இளையராஜா/யேசுதாஸ்: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்!
கண்ணன் பாட்டு மக்களே, எனக்கு ஒரு சந்தேகம்! தீர்த்து வைங்க!
இந்தப் பாட்டு கண்ணன் பாட்டு தானே?
"கண்ணனே" நீ வர-ன்னு தானே துவங்குது? :)
இளையராஜாவின் மிக அழகான மெலடிக்களில், இது என்றும் நிலைத்து நிற்கக் கூடியது! வயலினை வச்சிக்கிட்டே ஜால வித்தை காட்டுவாரு ராஜா என்பதற்கு இதுவும் ஒரு சரியான எடுத்துக்காட்டுப் பாடல்!
ராஜா-வின் வயலின் சாகசங்களோடு பாட்டின் கம்பீரத் துவக்கம் - Dont Miss! கூடவே மெல்லீசா ஒரு "டொக் டொக்" சத்தம்....
* பாட்டு ஆரம்பிக்கும் போதும் டொக் டொக்!
* அப்பறம் பாடல் முழுக்கவும் டொக் டொக் கேட்கும் பாருங்க!
அந்த டொக் டொக்-கையே உன்னிப்பா Follow பண்ணீங்கனா....
அதான் என்னோட காதல் துடிப்பு-ன்னு தெரிஞ்சீரும்! :))
(ஆண்குரல் - பச்சையில்; பெண்குரல் - கண்ணனுக்கு பிடிச்ச வயலெட்டில்! :)

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் - ஜன்னலில் பார்த்திருந்தேன்!
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் - என் உடல் வேர்த்திருந்தேன்!
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் - மன்னவன் ஞாபகமே!
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் - மன்மத நாடகமே!
அந்திப் பகல், கன்னி மயில், உன்னருகே!
(கண்ணனே நீ வர)
நீலம் பூத்த ஜாலப் பார்வை - மானா? மீனா?
நான்கு கண்கள் பாடும் பாடல் - நீயா? நானா?
கள்ளிருக்கும் - பூவிது பூவிது!
கையணைக்கும் - நாளெது நாளெது?
பொன்னென மேனியும் - மின்னிட மின்னிட!
மெல்லிய நூலிடை - பின்னிடப் பின்னிட
வாடையில் வாடிய
ஆடையில் மூடிய
தேர்...நான்...
(கண்ணனே நீ வர)

ஆசை தீரப் பேச வேண்டும் - வரவா? வரவா?
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் - மெதுவா! மெதுவா!
பெண் மயங்கும் - நீ தொட நீ தொட!
கண் மயங்கும் - நான் வர நான் வர
அங்கங்கு வாலிபம் - பொங்கிடப் பொங்கிட
அங்கங்கள் யாவிலும் - தங்கிடத் தங்கிட
தோள்களில் சாய்ந்திட
தோகையை ஏந்திட
யார்...?நீ....!
(கண்ணனே நீ வர)

படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
குரல்: யேசுதாஸ் & உமா ரமணன்
வரிகள்: வைரமுத்து
ராகம்: மலைய மாருதம்
தென்றலே என்னைத் தொடு படம் ஒரு வருஷம் மேல ஓடியது-ன்னு நினைக்கிறேன்! பாட்டுக்கும்-காதலுக்காகவே!
சேட்டன் யேசுதாஸோட mesmerizing காதல் குரல்!
உமா ரமணனும் நல்லா கம்பெனி குடுக்கறாங்க! (பூங்கதவே, கஸ்தூரி மானே-ன்னு நிறைய ஹிட் கொடுத்தவங்க உமா!)
ராகம்/மெட்டு எங்கேயோ கேட்டாப் போல இல்லை?
TMS பாட்டு ஞாபகம் வருதா? ஓராறு முகமும் ஈராறு கரமும்....தீராத வினை தன்னை தீர்க்கும்! எக்ஜாக்ட்லி!
அந்த முருகன் பாட்டு ராகமே தான், இந்தக் கண்ணன் பாட்டு ராகமும் கூட! :) பூப்பூக்கும் மாசம் தை மாசம் என்ற பாட்டும் இதே மெட்டு தான்!
கண்ணா, உனக்கு, உன் பாட்டு பிடிச்சி இருந்தது தானே? :)
