Showing posts with label குன்னக்குடி. Show all posts
Showing posts with label குன்னக்குடி. Show all posts

Friday, May 27, 2011

ஜிரா பிறந்தநாள்! சுந்தராம்பாள் பாடிய பெருமாள் பாட்டு!

இன்று, இனியது கேட்கின் தலைமகனுக்கு இனிய பிறந்தநாள்!

எனக்கும் இன்று பிறந்தநாள் தான்! = மீண்டும் முருகனருள்/கண்ணன் பாட்டில் எழுதவொரு இனிய பிறந்தநாள்!:)
இரண்டுக்கும் ஒன்றாய்........முருகா என்று வாழ்த்துவோமா? :)

இவனுக்கு மூன்று முகம் :)
இவன் தலைவனுக்கு ஆறு முகம்! :)


நம்ம ஜிரா என்னும் கோ.இராகவனுக்கு
இன்று,
(May-27-2011)
இனிய பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க, மக்கா! :)




ஒரு ஊர்ல...ஒரு நாள்....சில்க் ஸ்மிதா + முருகன் + ஜிரா - மூவரும் சந்தித்த பதிவு இங்கே! :) Happy Birthday Ragava :)


கே.பி. சுந்தராம்பாள் - என்னை மிகவும் பாதித்து விட்ட ஒரு பெயர்!
காதல் மனம் என்றால் என்ன?
Kodumudi Balambal Sundarambal! அவருடைய "அக வாழ்வை" ஒட்டி, முன்பு இட்ட பதிவு இங்கே!

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
பின்னம் அவனுடைய ஆரூர் கேட்டாள்
பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்!
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!

KBS அம்மாவின் முருகக் குரலில், பெருமாள் பாட்டா?
அம்மா வாயில் சதா முருகா என்று மட்டும் தானே வரும்? மறந்தும் புறம் தொழுவார்களா என்ன? :)




ஒரு வகையில் KBS அம்மாவின் காதல் கெட்டிப்பட, கண்ணனே ஒரு "பாழும்" காரணமாகப் போய்விட்டான்! முன்பு குடுத்த வரலாற்றுப் பதிவைப் படிச்சிப் பாருங்க, தெரியும்!
திருநீற்றையே நீரில் குழைத்து, நெடுக்காக நாமம் போல் இட்டுக் கொண்டு, அவர்கள் நடித்த படம்: திருமலை தென்குமரி! அதில் தான் KBS கண்ணன் பாட்டு!

பிறந்த நாள் பஞ்சாமிர்தம் சாப்பிடுவோமா? இதோ பாடுறாங்க பாருங்க..."ஏழுமலை இருக்க எனக்கென்ன மனக் கவலை?"




ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை? ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை!
(ஏழுமலை இருக்க)


பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு!
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு!
(ஏழுமலை இருக்க)

கால்வண்ணம்...அகலிகைக்கு வாழ்வு தந்தது!
கைவண்ணம்...திரெளபதையின் மானம் காத்தது!
மால்வண்ணம்...திருமகளின் மனம் கவர்ந்தது!
மணிவண்ணன்...கருணை நம்மை மகிழ வைத்தது!
(ஏழுமலை இருக்க)


ஒரு பிடி அவல் கொடுத்தே, குசேலன் உறவு கொண்டான்!
ஓடத்தில் ஏற்றி வைத்தே, குகன் உடன் பிறப்பானான்!
தான் சுவைத்த பழங்களையே, தந்தனள் தாய் சபரி!
தருவதற்கு ஒன்றுமில்லை, தலைவனே எமை ஆதரி!
(ஏழுமலை இருக்க)

படம்: திருமலை தென்குமரி
குரல்: கே.பி.சுந்தராம்பாள்
வரி: கண்ணதாசன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்


இது தான், KBS அம்மாவின் முருகக் குரலில், பெருமாள் பாட்டு!


அப்பா...
என் நினைவுக்குத் தெரியாத காலத்தில் இருந்து எனக்கு நின்று விட்ட திருவேங்கடமுடையானே!
நாயேன், உன் வீட்டு வாசலை வந்தடைந்தேன்....
அடியேனை அணைத்து, ஆட்கொண்டு அருளே! என் முருகனோடு என்னை ஏழேழ் பிறவிக்கும் சேர்த்தருளே!

Sunday, May 10, 2009

ஏழு மலை இருக்க நமக்கென்ன மனக்கவலை?

