Showing posts with label *முகுந்தா முகுந்தா. Show all posts
Showing posts with label *முகுந்தா முகுந்தா. Show all posts

Sunday, May 04, 2008

92. தசாவதாரம்: கமல் பாட்டி பாடும் "முகுந்தா முகுந்தா"!

அட, நம்ம அசின் பொம்மலாட்டம் காட்டுறாங்கடே! தசாவதாரம் கதை இன்னும் ஃபுல்லாத் தெரியலை! ஆனா ஒரு விட்டுக்குள்ளாற மறைப்பாத் துணியைக் கட்டி, பின்னாடி இருந்து நிழல்-லயே பொம்மலாட்டம் நடத்துறாங்க அசின் & கோ. அசின் சும்மா துள்ளலாத் தான் இருக்காய்ங்க! :-)
(பொம்மலாட்டம் - தோல் பாவை ஆட்டம் பற்றித் திருக்குறள் கூட ஒன்னு இருக்கு! என்னான்னு கண்டு புடிங்க பார்ப்போம்)

சின்னப் பசங்க எல்லாம் கிருஷ்ணர்-கோபிகள் வேடம் கட்டி இருக்குதுங்க! வயசான பாட்டிகள் எல்லாம் கூட வேசம் கட்டுதுங்க! ஒரு பாட்டி இராவணன் மாதிரி பத்து தலையை வச்சிக்கிட்டு வாலாட்டது! திடுதிப்புனு பார்த்தா...பாட்டி இருமிக்கிட்டே பாடுது!
அடங் கொக்க மக்கா....நம்ம கமல் பாட்டியா அது??? :-)) நீங்களே பார்த்துச் சொல்லுங்க!


அழகான வீணை இசையுடன் துவங்குது பாட்டு! மிகவும் அழகான வாலி வரிகள்! நல்ல இசைக் கவிதை! அதுவும் துள்ளலான சாதனா சர்கம் குரலில்! குட் ஜாப் ஹிமேஷ் ரசம்சாதம்! :-) (அது என்னாங்க ரெஷாமிய்யா, மியா மியான்னு பேரு சரியா வாயில் வரலீங்க...)
இந்தாங்க...முழுப் பாடலையும் கேட்டுக்கிட்டே படிங்க!




முகுந்தா முகுந்தா - கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா - பிருந்தாவனந்தா அனந்தா
(முகுந்தா முகுந்தா)
வெண்ணை உண்ட வாயால் மண்ணை உண்டவா
பெண்ணை உண்ட காதல் நோய்க்கு மருந்தாக வா

(முகுந்தா முகுந்தா)
என்ன செய்ய நானோ தோல் பாவை தான்
உந்தன் கைகள் ஆட்டி வைக்கும் நூல் பாவை தான்

(முகுந்தா முகுந்தா)

(.....மிருதங்கம் கொட்டுகிறது!
ஜெய ஜெய ராம், ஜெய ஜெய ராம், சீதா ராம், ஜெய ஜெய ராம்
அசுரர் வந்தால் புன்னகைத்து பார்ப்பாய்...கொஞ்ச நேரம் ஆட விட்டு அவர் கணக்கைத் தீர்ப்பாய்-ன்னு அழகாச் சொல்லறாரு வாலி)


நீ இல்லாமல் என்றும் இங்கே - இயங்காது பூமி
நீ அறியாச் சேதி இல்லை - எங்கள் கிருஷ்ண சுவாமி
பின் தொடர்ந்து அசுரர் வந்தால் - புன்னகைத்து பார்ப்பாய்
கொஞ்ச நேரம் ஆட விட்டு - அவர் கணக்கைத் தீர்ப்பாய்


உன் ஞானம் போற்றிடாத - விஞ்ஞானம் ஏது?
அறியாதார் கதை போலே - அஞ்ஞானம் ஏது?
அன்று...அர்ஜுனனுக்கு நீ உரைத்தாயே - பொன்னான கீதை!
உன் மொழி கேட்க, உருகுகிறாளே - இங்கே ஓர் கோதை!


வாராது போவாயோ, வாசு தேவனே?
வந்தாலே வாழும், இங்கு என் ஜீவனே!
(ஜெய்..முகுந்தா முகுந்தா)

(இப்போ மனமயக்கும் கிட்டார் இசை....கூடவே ஜலதரங்கம்! சும்மாச் சொல்லக் கூடாது...ஹிமேஷ் ரெஷாம்மியா கலக்கி இருக்காரு! அவதாரங்கள் பட்டியல் - தசாவதாரத்தில் கிட்டத்தட்ட பாதிப் பட்டியல் போடறாங்க!)
மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னைக் காத்தாய்
கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்
வாமனன் போல் தோற்றம் கொண்டு வானளந்து நின்றாய்
நரன் கலந்த சிம்மமாகி ஹிரணியனைக் கொன்றாய்
ராவணன் தன் தலையைக் கொய்ய ராமனாக வந்தாய்
கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய்


இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் நான்
உன் தாரம் ஆனேன்
உன் திருவடி பட்டால் திருமணமாகும்
ஏந்திழை ஏங்கு கிறேனே
மயில் பீலி சூடி நிற்கும் - மன்னவனே
மங்கைக்கு என்றும் நீயே - மணவாளனே!

(முகுந்தா முகுந்தா)

ஒவ்வொரு அவதாரத்திலும் பெருமாளுடன் திருமகளும் உருவமாகவோ, அருவமாகவோ வருவதை அழகா எளிய இனிய தமிழில் சொல்லுறாரு கவிஞர் - உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் நான் உன் தாரம் ஆனேன்!
அகலகில்லேன்! உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம்! உனக்கே நாம் ஆட் செய்வோம்! என்ற பாசுர வரிகள் எல்லாம் மனதில் இழையோடுகின்றன!


(பாட்டியின் ஸ்டைலான குரலில்...இருமிக் கொண்டே...)
உசுரோடு இருக்கான் - நான் பெற்ற பிள்ளே
ஏனோ இன்னும் தகவல் வரலே..
வானத்தில் இருந்து வந்து உதிப்பான்
சொன்னால் கேளுங்க அசடுகளே
வாடா மன்மதா...அழகா வாடா
உடனே வாடா.... வாடா.....
கோவிந்தா கோபாலா....)


முகுந்தா முகுந்தா - கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா - பிருந்தாவனந்தா அனந்தா



படம்: தசாவதாரம்
இசை: ஹிமேஷ் ரெஷாம்மியா
குரல்: சாதனா சர்கம், கமலஹாசன்
வரி: வாலி

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP