49. காற்றில் வரும் கீதமே, என் கண்ணனை அறிவாயா?
தில்லாலங்கடி தாங்கு என்று நம்ம வெட்டிப்பயல் போட்டாரே ஒரு கண்ணன் பாட்டு, அதை விட தில்லாலங்கடி இந்தப் பாட்டு! - ஒரு நாள் ஒரு கனவு என்ற படம்.
இந்த வாரம் வெளிநாட்டுக்குப் போயிருந்த போது, சும்மா விமானத்தில் பாத்துக்கிட்டே போனேன். படம் நல்லாத் தான் இருந்துச்சு. நம்மள தான் ஊர் போய்ச் சேர்ந்தவுடன், ஆபிசில் போட்டுத் தாக்கிட்டாங்க! :-)
ஸ்ரீகாந்த் (இவருக்குக் கல்யாணம் ஆகப் போகுதாமே! - வாழ்த்துக்கள்).
இவருடன் சோனியா அகர்வால் நடிச்ச படம்.
யாராச்சும் தமிழ்மணத்தில் விமர்சனம் போட்டாங்களான்னு தெரியலை, மறந்து போச்சு!
ஆனா, இந்தப் படத்தில் ஒரு டாப்-டக்கர் கண்ணன் பாட்டு உள்ளது!
அஞ்சு பேர் சேர்ந்து பாடறாங்க டோய், இந்தப் பாட்டை!
அம்மன் பாட்டு வலைப்பூவில், bas என்பவர், நேயர் விருப்பம் கேட்டிருந்தார் - காற்றில் வரும் கீதமே, என் கண்ணனை அறிவாயா?
ஓ அறிவேனே என்று பாட்டும் வீடியோவும் அனுப்பி வைத்தார் நம்ம பாலராஜன் கீதா - பதிவுலகத் தென்றல்! - அவருக்கு நம் நன்றி!
காற்றினிலே வரும் கீதம் - எம்.எஸ் பாட்டு அந்தக் காலத்து ஹிட் என்றால், அதே போல்
காற்றில் வரும் கீதமே என்று தான் இதுவும் தொடங்குகிறது!
பாட்டும் மெல்லிய தென்றல் போலத் தான் ஒலிக்கிறது!
எல்லாவற்றுக்கும் மேலாக, ஆங்கில வார்த்தைகள் எல்லாம் இல்லாமல், எளிய தமிழில், சுகமான ராகத்தில், வாலி-ஞானியின் கூட்டு முயற்சி!
பாடலைக் காண வேண்டாம். கேட்டு மட்டும் மெய் மறப்போம் என்று நீங்கள் நினைத்தால் இதோ சுட்டி
கீழே இசைஞானி இளையராஜாவின் கச்சேரியில், ஒரு குழுவே பாடுகிறது பாருங்கள்!
அவன் வாய்க் குழலில் அழகாக........
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து
(காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா? )
பசு அறியும் அந்தச் சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
வருந்தும் உயிருக்கு ஒரு மருந்தாகும்
இசை அருந்தும் முகம் மலரும்...ஒரு அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே
(காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா? )
ஆதார ஸ்ருதி அந்த அன்னை அன்பே
அதுக்கேற்ற லயம் என் தந்தை அன்பே
ஸ்ருதி லயங்கள் தன்னைச் சுற்றும்...ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்
திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
இது போல் இல்லம் எது சொல் தோழி
(காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா?)
இசையின் பயனே இறைவன் தானே!
ஆகா...அருமையான வரிகள்!
கும்தலக்கடி கும்மாவா என்று பொழுதுபோக்குக்கும் இசை வேண்டும் தான் என்றாலும்
இசையின் பயன், நிலைத்த பயன் என்று வரும் போது, எது நிலைக்கும்?
நிலைத்து நிற்கக் கூடியவனின் பாட்டு தானே நிலைத்தும் நிற்கும்!
ஒத்த வரியில அழகாச் சொல்லிப்புட்டாரு வாலி!
வரிகள்: கவிஞர் வாலி
குரல்:
இளையராஜா, ஹரிஹரன், ஸ்ரேயா கோஷல், பவதாரிணி, சாதனா சர்கம்
இசை: இளையராஜா
படம்: ஒரு நாள் ஒரு கனவு
ராகம்: கல்யாணி (அப்படின்னு நினைக்கிறேன்...
கோட்டீஸ்வரக் கொத்தனார், கோட்டீஸ்வரர் எழுதிய பாட்டைப் போட்டு பட்டையக் கிளப்பினார். அவரே வந்து சொல்லவும் :-)