திருமுருகன் மீதே நிறைய பாடல்களைப் பாடியிருக்கும் கே.பி. சுந்தராம்பாள் அம்மா திருமலைத் தெய்வம் என்ற இந்த திரைப்படத்தில் திருமால் மீதான அருமையான இப்பாடலைப் பாடியிருக்கிறார். திருமுருகன் என்றாலே நினைவில் முன்னிற்கும் நம் அருமை நண்பர் திருமுருகன் அன்பர் முருகனருள் அன்பர்களில் முதல்வர் இராகவப் பெருமாள் இப்பாடலை நின்குழலில் வலையேற்றியிருக்கிறார். இன்று காலையில் தான் அதனைக் கண்டேன். உடனே கண்ணன் அன்பர்கள் இப்பாடலைக் கேட்டு இன்புற கண்ணன் பாடலில் இடுகிறேன்.



ஏழு மலை இருக்க நமக்கென்ன மனக்கவலை?
ஏழு ஏழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை!
(ஏழு)

பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு!
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு!
(ஏழு)

கால்வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது!
கைவண்ணம் திரௌபதையின் மானம் காத்தது!
மால்வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது!
மணிவண்ணன் கருணை நம்மை மகிழவைத்தது!
(ஏழு)

ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான்!
ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன்பிறப்பானான்!
தான் சுவைத்தப் பழங்களையே தந்தனள் தாய் சபரி!
தருவதற்கு ஒன்றுமிலை தலைவனே எமை ஆதரி!
(ஏழு)

திரைப்படம்: திருமலைத் தெய்வம்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
இயற்றியவர்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: முருகனருள் கே.பி. சுந்தராம்பாள்
வலையேற்றியவர்: முருகனருள் கோ. இராகவன்

Friday, December 28, 2007

78. சீர்காழி சீரங்கம் பாடுவாரா? - காவிரி சூழ்பொழில்!

மார்கழி மாசக் குளிர்ல நல்ல தூக்கம் போட்டிருந்த என்னை தட்டி எழுப்பிட்டாரு நம்ம கண்ணன்..

இப்போ ஸ்ரீரங்கத்து கண்ணன பார்ப்போம்..

இதுக்கு குரல் கொடுத்தவர் சீர்காழி கோவிந்தராஜன்,
வரி கொடுத்தவர் உளூந்தூர்பேட்டை சண்முகம்,
இசை கொடுத்தவர் குன்னக்குடி வைத்தியநாதன்.

பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்..



காவிரி சூழ்பொழில் சோலைகள் நடுவினில் கருமணி துயில்கின்றது
கண்ணனின் நித்திரை வண்ணங்கள் காட்டிடும் ஸ்ரீரங்கம் தெரிகின்றது..ஸ்ரீரங்கம் தெரிகின்றது..


மாவிலை தோரணம் வாயில்கள் தாண்டிட கோயில் ஒளிர்கின்றது
மத்தளம் மேளங்கள் கொட்டி முழக்கிட மண்டபம் மலர்கின்றது
மணி மண்டபம் மலர்கின்றது..


பாரெங்கும் சுற்றினும் அவனருள் கிட்டிடும் ஓர் இடம் ஸ்ரீரங்கமே
அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான் அவன் தான் வைகுந்தமே
போனது போகட்டும் இனி யாகிலும் நெஞ்சம் புனிதம் ஆகட்டுமே..
புன்னகை புரிந்திடும் மன்னவன் பொற்பாதம் கண்கள் காணட்டுமே..

அனைவருக்கும் இனிய புத்தாண்டாக பூக்கட்டும்.

அன்புடன், கி.பாலு

Monday, June 04, 2007

54. கே.பி.சுந்தராம்பாளா?



ஏலா ஒனக்குக் கே.பி.சுந்தராம்பாள் தெரியுந்தானே?

ஆமு. தெரியும்.

எப்படில தெரியும்.

அவங்கதானல ஔவையாரு.

அவங்க ஔவையாரா? ஒரு விதத்துல அப்படித்தாம்ல. ஆனா அவங்க ஔவையாரா நடிச்சவங்க. நெறைய பாட்டுக பாடியிருக்காங்க.

ஆமு. ஆமு. தெரியும். முருகன் பாட்டுக எக்கச்சக்கமா பாடியிருக்காங்க. நாங்களும் கேட்டுருக்கம்லேய்! கேட்ருக்கம். வாழைப்பழத்தைப் பிழிந்து....

ஏலேய் நிப்பாட்டு....தெரியலைன்னா வாயப் பொத்து...அப்பு அப்புனேன்னா...யாரு பாட்டல கிண்டல் பண்ணுத..அது வாழைப்பழமில்ல...ஞானப்பழம்.

என்ன...கோவிக்க..உண்மைக்குந் தெரியாமத்தாம்ல பாடுனேன். தப்புன்னா திருத்தாம கோவிக்கான். அவங்கதான் முருகன் பாட்டு பாடியிருக்காங்கன்னு சொன்னம்லா. அது சரிதான.

அது என்னவோ சரிதான். அவங்க முருக பக்தை. முருகன் மேல நெறைய பாட்டுப் பாடியிருக்காங்க. திருவிளையாடல் படத்துல....காரைக்கால் அம்மையார் படத்துல.....சிவபெருமான் மேலையும் பாடியிருக்காங்க. சக்திலீலை படத்துல அம்மன் மேல பாடியிருக்காங்க....அதெல்லாம் எப்ப? எழுவது வயசுக்கு மேல. ஆனா....அவங்க ஏழுமலை மேலையும் பாடியிருக்காங்க தெரியுமா!

என்னல சொல்லுத! ஏழுமலைல இருக்காரே வெங்கடேசரு. அவரு மேலையா....ஆச்சிரியமா இருக்கே! என்ன பாட்டு? வெவரமாச் சொல்லுல!

திருமலைத் தெய்வம்னு ஒரு படம். ஏ.பி.நாகராஜன் எடுத்தாரு. அதுல கே.பி.சுந்தராம்பாள் நாராயணியம்மா அப்படீங்குற பாத்திரத்துல நடிச்சாங்க. அந்தப் பாத்திரத்துக்காகத்தான் ரெண்டு பாட்டு பாடியிருக்காங்க. ஒன்னு "நாளெல்லாம் உந்தன் திருநாளே மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே"ங்குற பாட்டு. இது அவங்க ஏற்கனவே பாடுன "நாளெல்லாம் பூசம் திருநாளே"ங்குற பாட்டு மெட்டுதான். ஆனா இன்னொரு பாட்டு செம பாட்டு. அப்ப புதுப்பாட்டு. குன்னக்குடி இருக்காரு தெரியும்ல..

யாரு...சிலுக்குச் சட்டை போட்டுக்கிட்டு வருவார்ல...பிடில் வாசிப்பாரே?

அவரேதான். அவரு இசையமைச்ச படம் அது. அந்தப் பாட்டு "ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை"ன்னு ஜம்முன்னு இருக்கும்லா! கேட்டுப் பாக்கியா?

சரி போடு, கேக்கேன். மாட்டேன்னா விடவா போற?






ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை
ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை


பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு
ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை

கால்வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது
கைவண்ணன் திரவுபதையின் மானம் காத்தது
மால்வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது
மணிவண்ணன் கருணை நம்மை மகிழவைத்தது
ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை

ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான்
ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன் பிறப்பானான்
தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி
தருவதற்கொன்றுமில்லை தலைவனே எமை ஆதரி
ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை


அன்புடன்,
கோ.இராகவன்

Monday, January 01, 2007

22. குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா!

பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும், குன்னக்குடி இசையில், சீர்காழியின் வெங்கலக் குரலில்! படம்: திருமலை தென்குமரி.

குருவாயூரப்பா - திருவருள்
தருவாய் நீயப்பா
உன்கோவில் வாசலிலே - தினமும்
திருநாள் தானப்பா - தினமும்
திருநாள் தானப்பா!
(குருவாயூரப்பா)

எங்கும் உந்தன் திருநாமம்
எதிலும் நீயே ஆதாரம் - உன்
சங்கின் ஒலியே சங்கீதம்
சரணம் சரணம் உன்பாதம்

(குருவாயூரப்பா)

உலகம் என்னும் தேரினையே
ஓடச் செய்யும் சாரதி்யே
காலம் என்னும் சக்கரமே - உன்
கையில் சுழலும் அற்புதமே

(குருவாயூரப்பா)

guruvayurappa2

மார்கழி 18 - உந்து மத களிற்றன்- பதினெட்டாம் பாமாலை.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP