Showing posts with label ஹரிணி. Show all posts
Showing posts with label ஹரிணி. Show all posts

Saturday, December 09, 2006

2. அலைபாயுதே கண்ணா

மிகப் பிரபலமான அலைபாயுதே கண்ணா...பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - இது திரைப்படப் பாடல்; ஏ.ஆர்.ரகுமான் இசையில்

மற்ற கலைஞர்கள் பாடிடும் பாடல் சுட்டிகளும்,
நாதஸ்வரம் மற்றும் இன்ன பிற இசைக்கருவிகளிலும் "அலை பாயுதே" பாடலைக் கேட்க வேண்டுமா?
பதிவின் இறுதியில் சுட்டிகள் உள்ளன!



அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில்

(அலைபாயுதே)

நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரம் ஆவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என் மனம்

(அலைபாயுதே)

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே - உன்
திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் மருகுதே


கதித்த மனத்தில் உருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்தவா - ஒரு
தனித்த வனத்தில் அணைத்து எனக்கு

உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா

கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையறு கழல் எனக்கு அளித்தவா
கதறி மனமுருக நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ


இது தகுமோ இது முறையோ
இது தருமம் தானோ
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே
மனதில் வேதனை மிகவொடு

(அலைபாயுதே)



Nadaswaram = Sheik Chinna Moulana Sahib
Nadaswaram = Thiruvizha Jaishankar
Saxaphone = Kadri Gopalnath
Violin = Ganesh-Kumaresh Violin
Jaladharangam = Ananyampatti S Dhandapani
Mandolin = U Srinivas

Chitra
Maharajapuram Santhanam
Sudha Raghunathan
KJ Yesudas
Bombay Sisters

நன்றி: MusicIndiaOnline.com; karanatik.com



பாடல்: அலை பாயுதே
பாடியவர்: ஹரிணி, கல்யாணி மேனன், நெய்வேலி ராமலக்ஷ்மி
எழுதியவர்: ஊத்துக்காடு வேங்கட கவி

ராகம்: கானடா
தாளம்: ஆதி
படம்: அலை பாயுதே

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP