Showing posts with label TMS. Show all posts
Showing posts with label TMS. Show all posts

Friday, August 09, 2013

ஆண்டாள் பிறந்தநாள்! ஆடியில் சிறந்தநாள்!

இன்று Aug 9
என் இன்-உயிர்த் தோழி, கோதையின் பிறந்தநாள்!

அவளுக்கு, என்னவன் முருகவன் சொல்லும் வாழ்த்து = இங்கே!

இதோ முத்தாய்ப்பாக ஒரு காட்சி! அப்பாவும் பொண்ணும் போட்டி போட்டு பாடும் கண்ணன் பாட்டு!
இந்தப் பாட்டின் வேகம்... கேட்கும் போதெல்லாம் என்னை என்னமோ பண்ணும்!
இந்தப் பாட்டின் காட்சி... பார்க்கும் போதெல்லாம் என்னை என்னமோ பண்ணும்!

*அப்பாவாக = நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
*சின்னப் பொண்ணாக = குட்டி பத்மினி
*பெரிய பொண்ணாக = கே.ஆர்.விஜயா

வரிகள் போட்டி போட்டுக் கொண்டு வந்து விழுகின்றன = கண்ணனின் தாசனான கண்ணதாசன் தூரிகையில்!
TMS ஒரு பாய்ச்சல் பாய்ஞ்சா, சுசீலாம்மா எட்டு பாய்ச்சல் பாயறாங்க!

சிறுமி கோதைக்கு குரல் கொடுப்பது: மாஸ்டர் டி.எல்.மகாராஜன்
(ஆண் குரல் நல்லாத் தெரியுது; சின்னப் பொண்ணு கோதை ஒரு வேளை ஆம்பிளைப் புள்ளை போல் ரொம்ப பிடிவாதமோ? அதான் ஆம்பிளைக் குரலோ? :)

பெரியவள் கோதைக்கோ குரல் கொடுப்பது: பி.சுசீலா
இந்தப் பாட்டைக் கேட்டு, சுசீலாம்மாவிடம், நீங்க தான் அந்தக் கடவுள்-ன்னு யாரோ சொல்ல, அவர்கள் புன்னகையுடன் மறுத்தார்களாம்! :)
http://psusheela.org/fans/subbu_pothigai.html

இதோ: அரி அரி கோகுல ரமணா உந்தன் - திருவடி சரணம் கண்ணா!



அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!
அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!

பாரத தேவா பாண்டவர் நேசா
பதமலர் பணிந்தோமே - உன்
பதமலர் பணிந்தோமே!
(அரி அரி கோகுல ரமணா)

ஞான மலர்க் கண்ணா, ஆயர்க் குல விளக்கே
வானமும் கடலும் வார்த்து எடுத்த பொன் உருவே
கானத்தில் உயிர் இனத்தைக் கட்டுவிக்கும் கண்ணா!

(தானே உலகாகி தனக்குள்ளே தான அடங்கி
மானக் குல மாதர் மஞ்சள் முகம் காத்து
வாழ்விப்பாய் என்றும் மலர்த்தாள் கரம் பற்றி
நானும் தொழுதேன் நம்பி பரந்தாமா - உன்
நாமம் உரைக்கின்ற நல்லோர் நலம் வாழியவே!)

அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!

படம்: திருமால் பெருமை
வரிகள்: கண்ணதாசன்
குரல்: TMS, பி.சுசீலா, டி.எல்.மகாராஜன்
இசை: கே.வி.மகாதேவன்


Happy Birthday Kothai!
உனக்கு அவனோடு (கண்ணனோடு) பல்லாண்டு பல்லாண்டு...
எனக்கு அவனோடு (முருகவனோடு) பல்லாண்டு பல்லாண்டு...



Tuesday, June 11, 2013

TMS: பச்சைமா மலைபோல் மேனி!

TMS அவர்களின் நீங்கா நினைவாக, முருகனருள் வலைப்பூவில், 2 வாரங்களாய், பாடல் இட்டுக் கொண்டே வரும் போது.......

அட, கண்ணன் பாட்டிலே, இன்னும் இடவில்லையே -ன்னு இன்று தான் மின்னல் போலத் தோன்றியது; அதான் இந்தச் சினிமாப் பாடல்;
பலருக்கும் தெரிஞ்ச பாடல்... ஆனா TMS-இன் "பின்குறிப்பு" தெரியாத பாடல்....

அதென்ன "பின்குறிப்பு"?



1967-68
TMS அவர்களின் அருமை மகன் = பாலசுப்பிரமணி;
பாலன் தான் = 16 வயது;
வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய வயது; திடீரென்று மஞ்சள் காமாலை; ஒரேயடியாயப் படுத்து விட்டான்:(

TMS சொல்வதையே கேளுங்கள்:

"பல வைத்தியர்களை அழைத்தேன்; பணத்தைக் கொட்டி வைத்தியம் பார்த்தேன்; ஆனால் அவனோ கடைசி வரை படுக்கையை விட்டு எழுந்திருக்கவே இல்லை;
"முருகா முருகா" என்ற சொற்கள், அவன் வாயிலிருந்து வந்தபடியே, அவன் உயிர் பிரிந்தது;

அன்றிலிருந்து, நான் எதிலும் பற்றற்று இருக்கிறேன்;
என் வாழ்க்கை துயரம் மிகுந்ததாக இருப்பினும், ஆண்டவனின் பாதங்களில் சரணம் அடைந்து விட்டதால்... காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறேன்!

அந்தச் சமயத்தில், எனக்கு ஒரு பாட்டு அமைந்தது; விக்கித்துப் போனேன்;
"உறவு மற்றொருவர் இல்லை; யார் உளர் குறை களைய அம்மா? அரங்க மா நகருளானே!"

என் அப்பன் முருகன் மேல் எத்தனையோ பாடல்கள் பாடி இருக்கிறேன்; 
எத்தனையோ அம்மன் பாடல்கள் பாடி இருக்கிறேன்; எத்தனையோ கண்ணன் பாடல்கள் பாடி இருக்கிறேன்;
ஆனால், 1968இல் வந்த திருமால் பெருமை என்கிற இந்தப் படத்தில், இந்த ஒரு பாடல், இந்த ஒரு வரி... அப்போது என்னை மிகவும் அசைத்து விட்டது;

என் மகன் பாலசுப்பிரமணி; அவன் ஆன்மா சாந்தி அடையணும்; உறவு மற்றொருவர் இல்லை; யார் உளர் குறை களைய அம்மா, அரங்க மா நகருளானே"
(பொக்கிஷம்: நேர்காணல் - 29/5/1977)



TMS (எ) அந்த முருக உள்ளத்தை உருக்கிய திருமால் பாடலை,
இன்று பாடுவோம்...
அவர் மகனும், அவரும்
ஈசன் எந்தை இணையடி நீழலே - ன்னு இளைப்பாற வேண்டுவோம்;

அவரின் துணைவியார் திருமதி. சுமித்ரா செளந்தரராஜன் & மற்ற பிள்ளைகளுக்கு, அவரின் ஆசி நிலைத்து நிற்கவும் வேண்டுவோம்!

TMS = அவனுக்கென்ன?
* மரணமும் இல்லை - அவனுக்கென்ன?
* முருகனின் குரல் - அவனுக்கென்ன?
* ஆண்மையின் தமிழ் - அவனுக்கென்ன?
* இளகிய மனம் - அவனுக்கென்ன?
* உயிருள்ள வரை தொடர்ந்து வரும்.....



பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்


இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே

----------

ஊர் இலேன் காணி இல்லை
உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி!


காரொளி வண்ணனே என்
கண்ணனே கதறு கின்றேன்,
ஆருளர் களைக் கணம்மா
அரங்க மா நகர் உளானே



படம்: திருமால் பெருமை
இசை: கேவி மகாதேவன்

வரிகள்: தொண்டரடிப்பொடி ஆழ்வார்
குரல்: ஏழிசை மன்னர் TMS (எ) Thoguluva Meenatchi Soundararajan

கண்ணன் பாட்டில்,TMS பாடல்களின் தொகுப்பு = இங்கே!



Friday, May 06, 2011

உடல் நிலையில்லை! ஆனால் உலகை வெறுக்கவேண்டாம்!


கோன் வேளும் கோட்பொடி3 ஜேடை3கி ஏ ஸரீர்? ஜியேத்
கோன் ஜெலுமவைகி? கோநொக்கி? த்யே கொங்க்ஹால்தி ஜநன் ஹோய்கி? (கோன்)


எவ்வேளையில் எங்கு விழுந்து போகுமோ இவ்வு டல்? போனால்
எந்த ஜென்மம் வருமோ? என்னவோ? இதை யாரா லும் அறிய முடியுமோ? (எவ்)

மான்ஹோர் ஐகுநாஸ்தக் கான்தீ3 ஐகோ ஐகோ!
த்4யாந் கரோ! ஹரி முக்தி தே3நவயி ஸெத்ல! (கோன்)


கவனமின்றிக் கேட்காமல் காது கொடுத்து கேட்பீர்!
தியானம் செய்யுங்கள்! ஹரி முக்தி தர வருவான் சத்தியம்! (எவ்)


ஸுநொ மஞ்ஜ்ரி கூ4ஸொ:ய் உஜெதி3ந்நு பு4ந்நஹா?
ஸுக2 து3க்குநு பு2ந்நஹா? பொந்தெ3
ஸுக2 து3க்குநு பு2ந்நஹா?
ஹநநவஸ்தெ யெமாக் காய்கரன்ஹோய் தும்ரா:ல்?
மொந் ஹரிஹோர் தொ2வொ! முக்திதே3யி ஸெத்ல! (கோன்)


நாய் பூனை பெருச்சாளியாய் பிறந்த நாட்கள் போதாதா?
சுக துக்க ங்கள் போதாதா? அடைந்த
சுகம் துக்க ங்கள் போதாதா?
அடிக்க வரும் எமனை என்ன செய்ய இயலும் உம்மால்?
மனம் ஹரி மேல் வையுங்கள்! முக்தி தருவான் சத்தியம்! (எவ்)

கள கொ3ரொ ரூப்ஹொய் உஜெதி3ந்நு பு2ந்நஹா?
கரெ கருமுன் பு2ந்நஹா? பு2ள்ளோ
கரெ கருமுன் பு2ந்நஹா?
கெ3ளரவஸ்தெ யெமாக் காய்கரன்ஹோய் தும்ரா:ல்?
ஸிள ஹரிக் த4யாந்கரோ! ஸெய்முக்தி தே3ய் ஸெத்ல! (கோன்)


கருப்பு சிவப்பு உருவுடன் பிறந்த நாட்கள் போதாதோ?
செய்த கர்மங்கள் போதாதோ? முன்னால்
செய்த கர்மங்கள் போதாதோ?
(கழுத்தை)நெறிக்க வரும் எமனை என்ன செய்ய இயலும் உம்மால்?
குளிர் ஹரியை தியானியுங்கள்! பார்த்து முக்தி கொடுப்பான் சத்தியம்! (எவ்)



ஸீன்ஸெர ஜென்முந் க2டெ3 தி3ந்நுந் பு2ந்நஹா?
ஸேநும் கிடொ3 ஹோரெ:நிஹா? யே ஸெய்லுவோ
ஸேநும் கிடொ3 ஹோரெ:நிஹா?
பான்ப2ட3ஸ்தெ யெமாக்காய்கரன் ஹோய் தும்ரால்?
ஸீன் திர்ஜாய் த்4யான்கரோ! ஸெய்முக்தி தே3ய்ஸெத்ல! (கோன்)


இளைப்புடன் ஜென்மங்களை எடுத்த நாட்கள் போதாதோ
சாணப்புழு ஆகவில்லையா? பாருங்கள் (நாம்)
சாணப்புழு ஆகவில்லையா?
சீட்டைக் கிழிக்கும் எமனை என்ன செய்யமுடியும் உம்மால்?
இளைப்பு தீரும் தியானம் செய்வீர்! பார்த்து முக்தி கொடுப்பான் சத்தியம்! (எவ்)

மொ:டொதெநொ யெநொ மெநேத் ஸொட்டி3 ஜேடை3ஹா யெமுட்?
பு2ட்டுநா ரா:ய்ஹா து3ருகு3? யெமுட3வேத்
பு2ட்டுநா ரா:ய்ஹா து3ருகு3?
வடபத்ரார்யுநு க்ருபஹால் மொ:டொ மந்தூர் அப்3பே3ஸ் மொகொ!
நடனகோ3பாலூஸ் தே3வ்! நஜ்ஜாநகோநைகொ! (கோன்)


(என்னைவிட) மூத்தவன் அவன் இவன் என்றால் விட்டுச் செல்வானா எமன்?
உடையாமல் போகுமோ பானை? எமன் வந்தால்
உடையாமல் போகுமோ பானை?
வடப த்ரார்யர் கிருபையினால் பெரியமந்திரம் எனக்கு கிட்டியது!
நடனகோபாலனே கடவுள்! கெட்டு விடாதீர் கேளும்! (எவ்)



இயற்றியவர்: மதுரையின் ஜோதி ஸ்ரீமந் நடனகோபால நாயகி ஸ்வாமிகள்
பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்
மொழி: சௌராஷ்ட்ரம்

இந்தப் பாடலை ஏற்கனவே நண்பர் சிவமுருகன் மொழிபெயர்த்து இங்கே இட்டிருக்கிறார். மொழிபெயர்ப்பில் நான் சில சொற்களை மட்டும் மாற்றியமைத்து இங்கே இடுகிறேன்.

உடலின் நிலையாமையைப் பாடும் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இயற்கையை மனிதரை உயிர்களை இறையை அன்புடன் போற்ற வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்குவிக்கும் இந்தப் பாடல் கேட்கும் போதும் பாடும் போதும். ஆனால் நிலையாமையைப் பாடும் இந்தப் பாடல் சிலருக்கு வேறு வகையான எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றன என்று தோன்றுகிறது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

Tuesday, January 11, 2011

சீர்காழி+TMS - சேர்ந்து பாடி இருக்காங்களா, கண்ணனை?

சீர்காழி + TMS = முருகனைச் சேர்ந்து பாடி இருக்காங்க! திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்-ன்னு! தெய்வம் படத்தில்...
* பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா-ன்னு அவர் எடுக்க
* கண்மலரில் தண்ணருளைக் காட்டி வரும் கந்தா-ன்னு இவர் முடிக்க...
ஆகா! கண்கொள்ளாக் கந்தக் காட்சி! என் முருகச் சொந்தக் காட்சி!

ஆனால் இந்த கலக்கல் ஜோடி, கண்ணனைச் சேர்ந்து பாடி இருக்காங்களா?
உம்...உம்...உம்...தனித்தனியாப் பாடி இருக்காங்க தெரியும்!
* புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-ன்னு TMS Hall of Fame!
* திருப்பதி மலை வாழும் வேங்கடேசா-ன்னு சீர்காழியின் பெருமை!

ஆனால் இருவரும் சேர்ந்து பாடினதா தெரியலையே! சேர்ந்து பாடி இருக்காங்களா என்ன, கண்ணனை?
ஒரு வேளை, முருகனருள் முன்னின்றது போல், கண்ணனருள் முன்னிற்கலையோ? :)




கண்ணன் அருள், மெய்யாலுமே "முன்" நின்றது!
முருகனைப் பாடும் முன்னரே...., கண்ணனைப் பாட ஜோடி சேர்ந்து விட்டனர் நம்ம சீர்காழி + TMS! அதுவும் சினிமாவில்! :)
முப்பத்து மூவர் அமரர்க்கும், "முன் சென்று" கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!

ஆகா! அது என்ன படம்? அது என்ன படம்?
நீங்களே பாருங்க! கேட்டுக்கிட்டே படிங்க!


பாதுகையே துணையாகும் எந்நாளும் உன்
பாதுகையே துணையாகும்!
பூவுலகெல்லாம் போற்றிடும் தேவா
(பாதுகையே துணையாகும்)

நீதியும் நேர்மையும் நெறியோடு இன்பமும்
நிலவிடவே எங்கள் மனத்துயர் மாறவே
(பாதுகையே துணையாகும்)

உனது தாமரைப் பதமே
உயிர்த் துணை யாகவே
மனதினில் கொண்டே நாங்கள்
வாழுவோம் இங்கே ராமா!
பதினான்கு ஆண்டும் உந்தன்
பாதுகை நாட்டை ஆளும்
அறிவோடு சேவை செய்ய‌
அருள் வாயே ராமா!


த‌யாள‌னே சீதா ராமா! சாந்த‌ மூர்த்தியே ராமா!
ச‌ற்குணாதிபா ராமா! ச‌ர்வ‌ ர‌ட்ச‌கா ராமா!

தந்தை சொல்லைக் காக்கும் த‌ன‌ய‌னான‌ ராமா!
தவசி போல கானிலே வாசம் செய்யும் ராமா!
தத்வ வேத ஞானியும் பக்தி செய்யும் ராமா!
சத்ய ஜோதி நீயே.......நித்யனான ராமா!
(நித்யனான ராமா......நித்யனான ராமா)

படம்: சம்பூர்ண ராமாயணம்
இசை: கே.வி. மகாதேவன்
வரி: மருதகாசி
குரல்: சீர்காழி, TMS

இறைவனின் திருவடி நிலைகளை, அழகான குழுப் பாடலாக (பஜனைப் பாடலாக) பாட, இந்தப் பாடலின் மெட்டு, பொருந்தி வருகிறது அல்லவா?

பாதுகை-ன்னா என்ன? வெறும் கால் செருப்பா? அது எப்படி ஒருவருக்குத் துணையாகும்?
பாதுகைகளின் பெருமை தான் என்ன? பின்னூட்டத்தில் பேசுங்களேன்! ஏதுமறியா என்னைப் போன்றவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும்!

Wednesday, September 01, 2010

அப்பாவும் பொண்ணும் போட்டிப் பாட்டு! கண்ணன் பாட்டு!

கண்ணன் பிறந்த நாளில், இங்கு நியூயார்க்கின் இரவிலே...
மாலையில் மருத்துவரிடம் ஓடி, இல்லம் வந்து சோர்ந்து தூங்கி, பிட்சாவையே பலகாரமாய் உண்டு...
இதோ இரவு பத்து மணிக்கு, தம்பி பாலாஜி நினைவுபடுத்த, அவசரம் அவசரமாக...
நெற்றியில் என்றுமில்லாத திருநாளாய், ஒற்றைக் கீற்றில் நாமம் தரித்து, அதைக் கண்ணாடியில் சரி பார்த்து :) ...
பால் பொங்கி, திடீர்ப் பாயசம் செய்து, வெண்ணெய் உருட்டி, ஒரே ஒரு பழைய ஆப்பிளொடு..
கை வலிக்க மணி ஒலிக்க முடியாது, தம்பி பாலாஜி மெல்லொலி ஒலிக்க, கருமைச் சுருள் இரவிலே, கேண்டில் விளக்கிலே, பச்சைக் கர்ப்பூர ஒளி ஜொலிக்க...

மாணிக்கம் கட்டி, மணி வைரம் இடைக் கட்டி,
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி உனக்கு நாங்கள் விடு தந்தோம்
மாணிக் குறளனே தாலேலோ!
வையம் அளந்தானே தாலேலோ!

பிறந்த உடனேயே நல்லாத் தூங்கி விடு கண்ணா!
இதோ சற்று நேரத்தில் இடம் மாறப் போகிறாய்! இனி உனக்குத் தூக்கமே போச்சு! உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்ததடா கண்ணா! அதற்கு நீயும் விதிவிலக்கு அல்லடா!



இதோ முத்தாய்ப்பாக ஒரு காட்சி! அப்பாவும் பொண்ணும் போட்டி போட்டு பாடும் கண்ணன் பாட்டு!
இந்தப் பாட்டின் வேகம்... கேட்கும் போதெல்லாம் என்னை என்னமோ பண்ணும்!
இந்தப் பாட்டின் காட்சி... பார்க்கும் போதெல்லாம் என்னை என்னமோ பண்ணும்!

அப்பாவாக = நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
சின்னப் பொண்ணாக = குட்டி பத்மினி
பெரிய பொண்ணாக = கே.ஆர்.விஜயா

வரிகள் போட்டி போட்டுக் கொண்டு வந்து விழுகின்றன! கண்ணனின் தாசனான கண்ணதாசன் தூரிகையில்!
TMS ஒரு பாய்ச்சல் பாய்ஞ்சா, சுசீலாம்மா எட்டு பாய்ச்சல் பாயறாங்க!

சிறுமி கோதைக்கு குரல் கொடுப்பது: மாஸ்டர் டி.எல்.மகாராஜன் (ஆண் குரல் நல்லாத் தெரியுது, சின்னப் பொண்ணு கோதை ஒரு வேளை ஆம்பிளைப் புள்ளை போல் ரொம்ப பிடிவாதமோ? அதான் ஆம்பிளைக் குரலோ? :)

பெரியவள் கோதைக்கோ குரல் கொடுப்பது: பி.சுசீலா
இந்தப் பாட்டைக் கேட்டு, சுசீலாம்மாவிடம், நீங்க தான் அந்தக் கடவுள்-ன்னு யாரோ சொல்ல, அவர்கள் புன்னகையுடன் மறுத்தார்களாம்! :)
http://psusheela.org/fans/subbu_pothigai.html

இதோ: அரி அரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா!



அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா

பாரத தேவா பாண்டவர் நேசா
பதமலர் பணிந்தோமே - உன்
பதமலர் பணிந்தோமே
(அரி அரி கோகுல ரமணா)

ஞான மலர்க் கண்ணா, ஆயர்க் குல விளக்கே
வானமும் கடலும் வார்த்து எடுத்த பொன் உருவே
கானத்தில் உயிர் இனத்தைக் கட்டுவிக்கும் கண்ணா

தானே உலகாகி தனக்குள்ளே தான அடங்கி
மானக் குல மாதர் மஞ்சள் முகம் காத்து
வாழ்விப்பாய் என்றும் மலர்த்தாள் கரம் பற்றி
நானும் தொழுதேன் நம்பி பரந்தாமா - உன்
நாமம் உரைக்கின்ற நல்லோர் நலம் வாழியவே!

அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!

படம்: திருமால் பெருமை
வரிகள்: கண்ணதாசன்
குரல்: TMS, பி.சுசீலா, டி.எல்.மகாராஜன்
இசை: கே.வி.மகாதேவன்



புறம் போல் உள்ளும் கறுத்துப் போன கண்ணா!
இவளுக்கு எப்படி அறிமுகம் ஆனாயோ, அப்படியே இருந்து விடேன்!
வெண்ணைய்க்காடும் பிள்ளையாய்!
அனைவரும் விரும்பும் PoRkki பிள்ளையாய்!

* கம்ச வதம், சிசுபால தண்டனை எல்லாம் வேறு தெய்வங்கள் பார்த்துக் கொள்ளட்டும்!
* பாஞ்சாலி மானம் வேறு தெய்வம் காத்துக் கொள்ளட்டும்!
* பகவத் கீதை, வேறு எவனோ உளறிக் கொள்ளட்டும்!

* போலிச் சடங்குகளை/இந்திர பூசையை வேறு ஒருவர் வந்து தடை செய்யட்டும்!
* துவரைப்பதிக்கு, பொது மக்களை வேறு யாரோ ஒருவர் வழிநடத்தட்டும்!
* புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகளை உன் தேரில் தானா ஏற்ற வேண்டும்? வேறு ஒரு புரட்சியாளர் வந்து அவர்களுக்கு மதிப்பு ஏற்படுத்தட்டும்!

பாரதப் போரில், திறமையால் போரிடாமல், வரம் வாங்கிப் போர் புரிவார்களை எதிர்த்து, வேறு யாராவது மாயங்கள் செய்து கொள்ளட்டுமே! உனக்கு எதுக்குடா வீண் சாபமும், பொல்லாப்பும்?
பிறந்த நாள் காணும் போலிப் பண்பாளா!
மகரந்த வாசம் வீசும் மாதவா! ராகவா!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கள்ளமில்லாத கள்ளக் குழந்தையாய்,
பல அனாதைக் குழந்தைகளோடு ஆடி விளையாடி,
நீ எப்பமே நல்லா இருக்கணும்!

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து...
பல்லாண்டு பல்லாண்டு, எம்மோடு பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு!



எங்கள் முழு"முதல்" தெய்வமே...
தொன்மைத் தமிழ்க் குடிக்கு...மாயோன் மேய மைவரை உலகே...

என் பால் நோக்காயே ஆகிலும்...
தரு துயரம் தரினும்...
ஆராய்ந்து அருள்வதாகச் சொல்லி அருளா விடினும்...

உன் மார்பில் அகலகில்லேன் என்று இருப்பவள் போலே
நானும் என் நெஞ்சில் அகலகில்லேன் என்று என் முருகனை இருத்தி
அவனோடு பல்லாண்டு பல்லாண்டு...

அரி அரி கோகுல ரமணா, உந்தன் திருவடி சரணம் கண்ணா!
அரி அரி கோகுல ரமணா, உந்தன் திருவடி சரணம் கண்ணா!

அப்பா! எங்கள் பெருமாளே!
புகல் ஒன்றில்லாப் பேதை...
இரு கரம் தூக்கினேன்! ஏலோர், ஏலோர்!

அரி அரி கோகுல ரமணா, உந்தன் திருவடி சரணம் கண்ணா!
அரி அரி கோகுல ரமணா, உந்தன் திருவடி சரணம் கண்ணா!
திருவடி சரணம் கண்ணா!
திருவடி சரணம் கண்ணா!

Sunday, January 17, 2010

ஹரி கைங்கரியம் செய்யுங்கள் பிறவி வராது பின்னர்...


க2டெ3 ஸரீர் கா2ல் பொடி3 ஜாநாமுல்லோ - ஹரி
கைங்கர்யம் கரொ ஜெலும் அவ்நா ப2ல்லோ (க2டெ3)


கொண்ட உடல் கீழே விழுந்து போகும் முன்னர் - ஹரி
கைங்கரியம் செய்யுங்கள் பிறவி வராது பின்னர் (கொண்ட)


க2டி3 ஸொடெ3 ஸரீர் ஜுக்கு லெ:க்க நீ: முல்லோ - அமி
கரெ கருமுந் அஸ்கி திரிஜாய் ஜல்வோ (க2டெ3)

கொண்டு விட்ட உடல் நிறைய கணக்கில்லை முன்னர் - நாம்
செய்த கருமங்கள் எல்லாம் தீர்ந்து போகும் அறிவீர் (கொண்ட)

தெ4ரந் நிக்ளேத் ஹிப்பி3 ரா:நா த4மய் மொந்நு - யெக
தெ4ரந் முஸைகி தே3வுக் ப4ஜொ குண்ணு
சரம ஸ்லோக் அர்த்துந் அய்கி ஸெய்ல்வோ ஸெய்ல்வோ ஸங்கு
சக்ரபாணி விநா க3தி நீ:யேட் ஜல்வோ (க2டெ3)

பிடிக்கக் கிளம்பினால் நிற்காது ஓடும் மனம் - இதை
பிடிக்க முடியுமோ தெய்வத்தை வணங்குதல் குணம்
சரம ஸ்லோக பொருள் கேட்டு பாருங்கள் பாருங்கள் சங்கு
சக்ரபாணியை விட்டால் கதி இல்லை இங்கு அறியுங்கள் (கொண்ட)

இஸோஸ் ஏ மெநிகு ஜெலும் அவ்லேத் ரா:ய்கி - ஏ
ஹரிக் ப4ஜந நீ:ஜியேத் பாப் திரைகி
பிஸொ தெ4ரி ஹிண்டு3நகன் நமமூஸ் வாடு - சொக்கட்
பிஸொ தெ4ரி க3வ்னாஜியேத் நீ: க3தி யேடு (க2டெ3)

இப்படியே இந்த மனிதப் பிறவி வந்து கொண்டே இருக்குமோ - இந்த
ஹரி பஜனை இல்லையேல் பாவம் தீருமோ
பித்துப் பிடித்து அலையாதீர் நாமமே வழி - நல்ல
பித்துப் பிடித்து பாடாவிட்டால் இல்லை இங்கே கதி (கொண்ட)

வடபத்ரார்யுநு மொகொ வாட் தி3யாஸி - ஸ்ரீ
வைகுண்டுக் நிக்ளி ஜவேந் வாட் ஹொயெஸி
நடனகோ3பாலூஸ் தே3வ் நஜ்ஜவுங்கநு - க3வி
நடனம் கர்னாஸ்தக கோ பொ3வுங்கநு (க2டெ3)

வடபத்ரார்யர் எனக்கு வழி கொடுத்தார் - ஸ்ரீ
வைகுண்டம் கிளம்பி போகும் வழி கிடைத்தது
நடனகோபாலனே தெய்வம் கெட்டுப் போகாதீர் - பாடி
நடனம் செய்யாமல் சும்மா அழைக்காதீர் (கொண்ட)

பாடல் : ஸ்ரீ நடனகோபால நாயகி ஸ்வாமிகள்
பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன்
இராகம்: செஞ்சுருட்டி
தாளம்: ஆதி

Monday, June 15, 2009

திருமங்கை மார்பன் திருமலைகள் ஏழுடையோன்




இராமானுசன் திருவடிகளே தஞ்சம் என்றும் ஆழ்வார் ஆசாரியார் திருவடிகளே தஞ்சம் என்றும் ஆண்டாள் திருவடிகளே தஞ்சம் என்றும் இறைவனைச் சரணடைவது போலவே இறையடியார்களையும் சரணடைவது முன்னோர் காட்டிய வழி. அந்த அடியவர்கள் காட்டிய வழி திருமகளான அன்னையை முன்னிட்டு எம்பெருமானைச் சரணடைவது. 'அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா' என்று தொடங்கியே 'உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே' என்றார் நம்மாழ்வார். அதே போல் நாயகி சுவாமிகளும் இந்தப் பாடலில் 'திருமங்கை மார்பன்' என்று தொடங்கி 'நீலமேகன் தஞ்சம்' என்றும் 'கோவலன் தாள் தஞ்சம்' என்று தஞ்சமடைந்தார். பின்னர் என்ன நினைத்தாரோ அவனைத் தஞ்சம் அடைவதை விட அவனடியார்களைத் தஞ்சம் அடைவதே சரி என்று எண்ணி 'நாத்தழும்பேறத் துதிக்கும் நல்லவர் தாள் தஞ்சம்' என்று அடியார்களைத் தஞ்சமடைந்து இந்தப் பாடலை நிறைவு செய்கிறார்.

திருமங்கை மார்பன் திருமலைகள் ஏழுடையோன்
திருவரங்கத் தலமுடையோன் திருப்பதிகள் உடையோன் (திரு)


அருளே உருவான திருமங்கை யான மகாலட்சுமி தாயார் வாழும் மார்பை உடையவன் அவன். அவ்வருளின் வெளிப்பாடாக தன் திருவடிகளைத் தஞ்சமடைவதே உயிர் உய்ய வழி என்று காட்டிக் கொண்டு பொறுமையாக நிற்கிறான் திருமலைகள் ஏழும் உடையவனான திருவேங்கடத்தான். மலையேறி வந்து அவனைச் சரணடைய இயலாதவர்களுக்கு காவிரி கொள்ளிடம் என்னும் இரு ஆறுகளின் இடைக்குறையில் திருவரங்கத்தலமுடையோனாக நிலை கொண்டுள்ளான். இங்கெல்லாமும் சென்று அவனைத் தஞ்சமடைய முடியாதவர்களுக்கு தன் திருமேனியைப் பல திருப்பதிகளிலும் நிலை நிறுத்தியிருக்கிறான். அவனது அருளினையும் நீர்மையினையும் என்ன சொல்ல?

திருமங்கை மார்பன் என்றதால் அவனது பர உருவம் சொன்னார். திருப்பதிகளைக் குறித்ததனால் அவனது அருச்சை என்னும் சிலையுருவைச் சொன்னார்.


திருவவதாரம் ஈரைந்தும் செகதலத்தில் செய்தோன்
திருப்பாற்கடலைக் கடைந்து அமுத மழை பெய்தோன் (திரு)


யானையை யானைய்க் கொண்டு பிடிப்பது போல உலக உயிர்களை அவ்வுயிர்களின் தோற்றமே கொண்டு தான் நல்வழிப்படுத்த வேண்டும் என்று அவனது அருளின் திறத்தால் ஈரைந்து = பத்து திருவவதாரங்கள் இந்த பூமியில் செய்தான். இதனால் இறைவனின் விபவ உருவம் சொன்னார்.

திருப்பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது ஆமையாகவும் மோகினியாகவும் உருக்கொண்டு அமுத மழையைப் பெய்தான். இறைவனின் வியூஹ உருவத்தைத் திருப்பாற்கடலைச் சொன்னதன் மூலம் சொன்னார்.

திருக்கைகளாலே சிவன் தன் வில் இரண்டாய் உடைத்தோன்
திருமகளாகிய சீதாதேவியின் கை பிடித்தோன் (திரு)


இராமனாக அவதரித்த போது தன்னுடைய திருக்கைகளால் சிவதனுசினை இரண்டாக உடைத்து திருமகளே ஆன சீதாதேவியின் திருக்கைகளைப் பிடித்தவன்.

கோவர்த்தனம் ஏந்திய கையன் கோபால துய்யன்
ஆபத்து தீர்த்தருளிய நம் ஆயர் குலத்து ஐயன் (திரு)


கடும் மழை பெய்த போது 'குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன்'. கோவர்த்தனம் ஏந்திய கைகளை உடையவன். பசுக்களைக் காப்பவன் - கோபாலன். தூயவன். ஆயர்குலத்திற்கு நேர்ந்த ஆபத்துகளை தீர்த்து அருளிய நம் ஆயர் குலத்துத் தலைவன்.

அங்கத்துடனே சகல ஆக்கைகள் உண்டாக்கும்
பங்கயத்து அயன் பணியும் பரமன் என்னைப் பார்க்கும் (திரு)


கைகால்கள் என்னும் எல்லா அங்கங்களுடன் உலகில் எல்லா உடல்களையும் உருவாக்கும் தாமரையில் வாழும் பிரம்மன் பணிகின்ற பரமன். என் மேல் கருணையுடன் பார்ப்பவன்.


சேலையை நீக்கி என்னைச் சேரும் சீலனைப் பாராய்
ஆலைக் கரும்பு அது போல நான் ஆனேன் அல்லல் தீராய் (திரு)


இது வரையில் தானான நிலையிலேயே பாடி வருகிறார் போலும் என்ற எண்ணம் தோன்றும் வகையில் பாடி வந்த நாயகி சுவாமிகள் இந்தத் தொடுப்பில் தான் நாயகியாகவே பாடி வருவதை மிக அழகாகக் காட்டிவிட்டார்.

எனக்கும் அவனுக்கும் இடையில் இருக்கும் தடைகளை எல்லாம் (என் முயற்சியில்லாமல்) அவனாகவே நீக்கி என்னைச் சேர்ந்திடும் சீலன் அவன். இப்போது அவனைப் பிரிந்து பிழியப் பட்ட கரும்புச்சக்கையைப் போல ஆனேன் என் அல்லலைத் தீராய்.

அவரவர்கள் எண்ணம் போல் அநுக்கிரகங்கள் செய்யும்
சிவனுடைய செங்கையின் சிரமம் அதைக் கொய்யும் (திரு)


நான்குவிதமானவர்கள் என்னை வணங்குகிறார்கள்; அவர்கள் வேண்டியதை அவர்களுக்கு அருளுகிறேன் என்றான் கண்ணன். அதனைச் சொல்கிறார் இங்கே. அவரவர்கள் வேண்டியபடி அவர்களுக்கு அனுக்கிரகங்களைச் செய்பவன். பிரம்மனின் தலையைக் கொய்த சிவபெருமானின் பிரம்மஹத்தி நீங்கி அவர் திருக்கரங்களில் ஒட்டியிருந்த காபாலம் விலகும்படி அருளியவன்.

துக்கங்களுக்கு இருப்பிடமாய்த் துலங்குதே என் நெஞ்சம்
நிற்க வைக்கக் கூடவில்லை நீலமேகன் தஞ்சம் (திரு)


உலகத்தில் இருக்கும் துக்கங்களுக்கெல்லாம் ஒரே இருப்பிடம் போல் ஆகிவிட்டது என் உள்ளம். ஒரு நிலையில் நிறுத்த முடியவில்லை நெஞ்சத்தை. நீலமேகனே நீயே கதி.

நீவாத தீபமென முன்னின்றதே என் நெஞ்சம்
கோவர்த்தனக் குடை பிடித்த கோவலன் தாள் தஞ்சம் (திரு)


தூண்டிவிடாத விளக்கினைப் போல் ஒளிமங்கிக் கிடக்கிறதே என் நெஞ்சம். ஆயர்கள் துன்பம் தீர்க்கக் கோவர்த்தனக் குடை பிடித்த கோவலனே. நீயே தஞ்சம்.

ஆற்றங்கரைத் தீபமென அலைகுதே என் நெஞ்சம்
நாத்தழும்பேறத் துதிக்கும் நல்லவர் தாள் தஞ்சம் (திரு)


ஆற்றங்கரைக் காற்றில் அலைபாயும் விளக்குச்சுடரைப் போல் அலைகிறது என் நெஞ்சம். நாத்தழும்பேற அவன் திருப்பெயர்களைச் சொல்லித் துதிக்கும் நல்லவர்களின் திருவடிகளே தஞ்சம்.

இந்தப் பாடலை திரு. தொ.மீ. சௌந்தரராஜன் பாடி இங்கே கேட்கலாம்.

நாயகி சுவாமிகள் திருவடிகளே தஞ்சம்.

Thursday, May 28, 2009

தாகம் அடங்குமோ தாமோதரனைக் காணாது இங்கே


கோபியர்களும் ஆழ்வார்களும் கண்ணனின் பிரிவால் வாடி வாடிப் பாடிய பாடல்களை நாம் படித்திருக்கிறோம். 'ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி' என்று புலம்புவான் பாரதியும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மதுரையில் வாழ்ந்த நாயகி சுவாமிகளும் அதே போன்ற உணர்வு கொண்டு அவன் பிரிவால் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். நடனகோபால நாயகி என்ற அவருடைய திருநாமத்திற்கு ஏற்றதொரு பாடல் இது. இந்தப் பாடலின் சில சரணங்களைத் திரு. தொ.மீ. சௌந்தரராஜன் (டி.எம்.எஸ்) அவர்களின் இனிய குரலில் இங்கே கேட்கலாம்.

அன்னம் புசி என்று உரையாதே அகன்று போடி
அன்னம் விஷமாய் இருக்கிறது அறிந்து கொள்ளாய் நாடி (அன்னம்)


உண்ணும் சோறு, பருகும் நீர் எல்லாம் கண்ணன் என்று இருக்கும் ஆழ்வார்களில் ஒருவராகக் கருதக் கூடிய நாயகி சுவாமிகளுக்கு கண்ணனின் பிரிவால் அன்னம் விஷமாக இருப்பது இயற்கையே. பாவம் தோழிகளாகச் சுற்றியிருக்கும் மற்ற உயிர்களான நமக்குத் தான் அது தெரியவில்லை. அன்னம் புசி என்று வற்புறுத்திக் கொண்டிருக்கிறோம்.

புன்னை மரத்தடியில் பெண்கள் புலம்பச் செய்த சோரன்
என்னை மறந்தானோ இப்போது இக்குல உபகாரன் (அன்னம்)


புன்னை மரத்தடியில் மற்ற பெண்களைப் புலம்ப வைத்து அவர்களுக்கு அருள் செய்த அந்தச் சோரன் இன்று எனக்கருள் செய்யாமல் மறந்தானோ? அங்கே செய்த அதே லீலை இங்கும் செய்து எனக்கு அருள மாட்டானோ? அப்படி அவன் அருளினால் எனது ஏழ்படிகாலும் வீடு பெற்று உய்வோமே! என் குல உபகாரன் என்னை மறந்தானோ? - என்கிறார்.

ஆள் செய்யாமலே நாள் இங்கே அகன்று போகுதேடி
வாழ்விப்பான் என்றே இருந்தேன் மாயம் செய்தானேடி (அன்னம்)


அவனுக்கு ஆட்செய்யாமலேயே, தொண்டு செய்யாமலேயே நாட்கள் இங்கே நகர்ந்து போய்கொண்டிருக்கிறதே; அவனுக்கே ஆட்செய்தல் என்ற வாழ்வினைத் தந்து வாழ்விப்பான் என்றே ஒன்றும் செய்யாமல் காத்திருந்தேனே; மாயம் செய்துவிட்டானே - என்கிறார்.

தாக நீரேனும் கொள் எனச் சாற்றுகிறாய் இங்கே
தாகம் அடங்குமோ தாமோதரனைக் காணாது இங்கே (அன்னம்)

அடடா. தாமோதரனைக் காணாது தாகம் அடங்குமோ இங்கே என்கிறாரே. என்ன ஒரு உணர்வு! தமரேஸ் தின்னு தமரேஸி; தாக் நீஸ்தெநு மோஸ் ஜாரியாசி; தாமோதரா தாமோதரா தொர தய கோன் கலம் அவய் தாமோதரா - ஓடுகின்றதே நாள் ஓடுகின்றதே; பயம் இல்லாதவர்கள் மோசம் போகின்றார்களே; தாமோதரா தாமோதரா உன் தயை எந்த காலம் வரும் தாமோதரா - என்று உருகியராயிற்றே.

சொல்லாதே அடைக்காய் அமுதால் சுகம் என்னேடி
எல்லாருக்கும் தெரியுமே என் இதயம் ஈதன்றோடி (அன்னம்)

உண்ணும் சோறு, பருகும் நீர் இவையெல்லாம் கண்ணன் என்று மேலே சொன்னார். அவை மட்டும் இல்லை தின்னும் வெற்றிலையும் கண்ணனே என்கிறார் இங்கே. தின்னும் வெற்றிலையாய், போகமாய், அவனே இருக்கும் போது வெறும் அடைக்காய் அமுதம் என்ன சுகம் தரும்? என் இதயம் தான் என்ன என்று உங்கள் எல்லோருக்குமே தெரியுமேடி என்கிறார்.

கண்ணேறு படும்படி எங்கெங்கே செல்கின்றானோ
நண்ணப் போய் அழைத்து வாடி நான் காணாது உய்வேனோ (அன்னம்)

நம்மாழ்வார் போல் பாடிக் கொண்டிருந்தவருக்கு கூடல் அழகன் நினைவு வந்துவிட்டது போலும். கூடல் மா நகரில் தானே விட்டுசித்தருக்கு எதிரே பெருமாள் வந்த போது அவனுக்குக் கண்ணேறு பட்டுவிடுமோ என்று பல்லாண்டு பாடினார். இங்கே என்னைத் தவிக்க விட்டுவிட்டு கண்ணேறு படும்படி இப்படி எத்தனை பேர் முன் போய் நிற்கின்றானோ? போய் அவனை அழைத்து வாடி என்கிறார்.

திடுக்குத் திடுக்கென என் நெஞ்சம் திகில் அடைகுது இங்கே
அடுக்கு முறி வெண்ணெய் கண்ணனுக்கு அமுது செய்வது எங்கே (அன்னம்)

கண்ணேறு படும்படி எங்கெல்லாம் சுற்றுகின்றானோ என்று எண்ணும் போதே எனக்கு திடுக் திடுக்கென்று நெஞ்சம் திகில் அடைகின்றதே. அவன் அப்படி கண்ணேறுபட்டு நோய் வாய்ப்பட்டால் அடுக்கு முறி வெண்ணெயை அவன் உண்ண முடியாதே என்று தவிக்கிறார். வெண்ணெய் நிறைய உண்டதற்கு மருந்தாக மண்ணை உண்டாயோ என்றார் நம்மாழ்வார். கண்ணேறு பட்டால் அந்த வெண்ணெயும் அமுது செய்ய இயலாதே என்கிறார் இவ்வாழ்வார்.

தயிர் கடையும் வேளை வந்து தழுவி விளையாடும்
மயிலிறகுக் கொண்டையன் மனம் என்று நம் பால் நாடும் (அன்னம்)

ஆழ்வார்களாய் பாடிக் கொண்டிருந்தவர் இங்கே கோபியரில் ஒருத்தி ஆனார் போலும். தயிர் கடையும் வேளையில் வந்து பின்னே தழுவிக் கொள்வானே. அந்த மயிலிறகுக் கொண்டையன் மனம் என்று நம் பால் விரும்பும்; ஆ ஆ என்று ஆராய்ந்து அருளும் என்று வியக்கிறார்.

மழை இல்லாப் பயிர் அது போல நான் மயங்குவேனோ வாடி
களை எடுக்காத பயிர்கள் தலையெடுக்குமோடி (அன்னம்)

வானம் பார்த்த பூமியில் வாழும் பயிர்கள் போல் வேறொன்றும் கதியாக எண்ணாமல் அவன் அருளே முதற்பொருளாய் கொண்டு வாழும் நாயகி சுவாமிகள் மழையில்லாமல் வாடும் பயிர் போல் அவன் அருள் இல்லாமல் வாடுவதைச் சொல்கிறார். முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும் முதற்பொருள் ஆகவில்லையே என்று இருப்பார்கள் நடுவில் முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும் போன்ற தன் முயற்சியால் அவனை அடைய இயலும் என்று அவ்வழிகளில் முயல்வார்களும் இருந்தால் அவர்களால் இவர்களும் மயங்குவார்களே. களை எடுக்காத பயிர்கள் தலையெடுக்குமோ? ஸர்வ தர்மான் பரித்யஜ்ய என்று ஒரு நிபந்தனை இட்டிருக்கிறானே. அதன் படியல்லவோ நடக்க வேண்டும். என் முயற்சியால் அவன் அருளைப் பெற்றுவிடுவேன் என்ற எண்ணம் களையாக இருக்கிறதே; அதனை அவன் அருளால் நீக்க மாட்டானோ? அவன் அருள் என்னும் மழையை நோக்கும் பயிரான நான் தழைக்க மாட்டேனோ - என்கிறார்.

செழித்திருந்தேனே கண்ணனைச் சேவிக்கும் போதெல்லாம்
குழைத்துக் கிடக்கின்றன பார் குழக்கன்றுகள் எல்லாம் (அன்னம்)

அவனுக்கே தொண்டு செய்து கிடந்த போதெல்லாம் பசுங்கன்றில் ஒன்றான நான் செழித்துக் கிடந்தேனே. இப்போது அவன் அருள் அகன்று போக நானும் என்னை ஒத்த பசுங்கன்றுகளும் குழைத்துக் கிடக்கின்றன பார். கோபாலன் தீண்டினால் அல்லவா அக்குழக்கன்றுகள் மீண்டும் செழிக்கும் - என்கிறார்.

நடனகோபால நாயகி சுவாமிகள் திருவடிகளே அடைக்கலம்.

Sunday, January 11, 2009

TMS பாடும் சௌராஷ்ட்ர பாடல்


நாயகி சுவாமிகள் மதுரையில் வசிக்கும் போது உஞ்சவிருத்தி செய்து தான் வாழ்ந்து வந்தார். பக்தியும் நற்குணங்களும் கொண்ட இல்லறத்தார் வீடுகளுக்குச் சென்று அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்றவற்றைப் பெறுவது தான் உஞ்சவிருத்தி. அப்படி உஞ்சவிருத்திக்குச் செல்லும் போது இறைவன் நாமத்தைப் பாடிய படியும் நல்லவழிகளை போதித்தபடியும் செல்வது வழக்கம். மக்களுக்கு நல்வழி காண்பிப்பதற்கு இதை ஒரு நல்லவழியாகக் கொண்டிருந்தனர் மகான்கள். அப்படிப் பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் பாடியது இந்த பாடல்.

பகவத் நமமூஸ் மெல்லேத் ஜனோ
பக்திஹோரு தந்தனி கல்னோ
முகுந்தா நமமூஸ் மெல்லேத் ஜனோ மூலா
முடுகும் ஸேஸ்தெ தந்தனி கல்னோ

பகவத் நமமூஸ் மெல்லேத் ஜனோ - இறைவனின் நாமங்களையே சொல்லிக்கொண்டு செல்லவேண்டும்.

பக்திஹோரு தந்தனி கல்னோ - பக்தியோடு நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்

முகுந்தா நமமூஸ் மெல்லேத் ஜனோ - முகுந்தனின் நாமங்களையே சொல்லிக்கொண்டு செல்லவேண்டும்.


மூலா முடுகும் ஸேஸ்தெ தந்தனி கல்னோ - மூலையில் வைத்துள்ள பானையில் இருக்கும் அரிசியை கொண்டுவந்து நீங்கள் அளிக்கவேண்டும்.

ராம நமமூஸ் கவ்லேத் ஜனோ
எம தாக் நீ: தந்தனி கல்னோ
காம க்ரோத குண்ணுன் ஜனோ
தமஸ்ஹோனா தந்தனி கல்னோ


ராம நமமூஸ் கவ்லேத் ஜனோ - இராமனின் நாமங்களையே பாடிக்கொண்டு செல்லவேண்டும்

எம தாக் நீ: தந்தனி கல்னோ - எமபயம் இனி இல்லை; நீங்கள் அரிசி கொண்டு வந்து அளிக்கவேண்டும்.

காம க்ரோத குண்ணுன் ஜனோ - காமம், குரோதம் முதலிய குணங்கள் போகவேண்டும்

தமஸ்ஹோனா தந்தனி கல்னோ - தாமதம் செய்யாமல் நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

கோவிந்த நமமூஸ் கவ்லேத் ஜனோ
கோவிந்தா மெனிஸ் தந்தனி கல்னோ
கேஸவ நமமூஸ் கவ்லேத் ஜனோ
விஸ்வாஸ் ஹோரு தந்தனி கல்னோ


கோவிந்த நமமூஸ் கவ்லேத் ஜனோ - கோவிந்தனின் நாமங்களையே பாடிக்கொண்டு செல்லவேண்டும்

கோவிந்தா மெனிஸ் தந்தனி கல்னோ - கோவிந்தா என்று சொல்லியே நீங்களும் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

கேஸவ நமமூஸ் கவ்லேத் ஜனோ - கேஸவனின் நாமங்களையே பாடிக்கொண்டு செல்லவேண்டும்.

விஸ்வாஸ் ஹோரு தந்தனி கல்னோ - நம்பிக்கையோடு நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

அச்சுத நம்மூஸ் கவ்லேத் ஜனோ
லொச்சு நீ:ஸ்த தந்தனி கல்னோ
பட்சம்ஹோரு தேவுக் கவ்னோ
ஹெச்சுகன் துமி தந்தனி கல்னோ


அச்சுத நம்மூஸ் கவ்லேத் ஜனோ - அச்சுதனின் நாமங்களையே சொல்லிக்கொண்டு செல்லவேண்டும்.

லொச்சு நீ:ஸ்த தந்தனி கல்னோ - சலித்துக்கொள்ளாமல் நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

பட்சம்ஹோரு தேவுக் கவ்னோ - அன்புடன் இறைவனைப் பாடவேண்டும்.

ஹெச்சுகன் துமி தந்தனி கல்னோ - மகிழ்ச்சியுடன் நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

ஹரி நமமூஸ் யெதுர் ஸனோ
குரு கைங்கர்யமூஸ் ஹொனோ
புருமு பொள்ளொ ஸெரிர் ஜன்னோ
மொரி உஜுநா தந்தனி கல்னோ


ஹரி நமமூஸ் யெதுர் ஸனோ - ஹரியின் நாமங்களையே எதிர்பார்க்கவேண்டும்.

குரு கைங்கர்யமூஸ் ஹொனோ - குருவின் சேவைகளே ஆகவேண்டும்.

புருமு பொள்ளொ ஸெரிர் ஜன்னோ - புளியம்பழம் இந்த உடல்; இதை உணரவேண்டும்.

மொரி உஜுநா தந்தனி கல்னோ - இறப்பு பிறப்பு இவைகளில் இருந்து விடுபட நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

வடபத்ரார்யுன் வாட் ஜன்னோ
நடனகோபாலுக் தந்தனி கல்னோ
ஹட்வி ஹட்வி தெருமூஸ் தெனோ
கெட்டாக் ஹிங்கஸ்தக் துமி அவ்னோ


வடபத்ரார்யுன் வாட் ஜன்னோ - நம் குருநாதரான வடபத்ரார்யரின் வழியை அறியவேண்டும்.

நடனகோபாலுக் தந்தனி கல்னோ - நடனகோபாலனுக்கு நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

ஹட்வி ஹட்வி தெருமூஸ் தெனோ - இன்னும் என்ன செய்யலாம்; இன்னும் என்ன செய்யலாம் என்று நினைத்து நினைத்து தருமங்களையே கொடுக்கவேண்டும்.

கெட்டாக் ஹிங்கஸ்தக் துமி அவ்னோ - கரையேறுவதற்கு நீங்கள் வரவேண்டும்.

***

2005 டிசம்பரில் 'மதுரையின் ஜோதி' பதிவில் இடப்பட்ட இந்த இடுகை இங்கே 'கண்ணன் பாட்டில்' அகில உலக ஆன்மிக சூப்பர் ஸ்டார் நண்பர் இரவிசங்கரின் கட்டளைப்படி இடப்படுகிறது.

Thursday, May 01, 2008

அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி அடையுங்கள்

ஒருமுறை நாயகி சுவாமிகளின் வரகவிதுவத்தை ஆண்டாள் நாச்சியார் கேட்க எண்ணி அவர் கனவில் தோன்றி, தம்மை திருவில்லிபுத்தூரில் தம்மை சந்திக்கும்படி வேண்டியதை அவளிட்ட கட்டளையாக பாவித்து சுவாமிகளும் உடனே அங்கே எழுந்தருளி அங்கிருந்த அரங்கனையும், ஆண்டாளையும் தரிசித்து நின்று தமது கீர்த்தனைகளால் பாடி அங்கிருந்தவர்களை பரவச படுத்தியும் தாமும் பரவசப்பட்டார். இன்றைய ஆடி பூரம் “நல்ல நாளில்” மேலும் ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டும் அவர் அன்று பாடிய பாடல் இப்பதிவில். இப்பாடலை டி.எம்.எஸ்.அவர்கள் பாடியுள்ளார்.

பல்லவி
அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி அடையுங்கள்
நம் ஆண்டாள் திருவடி அடையுங்கள் (அடையுங்கள்)


அநுபல்லவி
விடையேறும் சிவனாதி தேவர்கள் போற்றும்
நடனகோபாலனிடம் சேர்த்திடுவாள் (அடையுங்கள்)


சரணங்கள்
பவரோக அவதி தீரும் பஞ்சேந்திரியம் ஒன்றாய்ச் சேரும்
தவமாம் நல்வழி கைகூடும் தாரணியோர் வாய்புகழ் பாடும்
சவமாய் உடலம் தரைசாய்ந்திடுமுன்
புவனம்தனில் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

தாமசமாம் குணம் ஒழியும் சாகர சஞ்சலம் ஒழியும்
நேமமிகும் வழி தெரியும் நிஜமாகிய பக்தி விரியும்
பாமர வாழ்கையிலே கிடந்தலையாமல்
க்ஷேமம் தரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

நித்யானந்தவாழ்வு நிலை அடையாதிருப்பதே தாழ்வு
பக்திசெய்திடுவார்க்கே வாழ்வு பலநெறி நடப்பவர்கே தாழ்வு
செத்துப்போமாக்கை நித்தியமென்றிருக்காமல்
சித்திதரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

தன்னருட்காளாயிடலாம் தாஸர்களுக்குத் தாஸனாகலாம்
விண்ணவர் கிருபைக்காளாயிடலாம் வீதிகள்தோறும் பாடி ஆடலாம்
எண்ணம்பல வழிநண்ணி கெட்டலையாமல்
அண்ணல் வாழும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

கேட்ட வரம்தனை அளிப்பாள் கிருபாசாகரமாய் இருப்பாள்
கூட்டங்கூட்டமாய் அழைப்பாள் கொணர்ந்து ஸமர்ப்பித்ததே வகிப்பாள்
சேட்டைவளர் ஜெகம்தனில் திரிந்தலையாமல்
ஆட்டமிகும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

இகபர வாழ்வு பலிக்கும் எண்ணமது நல்வழி நிலைக்கும்
சுகமென்மேலும் பலிக்கும் தொண்டுசெய்திடும் பக்தி வலுக்கும்
இகவாழ்வே சுகமென்றிடரடையாமல்
அகமகிழும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

இருவினையும் குடிவாங்கும் இகமேற் பற்பல இடர் நீங்கும்
குருவருளும் தானோங்கும் கோபாலன் திருவடி தலை தாங்கும்
வறுமைதரும் வையம் திரிந்தலையாமல்
அரி அருளாய் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

பந்தமறும் பாத்தியமாம் பரமானந்த ஹிருதயமாம்
அந்தகன் வந்தனம் செய்வான் ஹரிவந்து கொடு நெறி செய்வான்
இந்தவகிலமே சொந்தமென் றலையாமல்
அந்தமிகும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

மிடியாரிருவினைகள் பொடியாம் மேலாமிடமேறப் படியாம்
நெடியோனடி குடியாம் நீங்கா செல்வத்துக்கடியாம்
படிவாழ்வதென அப்படி அலையாமல்
அடியார் மகிழ் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

துன்பவினை ஓடி வரும் துணை தொண்டரருள் கிருபை நாடி வரும்
இன்பகவி பாடவரும் ஹிருதயம் ஒளிவுதயமாகும்
துன்ப சரீர போகம் இன்பமென்றடையாமல்
அன்பர்குழாம் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

வித்தமதருளும் கைசேரும் விளையும் துன்பவினை தீரும்
நித்தமும் கைங்கர்யம் நேரும் நெஞ்சமதிலே வஞ்சம் தீரும்
பித்தமர் உலகுதனில் திரிந்தலையாமல்
அத்தன் தரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

வடபத்ராரியர் அருள்பெறலாம் மலராளை சந்நதிக்கே பெறலாம்
நடனகோபாலன் கிருபை பெறலாம் நாயகியார் எனும் பேர் பெறலாம்
சடலமதை நம்பி கெட்டலையாமல்
திடவில்லிபுத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி அடையுங்கள்
நம் ஆண்டாள் திருவடி அடையுங்கள் (அடையுங்கள்)


அடையுங்கள் ஸ்ரீஆண்டாளின் திருவடிகளை அடையுங்கள்.

விடையேறும் சிவனாதி தேவர்கள் போற்றும்
நடனகோபாலனிடம் சேர்த்திடுவாள் (அடையுங்கள்)


அந்த நந்தீஸர் மீது வலம் வரும் மஹாதேவன் ஈசனும் ஏனைய தேவர்களும் போற்றும், அந்த நடன கோபாலனிடம் சேர்த்திடுவாள். எனவே ஆன்றோர்களே! சான்றோர்களே! அடையுங்கள், அவளடியை அடையுங்கள். இந்த அனுபல்லவியில், மார்கழி மாத திருப்பாவை பாடினால் நடன கோபாலனிடம் சேர்ந்திடலாம் என்பதை மறைபொருளாக சொல்லியிருக்கிறார் சுவாமிகள்.

சரணங்கள்
பவரோக அவதி தீரும் பஞ்சேந்திரியம் ஒன்றாய்ச் சேரும்
தவமாம் நல்வழி கைகூடும் தாரணியோர் வாய்புகழ் பாடும்
சவமாய் உடலம் தரைசாய்ந்திடுமுன்
புவனம்தனில் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)


மாறி பிறவி எடுக்க வைக்கும் இப்பிறவி பிணிதன்னை அதிகரிக்கும் ஐந்திரியங்களும் ஒன்றாகும், பல காலம் தவம் செய்தாலும் கிட்டாத நல்வழியாம் வைகுண்ட வழி கைகூடும். உன்னை ஏசி திறிந்த உலக்கதார் வாய் உன்னை புகழ்வர், இறந்து தரை சேற்வதற்க்கு முன்னால், உலகிலிருக்கும் திருவல்லி புத்தூருக்கு சென்று ஆண்டாளை சரணனடையுங்கள்.


தாமசமாம் குணம் ஒழியும் சாகர சஞ்சலம் ஒழியும்
நேமமிகும் வழி தெரியும் நிஜமாகிய பக்தி விரியும்
பாமர வாழ்கையிலே கிடந்தலையாமல்
க்ஷேமம் தரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

எல்லாவற்றையும் தள்ளி போடும் தாமச குணத்தை ஒழிக்கும், சஞ்சலங்களை ஒழிக்கும், நேசம் மிகுந்து விடும், வைகுண்ட வழிதெரியும், என்றும் உண்மையான பக்தி வழி தெரியும், ஏதும் தெரியாத பாமர வாழ்வு வாழ்வதை விட, எல்லா நன்மைகளையும் அள்ளி தரும் அந்த திருவல்லிபுத்தூர்தனில் உறையும் தெய்வமான ஆண்டாளை சரணடையுங்கள்.

நித்யானந்தவாழ்வு நிலை அடையாதிருப்பதே தாழ்வு
பக்திசெய்திடுவார்க்கே வாழ்வு பலநெறி நடப்பவர்கே தாழ்வு
செத்துப்போமாக்கை நித்தியமென்றிருக்காமல்
சித்திதரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)


நித்யமும் ஆனந்த வாழ்வு தரும் நிலை அடைவதே வாழ்வு அதை அடையாமல் அடைய முயற்ச்சிக்காமல் இருப்பது வாழ்வல்ல அது தாழ்வு, என்றும் இருப்போம் என்று இருமாப்பு கொள்ளாமல் அனைத்து சித்திகளையும் தரும் திருவல்லிபுத்தூர்தனில் இருக்கும் ஆண்டாளை சரணடையுங்கள்.

தன்னருட்காளாயிடலாம் தாஸர்களுக்குத் தாஸனாகலாம்
விண்ணவர் கிருபைக்காளாயிடலாம் வீதிகள்தோறும் பாடி ஆடலாம்
எண்ணம்பல வழிநண்ணி கெட்டலையாமல்
அண்ணல் வாழும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

அவளை கரம் பற்றியவனின் அருளுக்கு ஆளாயிடலாம் அவனடியாருக்கு அடியாராகிடலாம், தேவர்களுக்கு ஆளாயிடலாம் வீதிகள் தோறும் ஆடி பாடிடலாம். பல வழி உண்டு என்ற எண்ணி கெட்டு அலையாமல், அண்ணலாம் திருவரங்கன் எழுந்து வந்து ஆண்டாளை கரம்பற்றிய திருவல்லிபுத்தூர்தனில் சென்றடையுங்கள்.

கேட்ட வரம்தனை அளிப்பாள் கிருபாசாகரமாய் இருப்பாள்
கூட்டங்கூட்டமாய் அழைப்பாள் கொணர்ந்து ஸமர்ப்பித்ததே வகிப்பாள்
சேட்டைவளர் ஜெகம்தனில் திரிந்தலையாமல்
ஆட்டமிகும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

கேட்டதை வரமாக தரும் கற்பக தருவான, அன்பு கடலான இருப்பவளை வணங்க, குழுவாக, கூட்டமாக ஒன்றாக வர அழப்பவளாம், அவளை பூ,இலைகளை சமர்ப்பித்து, சூட்டி, எப்போதும் அனர்த்தங்கள் அதிகரிக்கும் இவ்வுலகம் தன்னில் அலையாமல், எப்போதும், திருவிழாகோலம் கொண்டிருக்கும் திருவல்லிபுத்தூர் தனிலிருக்கும் ஸ்ரீஆண்டாளை சரணடையுங்கள்.

இகபர வாழ்வு பலிக்கும் எண்ணமது நல்வழி நிலைக்கும்
சுகமென்மேலும் பலிக்கும் தொண்டுசெய்திடும் பக்தி வலுக்கும்
இகவாழ்வே சுகமென்றிடரடையாமல்
அகமகிழும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

அவ்வுலக வாழ்வு கிட்டும், எண்ணங்கள் நல்வழியில் நிலைக்கும்,
சுகம் மென் மேலும் பெருகும் கிட்டும், தொண்டு செய்ய செய்ய பக்தி வலுக்கும், அதிகரிக்கும். இவ்வுலக வாழ்வே சுகம் என்று தளர்வடையாமல், உள்ளம் மகிழ வைக்கும் திருவல்லிபுத்தூரில் உறையும் ஸ்ரீஆண்டாளை அடையுங்கள்.

இருவினையும் குடிவாங்கும் இகமேற் பற்பல இடர் நீங்கும்
குருவருளும் தானோங்கும் கோபாலன் திருவடி தலை தாங்கும்
வறுமைதரும் வையம் திரிந்தலையாமல்
அரி அருளாய் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

வல்வினை, தீவினை இருவினைகளை, மறுபிறப்பை மீண்டும் மீண்டும் பற்பல முறை பிறவி எடுக்கும் இடரை நீக்கும், குருவருளையும், தான் ஆளும் கோபாலன் திருவடியை உன் தலைக்கு அளித்து, வறுமையான சிறுமை, அறியாமையை இவ்வுலகில் திரிந்தலையாமல், ஹரியின் அருளாக, அருளுடன் திருவல்லிபுத்தூருக்கு சென்றடையுங்கள்.

பந்தமறும் பாத்தியமாம் பரமானந்த ஹிருதயமாம்
அந்தகன் வந்தனம் செய்வான் ஹரிவந்து கொடு நெறி செய்வான்
இந்தவகிலமே சொந்தமென் றலையாமல்
அந்தமிகும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

பந்தங்களை அறுக்கும் பத்தியாமாம், அந்த பரமானந்த ஹிருதயமாம், அரங்கனிடம் சேர்ப்பாள், கண்தெரியாத அந்தகனாய், அறியாமை கண்மறைக்கும் அந்தகனை ஹரி வந்து ஆட்கொள்ள இருக்கும் நீ, இந்த உலகமே உன் எல்லை என்றில்லாமல், ஆதி அந்தமில்லா ஊரான திருவல்லிபுத்தூருக்கு சென்றடையுங்கள்.



நேற்றைய பதிவின் தொடர்ச்சி,

மிடியாரிருவினைகள் பொடியாம் மேலாமிடமேறப் படியாம்
நெடியோனடி குடியாம் நீங்கா செல்வத்துக்கடியாம்
படிவாழ்வதென அப்படி அலையாமல்
அடியார் மகிழ் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

இவ்வுலக அடியார்களின் இருவினைகளும் தீர்ந்துவிடும், விண்மண் மண் அளந்த நெடியோனின் அடியார் குடியாம், குறையாத செல்வத்துக்கு அடித்தளமாம், அதன்படி தான் வாழ்கிறோம் என்று திரியாமல், அடியார்கள் கூடி மகிழும், திருவல்லிபுத்தூரதினில் சென்று ஆண்டாளின் பாதகமலங்களை பற்றி கொள்ளுங்கள்.

துன்பவினை ஓடி வரும் துணை தொண்டரருள் கிருபை நாடி வரும்
இன்பகவி பாடவரும் ஹிருதயம் ஒளிவுதயமாகும்
துன்ப சரீர போகம் இன்பமென்றடையாமல்
அன்பர்குழாம் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

துன்பவினைகள் உங்களை நோக்கி ஓடி வரும் அதை தடுக்க, அதன் பாதயிலுருந்து அகன்று தொண்டரருளை துணையாக கொண்டு விட்டால், அவனடியார்கள் கிருபை நாடி வரும், நீங்களும் பன்னெடுத்து பாடலாம், உங்கள் உள்ளத்தில் தெளிவும், ஒளியும் பிறக்கும், துன்பங்கொண்ட சரீரத்தால் போகத்தை நிலையான இன்பம் என்று இருக்காமல், அடியார் குழாத்துடன், ரெங்கமன்னர் வழும் தலமாம் திருவல்லிப்புத்தூர் தன்னில் சரணடையுங்கள்.

வித்தமதருளும் கைசேரும் விளையும் துன்பவினை தீரும்
நித்தமும் கைங்கர்யம் நேரும் நெஞ்சமதிலே வஞ்சம் தீரும்
பித்தமர் உலகுதனில் திரிந்தலையாமல்
அத்தன் தரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

வித்தைகளை தினமும் அருளி கைகூடவைக்கும், விளைகின்ற துன்பவினைகள் தீரும், நித்தமும் பகவத் கைங்கர்யம் செய்ய உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும், நெஞ்சத்தில் உள்ளத்தில் ஏற்படும் அழுக்கான அழுக்காறு, வஞ்சங்கள் தீர்ந்து விட செய்யும். துன்ப வினைகள் கொண்ட பித்தத்துடன் இந்த உலகில் திரியாமல், அத்தனையும் செல்வங்களும் தரும் திருவல்லிபுத்தூரதனில் சென்றடையுங்கள்.

வடபத்ராரியர் அருள்பெறலாம் மலராள் சந்நதிக்கே பெறலாம்
நடனகோபாலன் கிருபை பெறலாம் நாயகியார் எனும் பேர் பெறலாம்
சடலமதை நம்பி கெட்டலையாமல்
திடவில்லிபுத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

வடபத்ரரின் அருள்பெறலாம், மலராளாம், பூமகளின் திருஅவதாரமாம் ஆண்டாளின் சந்நதியை அடைந்தாள் அவை அனைத்தும் பெறலாம், உயிருள்ள சடலமான இவ்வுடலை நம்பி கெட்டலையாமல், உண்மையான-திடமான நம்பிக்கை தரும் திருவல்லிபுத்தூரதனில் சென்றடையுங்கள்.

தமிழக அரசின் சின்னத்திலும் இத்திருவல்லிபுத்தூரின் கோவிலின் கோபுரம் இடம்பெற்றிருப்பது குறிபிடத்தக்கது.

***

'மதுரையின் ஜோதி' பதிவில் நண்பர் சிவமுருகன் இட்ட இடுகை இது. கண்ணன் பாட்டில் கண்ணன் துணைவியின் மேலும் பாடல்கள் இடலாம் என்று நம்பி அதனை எடுத்து இங்கும் இடுகிறேன். :-)

Thursday, April 17, 2008

கண்ணன் எப்போது வருவானடி? கலந்து சுகம் பெறவே!


மதுரையின் ஜோதி, ஆண்டாளின் அவதாரம், நவ யுக ஆழ்வார் என்றெல்லாம் போற்றப்படும் நடனகோபால நாயகி சுவாமிகளின் பாடல் இது. சுவாமிகள் இயற்றிய சௌராஷ்ட்ர பாடல்களையும் தமிழ்ப்பாடல்களையும் இந்தப் பதிவில் படிக்கலாம்.


சுவாமிகள் நாயகி கோலத்தில்


கண்ணன் எப்போது வருவானடி கலந்து சுகம் பெறவே
நண்ணிய இத்துன்பவினை நாசமதாய் அறவே (கண்ணன்)

எண்ணம் அறிந்தது போலே இன்பம் ஈவானோடி? - ஆ
எண்ணம் இழுத்துக் கொண்டு நம்மோடிருப்பான் கூடி (கண்ணன்)

எண்ணம் இங்கெங்கே இருக்கு? இருடிகேசன் மேலே
எண்ணத் தரமோ அவன் தன் லீலைகள் நம்மாலே (கண்ணன்)

விண்ணவர்களுக்கு அமுதம் விரும்பித் தந்தானேடி
அண்ணலேடி நமக்கு இனிமேல் ஆரேடி போடி (கண்ணன்)

ஐயன் திருவடி பணிவார் அவரே நங்கள் தெய்வம்
பொய்யல்ல மெய் ஈதறிவாய் போயழை நாம் உய்வம் (கண்ணன்)

ஏடி விட்டுப் போனான் இங்கே என் செய்வேன் சந்திர முகியே
போடி அவன் எங்கேயோ நீ போய் அழை என் சகியே (கண்ணன்)

வயிறெரியுது எங்ஙனம் போய் எவரிடத்தில் விழுவேன்
இயம்பிய வார்த்தைகளை நான் எங்ஙனம் சொல்லி அழுவேன் (கண்ணன்)

பொய் உரைப்பானோ உரையாய் பொன்னரங்கன் எம்பால்
பையரவின் மேல் நடித்த பாதனேடி அன்பால் (கண்ணன்)





நடித்த திருவடி பணிந்து நங்காய் அழை போடி
முடித்த முடி அவிழ்த்திட யாரால் முடியும் போடி (கண்ணன்)

கண்ணீர் ஆறாய் பெருக அவன் காணாது சென்றானே
பண்ணிய தவப்பயனோ பரதவிக்கின்றேனே (கண்ணன்)


இராகம்: புன்னாகவராளி
தாளம்: ரூபகம்
பாடலை டி.எம்.எஸ். பாடிக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.

Monday, December 31, 2007

80. இச்சுவை தவிர யான் போய்....

எம்பெருமான் ஐந்து ரூபங்களுடன் விளங்குகிறான் என்கிறார்கள் படித்த சான்றோர்கள் - பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சைஎன ஐந்து ரூபங்களய் விளங்கும் அவனை நாம் காணமுடிவது ஐந்தாவதில் தான்.

பரம் எனப்படும் பரம ரூபம் ஸ்ரீவைகுண்டத்திலிருக்கும் அவனது திருமேனி. அது நமக்கு அகப்படாது.

பாற்கடலில் வாசுதேவன்,சங்கர்ஷணன்,ப்ரத்யும்நன்,அநிருத்தன்
என்கிற திருமேனிகளோடு நிற்கிறான். அவைகளுக்கு வியூஹம் எனப் பெயர். அவைகளையும் நாம் அறிவதற்கு அரிது.

ஸ்ரீராம, கிருஷ்ண அவதாரங்களுக்கு விபவம் எனப் பெயர்.
அவைகள் எல்லாம் எடுத்து முடிந்து விட்டபடியால் நாம் காண இயலவில்லை.

நமக்குள்ளே அந்தர்யாமி என்பது கட்டைவிரல் அளவில் இருக்கும் ரூபம்.
அந்த ரூபத்தையும் யோக சாதனையாலன்றி பார்க்க இயலாது. சாமான்ய மனிதர்களான நம்மால் அது இயலாது.

ஆகவே அவனுடைய ஐந்தாவது திருமேனியான அர்ச்சாவதாரம் (ஆலயங்களில் அவன் திருவுருவச் சிலைகள்) தான் நமக்குப் பார்த்து அனுபவிக்க முடியும்.
பின்னானார் வணங்கும் ஜோதி என்று அனுபவிக்கும்படி எல்லா திவ்ய தேசங்களிலும் அவன் சேவை சாதிக்கிறான். ஆண்டாள் திருப்பாவையில் சொல்லியபடி கூடி இருந்து குளிரக் குளிர பெருமானைக் காணவேண்டும்.

என்னரங்கத்தின் இன்னமுதர் குழலழகர் விழியழகர் கண்ணழகர் என்றெல்லாம் பெருமாளின் திருவழகில் மயங்கி நிற்கிறாள் மங்கை ஆண்டாள். அர்ச்சாவதார மூர்த்தியான அரங்கனின் மேனி அழகைக் கண்ட தொண்டரடிப்பொடி ஆழ்வார் இச்சுவை தவிர இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்கிறார்.

பாடலைப் படித்துக் கேட்டு இன்புறுவோமா?
மந்திர ஒலியில் இங்கு கேளுங்கள்! அருணா சாயிராம்
உன்னி கிருஷ்ணன் குரலில் இங்கு கேளுங்கள்!



renganatha
பச்சை மா மலை போல் மேனி
பவள வாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்க மா நகர் உளானே.





திருமதி ஆர்.வேதவல்லியின் குரலில்
வேத நூல் பிராயம் நூறு
மனிசர் தாம் புகுவர் ஏலும்,
பாதியும் உறங்கிப் போகும்
நின்று அதில் பதினை ஆண்டு,
பேதை பாலகன் அதாகும்
பிணி பசி மூப்புத் துன்பம்,
ஆதலால் பிறவி வேண்டேன்
அரங்க மா நகர் உளானே


திருமால் பெருமை படத்தில் TMS பாடுவது இங்கே!
ஊர் இலேன் காணி இல்லை
உறவு மற்று ஒருவர் இல்லை,
பாரில் நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி,
காரொளி வண்ணனே என்
கண்ணனே கதறு கின்றேன்,
ஆருளர் களைக் கணம்மா.
அரங்க மா நகர் உளானே



பதிவுலக நண்பர்கள் எல்லோருக்கும் இதயங் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
- திருவரங்கப்ரியா

Wednesday, September 05, 2007

65. கண்ணன் பிலேடட் பிறந்தநாள் வாழ்த்து - TMS & சீர்காழி!

இந்த ஆண்டு கண்ணனின் பிறந்தநாள் ப்ரைவேட் பர்த்டே ஆகிவிட்டது!
கண்ணன் பிறந்த நாளான கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) நேற்று! (Tuesday, Sep 4th 2007).
Belated Birthday Wishes, கண்ணா!

உனக்கென்றே இருக்கும் கண்ணன் பாட்டு வலைப்பூவில்,
ஒருவர் கூட உனக்கு "Happy Birthday to you" பாடவில்லையே என்று கோபமா கண்ணா? :-) அதான் நேராக வந்து சொன்னோமே?
சரி சரி, உன் சிரித்த முகத்தைத் தூக்கிவைத்துக் கொள்ளாதேடா!
நீ சிரிச்சா தான் அழகு!
உம்மென்று இருந்தால் உதைபடுவாய் (birthday bump) சொல்லிவிட்டேன்! :-)
உருண்டை வெண்ணெய் திரட்டித் திரட்டித் தருகிறோம்! ஒரு சிரி சிரித்து விடு!




நானும் பதிவர் CVR-உம், நேற்று நியூயார்க் மாநிலத்தில் உள்ள பொமோனா அரங்கநாதன் ஆலயம், கண்ணன் சன்னிதிக்குச் சென்று இருந்தோம்!
அங்கே கண்ணன் அருளால் கோவில் பணியாளர் ஒருவரிடம், ஒரு சுவையான உரையாடல்!

என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே என்று ஆழ்வார் பாசுரத்தை நான் மெல்லிதாகப் பாட, எங்கிருந்தோ ஓடி வந்த அவர், என்னை ஒரு பிடி பிடித்துக் கொண்டார்.
மற்றொன்றினைக் காணாவே என்பதற்கு அவர் தவறான அர்த்தம் கொண்டு விட்டார் போலும்! பிற தெய்வங்களைக் காணக் கூடாது என்று அவர் சொல்ல, நான் அவரிடம் மென்மையாக மறுத்துரைக்க...

சரி அரங்கனின் முன் அனல் வாதம் வேண்டாம் என்று ஆழ்வாரின் "முக்கண் அப்பா" பாடலை மட்டும் அவருக்கு எடுத்துக்காட்டி விட்டு வந்து விட்டேன்! அவரும் தன் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்துவிட்டார்!
அவர் பேசும் பேச்சுக்கு, அவர் தமிழ்மணம் வந்தால் சொல்லால் அடித்தே துரத்தி விடுவார்கள் என்பது சர்வ நிச்சயம்! :-)

நீண்ட வார இறுதி (Long Weekend) விடுமுறையில், நண்பர்களோடு நெய்தல் நாட்டுச் சுற்றுலா சென்று வந்த களைப்பு இன்னும் தீரவில்லை!
இனி மேல் தான் பல மின்னஞ்சல்களுக்கு ரிப்ளை செய்யணும்!
அதற்கு முன், சற்று முன்,
இதோ கண்ணன் பிறந்தநாள் பாடல்!
கண்ணன் வந்தான் அங்கே
கண்ணன் வந்தான் - ஏழைக்
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்

TMS & சீர்காழி இணைந்து பாடி முழங்கும் உருக்கமான பாடல்!
அடையாத கதவிருக்கும் சன்னிதானம்!
அஞ்சாத சொல்லிருக்கும் சன்னிதானம்!!



பாடலைக் கேட்டு ரசிக்க இங்கே சொடுக்கவும்!

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவான்...
நோய்க்கு மருந்தாவான்...
பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே...


கண்ணன் வந்தான் அங்கே
கண்ணன் வந்தான் - ஏழைக்
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்

தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்பவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்க கண்ணன் வந்தான்


கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்...
கண்ணன் வந்தான்...
(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்
அடையாத கதவிருக்கும் சன்னிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சன்னிதானம்


சன்னிதானம் கண்ணன் சன்னிதானம்
சன்னிதானம்...
(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கனி மழலை குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள்செய்ய வருவாய் கண்ணா


கண்ணா...கண்ணா..கண்ணா..கண்ணா..
(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)


படம்: ராமு
பாடல்: கண்ணதாசன்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்திரராஜன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்



படங்களுக்கு நன்றி: krishna.com, radharani.com

Thursday, August 02, 2007

62. கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா!

நண்பர் ஆசிப் மீரான் அவர்களின் துணைவியார்,
யாஸ்மீன் பாத்திமா அவர்களின் நினைவஞ்சலிக்கு அடியேன் இந்தப் பாடலைச் சமர்பிக்கிறேன்!
அது என்னமோ, குழந்தைகள் விஷயங்களில் ஏற்படும் மனதின் கனம், இறங்க மிகவும் கடினமாக உள்ளது!
ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா...
அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா...

ஷாஜியின் பதிவு
செந்தழல் ரவியின் பதிவு
சற்று முன்..



பாடலைக் கேட்க இங்கு சொடுக்கவும்!


கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா

சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா
தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா
(கேட்டதும் கொடுப்பவனே)

தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா

ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா
அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா

(கேட்டதும் கொடுப்பவனே)

நீயுள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா
நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா

கோயிலில் குடி புகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
குடைநிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா

கிருஷ்ணா கிருஷ்ணா...
கிருஷ்ணா கிருஷ்ணா... கிருஷ்ணா கிருஷ்ணா...

எண்ணை இல்லாது ஒரு தீபம் எரிந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
உன்னை நினைந்தது உருகி இருந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
கண்களைப் போல் எமைக் காவல் புரிந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
கண்ணன் திருவடி எண்ணியிருந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா


கிருஷ்ணா கிருஷ்ணா...
(கேட்டதும் கொடுப்பவனே)



படம் : தெய்வ மகன்
இசை : M.S.விஸ்வநாதன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: T.M.சௌந்தரராஜன்
ராகம்: கல்யாணி

(இந்தப் பாடல், நண்பர் ஸ்ரீநிவாசனின் நேயர் விருப்பமும் கூட)
இதில் வரும் சிதார் (Sitar) இசையை மறக்காமல் கேட்கவும்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மூன்று வேடங்களில் நடித்த படம்.
இதை ஆஸ்கர் அவார்டுகளுக்கு அனுப்பி வைத்ததாய் எங்கோ படித்த நினைவு!
கல்யாணி ராகத்தில் அமைந்த கண்ணதாசனின் மிகவும் உருக்கமான பாடல்!

Monday, May 14, 2007

திருமால் பெருமைக்கு நிகரேது!!!





திருமால் பெருமைக்கு நிகரேது - உன்றன்

திருவடி நிழலுக்கு இணையேது!
பெருமானே உன்றன் திருநாமம் - பத்து
பெயர்களில் விளங்கும் அவதாரம்

(திருமால்)



கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் - தனைக்
காப்பதற்கே கொண்ட அவதாரம்
- மச்ச அவதாரம்!

அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் - எங்கள்
அச்சுதனே உன்றன் அவதாரம்
- கூர்ம அவதாரம்!

பூமியைக் காத்திட ஒரு காலம் -நீ
புனைந்தது மற்றொரு அவதாரம்
- வராக அவதாரம்!

நாராயணா என்னும் திருநாமம் - நிலை
நாட்டிட இன்னும் ஒரு அவதாரம்
- நரசிம்ம அவதாரம்!

மாபலிச் சிரம் தன்னில் கால் வைத்து - இந்த
மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம்
- வாமன அவதாரம்!

தாய் தந்தை சொல்லே உயர் வேதம் - என்று
சாற்றியதும் ஒரு அவதாரம்
- பரசுராம அவதாரம்!

ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் - எனும்
உயர்வினைக் காட்டிய அவதாரம்
- ராம அவதாரம்!

ரகு குலம் கொண்டது ஒரு ராமன் - பின்பு
யது குலம் கண்டது பலராமன்
- பலராமன்

அரசு முறை வழிநெறி காக்க - நீ
அடைந்தது இன்னொரு அவதாரம்
- கண்ணன் அவதாரம்


விதி நடந்ததென மதி முடிந்ததென
வினையின் பயனே உருவாக,
நிலைமறந்தவரும், நெறியிழந்தவரும்
உணரும் வண்ணம் தெளிவாக,
இன்னல் ஒழிந்து புவி காக்க - நீ
எடுக்க வேண்டும் ஒரு அவதாரம்
- கல்கி அவதாரம்!

(திருமால்)

பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்...


Tuesday, December 26, 2006

16. புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!

பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - கவிஞர் கண்ணதாசன் எழுதி, MSV இசையில், TMS பாடியது


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே

வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)


பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)


குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)



பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)




மார்கழி 12 - கனைத்திளங் கற்றெருமை - பன்னிரண்டாம் பாமாலை.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP