Showing posts with label கண்ணதாசன். Show all posts
Showing posts with label கண்ணதாசன். Show all posts

Friday, August 09, 2013

ஆண்டாள் பிறந்தநாள்! ஆடியில் சிறந்தநாள்!

இன்று Aug 9
என் இன்-உயிர்த் தோழி, கோதையின் பிறந்தநாள்!

அவளுக்கு, என்னவன் முருகவன் சொல்லும் வாழ்த்து = இங்கே!

இதோ முத்தாய்ப்பாக ஒரு காட்சி! அப்பாவும் பொண்ணும் போட்டி போட்டு பாடும் கண்ணன் பாட்டு!
இந்தப் பாட்டின் வேகம்... கேட்கும் போதெல்லாம் என்னை என்னமோ பண்ணும்!
இந்தப் பாட்டின் காட்சி... பார்க்கும் போதெல்லாம் என்னை என்னமோ பண்ணும்!

*அப்பாவாக = நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
*சின்னப் பொண்ணாக = குட்டி பத்மினி
*பெரிய பொண்ணாக = கே.ஆர்.விஜயா

வரிகள் போட்டி போட்டுக் கொண்டு வந்து விழுகின்றன = கண்ணனின் தாசனான கண்ணதாசன் தூரிகையில்!
TMS ஒரு பாய்ச்சல் பாய்ஞ்சா, சுசீலாம்மா எட்டு பாய்ச்சல் பாயறாங்க!

சிறுமி கோதைக்கு குரல் கொடுப்பது: மாஸ்டர் டி.எல்.மகாராஜன்
(ஆண் குரல் நல்லாத் தெரியுது; சின்னப் பொண்ணு கோதை ஒரு வேளை ஆம்பிளைப் புள்ளை போல் ரொம்ப பிடிவாதமோ? அதான் ஆம்பிளைக் குரலோ? :)

பெரியவள் கோதைக்கோ குரல் கொடுப்பது: பி.சுசீலா
இந்தப் பாட்டைக் கேட்டு, சுசீலாம்மாவிடம், நீங்க தான் அந்தக் கடவுள்-ன்னு யாரோ சொல்ல, அவர்கள் புன்னகையுடன் மறுத்தார்களாம்! :)
http://psusheela.org/fans/subbu_pothigai.html

இதோ: அரி அரி கோகுல ரமணா உந்தன் - திருவடி சரணம் கண்ணா!



அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!
அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!

பாரத தேவா பாண்டவர் நேசா
பதமலர் பணிந்தோமே - உன்
பதமலர் பணிந்தோமே!
(அரி அரி கோகுல ரமணா)

ஞான மலர்க் கண்ணா, ஆயர்க் குல விளக்கே
வானமும் கடலும் வார்த்து எடுத்த பொன் உருவே
கானத்தில் உயிர் இனத்தைக் கட்டுவிக்கும் கண்ணா!

(தானே உலகாகி தனக்குள்ளே தான அடங்கி
மானக் குல மாதர் மஞ்சள் முகம் காத்து
வாழ்விப்பாய் என்றும் மலர்த்தாள் கரம் பற்றி
நானும் தொழுதேன் நம்பி பரந்தாமா - உன்
நாமம் உரைக்கின்ற நல்லோர் நலம் வாழியவே!)

அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!

படம்: திருமால் பெருமை
வரிகள்: கண்ணதாசன்
குரல்: TMS, பி.சுசீலா, டி.எல்.மகாராஜன்
இசை: கே.வி.மகாதேவன்


Happy Birthday Kothai!
உனக்கு அவனோடு (கண்ணனோடு) பல்லாண்டு பல்லாண்டு...
எனக்கு அவனோடு (முருகவனோடு) பல்லாண்டு பல்லாண்டு...



Monday, January 31, 2011

#tnfisherman #தமிழ் மீனவர்கள் (AVM & பி.சுசீலா!)

கண்ணன் பாட்டு அன்பர்களே,
தமிழக மீனவர்களின் உயிர் காக்கும் முயற்சியாக, நிரந்தரத் தீர்வுக்கு, உங்கள் குரலையும் இங்கே கொடுங்கள்! மிகப் பெரும் இணைய முயற்சி ஒன்று நடந்து கொண்டிருக்கு - எட்டிப் பாருங்கள்!

எம்பெருமான் திருவுள்ளம், இந்த உயிர்களைக் காக்கும்! வேண்டுவோம்!
விண்ணப்ப மனுவில், நம்முடைய ஒரேயொரு கையெழுத்தையாவது போட்டு, அல்லல்படுவோர் தலையெழுத்தை மாற்றுவோம்!
இங்கு போடுங்கள், உங்கள் கையெழுத்தை! கண்ணன் உள்ளம் உங்களை வாழ்த்தும்!



இன்றைய கண்ணன் பாட்டுப் பாடல், மிக மிக சூப்பர் ஹிட் சுசீலாம்மா பாடல்!
அன்பே வா என்ற சூப்பர் ஹிட் படம் எடுத்த கையோடு,
ஏ.வி.எம் நிறுவனத்தார் எடுத்த அடுத்த வண்ணப் படம் = ஆன்மீகப் படம்! :)

ஐயோ! பலரும் வேண்டாம் என்றார்கள்! சூப்பர் ஹிட் எம்.ஜி.ஆர் படத்துக்குப் பிறகு, ஒரு ஆன்மீகப் படமா? ஃப்ளாப் ஆகி விடும் என்று பயமுறுத்தினார்கள்!
ஆனால் ஏவிஎம் எடுத்துக் காட்டினார்! தந்திரக் காட்சிகள் சூப்பர் ஹிட்! பி.சுசீலா பாடல் = நாராயண மந்திரம்....ஒலிக்காத பட்டி தொட்டியே இல்லை!
குழந்தைப் பிரகலாதனாக நடித்த குழந்தையை அனைவருக்கும் பிடித்துப் போனது!


பக்த பிரகலாதா = தெலுங்கு, தமிழ், இந்தி என்ற மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் எடுத்தனர்!
தந்திரக் காட்சிகள் ஏ.வி.எம் புகழுக்கு எடுக்கப்பட்டன! தந்திரக் காட்சிப் புகழ் பாபுபாய் மிஸ்திரியின் உதவியாளர் ரவிகாந்த் எடுத்தார்!

இரணியன் = எஸ்.வி. ரங்காராவ்
அவன் மனைவி கயாது = அஞ்சலி தேவி
சிறுவன் பிரகலாதன் = பேபி ரோஜா ரமணி
நாரதர் = பிரபல பாடகர் பாலமுரளி கிருஷ்ணா

தெலுங்கு டப்பிங் என்பது தெரியாமல் இருப்பதற்காக, தமிழில் தனி நகைச்சுவை Track!
டி.எஸ்.பாலையா & ஏ.கருணாநிதி = இவர்களே பிரகலாதனின் ஆசிரியர்கள்!
ஓம் இரணியாய நம என்று சொல்லிக் கொடுத்து, கடைசியில் அவர்களே ஓம் நாராயணாய நம என்பதற்கு மாறி விடுவார்கள்! Class Room நகைச்சுவை சூப்பரா இருக்கும்! :)



அஹம் பிரம்மாஸ்மி = நான் கடவுள் என்ற மகா வாக்கியம்! வேதம்!
இதைத் தானே இரணியனும் சொன்னான்?
ஓம் இரணியாய நமஹ! நானே கடவுள்! :)
அப்போ அவன் தான் முதன்முதல் அத்வைத குருவா? :)

* அஹம் பிரம்ம ஆஸ்மி = நான் கடவுளாய் "இருக்கிறேன்"!
நானே கடவுள் அல்ல! நான் கடவுளின் வெளிப்படு பொருளாய் (வடிவமாய், உடம்பாய்) இருக்கிறேன்!
* தத் தவம் அஸி = அது நானாக இருக்கிறது!
கடவுள் நானாக என்னுள் இருக்கிறார்! இது தான் இவ் வேத வாக்கியங்களுக்குப் பொருள்! அதனால்....நான் தான் கடவுள்-ன்னு "ஞானத்தில்" ஓவராத் துள்ள வேண்டாம்! :)

நான் தான் "அதுவா"?
"அது" பண்ணுற வேலையை எல்லாம் என்னால் பண்ண முடியுமா? என்னைக் காப்பாத்திக்கவே எனக்கு வக்கில்லை! அப்பறம் எப்படி நான் மொத்த உலகத்தைக் காப்பாத்துவேன்? :)
மொதல்ல எனக்கு "கருணை"-ன்னு ஒன்னு வருமா? என்னை தாழ்த்திக் கொண்டாலும், அடியவர்களுக்காக இறங்கி வருகிறேன்-ன்னு சொல்லும் மனசு எனக்கு இருக்கா? அது வரட்டும்! அப்பறமா சொல்லிக்கலாம் "அஹம் பிரம்மாஸ்மி"-ன்னு! :)

ஓம் இரணியாய நம-ன்னு சொன்னான், ஊரையே சொல்ல வைத்தான் இரணியன்! -அதுவும் எட்டெழுத்து தான் பாருங்கள்!
ஓம்(1)+இரணியாய(5)+நம(2) = அஷ்டாட்சரம்! :)
அறிந்தோ அறியாமலோ அஷ்டாட்சரம் சொல்லி, குழந்தையின் அசைக்க முடியாத நம்பிக்கையால், உணரப் பெற்றான், அந்தப் பெற்றவன்! நாம பாட்டைப் பார்ப்போம் வாருங்கள்!

சுசீலாம்மாவின் அன்றைய சூப்பர் ஹிட் பாடல்! பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த பாடல்! கேட்டுக் கொண்டே பதிவை வாசியுங்கள்!



படம் : பக்த பிரகலாதா
குரல் : பி.சுசீலா
இசை: கேவி மகாதேவன்
வரி: கண்ணதாசன்

நாராயண மந்திரம் - அதுவே நாளும் பேரின்பம்
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து....
பரமன் அருள் தரும் சாதனம்
...
(நாராயண மந்திரம்)

உடலினை வருத்தி மூச்சினை அடக்கும்
தவத்தால் பயனில்லை!
உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும்
யாகங்கள் தேவையில்லை!
மா தவா மது சூதனா என்ற மனதில் துயரமில்லை
(நாராயண மந்திரம்)

ஆதியும் அந்தமும் = நாராயணனே
அன்னையும் தந்தையும் = நாராயணனே
பக்தியும் முக்தியும் = நாராயணனே
பகலும் இரவும் = நாராயணனே
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து,
பரமன் அருள் தரும் சாதனம்
(நாராயண மந்திரம்)

நாராயணா அரி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா
நாராயணா அரி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா



எம்பெருமான் திருவுள்ளம், இந்த உயிர்களைக் காக்கும்! வேண்டுவோம்!
விண்ணப்ப மனுவில், நம்முடைய ஒரேயொரு கையெழுத்தையாவது போட்டு, அல்லல்படுவோர் தலையெழுத்தை மாற்றுவோம்!
இங்கு போட்டு விட்டீர்களா, உங்கள் கையெழுத்தை? கண்ணன் உள்ளம் உங்களை வாழ்த்தும்!

Wednesday, September 01, 2010

அப்பாவும் பொண்ணும் போட்டிப் பாட்டு! கண்ணன் பாட்டு!

கண்ணன் பிறந்த நாளில், இங்கு நியூயார்க்கின் இரவிலே...
மாலையில் மருத்துவரிடம் ஓடி, இல்லம் வந்து சோர்ந்து தூங்கி, பிட்சாவையே பலகாரமாய் உண்டு...
இதோ இரவு பத்து மணிக்கு, தம்பி பாலாஜி நினைவுபடுத்த, அவசரம் அவசரமாக...
நெற்றியில் என்றுமில்லாத திருநாளாய், ஒற்றைக் கீற்றில் நாமம் தரித்து, அதைக் கண்ணாடியில் சரி பார்த்து :) ...
பால் பொங்கி, திடீர்ப் பாயசம் செய்து, வெண்ணெய் உருட்டி, ஒரே ஒரு பழைய ஆப்பிளொடு..
கை வலிக்க மணி ஒலிக்க முடியாது, தம்பி பாலாஜி மெல்லொலி ஒலிக்க, கருமைச் சுருள் இரவிலே, கேண்டில் விளக்கிலே, பச்சைக் கர்ப்பூர ஒளி ஜொலிக்க...

மாணிக்கம் கட்டி, மணி வைரம் இடைக் கட்டி,
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி உனக்கு நாங்கள் விடு தந்தோம்
மாணிக் குறளனே தாலேலோ!
வையம் அளந்தானே தாலேலோ!

பிறந்த உடனேயே நல்லாத் தூங்கி விடு கண்ணா!
இதோ சற்று நேரத்தில் இடம் மாறப் போகிறாய்! இனி உனக்குத் தூக்கமே போச்சு! உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்ததடா கண்ணா! அதற்கு நீயும் விதிவிலக்கு அல்லடா!



இதோ முத்தாய்ப்பாக ஒரு காட்சி! அப்பாவும் பொண்ணும் போட்டி போட்டு பாடும் கண்ணன் பாட்டு!
இந்தப் பாட்டின் வேகம்... கேட்கும் போதெல்லாம் என்னை என்னமோ பண்ணும்!
இந்தப் பாட்டின் காட்சி... பார்க்கும் போதெல்லாம் என்னை என்னமோ பண்ணும்!

அப்பாவாக = நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
சின்னப் பொண்ணாக = குட்டி பத்மினி
பெரிய பொண்ணாக = கே.ஆர்.விஜயா

வரிகள் போட்டி போட்டுக் கொண்டு வந்து விழுகின்றன! கண்ணனின் தாசனான கண்ணதாசன் தூரிகையில்!
TMS ஒரு பாய்ச்சல் பாய்ஞ்சா, சுசீலாம்மா எட்டு பாய்ச்சல் பாயறாங்க!

சிறுமி கோதைக்கு குரல் கொடுப்பது: மாஸ்டர் டி.எல்.மகாராஜன் (ஆண் குரல் நல்லாத் தெரியுது, சின்னப் பொண்ணு கோதை ஒரு வேளை ஆம்பிளைப் புள்ளை போல் ரொம்ப பிடிவாதமோ? அதான் ஆம்பிளைக் குரலோ? :)

பெரியவள் கோதைக்கோ குரல் கொடுப்பது: பி.சுசீலா
இந்தப் பாட்டைக் கேட்டு, சுசீலாம்மாவிடம், நீங்க தான் அந்தக் கடவுள்-ன்னு யாரோ சொல்ல, அவர்கள் புன்னகையுடன் மறுத்தார்களாம்! :)
http://psusheela.org/fans/subbu_pothigai.html

இதோ: அரி அரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா!



அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா

பாரத தேவா பாண்டவர் நேசா
பதமலர் பணிந்தோமே - உன்
பதமலர் பணிந்தோமே
(அரி அரி கோகுல ரமணா)

ஞான மலர்க் கண்ணா, ஆயர்க் குல விளக்கே
வானமும் கடலும் வார்த்து எடுத்த பொன் உருவே
கானத்தில் உயிர் இனத்தைக் கட்டுவிக்கும் கண்ணா

தானே உலகாகி தனக்குள்ளே தான அடங்கி
மானக் குல மாதர் மஞ்சள் முகம் காத்து
வாழ்விப்பாய் என்றும் மலர்த்தாள் கரம் பற்றி
நானும் தொழுதேன் நம்பி பரந்தாமா - உன்
நாமம் உரைக்கின்ற நல்லோர் நலம் வாழியவே!

அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!

படம்: திருமால் பெருமை
வரிகள்: கண்ணதாசன்
குரல்: TMS, பி.சுசீலா, டி.எல்.மகாராஜன்
இசை: கே.வி.மகாதேவன்



புறம் போல் உள்ளும் கறுத்துப் போன கண்ணா!
இவளுக்கு எப்படி அறிமுகம் ஆனாயோ, அப்படியே இருந்து விடேன்!
வெண்ணைய்க்காடும் பிள்ளையாய்!
அனைவரும் விரும்பும் PoRkki பிள்ளையாய்!

* கம்ச வதம், சிசுபால தண்டனை எல்லாம் வேறு தெய்வங்கள் பார்த்துக் கொள்ளட்டும்!
* பாஞ்சாலி மானம் வேறு தெய்வம் காத்துக் கொள்ளட்டும்!
* பகவத் கீதை, வேறு எவனோ உளறிக் கொள்ளட்டும்!

* போலிச் சடங்குகளை/இந்திர பூசையை வேறு ஒருவர் வந்து தடை செய்யட்டும்!
* துவரைப்பதிக்கு, பொது மக்களை வேறு யாரோ ஒருவர் வழிநடத்தட்டும்!
* புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகளை உன் தேரில் தானா ஏற்ற வேண்டும்? வேறு ஒரு புரட்சியாளர் வந்து அவர்களுக்கு மதிப்பு ஏற்படுத்தட்டும்!

பாரதப் போரில், திறமையால் போரிடாமல், வரம் வாங்கிப் போர் புரிவார்களை எதிர்த்து, வேறு யாராவது மாயங்கள் செய்து கொள்ளட்டுமே! உனக்கு எதுக்குடா வீண் சாபமும், பொல்லாப்பும்?
பிறந்த நாள் காணும் போலிப் பண்பாளா!
மகரந்த வாசம் வீசும் மாதவா! ராகவா!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கள்ளமில்லாத கள்ளக் குழந்தையாய்,
பல அனாதைக் குழந்தைகளோடு ஆடி விளையாடி,
நீ எப்பமே நல்லா இருக்கணும்!

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து...
பல்லாண்டு பல்லாண்டு, எம்மோடு பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு!



எங்கள் முழு"முதல்" தெய்வமே...
தொன்மைத் தமிழ்க் குடிக்கு...மாயோன் மேய மைவரை உலகே...

என் பால் நோக்காயே ஆகிலும்...
தரு துயரம் தரினும்...
ஆராய்ந்து அருள்வதாகச் சொல்லி அருளா விடினும்...

உன் மார்பில் அகலகில்லேன் என்று இருப்பவள் போலே
நானும் என் நெஞ்சில் அகலகில்லேன் என்று என் முருகனை இருத்தி
அவனோடு பல்லாண்டு பல்லாண்டு...

அரி அரி கோகுல ரமணா, உந்தன் திருவடி சரணம் கண்ணா!
அரி அரி கோகுல ரமணா, உந்தன் திருவடி சரணம் கண்ணா!

அப்பா! எங்கள் பெருமாளே!
புகல் ஒன்றில்லாப் பேதை...
இரு கரம் தூக்கினேன்! ஏலோர், ஏலோர்!

அரி அரி கோகுல ரமணா, உந்தன் திருவடி சரணம் கண்ணா!
அரி அரி கோகுல ரமணா, உந்தன் திருவடி சரணம் கண்ணா!
திருவடி சரணம் கண்ணா!
திருவடி சரணம் கண்ணா!

எல்.ஆர்.ஈஸ்வரி அடிக்கும் பிறந்தநாள் கும்மி!

இன்று கும்மி அடிக்கலாம் வாங்க! வழக்கமான பதிவுலகக் கும்மி அல்ல! கண்ணன் பிறந்த நாள் கும்மி! அதுவும் நம்ம எல்.ஆர்.ஈஸ்வரி அடிக்கும் கும்மி:)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணா! Happy Birthday KaNNa! - From me & my murugan :)


கண்ணன் பாட்டு அன்பர்கள் அனைவருக்கும் இனிய கண்ணன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


அதிரசம், லட்டு, சீடை, முறுக்கு, தேன்குழல், அப்பம், திரட்டிப் பால், சோமாஸ், மைசூர்பா என்று பலவிதமான பண்டங்களைக் குழந்தைகள் ஜாலியாக உண்டு மகிழும் நாள்! மகிழட்டும்! மகிழட்டும்!

ஆனால் பெரியவர்கள் சற்றே நினைவில் வையுங்கள்! கண்ணன் பிறந்த நேரம் இத்துணை ஜாலியாகக் கழியவில்லை!
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர...

பால், தயிர், வெண்ணெய், நாவற்பழம் என்ற எளிமையும் கண்ணனுக்கு மிகவும் பிடிக்கும்!
எனவே நம்மளவில் பூசைகளில் எளிமையைக் கைக்கொள்வோம்!

அதிரசம், லட்டு, சீடை, முறுக்கு, தேன்குழல் என்பனவற்றை எல்லாம், அருகில் காப்பகங்களில்....ஒருத்தி மகனாய்/மகளாய்ப் பிறந்து, ஒளிந்து வளரும் குழந்தைகளோடு பகிர்ந்துண்டு மகிழ்வோம்! அதுவே கண்ணனுக்குப் பிடித்தமான நிவேதனம்! சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!



கண்ணன் பிறந்தநாள் பதிவுகளின் தொடர்ச்சியாக..இது மூன்றாம் பதிவு! முத்தான பதிவு! ஏன்-ன்னா, எல்.ஆர். ஈஸ்வரியின் துள்ளலான கும்மி ஒலிக்கும் பதிவு!

ஒவ்வொரு ஆண்டும் கோதை மற்றும் முருகன் பிறந்தநாள் பதிவுகள் வருமே தவிர, கண்ணனுக்கு ஓரவஞ்சனை தான் செய்துள்ளேன் போலும்! இப்பத் தான் பார்த்தேன்! :)
அதான் இந்த ஆண்டு, ஓரவஞ்சனையை ஈரவஞ்சனை ஆக்கிறலாம்-ன்னு.... :)

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி-இன் கிருஷ்ண கானங்களின் நேற்றைய தொடர்ச்சியாக, இன்று எல்.ஆர்.ஈஸ்வரியின் கண்ணன் கும்மாளம்!
அவருக்கே உரித்தான துள்ளலோசையோடு! கேட்போமோ கண்ணன் கும்மி?
அப்படியே பெரியாழ்வாரின் கண்ணன் பிறந்த நாள் குதூகலங்கள் போலவே இருக்கும் பாருங்க!

வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே!
கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே!
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளர் ஆயிற்றே!

இதோ ஒலிச்சுட்டி! கேட்டுக் கொண்டே படியுங்கள்!

கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே!
கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே!

வேங்கடத்து மலைதனிலே,வெண்முகிலாய் மாறுங்களே!
ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே!
(கோபியரே கோபியரே)

நந்தகுமார் மெல்லிசையில் நடனமிடும் தோகைகளே!
பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே!

சிந்துமணி வைரநகை ஸ்ரீராமன் பிம்பம் அவன்!
மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்!
(கோபியரே கோபியரே)

ஆழிமழைக் கண்ணன் அவன், அழகுநகை மன்னன் அவன்!
தாழை இலை பயிரினைப் போல், தானுறையும் வண்ணன் அவன்!

நாடிவரும் அன்னையர்க்கு நவநீத கிருஷ்ணன் அவன்
நந்தகுல யாதவர்க்கு, ராகவ பாலன் அவன்!!
(கோபியரே கோபியரே)

வரிகள்: கண்ணதாசன்
குரல்: எல்.ஆர்.ஈஸ்வரி
இசை: எம்.எஸ்.வி
தொகுப்பு: கிருஷ்ண கானம்


குழந்தைகள் கும்மி அடிக்கும் காணொளி:))

Tuesday, August 31, 2010

கோகுலத்தில் பசுக்கள் + எஸ்.ஜானகி + MSV + கண்ணன்!

நாளை...கண்ணன் பிறந்த நாள்!

ஒரு திரு முருகன் வந்து "உதித்தனன்" உலகம் உய்ய என்பது போல்...
ஆயர் குலத்தினில் "தோன்றும்" அணி விளக்கை!!
பிறப்பு அற்றவன் உலகில் பிறந்தால் அது = பிறந்தனன் அல்ல! உதித்தனன்/தோன்றினன்!
தாயைக் குடல் விளக்கம் செய்து, ஆயர் குலத்தில் "தோன்றும்" அணி விளக்கை!!

தோன்றும் அணி விளக்கு, தமிழ்க் கடவுளாம் மாயோனுக்கு, எம்.எஸ்.வி அலங்காரம் செய்வாரா?

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி முருகனுக்கு என்றே தந்த பாடல்கள் ஏராளம் ஏராளம்!
ஆனால் அவர் கண்ணனுக்குத் தந்த பாடல்கள் ஏராளம் இல்லை என்றாலும்...
ஒவ்வொரு பாடலும் தாராளம் தாராளம்!
அந்த இசை நுணுக்கத்திலும், இசை இன்பத்திலும் தாராளம், தாராளம்!

கிருஷ்ண கானம் என்ற தொகுப்பு! "வெளித் தோற்றம் போலவே உள்ளமும் கருப்பாய்க் கொண்டவனுக்கென்றே" எம்.எஸ்.வி தொடுத்த பாமாலை!

அந்த மாலையில் மொத்தம் எட்டு விதமான மலர்கள்! எட்டு விதமான வாசனைகள்! ஒவ்வொன்றுமே ஒவ்வொரு ஈர்ப்பு!
* சுசீலாம்மாவின் தேன் குரலும் உண்டு, ஜானகியின் கீச்கீச்-சும் உண்டு!
* TMS-இன் கம்பீரமும் உண்டு! SPB-யின் நளினமும் உண்டு!
* எல்.ஆர். ஈஸ்வரி-யின் கும்மாளம் பறக்கும்! வீரமணியின் ஏகாந்தமும் தொனிக்கும்!
* இத்தனை பாடகர்களுக்கு மத்தியில், கண்ணனுக்குத் தன் குரலையும் சேர்த்தே தரத் துடிக்கும் எம்.எஸ்.வி! துவக்கத்தையே எம்.எஸ்.வி தான் துவங்கி வைக்கிறார்!

1. அமர ஜீவிதம் சுவாமி, அமுத வாசகம் - எம்.எஸ்.வி
2. ஆயர்ப்பாடி மாளிகையில் - எஸ்.பி.பி
3. கோகுலத்தில் ஒரு நாள் ராதை - பி.சுசீலா
4. கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் - எஸ்.ஜானகி
5. கோபியரே கோபியரே - எல்.ஆர். ஈஸ்வரி
6. கோதையின் திருப்பாவை - கி. வீரமணி
7. குருவாயூருக்கு வாருங்கள் - பி.சுசீலா
8. புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - TMS

இப்போ சொல்லுங்க!
கண்ணனுக்கென்றே எம்.எஸ்.வி கட்டிய மலர்கள்...இன்னும் வாடாமல், மணம் வீசிக் கொண்டு தானே இருக்கின்றன?
வாடா மலர் கொண்டு, பாடீர் அவன் நாமம் நாடீர் நாள் தோறும், வீடே பெறலாமே!
தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து...பாட்டைக் கேட்போமா?



இசை அரசி சுசீலாம்மா தான்! - அனைத்து இசைகளுக்கும்!
இன்-இசை அரசி எஸ்.ஜானகி - இன்னிசைக்கு மட்டும்!

ஜானகிக்கே உரித்தான "கிக்"கான கீச் கீச் குரலில், கீசு கீசென்றெங்கும் கோகுலத்துப் பசுக்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு பாடுறாங்க! இதோ கேட்டுக் கொண்டே படியுங்கள்!

கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால் கறக்குது இராமாரி! - அந்த
மோகனின் பேரைச் சொல்லி

மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

கண்ணன் அவன் நடனமிட்டு
காளிந்தியில் வென்ற பின்னால்
தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி! - அவன்
கனிஇதழில் பால் கொடுத்த

பூதகியைக் கொன்ற பின்னால்
கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
கோவிந்தன் பெயரைச் சொன்னால்
கழுத்திலுள்ள தாலி நிக்குது இராமாரி! - சேலை
திருத்தும் போது அவன்பெயரை

ஸ்ரீரங்கா என்று சொன்னால்
அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

படிப்படியாய் மலையில் ஏறி
பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி! - அட
படிப்பில்லாத ஆட்கள் கூட

பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)



பாட்டைக் கொஞ்சம் பிரிச்சி மேஞ்சா அந்தரங்கச் சுகம் தெரியும்! அந்த ரங்கச் சுகம் புரியும்!

அட படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!

என்ன ஒரு அழுத்தம், வரிகளிலே! படிப்பில்லாத ஆட்களுக்குக் கூட, வேதத்துக்கே பொருள் விளங்குதாம்!
எப்படி? = பாதத்திலே போய் விழுந்தால்!

அதான் இதோ திருவடிகள்,
இதைப் பற்றிக் கொண்டார்க்கு எல்லாம்...
உலக சமுத்திரம் வெறும் முழங்கால் ஆழம் தான்!
என்று காட்டி நிற்கிறான் திருவேங்கடமுடையான்!

படிப்பில்லாத ஆட்களே எனக்குப் போதும்! கற்றாரை யான் வேண்டேன் என்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்!
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உன் தன்னை, பிறவிப் பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம் என்கிறாள் ஒரு இடைச்சி, என் தோழி!

வேதங்களுக்கே கிடைக்காத திருவடிகள், படிப்பில்லாதவர்க்கு எளிதில் கிடைப்பதால், அவர்களுக்கு வேதப் பொருள் தானாகவே விளங்கி விடுகிறது!
ஞான யோகம், கர்ம யோகம் என்றெல்லாம் படிப்பில்லாதவர்கள் ரொம்ப கஷ்டப்படுவதில்லை! தங்கள் அறிவைக் காட்டிலும் அவன் அன்பையே கைக்கொள்கிறார்கள்! "தாங்களே" தங்கள் ஞானத்தால் தேடி அடைந்தோம் என்ற தொனி படிக்காதவர்களிடத்தில் இல்லை!

அதனால் தான்.....தமிழ் மாலைகளே எமக்குப் பெரிதும் உவப்பு!
செய்ய தமிழ் மாலைகள் யாம் தெளிய ஓதி,
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே - என்று வேதக் கடலான தேசிகனே பாடி விடுகிறார்!!
பொருள் புரியாமல் இத்தனை நாள் தவித்து, ஆழ்வார்களின் ஈரத் தமிழ் மாலைகளை ஓதிய பின்னால், புரியாத வேதங்களும் புரிந்து விடுகின்றனவாம் அவருக்கு! இப்படிச் சொன்னதற்காக அவரைத் தள்ளி வச்சிறாதீக! :)


நாலுபடி பால் கறக்குது இராமாரி!
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!

ஒரு படி = எட்டு ஆழாக்கு!
நாலு படி = 32 ஆழாக்கு!
கிட்டத்தட்ட ஆறு லிட்டர்!

அது எப்படி ஆறு லிட்டர் பாலை ஒரே மாடு, அதுவும் படக்-க்குனு கொடுக்குது?
கறக்க எல்லாம் வேணாமாம்! சும்மா கண்ணன் பேரை ஜாலியாச் சொல்லிக்கிட்டே, பாத்திரத்தைக் காட்டினாலே போதுமாம்! ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப...!

கன்றுக்குட்டிகள் எல்லாம் முதல் முறையா மேய்ச்சலுக்குப் போகும் போது, தாகம் அடிக்குது! முல்லை நிலத்து ஆறோ வேகமா ஓடுது! நேரா ஆற்றில் இருந்து தண்ணி குடிக்க இதுங்களுக்குப் பயமா இருக்கு! அம்மா பசுவும் அருகில் இல்லை! இதுக என்ன பண்ணுங்க?

ஒரு முறை வேணும்-ன்னா, வாளியில் தண்ணி பிடிச்சிக் கொடுக்கலாம்! ஆனா இதுங்களுக்குன்னு எப்பத் தான் வீரம் வர்றது? மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடு என்பது தானே வாசகம்! கண்ணனும் அதையே செய்கிறான்! எப்படி? தன்னைத் தான் தாழ்த்திக் கொண்டே!

தன்னையே ஒரு மாடு ஆக்கிக் கொள்கிறான்!
ஆமாம்! கைகளையே முன்னங் கால் ஆக்கி, கால்களை மடிச்சி, கரையில் கால்களுக்கு முட்டுக் கொடுத்து ஊன்றி, ஆற்றின் வேகத்துக்கு அசைந்து கொடுப்பது போல் கொடுத்து, குடிச்சிக் காட்டுறான்!

அவனைப் பார்த்து ஒவ்வொரு கன்னுக்குட்டியும் அப்படியே செய்கிறது! செய்யாத கன்னுக்குட்டிகளையும் பயம் போக்கி, செஞ்சிக் காட்டுறான்! அத்தனை குட்டிகளுக்கும் முகத்தில் சிரிப்பு!

இதைப் பார்த்த தாய்ப் பசுக்கள் எல்லாம், கண்ணன் மேல் ஒரு இனம் புரியாத வாஞ்சை! அதான் நாலுபடி பால் கறக்குது இராமாரி! மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!

கண்ணன் மாடுகளை மேய்க்கும் உழவுகோலை (சாட்டையை) ஒரு போதும் பயன்படுத்தியதே இல்லை! அவன் அன்பே அவற்றைக் கரை சேர்த்து விடுகின்றன! = நல்ல மேய்ப்பன்!
பிதா என்னை அறிந்திருக்கிறது போலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறது போலவும், மேய்ப்பன் உங்களுக்கு என் ஜீவனையே கொடுக்கிறேன்!! ஆமென்!



இப்போ லேடீஸ் மேட்டர்! யாராச்சும் லேடீஸ் வந்து இதுக்குப் பொருள் சொல்லுங்கப்பா! அப்பறமா நானும் சொல்லுறேன்! :)

சேலை திருத்தும் போது அவன் பெயரை
ஸ்ரீரங்கா என்று சொன்னால்
அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!

என்ன அழுத்தம்? என்ன சுகம்? என்ன பொருள் மேற்கண்ட வரிகளுக்கு? :)


ஆங்...சொல்ல மறந்து போனேனே!
எட்டு பாடல்களும் ஏழு பேர் பாடுகிறார்கள்!
ஆனால் அத்தனையும் எழுதியது ஒரே ஒருவர் தான்!
யாராய் இருக்கும்-ன்னு நினைக்கறீங்க?

எம்.எஸ்.வி தொடுத்த வாடா மலர் மாலைக்கு, பூக் கொணர்ந்தவன் வேறு யார்? கண்ணனுக்கே தாசனான நம் கண்ணதாசனே!

வரிகள்: கண்ணதாசன்
குரல்: எஸ்.ஜானகி
இசை: எம்.எஸ்.வி
தொகுப்பு: கிருஷ்ண கானம்

Friday, April 16, 2010

பி.சுசீலா in solo: கண்ணாஆஆஆ, கருமை நிறக் கண்ணா!

கண்ணன் பாட்டு குழுவினருள் மிக முக்கியமானவரும், கண்ணனுக்கு கோவர்த்தனத்திலே சொந்தக்காரருமான திருவாளர் ராதாமோகன்!
எப்படிச் சொந்தம்-ன்னு கேட்காதீங்க! ஒன்னு விட்ட சித்தப்பா பையனாவும் இருக்கலாம், இல்லை மூனு விட்ட முத்தப்பா பையனாகவும் இருக்கலாம்! :)

அவர், கண்ணன் பாட்டின் கெட்டப் சேஞ்சில் மயங்கிப் போய், சைட் பாரில் இருக்கும் பாட்டையெல்லாம் பார்த்து விட்டு, குற்றங் குறைகளை அடுக்க ஆரம்பித்து விட்டார்!
இதுக்குத் தான் நாமளே பட்டியல் போட்டு மாட்டிக்க கூடாது-ன்னு சொல்லுறது!
இப்போ பட்டியலைப் பார்த்து, யாரு வேணும்-ன்னாலும், கேள்வி் எழுப்பலாம் பாருங்க! சொ.செ.சூ = சொந்த செலவில் சூயிங்கம்! :)

அவர் நேயர் விருப்பமாகக் கொடுத்துள்ள பல திரைப்பாடல்கள், முன்பே கண்ணன் பாட்டில் வந்து விட்டன! ஆனால்...ஆனால்...ஆனால்...

ஒரு பாட்டு, ஒரே ஒரு பாட்டு, அது மிஸ் ஆகியிருக்கவே கூடாத பாட்டு!
இவ்ளோ நாள் எப்படி மிஸ் ஆச்சு-ன்னே் தெரியலை! இத்தனைக்கும் என் மனசில் நிலாவி உலாவும் பாட்டு!

இப்போ, முருகனருள்-150ஆம் பதிவால், அது கண்ணன் பாட்டில் பின்னூட்டமா எழுப்பப்பட்டு, இப்படி Trigger ஆகணும்-ன்னு இருக்கு போல!
என் முருகா! ஆராய்ந்து அருளேலோ-ன்னு இல்லாம, விட்டுப் போனதைக் கூட, நீயாக வந்து அருளுகிறாயே! நீயல்லவா பக்தவத்சலன் = அடியார்க்கு நல்லான்!

இந்தப் பாட்டுக்கு என் மனசு கிறங்கிப் போகும்! ஏன் தெரியுமா?
மனம் பார்க்க மறுப்போர் முன்............. படைத்தாய் கண்ணா!
இனம் பார்த்து எனைச் சேர்க்க ............. மறந்தாய் கண்ணா! கண்ணாஆஆஆ.....




புகுந்த வீட்டில் அன்பைப் பெற ஏங்கும் ஒரு ஜீவன்!
ஆனால் அது எத்தனை தான் நல்லபடியா பார்த்து பார்த்து நடந்துக்கிட்டாலும், அதுக்கு-ன்னு வாய்ச்சது என்னமோ உதாசீனமும், வெறுப்பும் தான்!

"நம்மை ஒருத்தர் வெறுக்கறாங்க-ன்னு தெரிஞ்சா, நாமளா ஒதுங்கிக்கணும்! எதுக்குப் போயி போயி அவமானப் படணும்?
நீ என்ன தான் முயற்சி செஞ்சாலும் சரி, நல்லபடியா நடந்துக்கிட்டாலும் சரி, அவரோட அன்பை உன்னால் பெற முடியாது! அவமானத்தைத் தான் பெற முடியும்!"
- இதுக்கு அவ என்ன பதில் சொல்லுறா? இதை அவமானமாக எடுத்துக் கொள்வாளா? நீங்களே கேளுங்க, ஆரம்பப் பகுதியின் உரையாடலை!

அப்படியே....சுசீலாம்மாவின் சுகமான சோகத்தில் கேட்டுக்கிட்டே படிங்க!
Also, just before the song starts, a flute piece will float, as she runs singing kaNNaaa! Dont miss that!



கண்ணாஆஆஆஆஆ
கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண் இல்லையே!

உன்னை மறுப்பாரில்லை
கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை!
(கண்ணாஆஆஆஆஆ)

மனம் பார்க்க மறுப்போர் முன், படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன், கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனைச் சேர்க்க, மறந்தாய் கண்ணா
நல்ல இடம் பார்த்துச் சிலையாக அமர்ந்தாய் கண்ணா!
(கண்ணாஆஆஆஆஆ)

பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா
அதில் பூப் போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா
கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
எந்தக் கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா?
(கண்ணாஆஆஆஆஆ)

படம்: நானும் ஒரு பெண்
குரல்: பி.சுசீலா
இசை: ஆர்.சுதர்சனம்
வரிகள்: கண்ணதாசன்



கவியரசர் கண்ணதாசனால் மட்டுமே இப்படி உள்ளத்தின் உண்மையை, பாட்டில் கொண்டு வர முடியும்!
சுசீலாம்மா பாடிய Solo-க்களில் மிகவும் உன்னதமான Solo Piece இது!
இந்த Solo-வில், அவர் உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லிலும் ஈரம் இருக்கும்!

துள்ளலான கிக்-கான ரொமான்டிக் பாடல்களுக்கு ஜானகி என்றால்...
சுகம், சோகம், தாலாட்டு, மென்மை என்பதற்கெல்லாம் சுசீலாம்மா!
Janaki Madam is a Very Good Companion = When You are in Happy Times! But Am I always so? This is where you might need Susheelamma!

மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா! இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா!
ஹைய்யோ...இனம் பார்த்து இவளைச் சேர்க்க முடியாமல் போன கண்ணனே! நீயும் ஒரு தெய்வமா? எந்தக் கடன் தீர்க்க இவளை நீ படைத்தாய் கண்ணா?? கண்ணாஆஆஆ...கருமை நிறக் கண்ணா!


சுசீலாம்மாவின் முன்னால், அதே பாட்டைப் பாடும் சின்னஞ் சிறு சிறுமி!

Monday, March 29, 2010

பி. சுசீலா - ஒரே பாட்டில் கண்ணன்+முருகன் பாட்டு!

முருகனருள்-150 உற்சவத்தின் தொடர்ச்சியாக...
கண்ணன் பாட்டிலே, சுசீலாம்மாவின் ஒரு மோகனமான பாட்டு!
இந்தப் பாட்டில், சுசீலாம்மா, கண்ணனையும் முருகனையும் மாற்றி மாற்றிப் பாடி, இசைமாலை சூட்டுவார் மாயோனுக்கும் சேயோனுக்கும்!

அட, அப்படி ஒரு பாட்டு இருக்கா என்ன?

இருக்கே! கண்டு புடிங்க பார்ப்போம்! இந்தப் படத்தில் வரும் இன்னொரு பாடல்...ரொம்பவே ஹிட்!
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல!
நீ இல்லாமல் நானும் நானல்ல!
தெய்வத்தின் முன்னே...நீயும் நானும் வேறல்ல!

இந்தப் பாட்டை...இப்பல்லாம்...தினமுமே கேட்பதால்...அப்படியே தங்கி விட்டதா? அதான் டக்-குன்னு இந்த முருகன்+கண்ணன் பாட்டும் ஞாபகத்துக்கு வந்துருச்சி! சரி முருகனருள்-150 உற்சவத்துக்கு வசதியா இங்கு இட்டு விட்டேன்! :)



என்ன கண்டு புடிச்சாச்சா? :)
படம் = இதய கமலம்! சரி தான்! ரவிச்சந்திரன் - கே.ஆர்.விஜயா

எந்தப் பாட்டு? = மலர்கள் நனைந்தன பனியாலே!

இது அவர் பாடிய மற்ற பக்திப் பாடல்கள் போலவே இருக்காது! ஏதோ வசீகரமான காதல் பாட்டு போலத் தான் இருக்கும்! (ஒரு வேளை என் காதுக்குத் தான் இப்படித் தோனுதோ? :)

நடுநடு-ல கண்ணன், முருகன்-ன்னு வருவதால், இது ஏதோ சாமிப் பாட்டு-ன்னு சொல்லலாமே தவிர...
இந்த இனிய மோகன மெலடி...என் மனம் மயக்கும் காதல் பாட்டே தான்! சந்தேகமே இல்லை!

கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி-ன்னு அவங்க கண்ணனைப் பாடும் போது, கண்ணாடி முன்னாடி போய் நின்னுக்குவேன், முருகனால் காயம் இருக்கா-ன்னு பார்க்கத் தான்! :)
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
உன்னோடிருப்பேன் மலர் அடி போற்றி-ன்னு அவங்க முருகனைப் பாடும் போது...என்ன சொல்ல.....முருகா, முருகா, நான் உன்னோடு இருப்பேன்! என்னிக்கும் இருப்பேன்! நீ இல்லாமல் நானும் நானல்ல!



* பாடலின் துவக்கத்தில் வரும் புல்லாங்குழல் இசை! Prelude - Dont Miss!
* பாடலின் நடுவில் வரும் மிருதங்க பீட்! போராடி-நீராடி-கண்ணாடி-முன்னாடி! That Interlude - Dont Miss!

மயக்கும் மோகன ராகத்தில்...
மயக்கும் சுசீலாம்மா மெலடியை...
கேட்டுக்கிட்டே படிங்க!


படம்: இதயக் கமலம்
குரல்: பி.சுசீலா
இசை: கே.வி. மகாதேவன்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
ராகம்: மோகனம்

ஆண்டிக் கோல முருகனும், கண்ணனும்! - யார் இதுல தண்டாயுதபாணி? :)


மலர்கள் நனைந்தன பனியாலே!
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே!
பொழுதும் விடிந்தது கதிராலே!
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே!
(மலர்கள் நனைந்தன)

கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்!
இரு கன்னம் குழி விழ நகை செய்தான்!
என்னை நிலாவினில் துயர் செய்தான்!
அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்!

சேர்ந்து மகிழ்ந்து போராடி!
தலை சீவி முடித்தே நீராடி!
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி!
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி!
(மலர்கள் நனைந்தன)

இறைவன் முருகன் திருவீட்டில்,
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி,
உயிரெனும் காதல் நெய்யூற்றி,
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி!
(மலர்கள் நனைந்தன)


இதே மெட்டில் வேற என்ன பாட்டெல்லாம் ஞாபகம் வருது-ன்னும் சொல்லுங்க பார்ப்போம்!
சாம்பிளுக்கு நான் துவங்கி வைக்கிறேன்!
* ஆஹா இன்ப நிலாவினிலே - மாயாபஜார்
* கங்கை யமுனை இங்குதான் சங்கமம் - இமயம்

பாட்டு நல்லா இருந்திச்சா?
இப்போ சொல்லுங்க,
சுசீலாம்மா பாடுவது...கண்ணன் பாட்டா? முருகன் பாட்டா? :)

Wednesday, August 12, 2009

இளையராஜா & பாலமுரளி: சின்னக் கண்ணன் அழைக்கிறான்!

கண்கள் சொல்கின்ற கவிதை - இளம் வயதில் எத்தனை கோடி?-ன்னு ஒத்தை வரியில் கண்ணனையும் காதலையும் ஒரு சேரக் காட்டியவர் இசைஞானி இளையராஜா! - சின்னக் கண்ணன் அழைக்கிறான் என்னும் மனம் மயக்கும் பாட்டில்!
ராஜாவின் இன்னொரு பலமான முகத்தைக் காட்டிய "முதல் பாட்டு" பற்றி இன்னிக்கி பார்க்கலாம் வாங்க! எங்கள் சின்னக் கண்ணனும் ஒரு "இளைய" ராஜா தானே! :)

இன்று கண்ணன் பிறந்தநாள்! (Aug-13-2009)!
ஜன்மாஷ்டமி என்று வடக்கிலும், கோகுலாஷ்டமி என்று ஒரு சிலர் தெற்கிலும் சொன்னாலும்,
கிருஷ்ண ஜெயந்தி என்றோ கண்ணன் பிறந்த நாள் என்றோ சொல்லும் போது தான், அவன் பேரும் அதில் ஒட்டிக் கொண்டு, விழாவுக்கே இனிப்பு சேர்க்கிறது! :)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணா! Have a sweet & sexy birthday dude! :)
கண்ணா-ன்னு உனக்கு வாழ்த்து சொல்லும் போது,
எனக்கே நான் சொல்லிக்கிறாப் போல ஒரு ஃபீலிங்! :)



முல்லை நிலத் தமிழ்த் தலைவன் = தமிழ்க் கடவுள் = கண்ணன்!

* அக நானூறு வழியில் = நப்பின்னையைத் தழுவினான்! ஏறு தழுவி, வீறு தழுவி, அவளுடல் கூறு தழுவி, இன்பச் சேறு தழுவி, நூறு தழுவல் தழுவிய அழகிய காதல்!

* புற நானூறு வழியில் = தூது சென்று, போரை வென்று, தன் நாட்டு மக்களுக்கென்று தனி நகரமே உருவாக்கினான்! இந்திரனின் மூடப் பழக்க வழக்கம் ஒழித்து, குன்றுக்குப் பூசை கண்டான்! குன்றின் மேல் விளக்காக இன்னிக்கும் ஒளிர்கிறான் இந்தப் பிறந்த நாள் பையன்!

காதல் என்றால் கண்ணன் - கண்ணன் என்றால் காதல் என்று அல்லவா உலக வழக்கில் ஆகிப் போனது? அவன் பிறந்த ராத்திரியில் இருந்து, கடைசி வரை.....அவன் வாழ்க்கை, ஒரு நல்ல தமிழ் சினிமாவைப் போலவே சூடும் சுவையும் குறையாதது! :)



இளையராஜாவைக் கிராம ராஜா என்று பேசிக் கொண்டிருந்த காலம்! அன்னக்கிளி-க்கு அப்புறம் பெரும்பாலும் கிராமியச் சாயல் மெட்டுக்களே போட்டுக் கொண்டிருந்த காலம்!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி கலக்கிக்கிட்டு இருந்த காலம்......விதம் விதமா வித்தை காட்டுவாரு! ராஜாவுக்கோ அன்னக்கிளி ஹிட் ஆனதால், ஒரு மாறுபட்ட கிராமச் சூழல் பாடல்களுக்குக் கொஞ்சம் வரவேற்பு! அவ்ளோ தான்! ஆனால் அது போதுமா?

பின்னாளில் இசைஞானி-ன்னு சொல்லணும்-ன்னா இன்னும் பல முகங்களைக் காட்டணுமே? அப்போது ராஜாவுக்குக் கைகொடுத்த படங்கள் இரண்டு!

* முள்ளும் மலரும் - மெலடியும் பின்னணியும் பிச்சி வாங்கிய படம்! செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்-ன்னு மெலடி! ராமன் ஆண்டாலும்-ன்னு லைட் குத்து! இப்படி, இயக்குனர் மகேந்திரன் ராஜாவைப் பிழிஞ்சி எடுத்தாரு-ன்னே சொல்லலாம்! இது பற்றி கா.பி. அண்ணாச்சி றேடியோஸ்பதியில் இட்ட சூப்பர் பதிவு இங்கே!

* கவிக்குயில் - சினிமா இசை உலகில், கிளாசிக்கல் முகமும் காட்டினாத் தான் ஒரு மரியாதையே கெடைக்குது! பணத்துக்கும் ஹிட்டுக்கும் மெல்லிசை முகம்-ன்னா, மரியாதைக்கும் "ஞானி" போன்ற சொற்களுக்கும் கிளாசிக்கல் முகம் கொஞ்சம் காட்டணும்! நம்ம கிராம ராஜாவுக்கு அந்த முகம் காட்டத் தெரியுமா? :)

ராஜா-வின் அதி அற்புதமான கிளாசிக்கல் முகம் முதலில் வெளிப்பட்ட பாட்டு - கவிக்குயில் படத்தில் - சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
ஏன்னா அதுக்கு அவரு எடுத்துக்கிட்ட மெட்டு-ராகம் = ரீதி கெளளை!

ரொம்ப ரொமான்டிக் ராகம்! ஆனா அவ்வளவு சீக்கிரம் டைல்யூட் பண்ணவே விடாது! ஸ்வர வரிசையும் ரொம்ப சிக்கலானது! வேணும்-ன்னே அதைக் கையில் எடுத்தார் ராஜா! :)
அதுவும் தன் முதன்முதல் கிளாச்சிக்கல் முயற்சியில்! இதற்கு முன் இதை எடுத்த இசையமைப்பாளர்கள் மிக மிகக் குறைவு! (அ) இல்லவே இல்லை!

ஆனானப்பட்ட எம்.எஸ்.வி கூட மெல்லிய சுகமான ராகங்களைத் தான் அதிகம் கையாண்டாரே தவிர, "சிக்கலான" ராகத்தில் கையைப் போட்டு ரிஸ்க் எடுக்கவில்லை!
சொதப்பிருச்சீன்னா அவ்ளோ தான்! இதுக்குப் பேரே "கன ராகம்"! அம்புட்டு கனமா இருக்கும்! அதை எப்படி லைட் பண்ணுறது? மக்களுக்குப் பிடிக்கச் செய்யறது?

சூடு மேல சூடு போட்டா ஜூரம் போகும்-ங்கிற மாதிரி, ரிஸ்க் மேல ரிஸ்க் போட்டாரு ராஜா! அந்த ரிஸ்க்கான பாட்டைப் பாட, அவர் அழைத்தது யாரை.....................?
மக்கள் செல்வாக்குள்ள எஸ்.பி.பி போன்ற பாடகர்களையா? இல்லை! கச்சேரிப் பாடகர் - பாலமுரளி கிருஷ்ணாவை! ஹா ஹா ஹா! எடுபடுமா?



என்ன தான் பாலமுரளி கச்சேரிப் பாடகரா இருந்தாலும், மென்மையான குரல் கொண்டவர்! புதுசா செஞ்சிப் பார்க்கும் ஆராய்ச்சி மனப்பான்மை உள்ளவர்! தியாகராஜர் பாட்டுகள் சிலவற்றைத் தமிழில் மொழி மாற்றிக் கூடப் பாடியிருக்காரு!

பாலமுரளியின் ஆற்றலைச் சினிமாவில் முதல்ல கண்டுபிடிச்சிப் பாட வைத்ததே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி தான்! "தங்கரதம் வந்தது வீதியிலே, தளிர் மேனி வந்தது தேரினிலே"-ன்னு பாட்டு! கலைக்கோயில் படத்துக்காக சுசீலாம்மாவோடு பாடிய பாட்டு தான் பாலமுரளியின் முதல் சினிமாப் பாட்டு!

அப்பறம் "ஒரு நாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?"-ன்னு திருவிளையாடல் படத்தில் சவடால் பாலையா பாடுவது! :)
அது பாலமுரளி பாடி ஹிட் ஆச்சி! அப்பறமா குன்னக்குடி, சங்கர் கணேஷ் இசையில் கூடப் பாடி இருக்காரு!
ஆனால் "சின்னக் கண்ணன் அழைக்கிறான்" போல ஒரு மெகா ஹிட் பாலமுரளியே எதிர்பார்க்கவில்லை! அந்தளவுக்கு எல்லாருக்கும் பாட்டு மனப்பாடம் ஆனது! அதான் ராஜாவின் ராசி! :)

இந்தக் கடினமான ரீதி கெளளை ஹிட்டைப் பார்த்துக் கச்சேரிப் பாடகர்களே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு ஆனது!
அந்த உற்சாகத்தில் தான், அதே ரீதி கெளளையில் பின்னாளில் இன்னொரு பாட்டும் போட்டார் = தலையைக் குனியும் தாமரையே! அதுவும் செம ஹிட்! :)

* அப்பறம் இதையே ரஹ்மான் ட்ரை பண்ணிப் பாத்தாரு! = அழகான ராட்சசியே, அடிநெஞ்சில் குதிக்கிறியே! = சரியா வரலை! விட்டுட்டாரு! :)
* யுவன் கூட துள்ளுவதோ இளமை-ல ட்ரை பண்ணாரு! = தீண்டத் தீண்ட மலர்ந்ததென்ன? = சரியா வரலை! அவரும் விட்டுட்டாரு!

ஆக, ரீதி கெளளையைத் தமிழ்ச் சினிமாவில் வெற்றிகரமாக் கையாண்ட ஒரே தல = நம்ம இளையராஜா தான்! :)



கண்ணன்-ராதையின் காதலாக இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம்,
ஒரு மாஸ்டர் பீஸ் பாடலைக் கேட்கும் திருப்தி கிடைக்கும்.
இதே பாட்டை இன்னொரு வெர்ஷனாக, ஜானகி அதே படத்தில் பாடியிருப்பார். ஆனால் பாலமுரளி பாடியது தான் ஹிட்டோ ஹிட்!

இந்தக் கிளாசிக்கல் பாட்டில் வரும் வாத்திய இசைக்கு, ஐரோப்பிய Baraoque இசைப் பாரம்பரியத்தைப் பயன்படுத்தியதாகச் சொல்லுவார்கள்;
ரீதிகெளளை ராகம் ஒரு பக்கம், Baraoque மறு பக்கம்! - ஆனால் ஒன்றை ஒன்று விழுங்காது! பாடல் வரிகளும் விழுங்காது வந்து விழும் இனிய இசை! ராஜாவின் இசை ஆய்வு (experiment) அப்போதே தொடங்கி விட்டது அல்லவா?

எல்லாம் சரி! பாடல் எதோ? - இதோ! மாயனின் லீலையில் மயங்குது உலகம்! நாமும் மயங்குவோம்! வாங்க!

Radha%20Krsna
கண்கள் சொல்கின்ற கவிதை - உன் புன்னகை சொல்லாத அதிசயமா?

* எஸ்.ஜானகி பாடுவது
*** பாலமுரளி கிருஷ்ணா பாடுவது


இந்தப் பதிவிலேயே கேட்க play button-ஐச் சொடுக்கவும்!


கண்ணன் என்றாலே புல்லாங்குழல் தானே! பாடலின் ஓப்பனிங், Flute Bit-ஐ, Baroque-வோடு கேட்கத் தவறாதீர்கள்! :)

சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
ராதையை, பூங் கோதையை,
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!


கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி?
என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை!
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை!
(சின்னக் கண்ணன்)

நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
உன் புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகே இளமை ரதமே!
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்!
(சின்னக் கண்ணன்)

படம்: கவிக்குயில்
இசை: இளையராஜா
குரல்: பாலமுரளி கிருஷ்ணா
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
ராகம்: ரீதி கெளளை


கேள்வீஸ் ஒன்லி கேள்வீஸ்:
இதே கவிக்குயில் படத்தில், பாலமுரளி இன்னொரு கண்ணன் பாட்டும் பாடி இருக்காரு! ராஜா இசையில்! என்னா-ன்னு சொல்லுங்க பார்ப்போம்!

சின்னக் கண்ணன் அழைக்கிறான் - காணொளி:


Jaya TV Concert - Yuvan sings his dad's tune! - Sothappal! :))


Airtel Top Singer:


போனஸ்: தலையைக் குனியும் தாமரையே! - அதே சூப்பர் ரீதி கெளளை

Sunday, May 10, 2009

ஏழு மலை இருக்க நமக்கென்ன மனக்கவலை?

திருமுருகன் மீதே நிறைய பாடல்களைப் பாடியிருக்கும் கே.பி. சுந்தராம்பாள் அம்மா திருமலைத் தெய்வம் என்ற இந்த திரைப்படத்தில் திருமால் மீதான அருமையான இப்பாடலைப் பாடியிருக்கிறார். திருமுருகன் என்றாலே நினைவில் முன்னிற்கும் நம் அருமை நண்பர் திருமுருகன் அன்பர் முருகனருள் அன்பர்களில் முதல்வர் இராகவப் பெருமாள் இப்பாடலை நின்குழலில் வலையேற்றியிருக்கிறார். இன்று காலையில் தான் அதனைக் கண்டேன். உடனே கண்ணன் அன்பர்கள் இப்பாடலைக் கேட்டு இன்புற கண்ணன் பாடலில் இடுகிறேன்.



ஏழு மலை இருக்க நமக்கென்ன மனக்கவலை?
ஏழு ஏழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை!
(ஏழு)

பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு!
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு!
(ஏழு)

கால்வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது!
கைவண்ணம் திரௌபதையின் மானம் காத்தது!
மால்வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது!
மணிவண்ணன் கருணை நம்மை மகிழவைத்தது!
(ஏழு)

ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான்!
ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன்பிறப்பானான்!
தான் சுவைத்தப் பழங்களையே தந்தனள் தாய் சபரி!
தருவதற்கு ஒன்றுமிலை தலைவனே எமை ஆதரி!
(ஏழு)

திரைப்படம்: திருமலைத் தெய்வம்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
இயற்றியவர்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: முருகனருள் கே.பி. சுந்தராம்பாள்
வலையேற்றியவர்: முருகனருள் கோ. இராகவன்

Wednesday, January 07, 2009

அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம்

ஓம் ஓம் ஓம் ஓம்

அமரஜீவிதம் சுவாமி அமுதவாசகம்
பதிதபாவனம் சுவாமி பக்தசாதகம்
(அமரஜீவிதம்)

முரளிமோஹனம் சுவாமி அசுரமர்த்தனம்
கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்
(அமரஜீவிதம்)

நளினதைவதம் சுவாமி மதனரூபகம்
நாகநர்த்தனம் சுவாமி மானவஸ்திரம்
பஞ்சசேவகம் சுவாமி பாஞ்சசன்னியம்
கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்
(அமரஜீவிதம்)

சந்த்யபங்கஜம் சுவாமி அம்யபுஷ்பகம்
ஸர்வரக்ஷகம் சுவாமி தர்மதத்துவம்
ராகபந்தகம் சுவாமி ராசலீலகம்
கீதபோதகம் ஸ்ரீ கிருஷ்ணமந்திரம்
(அமரஜீவிதம்)




அகில உலக ஆன்மிக சுப்ரீம் ஸ்டார் நம்மை உடையவர் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் நவீன உடையவர் நண்பர் இரவிசங்கரோட கட்டளைப்படி இந்தப் பாடலை வைகுண்ட ஏகாதசித் திருநாளாகிய இன்று இங்கே இட்டுவிட்டேன். பாடலின் பொருள் முழுவதுமாகப் புரியவில்லை. அதனால் எழுத்துப்பிழைகளும் சொற்பிழைகளும் இருக்கலாம்; அப்படித் தென்பட்டால் திருத்துங்கள். நானும் திருந்தி இடுகையிலும் திருத்திவிடுகிறேன்.

என்றும் அழியாத, புகழில் குறைவு படாத வாழ்க்கையைக் கொண்டவன் அமரஜீவிதன். ஆசை, வெறுப்பு, கொடையின்மை, மயக்கம், கருவம், பொறாமை போன்ற குணங்களால் இறந்தவர் போலிருப்பவர்களையும் உயிர்ப்பிக்கும் வாய்மொழிகளைக் கொண்டவன் அமுதவாசகன். இவ்வகைக் குணங்களால் ஈனத்தன்மை அடைந்தவர்களைப் புனிதமாக்குபவன் பதிதபாவனன். அவன் மேல் அன்பு வைத்தவர்களுக்கு உதவி செய்பவன் பக்தசாதகன்.

வேணுகானம் என்னும் புல்லாங்குழலிசையால் மயக்குபவன் முரளிமோஹனன். அசுரத்தன்மைகளை அடக்கி ஒடுக்குபவன் அசுரமர்த்தனன். கீதையெனும் பாடலைப் போதித்தவன் கீதபோதகன். அவனுடைய திருநாமம் கிருஷ்ண என்னும் மந்திரம்.

மென்மையானவன் நளின தைவதன். மன்மதனைப் போன்ற அழகு உருவம் கொண்டவன் மதனரூபகன். காளிங்கன் என்னும் நாகத்தின் மேல் நடனமாடியவன் நாகநர்த்தனன். கோவிந்தா என்று கூவியழைத்தவளுக்கு அவள் மானம் காக்கத் துணிகளைத் தந்தவன் மானவஸ்திரன். பாண்டவர்கள் என்னும் ஐவரால் தொழப்பட்டவன் பஞ்சசேவகன். பஞ்சஜனன் என்ற சங்கு வடிவ அசுரனை வென்று அவனைத் தன் திருக்கர்த்தில் தாங்கியவன் பாஞ்சசன்னியன்.

எல்லாரையும் எல்லாவற்றையும் காப்பவன் ஸர்வரக்ஷகன். தருமம், இவன் என்று வந்தால் இவனையே தருமத்திற்கு முன்னர் கொள்ள வேண்டும் படி தருமமே வடிவம் ஆனவன் தருமதத்துவன். அன்பினால் கட்டுப்படுபவன் ராகபந்தகன். ஆசைபட்டவர்களோடெல்லாம் கூடிக் குடக்கூத்தாடுபவன் ராசலீலகன்.

Wednesday, December 03, 2008

பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை பாடிடுக மூடமதியே!

சிறுவயதில் நிறைய தடவை இந்தப் பாடலின் அழகில் மயங்கிக் கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறேன். அப்போதெல்லாம் யார் எழுதியது, யார் பாடியது என்றெல்லாம் தெரியாது. இது ஒரு முதன்மையான வடமொழித் துதி நூலின் மொழிபெயர்ப்பு என்றும் தெரியாது.

அன்று பெற்ற அமைதி இன்றைக்கும் இந்தப் பாடலைக் கேட்கும் போது கிடைக்கிறது. நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

இயற்றியவர் (மொழிபெயர்த்தவர்): கவியரசர் கண்ணதாசன்
இசையமைத்துப் பாடியவர்: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்




பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை பாடிடுக மூடமதியே!
பாடுவதில் தீர்ந்துவிடும் பழி பாவம் அத்தனையும் பரந்தாமன் சொன்ன விதியே!

(பாடிடுக பாடிடுக)

பாடுவதை விட்டுவிட்டுப் பாணினி இலக்கணத்தைப் பற்றுவதில் நன்மை வருமோ?
பாய் விரித்த வேளை தனில் காலனவன் சன்னிதியில் பாணினியம் காவல் வருமோ?

(பாடிடுக பாடிடுக)

மாடு மனை தேடுவதும் வல்ல நிலை கூடுவதும் வாலிபம் இருக்கும் வரை தான்!
வாசமொடு பாசமொடு வந்துறவு நாடுவதும் வரவுகள் நிலைக்கும் வரை தான்!
ஓடி விடும் மேனிதனில் கோடி நரை தோன்றிய பின் கூடுவது என்ன சுகமோ?
கூடும் விறகோடு வெறும் கூடு என வீழ்ந்த பி(ன்)னர் கோவணமும் கூட வருமோ?

நாடிவிடு கண்ணன் அடி! தேடிவிடு கண்ணன் புகழ்! நண்ணுவது அந்த சுகமே!
நாயகனை மாயவனை தூயவனை மாலவனை நல்லவனைப் பாடு மனமே!

(பாடிடுக பாடிடுக)

Sunday, June 15, 2008

97. ஜிரா தரவேற்றிய நம்பியார் கண்ணன் பாட்டு!

தசாவதாரம் படத்துல நெப்போலியன், கமல் கிட்ட ரொம்ப பீலா விடுவான்! "உங்களைப் போல வைணவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதை அறி-வோம்! உங்கள் குரு இராமானுசர் எங்கே ஓடிக் கொண்டு இருக்கிறார் என்பதையும் அறி-வோம்!"
இப்படி அறி-வோம், அறி-வோம் என்று சொல்ல...
அதுக்கு கமல், "மன்னா! உன் வாயாலேயே ஹரி-ஓம்! ஹரி-ஓம்! என்று வந்து விட்டது பார்த்தாயா?" என்று வார்த்தை விளையாட்டு வெளையாடுவாரு!

இதைப் பார்த்தாரு நம்ம ஜிரா!
அ"றி"-வோம் என்பதை ஹ"ரி"-ஓம் ன்னு ஆக்கினீல்ல கமலஹாசா?
இப்போ, ஹ"ரி"-ஓம் என்பதை ஹ"றி"-ஓம் ன்னு நானும் ஆக்குறேன் பாரு-ன்னு சவால் வுட்டாரு! ர-வில் இருந்து ற-வுக்கு மாறி, ந"ற"ந"ற"-ன்னு பதில் வெளையாட்டு விளையாடினாரு அவரோட சூப்பர் விமர்சனப் பதிவுல! :-)

இதைப் பார்த்துட்டு நானும்,
ஹரி-ஓம், ஹறி-ஓம், எதுவானாலும் சரி, ஆனா நாம இப்ப, Hurry ஓம்!
படத்தை முதல் காட்சியில் இருந்தே மிஸ் பண்ணாமப் பாக்கச் சொல்லி இருக்காரு இவரு!
அதனால் Hurry-ஓம்னு பதிலுக்கு விளையாடிக்கிட்டு இருந்தேன்! ஜிராவின் ஃபார்முலா படி, ராகவன் றாகவன் ஆனாரு! ஜிராவும் ஜிறா ஆனாரு! :-)))

ஆனால் நம்ம ஜிரா நிஜமாலுமே அப்படித் தானா? அதெல்லாம் சும்மா உல்லல்லுலாலாயி...
கண்ணன் மேலும்,
கண்ணன் பாட்டு மேலும்,
கண்ணன் அடியார் (கேஆரெஸ்) மேலும் அதீத பாசம் கொண்டவரு! நல்லவரு! வல்லவரு!:-)

பலரும் அறியாத மிக அபூர்வமான கண்ணன் பாடல்கள்! இணையத்தில் தேடினாலும் கிடைக்காத பாடல்கள் சிலவற்றை, எனக்காகவே yotube-இல் தரவேற்றினாரு!
அதில் ஒன்று தான் இன்னிக்கி கண்ணன் பாட்டில் நாம் கேட்கப் போகும் 97th கண்ணன் பாட்டு!



சுப்ரபாதம் என்றொரு படம் வந்துச்சி! இறையருட் செல்வர் கே.சங்கர் இயக்கிய படம்!

புராணக் கதைகளை வைத்தும், பக்திக் கதைகளை வைத்தும் படம் பண்ணினா, அதோ கதி தான் என்ற மாறுபட்ட காலத்தில், அதை உடைத்த பெருமக்கள் இருவர்! * ஏ.பி.நாகராஜன்! ** கே.சங்கர்!!
ஏ.பி.நாகராஜன் பேரைத் திருவிளையாடல் என்றும் சொல்லும்! அதே போல் கே.சங்கரின் பேரை தாய் மூகாம்பிகை என்றும் சொல்லும்!

சுப்ரபாதம் படத்தில், நம்பியார் பெருமாளின் மிகச் சிறந்த பக்தர்!
பக்தர் என்பதைக் காட்டிலும் அன்பர்! உயிர் நண்பர்! உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே என்று இருப்பவர்!
அவர் பெருமாளுக்குக் கோயில் ஒன்னு கட்ட நினைப்பாரு! அதுக்குப் பல முயற்சிகள் எடுப்பாரு! ஆனால் பல தடங்கல்கள் வரும், பொதுவிலும், சொந்த வாழ்விலும்!

கடந்தும், கிடந்தும், நடந்தும் அதை எல்லாம் நம்பியார் எப்படிச் சமாளிக்கிறார் என்பதைப் படத்தில் காட்டி இருப்பார்கள்! ஜிரா வந்து படத்தின் கதைச் சுருக்கத்தைச் சொல்லட்டும்!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையமைக்க, கவியரசர் கண்ணதாசன் எழுதிய அருமையான பாடல்கள் இந்தப் படத்தில்!

* கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் - வாணி/யேசுதாஸ் - கண்ணன் பாட்டில் முன்பே வந்தது! இதோ!
* அடி ராதா! ஸ்ரீ கிருஷ்ணன் வந்தான் - வாணி
* உண்மை தெரிந்திருக்கும் ஒருவனய்யா - வாணி
* உன்னைத் நீ அறிவாய், உலகெங்கும் நான் அறிவேன் - TMS/சுசீலாம்மா
* வடதிசையில் சில வைகுந்தங்கள் - பாலமுரளி/வாணி
* திருக்கோவில் கட்ட எண்ணி - சீர்காழி/வாணி

சீர்காழி முருகன் பாட்டுக்குப் பிரபலம் என்றாலும், பெருமாள் மீதும் பல பாடல்கள் பாடி இருக்காரு! அவரும், வாணி ஜெயராமும் சேர்ந்து பாடி இருக்காங்க இந்தப் பாட்டை!
பாருங்க, கேளுங்க! (பாட்டு இணையத்தில் இல்லை! கேட்டுக் கொண்டே டைப்பினேன்! பிழை இருந்தால் சுட்டிக் காட்டவும்)


பாட்டில் சில திவ்யதேசங்கள் (108 திருப்பதிகள்) வரிசையா வருகின்றன! பாட்டை ஒழுங்காப் படிச்சிட்டு, எவை எவை என்று பின்னூட்டதில் சொல்லுணும் ஆமா!:-)

திருக்கோயில் கட்ட எண்ணி
பொறுப்போடு வந்த என்னை
வெறுப்போடு பார்த்தாயே பெருமாளே! - பலர்
சிரித்தாலும் விடமாட்டேன் திருமாலே!


காஞ்சி நகர் வரத ராஜா - உன் கருணை பெருமை என்ன லேசா?
வாஞ்சை யுடன் எனக்கு அருள - காஞ்சி வரதா, நீ விரைந்தோடி வருக!


திருப்பணி செய்வதற்கு உடந்தை - நீ திருக்கோயில் கொண்டிருக்கும் குடந்தை!
தினம்தோறும் சேவை செய்ய வரவா? - அந்த ஸ்ரீ வில்லி புத்தூரின் தலைவா!


பூலோக வைகுந்த வாசா, புகழ் ஓதும் ஸ்ரீ ரங்க நாதா
திருவரங்கத்து ரங்க நாதா, என் சேவைக்குத் துணைபுரிய வா,வா!


அனந்த பத்ம நாபா, ஆனந்த விஸ்வ ரூபா
திரு அனந்தை பத்ம நாபா, உனக்குச் சிங்காரக் கோயில் கட்ட வா,வா!

குருவாயூர் தன்னில் ஒரு குழந்தை, நடக்கக் கொஞ்சு தம்மா இரண்டு சலங்கை
வர வேண்டும் ஸ்ரீகிருஷ்ண பாலா, நிறைந்த வரத்தோடு ஆனந்த லாலா!


பழமை நிறைந்த திருப்பதியே, எங்கள் அழகர் மலைக் கருணை நிதியே!
சோளிங்கர் ஆள்கின்ற முகமே, பாவம் தொலைவதற்கு நீராடும் குளமே!

தொண்டு செய்யும் அடியார் தமக்கு உன் சோதனை போதுமடா!
சோதனை தீர்த்து உன் பாத மலர்களில் எங்களைச் சேர்த்திடடா!
கொண்டது கொள்கை என்றது ஈன்றவர் கூறுதல் கேளுமடா!
கோயில் திறந்திட வில்லை எனில் வைகுண்டத்தில் சேர்த்திடடா! வைகுண்டத்தில் சேர்த்திடடா! வைகுண்டத்தில் சேர்த்திடடா!


நரசிம்மா நரசிம்மா நரசிம்மா
வைகுந்தா வைகுந்தா வைகுந்தா
ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா


மைவண்ண மேனி கொண்ட ஸ்ரீ நாதா!
திருமகள் தன்னை மார்பில் வைத்த மலர் மார்பா!
மெய்க்கூந்தல் வேதவல்லி தலை மகனே (?) - கனல்
நிறைந்திருக்கும் அலமேலு வளர்ந்தவனே! (?)


எத்தனையோ உலகில் வடி வெடுத்தாய் - அன்று
எல்லா வடிவினிலும் பெண்ணெடுத்தாய்!
பித்துப் பிடித்து பெண்ணை அறியாயோ - இன்று
சித்தம் தெளிந்தது என்று அருள்வாயோ!

பாண்டுரங்கா பண்டரிநாதா பன்னக சயனா மணிவண்ணா!
பத்மாநாபனே வீரராகவா ஆதிகேசவா ஸ்ரீகிருஷ்ணா!
ரிஷிகேசா ஸ்ரீரங்கா திருமாலே நரசிம்மா!
ரிஷிகேசா ஸ்ரீரங்கா திருமாலே நரசிம்மா!

குரல்: சீர்காழி கோவிந்தராஜன், வாணி ஜெயராம்
வரி: கவியரசர் கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
படம்: சுப்ரபாதம்


பி.கு:
இந்தத் "திருக்கோயில் கட்ட எண்ணி" பாட்டைக் கேட்கும் போதெல்லாம் கொஞ்சம் உணர்ச்சி மயமாகி விடுவேன்! ஏன்னா, சிறு வயதில்,
எங்கள் வாழைப்பந்தல் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் (ஆனைக்கருளிய அழகப்பெருமாள் - கஜேந்திர வரதராஜப் பெருமாள்) சிதிலம் அடைந்து இருந்தது!
அப்போது அதை மீண்டும் ஒழுங்கு செய்து கட்டணும்னு, ஒரு சின்னப் பையன் மனசு ரொம்பவே துடிக்கும்! மனசுக்குள்ளேயே குடமுழுக்கு, அபிசேகம், உற்சவம்-ன்னு வேற நடத்திப் பாத்துக்குவான்! கனவு வேற!! :-)

சின்னப் பசங்கள கூட்டுச் சேத்துக்கிட்டு அவுங்களுக்குப் பாடம் நடத்துறது; குடுங்கடா குரு தட்சணை-ன்னு, அப்பால எல்லாரும் கோயில்-ல புல்லு புடுங்கறது, ஒடைஞ்ச வாகனத்தை அரக்கு வச்சிப் பீஸ் பீஸா ஒட்டுறது-ன்னு ஒரே கலாட்டா!

வீட்டுல வேற இவன் அட்டகாசம் தாங்க முடியலை! சும்மா சும்மாக் காசு கேட்டுக்கிட்டே இருப்பான்! அப்பல்லாம் வீட்டுல இம்புட்டு வசதி போதாது! அப்போ-ன்னு பார்த்துக் குடும்பமும் சென்னைக்குக் குடி பெயர்ந்தது!

பின்னாடி என்னென்னமோ எல்லாம் நடந்து, ஊர்ப் பெரியவங்க கொஞ்சம் கண்ணைத் தொறந்தாங்க! ஃபாதர் ரோசாரியோ கிருஷ்ணராஜ் அவர்கள் பரிந்துரையில், ஊர் மாதா கோயிலின் மரப்பலகை எல்லாம் நன்கொடையாக வந்து சேர, பெரிய திருமலை ஜீயர் விஷயம் தெரிஞ்சி வந்து உதவி செய்ய, கோயில் ஒரு வழியாச் சரியானது!

கோயிலில் கொசுத் தொல்லை ஜாஸ்தியா இருக்குன்னு, அர்ச்சனைத் தட்டில் டார்ட்டாய்ஸ் கொசுவத்தி வச்சிக் குடுத்து, அய்யிரு கிட்ட அடி வாங்குனது, அய்யமாரு வூட்டுப் பொண்ணுங்க எல்லாம் அவன் சப்போர்ட்டுக்கு வந்தது! இதெல்லாம் தனிக் கதை!
இப்ப நெனச்சாக் கூடச் சிரிப்பு சிரிப்பா வருது! :-)))

Friday, May 23, 2008

93. யேசுதாஸ் குரலில், திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே!

பாடகர் யேசுதாஸ் பற்றியும் அவர் குரலில் குழைவு பற்றியும் பெரிதாக விளக்கித் தான் சொல்லவேண்டும் என்றில்லை! முருகன் பாடல்களில் எப்படி டி.எம்.எஸ் குழைவாரோ, அப்படிக் கண்ணன் பாடல்களில் யேசுதாஸ் குழைவார்!

பிரபந்தம், திருப்புகழ் போன்ற சில சந்தத் தமிழ் பாடல்களைப் பாடும் போது மட்டும் அவருக்கு உச்சரிப்பு கொஞ்சம் நாட்டியம் ஆடும்! :-)
மற்றபடி குருவாயூர் கண்ணனையும் உடுப்பி கண்ணனையும் யேசுதாஸ் அழைத்தால், கண்ணன் ஓடியே வந்திடுவான்!....கிருஷ்ணா நீ பேகனே...பாரோ!

நம்பூதிரிகள் வேண்டுமானால் அவரைத் தடுக்கலாம்! நம்புவோர் மனங்களில் தடுக்க இயலுமா? கண்ணன் மதங்களைக் கடந்து, மனங்களில் படர்வதை யார் தான் தடுக்க முடியும்?
இந்தப் பாடலைக் கேட்டு விட்டு, நீங்களே சொல்லுங்க! - சுவாமி ஐயப்பன் என்னும் படத்துக்காக, யேசுதாஸ் பாடுவது! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில், கவியரசர் கண்ணதாசன் எழுதிய அழகிய இசைப்பாடல்!

ஒவ்வொரு வரியின் முடிவிலும் ஸ்ரீமன் நாராயணா என்று வரும்! அப்படியே யேசுதாஸ், பெருமாளிடம் டைரக்ட் லைன் போட்டுப் பேசுவது போலவே இருக்கும்! :-)

பாடலை இங்குக் கேட்கலாம்
இங்கே தரவிறக்கியும் கொள்ளலாம்!

SwamiAyyappan-Thir...




திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா - அங்கு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா

(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

உலகினைப் பாய் போல் கொண்டவன் நீயே ஸ்ரீமன் நாராயணா - அன்று
உரலுடன் நடந்த கண்ணனும் நீயே ஸ்ரீமன் நாராயணா
இரணியன் அகந்தை அழித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா - அன்று
இந்திர வில்லை முறித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா

(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே அறியாயோ நீயே - அவள்
கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ ஸ்ரீமன் நாராயணா
தேவர்கள் உந்தன் குழந்தைகள் அன்றோ மறந்தாயோ நீயே - உன்
தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே வருவாயோ நீயே

(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

தோளில் அந்தச் சாரங்கம் எடுத்து வர வேண்டும் நீயே
கணை தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை அழித்திடுவாய் நீயே
அனந்த சயனத்தில் பள்ளி எழுந்து வாராய் திருமாலே - உன்
அன்பரை எல்லாம் துன்பத்தில் இருந்து காப்பாய் பெருமாளே

(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து இன்று வீறுடன் வாருங்கள்
நாராயணன் என்னும் தலைவனின் துணையால் போர்க்களம் வாருங்கள்
வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் வேல் கொண்டு வாருங்கள் - இனி
வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம் தேவர்கள் வாருங்கள்

(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

ஸ்ரீமன் நாராயணா
ஸ்ரீபதி ஜெகன்னாதா
வருவாய் திருமாலே - துணை
தருவாய் பெருமாளே


படம்: சுவாமி ஐயப்பன்
குரல்: KJ யேசுதாஸ்
வரிகள்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்




அடுத்த வாரம், கண்ணன் பாட்டில், கண்ணன் பாட்டு வலைப்பூ குழுவினர் அனைவரும் பங்கேற்கும் சிறப்புக் கச்சேரி! என்னன்னு இந்நேரம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்!
7 Runs to Century! :-)
Boys & Girls! Ready for Field Strategy! Get, Set, Go! :-)

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP