Showing posts with label அம்புஜம் கிருஷ்ணா. Show all posts
Showing posts with label அம்புஜம் கிருஷ்ணா. Show all posts

Monday, December 24, 2007

என்னை விட்டுப் போன கண்ணன் வரக் காணேனே!


பொழுது மிகவாச்சுதே சகியே என்னை விட்டுப்
போன கண்ணன் வரக் காணேனே (பொழுது)

குழலோசை கேட்டு கூடிடும் மங்கையர்
விழியால் வலை வீசி அழைத்துச் சென்றனரோ (பொழுது)

புழுவென நான் இங்கு புலம்பித் துடிக்கையிலே
பூவையருடன் அங்கு பேசிச் சிரிக்கப் போமோ?
பைங்கிளி உனைக்கணம் பிரியேன் என்ற
பேசும் மறந்தானோ பேதையைத் துறந்தானோ? (பொழுது)



இயற்றியவர்: அம்புஜம் கிருஷ்ணா
இராகம்: ரேவதி
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ

Wednesday, April 11, 2007

ஆடினயே கண்ணா!!!




அம்புஜம் கிருஷ்ணா இயற்றியது.


ஆடினயே கண்ணா பிருந்தாவனம் தனில்
ஆனந்த ரசமய அற்புத நடனம்
(ஆடினயே)

ஈடிலா அழகிய கோபியர் உனைத்தேடி
நாடி வந்தார் நதிக்கரை நிலவொளியில்
(ஆடினயே)

மயில் பீலி சற்றே கொண்டைதனில் அசைய
நவரத்ன மகுடம் சிரம்தனில் ஒளிர
மகர குண்டலங்கள் இருசெவி இலங்க
மதிமுகம் தனிலே முறுவல் விளையாட

மணம் கமழ் மாலைகள் மார்பில் அசைந்தாட
மயங்கும் அந்திவண்ண ஆடை இடையாட
மதுர மோகன குழலிசை கூட்ட
மங்கையர் கண்கள் மையல் காட்ட

மலர்கழல் சதங்கை ஜதிலயம் கூட்ட
மனமறிந்து அருள்சொறிந்து
இணைந்து ஒன்றாய்
(ஆடினயே)

இதனை மேண்டலினில் கேட்க இங்கே சொடுக்கவும்.

Sunday, December 10, 2006

3. திருமலை உறைந்திடும் கருமுகிலே!

பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்

வருக வருகவே திருமலை உறைந்திடும்
கருமுகிலே அருள் பொழிக பொழிகவே (வருக வருகவே)

மறையுடையோன் ஏறு விடையுடையோன் ஆறு
முகமுடையோன்
பணியும் திருவுடையோன் (வருக வருகவே)




மோகன முறுவல் முகம் கண்டு - பிறவி
சோகம் தவிர்க்கும் விழி அருளை உண்டு - உன்
தாள் மலர் தழுவிடத் தாகம் கொண்டு - நாளும்
தவித்திடும் எனக்கு உன் தரிசனம் தந்திட (வருக வருகவே)



பாடியவர்: எம்.எஸ். சுப்புலக்ஷ்மி
இயற்றியவர்: அம்புஜம் கிருஷ்ணா
இராகம்: மோகனம்
தாளம்: ஆதி

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP