கண்ணா என் கையைத் தொடாதே!
இன்னிக்கி ஒரு டமாஷான கண்ணன் பாட்டைக் கேட்போமா? பதிவர் ராதாவின் நேயர் விருப்பம்! :)
அப்படி என்ன டமாஷா?
கண்ணா என் கையைத் தொடாதே-வாம்!
அப்படின்னா, கண்ணா என் கையைத் தொடாதே, இதழைத் தொடு-ன்னு அர்த்தம்! :))
இதோ கேட்டுக்கிட்டே படிங்க! சுசீலாம்மாவின் வித்தியாசமான-கீச்கீச் குரலில்

நீல வண்ணக் கண்ணனே
உனது எண்ணமெல்லாம் நானறிவேன்
கண்ணா என் கையைத் தொடாதே - மோகனக்
கண்ணா என் கையைத் தொடாதே!
தன்னந் தனியான என்னைத்
துன்புறுத்தல் ஆகுமோ?
நான் உனக்குச் சொந்தமோ
ராதை என்ற எண்ணமோ?
கண்ணைக் கண்ணைக் காட்டி என்னை
வம்பு செய்யல் ஆகுமோ?
இன்னும் இங்கு நின்று வம்பு செய்தால்
ஏளனம் செய்வேன் - கண்ணா என் கையைத் தொடாதே!
(நீல வண்ணக் கண்ணனே)
மல்லி என் கரத்தை விட்டு
வந்த வழி செல்லுவாய்!
நல்லதல்ல உன் செயலை
நாடறிய சொல்லுவேன்!
கள்ளனே உன்னை எல்லோரும்,
பொல்ல பிள்ளை என்று சொல்லி - கண்டபடி பேசுவார்!
இளம் கன்னி எந்தன் உள்ளம் தன்னை
துன்புறச் செய்யாதே - கண்ணா என் கையைத் தொடாதே!
(நீல வண்ணக் கண்ணனே)
படம்: மல்லிகா
குரல்: பி.சுசீலா
வரிகள்: ஏ.மருதகாசி
இசை: டி.ஆர்.பாப்பா

ஹே, பொற்க்கீ! கண்ணா, என் கையைத் தொடாதே! :)
