ஆடவும் - அதற்கேற்ப
மகுடம் ஒளி வீசவும்
மிகவும் எழில் ஆகவும் - காற்றில்
மிளிரும் துகில் ஆடவும்
(அகமகிழ்ந்து இலகும் நிலவொளி தனிலே...)
(குழலூதி மனமெல்லாம்...)

கர்நாடக இசை/ஹிந்துஸ்தானி/மெல்லிசை:
"குழல் ஊதி" குழலில்; Flute - Ramani
Saxophone-Kadri Gopalnath
KJ Yesudass
Maharajapuram Santhanam
Sudha Raghunathan
Bombay Sisters
Sowmya
மார்கழி 5 - மாயனை மன்னு வடமதுரை - ஐந்தாம் பாமாலை
பாடியவர்: சித்ரா
எழுதியவர்: ஊத்துக்காடு வேங்கட கவி
ராகம்: காம்போதி
தாளம்: ஆதி
