Showing posts with label MS Subbulakshmi. Show all posts
Showing posts with label MS Subbulakshmi. Show all posts

Monday, April 09, 2012

நகுமோமு கநலேனி - 2


ராகம்: ஆபேரி
நகுமோமு கநலேநி நாஜாலி தெலிஸி
நன்னுப்ரோவ ராதா ஸ்ரீ ரகுவர நீ

நகராஜ தரநீது பரிவாருலெல்ல
ஒகிபோதன ஜேஸேவார லுகாரே அடுலுண்டுதுரே நீ

ககராஜூ நீயானதி விநிவேக சனலேடோ
ககநாநி கிலகு பஹூ தூரம் பனி நாடோ

ஜகமேலே பரமாத்ம எவரிதோ மொறலிடுது
வகஜூபகு தாளனு நந்நேலுகோரா த்யாகராஜனுத நீ (நகு)

[பொருள்]
ஸ்ரீ ரகுவீர !  உனது புன்னகை தவழும் முகத்தைப் பார்க்க இயலாத என் மனத்துயரைத் தீர்க்கலாகாதா? கிரிதாரியே ! உன் சேவகர்கள் என்னைப் பற்றி அவதூறு சொல்ல மாட்டார்களே ! வெகு தூரம் வர வேண்டும் என்று சொல்லி கருடன் உனது கட்டளைக்கு இணங்கவில்லையா? பரமாத்ம ! அகிலாண்டவா ! எவரிடம் முறையிடுவேன் ! தாமதம் செய்யாமல் இந்த அடிமையைக் காத்தருள்வாய் !

Wednesday, March 28, 2012

குமரன் பிறந்தநாள்! - தமிழில்...அதரம் மதுரம் வதனம் மதுரம்!

நேற்று ((Mar 28)...
பதிவுலக ஆன்மீக சூப்பர் ஸ்டார் என ஒளிர் - குமரன் அண்ணாவின் பிறந்த நாள்!

குமரன், மற்றும் அவர் செல்ல மகளுக்கும்...
...நான்-முருகவன் சார்பாகவும்,
அனைவர் சார்பாகவும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

இனிய பிறந்தநாளிலே - இனிய பரிசாக - இனியவை எட்டு!



சுத்தாத்வைத மகாகுரு, வல்லபாச்சார்யர் எழுதிய மதுராஷ்டகம் - அதரம் மதுரம்
- அதைத் தமிழ் வடிவமாக்கித் தருகிறேன் = இனியவை எட்டு

எம்.எஸ்.அம்மாவின் குரலில் இங்கே, கேட்டுக் கொண்டே வாசியுங்கள்!
மெட்டு மாறாமல் வருகிறதா என்றும் பார்த்துச் சொல்லவும்; நன்றி!

ஸ்ரீ-ஹரீ-ஓம்

(1) அதரம் மதுரம் வதனம் மதுரம் - நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் -  மதுராதிபதே ரகிலம் மதுரம்
இதழும் இனிதே! முகமும் இனிதே! -- கண்கள் இனிதே! சிரிப்பும் இனிதே!
இதயம் இனிதே! நடையும் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
(2) வசனம் மதுரம் சரிதம் மதுரம் - வஸனம் மதுரம் லலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
சொல்லும் இனிதே! குணமும் இனிதே! -- உடைகள் இனிதே! உடலும் இனிதே!
இயக்கம் இனிதே! உலவல் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
-----------------------
(3) வேணூர் மதுரோ ரேணூர் மதுர:  - பாணிர் மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
குழலும் இனிதே! கால் தூசி இனிதே! -- கைகள் இனிதே! பாதம் இனிதே!
நடனம் இனிதே! நட்பும் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(4) கீதம் மதுரம் பீதம் மதுரம் - புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
பாடல் இனிதே! பட்டாடை இனிதே! -- உண்ணல் இனிதே! உறக்கம் இனிதே!
உருவம் இனிதே! திலகம் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
-----------------------
(5) கரணம் மதுரம் தரணம் மதுரம் - ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்
வமிதம் மதுரம் சமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
சேட்டை இனிதே! வெற்றி இனிதே! -- கள்ளம் இனிதே! உள்ளம் இனிதே!
எச்சில் இனிதே! வெட்கம் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(6) குஞ்ஜா மதுரா மாலா மதுரா - யமுனா மதுரா வீசீ மதுரா
ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
மணிகள் இனிதே! மாலை இனிதே! -- யமுனை இனிதே! அலைகள் இனிதே!
தண்ணீர் இனிதே! தாமரை இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!
-----------------------

(7) கோபீ மதுரா லீலா மதுரா - யுக்தம் மதுரம் சிஷ்டம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
ஆய்ச்சி இனிதே! ஆட்டம் இனிதே! -- கூடல் இனிதே! குணமும் இனிதே!
பார்வை இனிதே! பாவனை இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

(8) கோபா மதுரா காவோ மதுரா - யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
ஆயர் இனிதே! ஆக்கள் இனிதே! -- செண்டை இனிதே! பிறவி இனிதே!
வீழல் இனிதே! ஆழல் இனிதே! -- மதுரை மைந்தா! எல்லாம் இனிதே!

இதி ஸ்ரீமத் வல்லபாச்சார்ய விரசித மதுராஷ்டகம் சம்பூர்ணம்
இங்ஙனம் வல்லபர் விளம்பிய இனியவை எட்டும் இனிதாய் நிறைவே!
-----------------------

பிற கலைஞர்களின் இசையில்:

Cinema:
*வாணி ஜெயராம் - கன்னடப் படத்தில் (மலைய மாருதா)

Classical:
*விஜய் யேசுதாஸ்
*யேசுதாஸ்

*மும்பை ஜெயஸ்ரீ
*அனுராதா பட்வால்

*Fusion
*குஜராத்தி-பஜன்

Monday, January 30, 2012

ஹரி தும ஹரோ! (காந்தி - மீரா - எம்.எஸ்)

இந்தப் பாடல் காந்தியண்ணலின் விருப்பப் பாடல்! ஒரு நாள் எம்.எஸ் வந்திருந்த போது, அவர் குரலில் கேட்க ஆசைப்பட்டு, திடீரென்று அவரைப் பாடச் சொன்னார்!
எம்.எஸ்.அம்மா, 'தனக்கு இந்தப் பாடலை எப்படிப் பாடணும் என்பது தெரியாதே, முன்னே பின்னே இதைப் பாடியதில்லையே' எனத் தயங்க...

"அப்படியானால் பரவாயில்லை, நீ பாட வேணாம், உன் குரலில் இந்தப் பாட்டைப் பேசியாச்சும் காட்டு" என அண்ணல் கேட்க...
அதில் நெகிழ்ந்து போய்...பாடலையும் பொருளையும் கற்றுக் கொண்டு...அடுத்த நாள் பதிவு செய்து, அண்ணலுக்கு Air Mail-இல் பிறந்தநாள் பரிசாக அனுப்பி வைத்தார்!

இந்தப் பாடலையே, அண்ணலின் படுகொலைக்குப் பின், பல முறை வானொலியில் ஒலிபரப்பினார்கள்!


ஹரி.........
தும ஹரோ...ஜன் கி பீர்

அரி...அய்யா...
அன்பரின் துயரம் தீர்!
--------



திரெளபதி கி  லாஜ் ராக்ஹி......
தும படயோ சீர்
(ஹரி தும ஹரோ)

திரெளபதை தன்-மானம் காக்க.....
துகில் வளர்க்க விரைந்தீர்!
(அரி.....அய்யா)
--------

பக்த காரண, ரூப நரஹரி,
தர்யோ ஆப் சரீர்
ஹிரண்ய கஸ்யப, மார லீந்ஹோ,

தர்யோ நாஹின தீர்
(ஹரி தும ஹரோ)


சிறுவன் பொருட்டு, ஆள்-அரி உருவம்,
நன்று நீர் எடுத்தீர்!
சீறும் இரணியன்,  சாபம் தொலைந்திட,

அன்று நீர் முடித்தீர்!
(அரி.....அய்யா)

--------

பூடதே கஜ, ராஜ ராக்யோ,
கியோ பாஹர நீர்
தாச மீரா, லால கிரதர,

துக் ஜஹான் தஹான் பீர்
(ஹரி தும ஹரோ)


காதல் களிறின், காலைத் தூக்கி,
காத்து அருள் செய்தீர்!
தாச மீரா, கிரி-தாரி இங்கோ,

துக்க வலி பெய்தீர்!
(அரி.....அய்யா)

வரிகள்: மீரா
குரல்: எம்.எஸ்.சுப்புலட்சுமி
மொழி: இந்தி
Jan 30 - அண்ணலின் நினைவு நாள்!

Monday, August 15, 2011

ரகுபதி ராகவ ராஜாராம் !


 


ரகுபதி ராகவ ராஜாராம் !
பதீத பாவன சீதாராம் !

சீதாராம் ஜெய சீதாராம் !
பஜ து ப்யாரே சீதாராம் !

ஈஸ்வர அல்லா தேரே நாம் !
சப்கோ சன்மதி தே பகவான் !

ரகுபதி ராகவ ராஜா ராம் !
பதீத பாவன சீதாராம் !

ராம ராம ராம ராம ராம ராம ராம் !
ராம ராம ராம சீதா ராம ராம ராம் !

ஜெய ஜெய ராம் !
கோவிந்த ஹரி ஹரி !
ஜெய ஜெய ராம் !
முகுந்த ஹரி ஹரி !

கோவிந்த ஹரி ஹரி !
முகுந்த ஹரி ஹரி !

ராம ராம ராம ராம ராம ராம ராம் !
ராம ராம ராம சீதா ராம ராம ராம் !

பாடலை எம்.எஸ் அம்மாவின் அற்புதமான குரலில் கீழே கேட்கலாம்.

இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Saturday, July 30, 2011

வீரராகவர் விரதம் - 2


மிக வேகமாக ஓட்டி வந்த தேரை தாருகன் சரியாக மகாராணி சத்தியபாமாவின் மாளிகைக்கு எதிரில் லாவகமாக நிறுத்தினார். சற்று தொலைவில் இருக்கும்போதே தேர்ப் புரவிகள் எழுப்பிய சத்தத்தைக் கேட்டு துவாரகாதீசன் வந்துவிட்டார் என்பதை அறிந்த ருக்மிணி பிராட்டியும் பாமா தேவியும் வாசலை நோக்கி விரைந்தனர். திடீரென அதே நேரத்தில், துவாரகா நகரத்தையே உலுக்கிவிடும் அளவிற்கு  "கிருஷ்ணாஆஆஆஆஆ...கிருஷ்ணாவோஓஓஓஓஓ..." என்ற பேரலறல் கேட்டது. அவ்வளவு தான். அந்த நீலமேக கருணைக் கடல் தேரை விட்டு வேகமாகக் கீழே குதிக்கிறார் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் போதே தரையில் கால் பதிக்காமலேயே புவி ஈர்ப்பு விசையை மீறி விண்ணில் தாவினார். திடீரென தன் எஜமானன் விண்ணில் பறப்பதை அறிந்த கருடன் ஆச்சர்யமும் வெட்கமும் அடைந்து, ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு தன் பெரிய சிறகுகளை விரித்துக் கொண்டு அவசரமாக அவரைப் பின் தொடர்ந்தது.
மேற்படி காட்சியை ருக்மிணி பிராட்டி மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். பாமாவின் கண்களிலோ கண்ணீர்.

"நாராயண ! நாராயண ! " என்றபடியே அவர்களிருந்த இடம் நோக்கி திரிலோக சஞ்சாரியான நாரதர் வந்தார்.

"வாருங்கள் நாரதரே !" என்று அவரை பட்ட மகிஷிகள் இருவரும் வரவேற்றனர்.

"மிக அவசர காரியம் போலிருக்கிறது ! " என்றார் நாரதர்.

"ஆம். கருடனால் கூட இன்று அவர் அவசரத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை." என்றார் ருக்மிணி பிராட்டி.

"பட்ட மகிஷிகளைக் கூட பொருட்படுத்தாமல் பகவான் தனியாகச் செல்கிறார் என்றால் யாரோ உயர்ந்த பக்தராக இருக்க வேண்டும்." என்றார் நாரதர்.

"துவரகாதீசர் என்னைப் பொருட்படுத்தாவிடினும் பரவாயில்லை. ருக்மிணி அக்காவையாவது அழைத்துச் சென்றிருக்கலாமே." என்றார் பாமா. இந்த வார்த்தைகளைச் சொல்லும் பொழுதே அவர் குரல் தழுதழுக்க ஆரம்பித்திருந்தது.

"இது என்ன அம்மா ! நீங்கள் பேசுவதைப் பார்த்தால் அந்த நீலமேக ஷ்யாமளன் தங்களை அழைத்துச் செல்வேன் என்று சொல்லிவிட்டு ஏமாற்றி விட்டார் என்பது போலிருக்கிறதே ! " என்றார் நாரதர்.

"நாரதரே ! இது துவாரகா என்பது நினைவிருக்கட்டும். உங்கள் வேலையை இங்கே காண்பிக்க வேண்டாம். எச்சரிக்கை !" என்றார் ருக்மிணி பிராட்டி.

"நாரதரை கடிந்து என்ன பிரயோஜனம் அக்கா ! அவர் உண்மையைத் தானே சொல்கிறார் !" என்றார் பாமா.

"ஆஹா ! நான் ஏனம்மா இங்கு வந்து கலகம் செய்யப் போகிறேன்.  அடடா ! இந்த அபாண்டமான குற்றச்சாட்டை விசாரிக்க இப்பொழுது எனது நாதன், கோவிந்தன், மாதவன், மதுசூதனன், உத்தமன், சத்யசந்தன், தீனதயாளன், பரம காருண்யன் இங்கில்லாமல் போய்விட்டானே. இருக்கட்டும். ஆனால் ஒன்று மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரியும்." என்று சொல்லிய நாரதர் சற்று நிதானித்து,
"ராதாவின் தங்கம் யாருக்கும் வாக்கு கொடுத்து ஏமாற்றியதாக எந்த யுகத்திலும், எந்த கல்பத்திலும் இல்லை. நாராயண ! நாரயண ! " என்றார் நாரதர்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட பாமா தேவி, "ஒரு பேச்சிற்கு கூட 'பாமாவின் தங்கம்' என்று சொல்லக் கூடாதா...." என்று அங்கலாய்த்தார்.

"நாராயணா ! நாராயணா ! இன்று நான் என்ன பேசினாலும் விவகாரம் ஆகிவிடும் போலிருக்கிறதே." என்றார் நாரதர்.
"சற்று நன்றாக யோசித்து பாருங்கள் அம்மா ! தங்கள் மாளிகையில் தங்கத்திற்கு மதிப்புத் தான் உண்டா? துவாரகாதீசன் எடைக்கு எடை தங்க ஆபரணங்கள் வைக்க உங்களைத் தவிர எவரேனும் யோசிக்கக் கூட முடியுமா ? " என்று நாரதர் சொல்லும் பொழுதே ருக்மிணி பிராட்டியின் கண்களில் கோபத்திற்கான அறிகுறி தென்பட்டது.
"அதாவது அம்மா...பாமா தேவியின் மாளிகையில் தங்கம் மிகச் சாதாரணமான ஒரு பொருள். பிருந்தாவன ஜனங்கள் எல்லாம் தங்கள் உயிராகக் கொண்டாடுபவரை 'பாமாவின் தங்கம்' என்று சொன்னால், அவரை எல்லோரையும் போல சாதாரணமானவர் என்று குறிப்பது போல் ஆகிவிடுமே...என்று தான்...சொல்ல வந்தேன்..." என்று சர்ச்சைக்குரிய ஒரு நீண்ட விளக்கத்தை நாரதர் அளித்தார்.

"நாரதரே, அன்புற்றவரை பிரிவுறும் நோய்...அதனை நீர் அறியீர். நாம் எவர் மேல் அதிகப் பிரேமை வைத்திருக்கிறோமோ அவரால் உதாசீனப்படுத்தப்பட்டால் அடையும் வேதனை...அதனையும் நீர் அறியீர்...உமக்கு எல்லாமே வேடிக்கை தான். விஷயத்தை தெளிவாக அறிந்து கொண்டு அமைதியாக இரும்." என்று ருக்மிணி பிராட்டி ஆணையிட்டார்.

"நாரயணா ! நாரயணா ! யாரையும் புண்படுத்தும் எண்ணமில்லை அம்மா ! விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ள எனக்கும் ஆவலாகத் தான் இருக்கிறது."

"துவரகாதீசர் இன்று இரவு தனக்கு மிகவும் பிரியமான ஒரு உயர்ந்த பக்தனுக்கு தரிசனம் தர வேண்டும் என்று முன்னரே பாமாவிடம் சொல்லி இருந்தார். ஆனால் யார் அந்த பக்தர் என்று யாருக்கும் தெரியாது. சற்று முன்னர் கூட பக்தனுக்கு தரிசனம் தர வேண்டும் என்று சொல்லி பாமாவை தயாராக இருக்கச் சொல்லி ஆள் அனுப்பினார். யாராக இருக்கும் என்று நானும் பாமாவும் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் அவர் இங்கு வந்ததும் தெரியவில்லை. மாயமாய் மறைந்ததும் புரியவில்லை. மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த பாமா ஏமாற்றம் அடைந்துள்ளாள்." என்று ருக்மிணி பிராட்டி விஷயங்கள் நடந்த சூழ்நிலையை விவரித்தார்.

"இப்பொழுது நன்றாக புரிகிறது அம்மா ! பாமா தேவியின் கட்சியில் அடியேனும் உள்ளேன் என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். துவாரகாதீசன் அடியேனையும் இதே காரணம் பற்றி இங்கு வரச் சொல்லியிருந்தார். அடியேனுக்கும் பெருத்த ஏமாற்றம் தான். வெளியில் சொல்லிக் கொள்ளவில்லை. அவ்வளவு தான். ஆனால் ஜனார்த்தனர் எதைச் செய்தாலும் அதில் ஒரு பொருள் இருக்கும் என்று அமைதியாக இருக்கிறேன். நாராயணா ! " என்றார் நாரதர்.

"ஆமாம் பாமா. 'கிருஷ்ணாவோ' என்ற அந்த அபயக் குரல் என் காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எந்த உயிர்க்கு தாங்க முடியாத துன்பமோ ? ஜனார்த்தனர் எப்பொழுதும் உயிர்களுக்கு அபயம் அளிப்பதிலேயே கண்ணாக இருப்பார் என்பது நீ அறியாததா? " என்று பாமா தேவையை ருக்மிணி பிராட்டி தேற்றினார்.

"ஆனால் பட்டமகிஷி பாமாதேவியின் பேரில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் வைத்திருக்கும் அன்பினை யாரும் குறைவாக எடைபோட வேண்டாம் என்று விண்ணப்பித்துக் கொள்கிறேன்..." என்றபடியே நாரதர் பாமா தேவியின் பக்கம் திரும்பினார்.

"உங்களுக்காக அன்றோ யதுகுலதிலகம் பாரிஜாத மரத்தை இந்திரலோகத்தில் இருந்து துவரகாவிற்கு கொணர்ந்தார்...அந்தப் பரந்தாமன், சர்வேஸ்வரன், புருஷோத்தமன், பகவான் வாசுதேவன், உங்கள் ஒரு வார்த்தைக்கு மதிப்பளித்து, தவறு தவறு, உங்கள் கள்ளம் கபடமில்லா அன்பிற்கு கட்டுப்பட்டு ஒரு தராசு தட்டில் அமர்ந்து தன்னை எடைபோடும்படி தாழ்த்திக் கொண்டானே ! ஆனால் இன்று ஏதோ மிக அவசரமான காரியம் தான் என்று நினைக்கிறேன். இல்லையேல் அந்தக் கருணை மாமுகில் நிச்சயம் தங்களை உதாசீனப்படித்தி விட்டுத் தனியே சென்று இருக்க மாட்டார்." என்றார் நாரதர்.

"நாரதரே ! ஒரே சமயத்தில் அமிழ்தமும் விஷமும் கலந்த வார்த்தைகளைச் சொல்கிறீர் " என்றார் பாமா.

"ஆஹா ! இதே வார்த்தைகளை ஒரு சமயம் சீதாதேவியும் உரைத்ததாகக் கேள்வி." என்றார் நாரதர்."

"அது எப்பொழுது நாரதரே ? " என்று ருக்மிணி பிராட்டி வினவினார்.

"ராமன் தன்னைப் பிரிந்து சொல்ல முடியாத துயரத்தில் காட்டில் பித்துப் பிடித்தவன் போல அலைகிறான் என்று அசோக வனத்தில் சீதாப் பிராட்டியிடம் அனுமன் சொல்லியபொழுது..." என்று நாரதர் சொல்லி முடிப்பதற்குள் பாமாதேவி மூர்ச்சையாகி இருந்தார். நல்ல வேளையாக கீழே விழ இருந்தவரை ருக்மிணி பிராட்டி பிடித்துவிட்டார்.

"ஆஹா ! சீதை, அசோக வனம் என்று கேட்டாலே இவள் மூர்ச்சையாகி விடுவாள். தாங்கள் வந்த காரியம் ஆனதா நாரதரே ? " என்று ருக்மிணி பிராட்டி கேட்கவும், நாரதர், " இன்று நான் எதை செய்தாலும் எல்லோரும் தவறாக நினைக்கிறார்கள் அம்மா. இன்னொரு நாள் வருகிறேன். விடை கொடுங்கள். ஆனால் ஒரு விஷயம் மட்டும் இன்று அறிந்து கொண்டேன்..."

"நீங்கள் அறிந்து கொண்டதை இன்னொரு சமயம் வந்து சொல்லவும். இப்பொழுது நான் பாமாவை கவனிக்க வேண்டும்.  இப்பொழுது விடை பெறுகிறீரா ?" என்று விரட்டாத குறையாக நாரதரை ருக்மிணி பிராட்டி அனுப்பி வைத்தார்.

*****************************************************************************

"இரவெலாம் கண்ணில் நீரருவி பெருகும்" என்று சென்ற பதிவில் இடம்பெற்ற மீராப் பாடலைப் பற்றி நாரதருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அந்தப் பாடல் ஆழ்வார் திருமகள் ஆண்டாள், சத்யபாமா பாவனையில் பாடியுள்ள, "என்பு உருகி இனவேல் நெடுங்கண்கள் இமைப் பொருந்தா பல நாளும்..."  என்ற நாச்சியார் திருமொழி பாசுரத்தை நினைவுபடுத்துகிறது என்றேன். அப்பொழுது தான் நாரதர் தனக்கு ஒரு முறை துவாரகாவில் பாமாதேவியின் தூய அன்பினை அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் அமைந்தது என்று சொல்லி மேற்படி நிகழ்ச்சிகளை விவரித்தார். மேலும் அன்று தான் ருக்மிணி பிராட்டியிடம் சரியாக விடை பெற்று கொள்ள முடியவில்லை என்றும், அவரைப் பார்த்து சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகத் தான் திருவல்லிக்கேணி வந்ததாகவும் உரைத்தார். [இதன் பின்னர் டீக்கடையில் நடந்த உரையாடல் இந்தப் பதிவில் இல்லை.]

நாரதர் விளக்கிய மேற்படி துவாரகா நிகழ்ச்சியில் ஜனார்த்தனர் எங்கே சென்றார் என்ற கேள்விக்கு விடையாக இந்த சூர்தாஸ் பஜன் அமைந்துள்ளது. இதுவும் இரவின் அமைதியில் கேட்க வேண்டிய இன்னொரு அற்புதமானப் பாடல்.


ஆனையின் துயர் தீர்த்த அம்மான் தன்னையும் காக்க வேண்டும் என்று சூரதாசர் பிரார்த்திக்கிறார். பாடலை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

[பாடல்]
ஹே கோவிந்த ! ஹே கோபால ! ஹே கோவிந்த
ராகோ சரண அப்தோ ஜீவனஹாரே

நீர பிவன ஹேது கயோ சிந்து கேகி நாரே
சிந்து பீச்ச பஸத க்ராஹ சரணதரி பசாரே

சார ப்ரஹர யுத்த பயோ லேகயோ மஜ்தாரே
நாகே கானதுப் ந லாகே க்ருஷ்ண கோ புகாரே

த்வாரகா மே ஷபத கயோ ஷோர பயோ த்வாரே
சங்க சக்ர கதா பதும கருடல சிதாரே
சூர கஹே ஷ்யாம சுனோ ஷரணஹே திஹாரே
அபகி பார பார் கரோ நந்த கே துலாரே

[பொருள்]
ஹே கோவிந்தா ! ஹே கோபாலா ! என் வாழ்வின் இறுதிக்கட்டம் வந்துவிட்டது. அபயமளிப்பாய் ! ஷ்யாமா!  நான் சொல்வதைக் கேட்பாய். அன்றொருநாள் தன் நீர் வேட்கையைத் தணிக்க வேழமொன்று சிந்துவில் இறங்கியது. அப்போது அங்கு வாழ்ந்து வந்த முதலை ஒன்று அந்த வேழத்தின் காலைக் கவ்வியது. பல காலம் அந்த முதலையிடம் போராடி சோர்வுற்ற அந்த வேழம், தன் இறுதி நெருங்கிவிட்டதை எண்ணி "கிருஷ்ணா" என்று அலறியது. அந்த அபயக்குரல் துவாரகாவில் ஏற்படுத்திய அதிர்வு அடங்குமுன், நீ சங்கு சக்ர கதாதாரியாய் கருடாரூடனாய் அவ்விடம் சென்று அந்த யானைக்கு நற்கதி அளித்தாயே ! அவ்வாறே நானும் உன்னை சரணடைந்து விட்டேன். நந்தனின் செல்லமே ! காலம் தாழ்த்தாமல் என்னையும் கரை சேர்ப்பாய்.



Sunday, July 24, 2011

வீரராகவர் விரதம் - 1



 சென்ற ஞாயிற்றுக்கிழமை திருவல்லிக்கேணியில் நாரதரைச் சந்திக்க நேர்ந்தது. நாரதர் என்றால் யாரோ எனக்கு மட்டும் தெரிந்தவர் என்று எண்ணிவிட வேண்டாம். நம் அனைவருக்கும் நன்றாகத் தெரிந்தவர், தேவரிஷி நாரதர் தான். இடையில் வீணையுடன் (திரைப்படங்களில் தம்புராவுடன்) "நாராயணா ! நாராயணா !" என்று உச்சரித்துக் கொண்டே அலையும் பாகவத உத்தமரே தான். அதிர்ச்சியோ ஆச்சர்யமோ அடையாமல் நம்பிக்கையுடன் மேற்கொண்டு படிக்கவும்.

அல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வேதவல்லி தாயார் சன்னிதிக்கு எதிரே ஒரு சிறு மண்டபம் இருக்கும். புளியோதரை, சக்கரைப் பொங்கல், அதிரசம், அப்பம் என்று எதை வாங்கினாலும், இங்கே வந்து அமர்ந்து சாப்பிடுவது சிலர் வழக்கம். அம்மாதிரி நானும் அன்று இரவு அங்கு அமர்ந்துக் கொண்டு, தட்டை(வடை) சாப்பிட்டுக் கொண்டே மனதில் கண்ணனைப் பலவாறாகத் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தேன். பல விதமான எண்ணங்கள். கவலை மேல் கவலைகள். மனித பிறவியே ஒரு வீணான பிறவி என்று தோன்றிற்று. திடீரென எல்லாவற்றுக்கும் காரணம் நாம் நிறைய படித்தது தான் என்று தோன்றியது. அதனால் அன்றோ இந்தக் கணினித் துறையில் சிக்கிக் கொண்டு எதற்கும் ஒழுங்கான நேரம் கிடைக்காமல் அல்லாடுகிறோம் என்று தோன்றியது. வேலையை விட்டு விட்டு விட்டலனே கதி என்று கிடக்கும் அளவிற்கு உள்ளத் துணிவும் இல்லை. ஏன் நிறைய படித்தோம் என்று தீவிரமாகச் சிந்தனை செய்து கொண்டிருந்தேன்.
திடீரென எல்லாவற்றிற்கும் மூலக் காரணம் தெய்வம் தான் என்று மனம் அடித்துச் சொல்லியது. நம்மை இவ்வளவு பாடு படுத்துவது கண்ணன் என்றால் அவனையே திட்டுவோம் என்று முடிவு செய்து தான் பலவாறு திட்டிக் கொண்டிருந்தேன். "என்னைப் பற்றி உனக்குக் கொஞ்சமாவது அக்கறை இருக்கிறதா? இப்படியே வாழ்நாள் எல்லாம் கணினி முன்பு உட்கார்ந்து கொண்டு இருக்கிறேனே, நல்ல சங்கீதம் கேட்க நேரம் கிடைக்கிறதா? நல்ல புத்தகங்கள் படிக்க முடிகிறதா? அல்லது நண்பர்களுடன் நேரம் செலவழிக்க முடிகிறதா? ஒரு காலத்தில் தினமும் உன் வீட்டு சக்கரைப் பொங்கல் உண்டு மகிழ்ந்தேனே, இப்பொழுது வாரம் ஒரு முறை பொங்கல் கிடைப்பதே அரும்பாடாய் இருக்கிறதே ! உன் மனைவி ருக்மிணி பிராட்டிக்கும் என் மேல் அக்கறை இல்லை. ராமனுக்கும் இல்லை. சீதைக்கும் இல்லை. அரங்கனுக்கும் இல்லை. யாருக்கும் இல்லை. எல்லோரும் மாலை வாங்கி வந்தால் மட்டும் சந்தோஷமாக வாங்கி சாற்றிக் கொள்கிறீர்கள். வெறும் கையுடன் வந்தால் பட்டர் மூலமாக, 'மாலை ஒன்றும் இல்லையா?' என்று கேள்வி மட்டும் கேட்கிறீர்கள் !" என்று பலவாறாக எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன்.  

தாயார் சன்னிதியில் மேல் மாடங்களில் அமைதியாக அமர்ந்திருந்த புறாக்கள் மனதில் வேறு புதுச் சிந்தனைகளைத் தோற்றுவித்தன. அவற்றின் கரு அடுத்தப் பிறவியில் என்ன உயிரினமாகப் பிறக்கலாம் என்பதே. இவ்வாறு தீவிர சிந்தனை செய்து கொண்டிருக்கும் பொழுது தான், த்ரிலோக சஞ்சாரியான நாரதர் என் முன்னர் பிரசன்னமானார். ஆயிரம் கோடி சூர்யப் பிரகாசம் என்பார்களே, அது இப்படித் தான் இருக்குமோ என்று எண்ணும் அளவிலான ஒரு தெய்விக ஒளிவட்டத்திற்குள் தேவரிஷி நாரதர் திவ்ய தரிசனம் தந்தார். "நாராயண நாராயண ! கண்ணனின் நண்ப ! கவலைகள் மறப்பாய் ! " என்ற சொற்கள் என் காதுகளில் ஒலித்தன. காண்பது கனவா இல்லை நனவா என்று தலைகால் புரியாமல், பேச்சு ஒன்றும் வராமல் திக்கித் திணறி "ஹலோ நாரதரே !" என்ற வார்த்தைகள் என் நாவில் இருந்து வெளிப்பட்டு என்னை ஆச்சர்யப்படுத்தின. "அடச்சே! இதென்ன ! இரு கை கூப்பி நாரதருக்கு நமஸ்காரம் அல்லது வணக்கம் என்று சொல்லாமல் இவ்வாறாக மரியாதை இல்லாமல் பேசினோமே !" என்று உள்மனம் கடிந்துக் கொண்டது. நாரதர் ஏன் அப்பொழுது வந்தார், அவருடன் நடந்த உரையாடல் பற்றி எல்லாம் இந்தப் பதிவிலேயே சொல்லிவிட முடியாது. ஆரம்பத்தில் நடந்தவற்றை மட்டும் சொல்கிறேன்.

என் உள்மனம் நினைத்ததை எப்படியோ அறிந்த நாரதர், "ராதா ! நீ கண்ணனிடம் மாறாத நட்புரிமை கொண்டுள்ளதால் அதன் தாக்கம் அவனைச் சேர்ந்தவர்களிடமும் வெளிப்படுகிறது. நட்பில் மரியாதை பார்க்க வேண்டாம். என்னையும் உனது நண்பராகப்   பாவிக்கலாம்." என்று செவிக்கும் மனதிற்கும் இனிமை தரும் வார்த்தைகளைப் பேசினார்.

"ஆஹா ! உங்களைக் கண்டதில் என் உள்ளத்தில் புதுத் தெம்பு ஏற்ப்பட்டுள்ளது. என் கவலைகள் எல்லாம் பறந்துவிட்டன ! " என்று உற்சாகத்துடன் பேசினேன்.

"நாராயண ! நாரயண ! இது தான் கலி காலம் என்பதோ? உனக்கே கவலை வந்திருக்கிறதே ! " என்றார் நாரதர். "உன்னை இவ்வளவு தீவிரமாகச் சிந்திக்கும்படி செய்த விஷயம் தான் என்ன ராதா ? என்னிடம் சொன்னால் தக்க உபாயம் சொல்வேன்", என்றார் நாரதர்.

நாரதர் இவ்வாறு கேட்டவுடன் எனக்கு என்ன பதில் உரைப்பது என்று தெரியவில்லை. நண்பர் என்று சொல்லிவிட்ட போதிலும், சற்று முன்னர் எல்லோரையும் குறை சொல்லிக் கொண்டிருந்தக் கதையை எல்லாம் கேட்டால் என்ன நினைப்பாரோ என்று தோன்றியது.  நமக்கு பக்தி குறைவு தான். நல்ல மன நிலையில் இருந்தால் எல்லோரையும் போற்றுவோம். இல்லையேல் வசைபாடுவோம். ஆனால் இதை எல்லாம் நாரதரிடம் சொல்லிக் கொள்ளத் தேவையில்லை என்று தோன்றியது.

திடீரென, சற்று முன்னர் இருந்த எனது கவலைகள் எல்லாம் எனக்கே மிகவும் அற்பமாகத் தோன்றின. "அது ஒன்றும் பெரிய விஷயம் எல்லாம் இல்லை நாரதரே ! கண்ணன் பாடலில் இரண்டு உருக்கமானப் பாடல்கள் பதிவு செய்யலாம் என்று எண்ணம். ரொம்ப நாள் கழித்து பதிவு எழுதப் போகிறேன். எப்படிப் பதிவிடுவது என்று சிந்தனை செய்து கொண்டிருந்தேன்" என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஒரு கதையைத் திரித்தேன்.
த்ரிகால ஞானியான நாரதர், நான் என்ன நினைத்துக் கொண்டிருந்தேன் என்பதை அறியாதவரா? ஆனாலும் பெரியோர் என்றும் பெரியோரே ! பாகவதர்களில் சிறந்தவர், நற்குண நாரதர், என்னை சங்கடத்தில் ஆழ்த்தாமல், என் கதையை உண்மையாக்கி அவை என்ன பாடல்கள் என்று கேட்க, உரையாடல் மேலும் வளர்ந்தது. அவருடன் பேசியதில் துவாரகாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்று ஒரு பாடலுடன் சம்பந்தம் பெற்றிருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். இரண்டில், "பக்த மீரா" படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை முதலில் இடுவது என்றும், நாரதர் எனக்கு சொன்ன சில தகவல்களுடன் இரண்டாம் பாடலை பதிவு செய்வது என்றும் நிச்சயம் செய்தேன். அதன்படி, மீரா படப்பாடல் வரிகளைக் கீழே பார்க்கலாம். இரவின் அல்லது பின்னிரவின் அமைதியான நேரத்தில் கேட்க வேண்டிய அற்புதமான பாடல்.

எம்.எஸ் அம்மாவின் அற்புதமான குரலில் அமைந்துள்ள இந்தப் பாடலை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


சராசரம் உன்னை யாவும் தேடுமே...
மறைகளும் மகிழ்ந்து உன்னைப் பாடுமே....ஹே ப்ரபோ !
நிராசையால் நைந்த என் நெஞ்சமும்
பராவும் உன் பாதாரவிந்தமே !
உன்னையே எனதுயிர் துணை என்று
உவந்ததென் தவறோ ஐயா !
கனவிலும் உன்னை அன்றி நினைவுண்டோ
கதி உன் கழலின் நிழலே அன்றோ !
வானகம் வையகம் தரும் இன்பங்களைக்
கருதியதும் உண்டா?
இரங்குவதறிந்திலையா ? மறந்திடலாகாதையா !

இரவெலாம் கண்ணில் நீர் அருவி பெருகும் !
அனலில் மெழுகென அகமும் உருகும் !
"ஹரி ஹரீ" என நாவும் கதறும் !
இதயமும் பதறும் ஐயா !

பாத மலரில் படிந்திடும் வண்டாய்
நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய் !
அடியாள் மீரா அன்றும் இன்றும் உன்
அடைக்கலம் ஐயா !

Sunday, February 27, 2011

ராம கோவிந்த ஹரி !


ரேடியோவில் வரும் சில விளம்பரங்கள் ஜாலியானவை. கேட்டாலே குதூகலம் அடைவோம். அப்படி சில வாரங்கள்(மாதங்கள்?) முன்பு கேட்டபொழுது மனதைக் கவர்ந்த விளம்பரம் இது:
"யார் யாரெல்லாம் ஃப்ரைட் ஃபூட் சாப்ட தயங்க்ராங்களோ
ஊ ! ஆ! ஆ !!  (கோரஸாக)
யார் யாரெல்லாம் ஜிம்ல ஜாலியா இருக்காங்களோ
ஊ ! ஆ! ஆ !!! (கோரஸாக)
யார் யாரெல்லாம் டேஸ்டுக்காக ஓட்றாங்களோ
ஊ ! ஆ! ஆ !!! (கோரஸாக)
....
ஹார்லிக்ஸ் நியூட்ரிபார் சாப்பிட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.
உங்கள் காரணம் என்னவோ? "
என்று கேட்டுவிட்டு மிக வேகமாக ஒரு வாக்கியம் சொல்வர். கிட்டதிட்ட "இதை சாப்பிட்டால் வரும் பிரச்சனைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல" என்பது போன்ற ஒரு டிஸ்கியோ என்று தோன்றும். :-)
கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் "ஹார்லிக்ஸ் நியூட்ரிபார் இஸ் எ நரிஷிங்க் ஸ்னாக் டு பி டேக்கன் அஸ் பார்ட் ஆஃப் எ பேலன்ஸ்டு டயட்" என்பதைத் தான் அவ்வளவு வேகமாக சொல்வார்கள்.  [ஆஹா ! ஆங்கிதமிழ் - அதாவது ஆங்கிலத்தை தமிழ்ல - படிக்க எவ்ளொ கடினமா இருக்கு பாருங்க. :-) தாங்கிலமும் இவ்ளோ கடினமா தான் இருந்தது.  :-)  நல்ல வேலை/வேளையா நண்பர் கே.ஆர்.எஸ் தமிழ் தட்டச்சு பெட்டியை பின்னூட்டமிடும் பக்கத்தில் இணைத்தார். அவருக்கு ரொம்ப நன்றி. :-) ]
இப்போ எதுக்கு இதெல்லாம் சொல்றேன் ? கண்ணன் பாட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீங்களா?
உடல் ஆரோக்கியம் போலவே உள்ள ஆரோக்கியமும் கவனிக்க வேண்டிய ஒன்றாம். "சித்த சுத்தி இறைவனின் நாமங்களை மீண்டும் மீண்டும் சொல்வதனால், நினைவு கூர்வதினால் ஏற்படுகிறது. " என்றெல்லாம் பெரியவங்க சொல்லி இருக்காங்க. மஹான் தியாகராஜர் நாள் ஒன்றிற்கு 1,25,000 ராம நாமம் சொல்வாராம். அன்னை சாரதா தேவி ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 15,000 முறை ஏதோவொரு இறை நாமத்தை நாவினால் உச்சரிக்க அல்லது உள்ளத்தில் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.
"நமக்கு இருக்கற ஆயிரத்தெட்டு அதிமுக்கியமான வேலைகளில் இதை எல்லாம் செய்யறது கஷ்டம்". 
அப்படின்னு என்னைப் போல நினைக்கறவங்க :-), எம்.எஸ் அம்மாவின் தெய்வீகக் குரலில் இந்தப் பாடலை (கபீர்தாஸ் பஜன்) கேளுங்க.  :-)


பாடலை இங்கே தரவிறக்கம் செய்யலாம். 

பஜோரே பையா ராம கோவிந்த ஹரி
ராம கோவிந்த ஹரி

ஜப தப சாதன கச்சு நஹி லாகத்
கரசத் நஹி கத்ரி (பஜோ)

சந்தத் சம்பத் சுக கே காரண
ஜாசோ போல் பரீ (பஜோ)

கஹத கபீரா ஜாமுத் ராம நஹீ
வா முக் தூள் பரீ (பஜோ)

"பாடல் பொருள் எங்க?" என்று கேட்போருக்கு - இது கிட்டதட்ட ஜுனியர் ஹார்லிக்ஸ் பாடல் தான். அப்படியே கேட்கலாம் :-) [ ஹி ஹி..பொருள் தெரியாதுன்னு சொல்றதுக்கு தான் என்னவெல்லாமோ எழுதி ஒப்பேத்தயிருக்கேன். :-) ]

பாடல் பொருளை பின்னூட்டத்தில் அளித்த சுப்பு தாத்தாவிற்கு நன்றி. :-)
பொருள் :
ராம கோவிந்தன் ஹரி இவர்கள் நாமங்களை ஜெபியுங்கள், நீங்கள் செய்யும் மற்ற ஜபங்கள், தவங்கள் எத்தினாலும் உங்கள் பழைய வினைப் பயன்கள் இருக்கும் பாண்டம் காலியாவதில்லை. புத்திரர்கள், சொத்துக்கள் ஆகிய மற்ற சுகம் தரும் சாதனங்களால் தவறுகள் தான் பாவங்கள்தான் சேருகின்றன. எந்த முகமானது ராமனை காண வில்லையோ, அந்த முகம் புழுதி நிறைந்ததே. அதனால் ராமனை விடாது ஜெபி. 

Friday, February 11, 2011

வரதனை நினைதொறும்...




எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !

யது வீரனை நந்த குமாரனை நினைந்து
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !
மலரே இருவிழி பங்கஜ மலரே திருமுகமும்
மலரே இருகரம் தாமரை மலரே திருவடிகள் !
மந்தஹாசமும் தவழ்ந்த சுந்தர முகாரவிந்தம் நினைந்து
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !

அன்னை தந்தை பதியும் அவன் !
அருந்துணை நவநிதியும் அவன் !
இன்பமும் அழகும் அவனே - என்
இன்பமும் அழகும் அவனே !
எழில் தரும் அணி பணி பவனே ! 
மீரா ப்ரபு கிரிதர கோபாலனை வரதனை நினைதொறும்
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !


டிஸ்கி: இது ஓர் மீள் பதிவு. பக்த மீரா படத்தில் இடம்பெறும் மேலே உள்ள அற்புதமான பாடலை நம் குமரன் ஏற்கனவே பதிந்து விட்டார். இருந்தாலும் சில பாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். :-) 

பாடலை இங்கே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.  

Tuesday, February 01, 2011

என்னை உன் தாஸனாக ஏற்றுக் கொள்வாய்!

நாம் இன்று பார்க்கப் போகும் பாடலின் ஆசிரியர், த்வைத சித்தாந்தத்தில் 15ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு மகான். தாஸர். வேத, புராண, இதிகாசங்கள் அனைத்தின் சாரத்தையும், சர்வோத்தமனான பரந்தாமனின் பேர், குணம், அவதாரங்கள், சிறப்பு ஆகிய அனைத்தையும் அனைவருக்கும் புரியும்படியாக எளிய கன்னடத்தில் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தவர்.

யார் அவர்? அவர்தான் - நாரதரின் மறுபிறவி என்று கருதப்படும் - ஸ்ரீ புரந்தரதாஸர்.


எதுக்கு இன்னிக்கு அவர் பாடலை எடுத்துக்கிட்டோம்? ஏன்னா, இன்று ஒரு சிறந்த தினம். புஷ்ய மாத அமாவாசையான இன்றுதான் ஸ்ரீ புரந்தரதாஸரின் புண்ய தினம். ஆராதனை. உலகெங்கிலுமுள்ள தாஸரின் தாஸர்கள் அவரது பாடல்களை பாடி கடவுளை வழிபடும் நன்னாள்.

ஸ்ரீ மத்வர் உருவாக்கிய த்வைத சித்தாந்தத்தில் வந்த ஸ்ரீ வியாஸராயரின் பிரதம சீடர் நம்ம புரந்தரதாஸர். பாடல்கள் மூலமாக மக்களின் அறியாமையை அகற்றி அவர்களை பக்தி மார்க்கத்திற்கு திருப்ப வேண்டுமென்ற தன் குருவின் கட்டளையை ஏற்று எண்ணற்ற பாடல்களை பாடியவர்.


கடவுளை தன் தலைவனாக, நண்பனாக, குழந்தையாக இன்னும் பல்வேறு ரூபங்களில் நினைத்து, வர்ணித்து, உருகி அவர் இயற்றிய பாடல்கள் அனைத்தும் அரிய பொக்கிஷங்கள். அட, இதேதானே நம்ம தமிழ் ஆழ்வார்களும் செய்திருக்காங்கன்னு உங்களுக்கு தோணும். மிகச் சரி. தமிழில் ஆழ்வார்கள் என்றால் கன்னடத்தில் ஹரி-தாஸர்கள். அதாவது ஹரிதாஸர்கள். (இதில் புரந்ததாஸர், கனகதாஸர்னு வரிசையா நிறைய பேர் இருக்காங்க).

மறுபடி புரந்தரதாஸருக்கே வருவோம்.

**

பக்தியில் ஐந்து விதமான பக்தி உண்டு என்று சொல்லப்படுகிறது. அது என்ன?

தாஸ்ய பாவம் - கடவுளை தலைவனாகவும், தன்னை அடிமையாகவும் நினைத்து வழிபடுவது; பாடுவது.

சக்ய பாவம் - கடவுளை நண்பனாக நினைத்து வழிபடுவது.

மதுர பாவம் - கடவுளை கணவனாக நினைத்து பாடுவது. (கோபிகைகள் கண்ணனை நினைத்து உருகுவது இதில் வரும்).

வாத்ஸல்ய பாவம் - கடவுளை ஒரு குழந்தையாக நினைத்துக் கொள்ளுவது.

சாந்த பாவம் - இதில் பக்தன் உணர்ச்சி வசப்படாதிருப்பவன். அமைதியே உருவானவன். இந்த நிலையில் கடவுளை நினைத்து பாடுபவன்.

நம்ம தாஸர் (மற்ற அனைத்து தாஸர்களைப் போலவே), மேலே சொன்ன இந்த ஐந்து பாவங்களிலும் ஏகப்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.


இன்று நாம் பார்க்கப்போகும் பாடல் - தாஸ்ய பாவத்தை சார்ந்தது.

அதாவது கடவுள் என்பவன்

தலைவன்.
முதலாளி.
அனைத்திற்கும், அனைவருக்கும் மேலானவன்.
சர்வோத்தமன்.

நானோ

அவன் தாஸன்
வேலைக்காரன்.
தலைவன் என்ன சொல்வானோ, அதை நான் செய்வேன்.
எனக்கு என்ன வேண்டுமோ அதை அவனே பார்த்து கொடுப்பான்.

இப்படியான உத்தமமான நிலைதான் தாஸ்ய மனோபாவம்.

இப்போ இந்த பாடலையும், அதன் பொருளையும் பாருங்க. உங்களுக்கே புரியும்.

**

தாஸன மாடிகோ என்ன
ஸ்வாமி சாசிர நாமத வேங்கடரமணா (தாஸன)


Infinity பெயர்களை கொண்ட வேங்கடரமணனே, ஸ்வாமி, என்னை உன் தாஸனாக ஏற்றுக் கொள்.

துர்புத்தி களனெல்ல பிடிஸோ
நின்ன கருணகவசவென்ன ஹரணக்க தொடிஸோ
சரணசேவே எனகெ கொடிஸோ
அபய கரபுஷ்பவ என்ன சிரதல்லி முடிஸோ (தாஸன)


கெட்ட எண்ணங்களை என் மனதிலிருந்து விடுவிப்பாய்
உன் கருணை என்னும் கவசத்தால் என் வாழ்க்கையை ரட்சிப்பாய்
உன் திருவடியை வணங்கி சேவை செய்யும் பாக்கியத்தை எனக்கு கொடுத்து
உன் அபயத்தை அளிக்கும் கரத்தை என் தலையில் வைத்து என்னை காப்பாற்று.

த்ருடபக்தி நின்னல்லி பேடி
நான் அடிகெரகுவேனய்ய அனுதின பாடி
கடெகண்ணிலே என்ன நோடி
பிடுவே கொடு நின்ன த்யானவ மனசுசி மாடி (தாஸன)


எப்போதும் மாறாதிருக்கும் திடமான பக்தியை உன்னிடத்தில் வேண்டி,
நான் உன் பாதத்தில் தினமும் விழுந்து உன் நாமத்தை பாடிக்கொடிருப்பேன்.
உன் கடைக்கண்ணால் என்னை பார்த்து
நான் என்றென்றும் உன்னை தூய மனதோடு நினைத்துக்கொண்டிருக்குமாறு அருள்புரிவாய்.

மரெஹொக்க வரகாய்வ பிரிது
என்ன மரெயதே ரஷணே மாடய்ய பொரது
துரிதகளெல்லவ தரிது
ஸ்ரீ புரந்தரவிட்டல என்னனு பொரெது (தாஸன)


காப்பாற்று என்று உன்னை வேண்டியவருக்கெல்லாம் சமயத்தில் வந்து உதவி புரிந்த வரலாறு இருக்கிறது
அதே போல் (நானும் வந்திருக்கிறேன்) என்னையும் கண்டிப்பாக காப்பாற்று
என் அனைத்து பாவங்களையும் போக்கி
உன் கருணையால் என்னை கரையேற்று ஸ்ரீ புரந்தர விட்டலா!

முதல் இரண்டு பத்திகளில் பக்தி மேலோங்க பெருமாளிடம் வேண்டுகோள் வைக்கும் தாஸர், கடைசி பத்தியில் உரிமையுடன் கேட்பது போல் பாடியிருக்கிறார். கஜேந்திர மோட்சம், த்ரௌபதிக்கு அபயம் அளித்தது இது போன்ற உதாரணங்கள் இருக்கிறதே, அதே போல் எனக்கும் அபய ஹஸ்தம் கொடுப்பாய் என்று கேட்கிறார்.

**

இப்படி தாஸ்ய பாவத்தில் உருகி பாடியிருக்கும் புரந்தரதாஸரின் பாடலை யாரு பாடினா பொருத்தமாயிருக்கும்?

தினந்தோறும் அந்த வேங்கடரமணனையே ‘சுப்ரபாதம்’ சொல்லி எழுப்பும் - அந்த திருப்பதி வேங்கடவனின் காலடியிலேயே நிரந்தரமாய் தங்கி சேவை புரியும் - நம்ம எம்.எஸ்.அம்மாதான். வேறே யாரு?. பாடலின் முழுமையான அர்த்தத்தை புரிந்தவாறு, ஆத்மார்த்தமான பக்தியுடன் அம்மா பாடுவதை பார்த்து, கேட்டு மகிழுங்கள்.

தாஸன மாடிகோ என்ன..





**

ஜெய் ஜெய் விட்டல ! பாண்டுரங்க விட்டலா !!
ஜெய் ஜெய் விட்டல ! புரந்தர விட்டல !!


**

நன்றி
ச்சின்னப் பையன்
http://dasar-songs.blogspot.com

**

Wednesday, December 15, 2010

எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய ஆங்கிலப் பாட்டு - ஐ.நா சபை!

கண்ணன் பாட்டிலே...இது 198ஆம் இடுகை! மார்கழிக் குளிர் இன்னும் இரண்டு இடுகைகளில்....உங்களை வேகமாகத் தாக்கப் போகிறது! :)

* முற்றிலும் தமிழ் வலைப்பூவான கண்ணன் பாட்டிலே,
* தமிழ்க் கடவுளான திருமாலுக்கு...
* இன்று அழகான ஆங்கில இடுகை! :)
* அதுவும் அழகான எம்.எஸ்.சுப்புலட்சுமியின், அழகான ஆங்கிலக் குரலில்... :)

அட, எம்.எஸ் ஆங்கிலத்தில் எல்லாம் பாடுவாங்களா என்ன?



Oct 23, 1966
நியூயார்க் நகரம், ஆனால் அமெரிக்க மண் அல்ல!

பன்னாட்டு எல்லை! International Territory!
கீழையாறு (East River) ஐ- பார்த்தாற் போல் உள்ள ஐ.நா சபைக் கட்டிடம்!

அதன் பொதுக் குழுவின் (General Assembly) ஆண்டுத் துவக்கம்!
International Cooperation Year - பன்னாட்டு ஒற்றுமை ஆண்டு...என்று அறிவித்து, துவங்குகிறார்கள்!

இதோ, ஐ.நா-வின் பொதுச் செயலர், யூ தான்ட் (U Thant) பேச எழுந்து விட்டார்......
சபையில் பாட, அழைப்பு விடுக்கிறார்!
யாரை? = இசை அரசி என்று சொல்லப்பட்ட ஒருவரை!

Secretary General, U Thant பேசுவதைக் கேளுங்கள்!



அறிமுக உரை முடிந்து, இதோ...முதன் முதலாக, இந்திய இசை, அதிலும் தமிழ் இசை...ஐ.நா-வில் ஒலிக்கப் போகிறது!
இளங்கோ அடிகளின், சிலப்பதிகாரம்.....பொருளதிகார மண்ணிலே!!!

ஆனால், இதெல்லாம், அமெரிக்க மண்ணில் எடுபடுமா? இவிங்களுக்குப் பாடினால் புரியுமா?
அதுவும் அமெரிக்கர்கள் மட்டும் அல்லாது, பன்னாட்டு மக்களும் உள்ளார்கள்!

இதோ....தன் குழுவினருடன்...
In the Center Stage of the General Assembly Hall of the United Nations...


ராதா விஸ்வநாதன் - துணைப் பாடகர்
வி.வி. சுப்ரமணியம் - வயலின்
டி.கே.மூர்த்தி - மிருதங்கம்
டி.எச். வினாயக ராம் - கடம்
விஜய ராஜேந்திரன் - தம்பூரா

&
Harold Stramm - Piano
திருமதி. எம். எஸ். சுப்புலட்சுமி....

சொடுக்கி, கேட்டுக் கொண்டே....மேலும் படியுங்கள்!

May the Lord, forgive our sins
And gather all the nations
Here under this Uniting Roof!

To give up hate and fear
And learn to understand
Here under this Uniting Roof!

They took the risks of war
and dying, wished us take
the better risks of peace
Here under this Uniting Roof!

The God in everyman
is an atom too
of measureless potential!
Let us learn to find it
And explode it into lasting peace
Here under this Uniting Roof!!

May the Lord forgive our sins
Inspiring us to peace on Earth
Here under this Uniting Roof!!!



மொத்த அவையினரும் ஏதோ மந்திரிச்சி விட்டது போல் கட்டுண்டு கிடக்க...
இசை.....
இனிக்கவும் இனித்தது! புரியவும் புரிந்தது! இனி, எல்லாமே பொழிவு தான்!

அன்றைய இரவு, இந்திய இசை முத்துக்கள் ஒவ்வொன்றாக உலக அரங்கேற....
1. ஸ்ரீரங்க புர விகாரா - முத்துசாமி தீட்சிதர்
2. சார சாக்ஷா - சுவாதித் திருநாள்
3. சிவ சிவ சிவ போ - ஜெய சாமராஜ உடையார்

4. ஜகதோ-உத்தாரணா - புரந்தரதாசர்
5. ஹரி தும் ஹரோ - பக்த மீரா
6. மைத்ரீம் பஜத - சந்திரசேகர சரஸ்வதிகள்

&...
7. வடவரையை மத்தாக்கி - சிலப்பதிகாரம் - இளங்கோ அடிகள்!

மதுரைக் காண்டம் - ஆய்ச்சியர் குரவைக் கூத்துப் பாட்டை, பழைய பண்ணோடு இசைந்து, இப்படியும் பாட முடியுமா? ஆகா!
எம்.எஸ் பாடிய பின் தான், பலருக்கும் இது சிலப்பதிகார வரிகள் என்றே தெரிந்தது!

நாராயணா என்னாத நாவென்ன நாவே,
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே,
கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே?

-என்றெல்லாம் இளங்கோவடிகள் அடுக்குவதை, எம்.எஸ் அடுக்கி அடுக்கிப் பாடப் பாட, மொத்த அரங்கமும், சங்கத் தமிழ் கேட்டு இனிதே நிறைந்தது...
கேட்டார் பிணிக்கும் தகையவே, கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்!





மறு நாள் காலை....
நியூயார்க் நகரத்து தினத் தாள்களுக்கு எப்பமே ஓவர் குசும்பு! என்ன சொல்லிற்றோ ஏது சொல்லிற்றோ-ன்னு பக்கங்களைப் புரட்டினால்...

The New York Times said:
"Subbulakshmi's vocal communication transcends words.
The cliché of `the voice used as an instrument' never seemed more appropriate.
It could fly flutteringly or carry on a lively dialogue with the accompanists.
Subbulakshmi and her ensemble are a revelation to Western ears.
Their return can be awaited only with eagerness."

Dr. W. Adriaansz, Professor of Music, University of Washington, wrote:
"For many, the concert by Mrs. Subbulakshmi meant their first encounter with the music of South India
and it was extremely gratifying that in her the necessary factors for the basis of a successful contact between her music and a new audience
- highly developed artistry as well as stage presence - were so convincingly present... without any doubt (she) belongs to the best representants of this music

Here is the link to New York Times Archive! நியூயார்க் டைம்ஸ்-இன், அந்தக் கால நாளிதழின் நகல்!

இதில் வேடிக்கை என்னவென்றால்....நியூயார்க் பத்திரிகைகள் எல்லாம் இப்படி எழுத, நம் இந்தியச் சங்கங்களில் உள்ள சாஸ்த்ரீய இசை-இலக்கண விற்பன்னர்கள், எம்.எஸ்-ஐ, திட்டி எழுதினார்கள்! :)

எதுக்குத் திட்டு?
= பின்னே, உலக அரங்கிலே தமிழ்ப் பாட்டு பாடினால்? :)
போதாக்குறைக்கு, ஆங்கிலத்திலா துவக்குவது நமது சாஸ்த்ரீய மரபை?
என்னமோ, வெள்ளைக்காரர்களுக்குப் புரிய வேணுமே என்பதற்காக, நம்ம பாரம்பர்யத்தை அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டது போல் அல்லவா ஆகி விட்டது?
:)

அடப் பாவிங்களா! தமிழ் அர்ச்சனைக்கு சொல்லும் காரணங்களையே சொல்றீங்களே! ஊருக்குப் புது இசையை, புரியும் மொழியில் கொடுத்துத் தானே லயிப்பை உண்டாக்க முடியும்!
அப்படிப் பார்த்தா, வயலின் என்பதே நம்ம பாரம்பரியக் கருவியா என்ன? அதைத் தானே எல்லாக் கச்சேரிகளிலும் கட்டிக்கிட்டு இருக்கீய? :)


* இசைக்கு ச-ரி-க-ம என்று இலக்கணங்கள் இருக்கலாம்!
* குரல் மிகவும் முக்கியம்!
* பாட்டு வரிகள் முக்கியம்!
* இசை அமைப்பு முக்கியம்!
* மொழி புரிந்தால் மக்களின் ரசனை இன்னும் நன்றாக இருக்கும்!

ஆனால் ஆனால் ஆனால்....

* பட்டும் நகையும் என்று ஆடம்பரம் காட்டாது...
* சக வித்வான்களைத் திரும்பிப் பார்த்து, ஜால வித்தை செய்யாது...
* தான் தான் என்ற பெருமையும் மறந்து...
* ஒரு கட்டத்தில், பார்வையாளர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கூட மறந்து...

சாஸ்த்ரீய சங்கீதத்திலே, பஜனை மாதிரி தாளமெல்லாம் வச்சிக்கிட்டாப் பாடுவது? என்ற கேலி எல்லாம் அடங்கிப் போய்...
குறை ஒன்றும் இல்லை கண்ணா, இறைவாஆஆஆ என்று....

பாட்டிலே, ஆத்ம சமர்ப்பணம் என்னும் சரணாகதி...
பித்தளைத் தாளங்களை, தன் மார்போடு சேர்த்துக் கொண்டு...
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா...என்னும் போது

பாடுபவர் ஒன்றுகிறாரா?
இல்லை....
கேட்பவர்கள் சரணாகதி செய்கிறார்களா?

இது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை!
பாட்டின் "சாதுர்யங்களையும்" மறந்து,
அவனிடத்திலே தன்னை ஒப்புக் கொடுத்தால் தான், இப்படி அமைகிறது!


எம்.எஸ் அம்மா சிறு வயதில் அழகு என்று சொல்லுவார்கள்! தேவ தாசி குலம் அல்லவா என்றெல்லாம் சிலர் பேசுவார்கள்!
ஆனால் எனக்கென்னமோ, அவர் வயதாக வயதாகத் தான், அவர் முகம் அப்படி ஒளிர்கிறது! அப்படி அழகு! நீங்களே பாருங்கள்!



அன்றைய கால கட்டத்தில்,
* தமிழ்ப் பாடல்களைப் பாடினால் தீட்டு என்று மேடையைக் கழுவி விட்ட காலத்தில்...
* பல முன்னணி வித்வான்கள், சங்கீத அறிவு ஜீவிகளைப் பகைத்துக் கொள்ளத் தயங்கிய நேரத்தில்...
* துணிந்து நின்று.......தமிழ் இசைக்காகத் தன் குரலை "முதலில்" ஒலித்தவர் எம்.எஸ்!

* பின்னர், ஒவ்வொரு கலைஞராக, தமிழ் இசையைக் கொஞ்சம் கொஞ்சமாக மேடைகளில் "பரவலாக" புழங்கத் துவங்கினார்கள்!
* ஆழ்வார்களின் ஈரத் தமிழும், நாயன்மார்களின் தெய்வத் தமிழும், இசை மேடைகளில் இடம் கண்டன!

* ஒலிப்பது மட்டும் அல்லாமல், பின்னணியில் பல பாடல்களை ஆராய்ச்சி செய்து திரட்டி,
* சிலப்பதிகாரத்தைக் கூட, பொது மக்களுக்குக் கொடுத்து ரசிக்க வைக்க முடியும் என்பதை....
* பதிவுலக வாய்ப் பேச்சால்/மேடைப் பேச்சால் அல்லாது, செயலால் செய்து காட்டிய பெண்மணி!

அவர் மறைந்த சில நாட்களிலேயே, ஆந்திர அரசு மட்டுமே, திருப்பதி நுழைவிலே சிலை வைத்து, அவர் நினைவைப் போற்றியது!
அரசியல்வாதிக்கு, நடிகருக்கு - அதுவும் ஆண் நடிகருக்குச் சிலை உண்டு! ஆனால் முதன் முதலாக....ஒரு பெண் பாடகிக்கு....தமிழ் நாட்டப் பாடகிக்கு...தெலுங்கு மண்ணிலே சிலை!

எம். எஸ். அம்மா - நீக்கு வெய்யி தண்டாலு! கோடி சாஷ்டாங்காலு!

திருவேங்கடமுடையானின் தமிழ்ப் பாசுரம் எல்லாம் ஒலி வடிவம் கொடுத்து,
தமிழறிவு இல்லாத என் போன்றவர்களுக்கும்....
தெய்வத் தமிழைப் படிக்க மட்டுமல்லாது....
இசையால் தமிழை "அனுபவிக்கவும்" செய்த பெருமைக்கு...

இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
உன்னால், இனி வரும் தமிழ்த் தலைமுறைகெல்லாம் பல்லாண்டு பல்லாண்டு!

(எம்.எஸ் நினைவு நாள் - Dec 11க்கு எழுத நினைத்து, இன்றே முடிந்தது)

Saturday, December 11, 2010

MS ஊஞ்சல் பாட்டு! டோலாயாம் சல டோலாயாம்!

கண்ணன் பாட்டில் இது 197-ஆம் இடுகை!
இன்னும் சில நாளில்...மார்கழியில்...200! :)
மொத்த பேரும், குழுவாக என்ன செய்யலாம்-ன்னு யோசனை சொல்லுங்க!




வழக்கமா, இந்தக் கேஆரெஸ் பய, சினிமாப் பாட்டைத் தான் கண்ணன் பாட்டில் போடுவான்! மீண்டும் கோகிலா படத்தில், கமல் பாடும் போது, "கண்ணா"-ன்னு ஒத்தைச் சொல் வந்துறக் கூடாது! அதையும் கண்ணன் பாட்டில் கொண்டாந்து போடும் அவன், இன்னிக்கி நம்ம திராச ஐயாவைப் பார்த்து திருந்திட்டான்! :)

திராச ஐயா தான், நல்ல மரபிசைப் பாடல்களை, கர்நாடக இசைப் பாடல்களை வலையேற்றுபவர்! அவர் வழியில், இன்னிக்கி கொஞ்சம் போல் திருந்தி...
இதோ எம்.எஸ் அம்மா அவர்கள் பாடிய ஊஞ்சல் பாட்டு ஒன்னைப் பார்க்கலாம்!

எம்.எஸ்-க்கு என்றே சில பாடல்கள் அமைந்து விடும்!
வேறு யார் பாடினாலும், அதிலும் எம்.எஸ் சாயல் தான் இருக்கும்!
அப்படியான பாடல்களில் இது ஒன்று!

திருவேங்கடமுடையானுக்கு என்றே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த அன்னமய்யா!
பெருமாள் ஊஞ்சலில் வேகமாக ஆடுவதை,
அப்படியே வார்த்தைகளில் வேகமாக நகர்த்திக் காட்டுகிறார்!

கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்ற பாரதியின் வாக்கு...
கூடவே, தமிழில், மெட்டு மாறாமால், தர முயன்றுள்ளேன்!
பாடிப் பார்த்து, பொருளும் இசையும் பொருந்தி வருகிறதா-ன்னு சொல்லுங்க!

ஊஞ்சல் போய் வருவது போலவே, பாடலும் போய்ப் போய் வருகிறது! டோலாயாம் சல டோலாயாம்! ஆடு பொன்னூஞ்சல்!



இங்கே, எம்.எஸ் குரலில் பாடலைக் கேட்டுக் கொண்டே வாசிக்கவும்!

ராகம்: கமாஸ்
தாளம்: ஆதி
குரல்: எம்.எஸ்.சுப்புலட்சுமி
வரி: அன்னமாச்சார்யர்

டோலாயாம் சல டோலாயாம் ஹரே டோலாயாம்
பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல், அரி பொன்னூஞ்சல்

மீன கூர்ம வராக
மிருக பதி அவதார
தானவ அறே குண செளரே
தரணீ தர மரு ஜனக
(டோலாயாம் சல டோலாயாம்)

மீனும் ஆமை கேழலாய்
ஆளரி அவ தாரமாய்
பர...கால குண...வீர
பாரைத் தாங்கும் மாரன் எந்தை
(பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல்)

வாமன ராமா ராமா
வர கிருஷ்ண அவதார
சியாமளாங்க ரங்க ரங்க
சாமஜ வரத முர ஹரண
(டோலாயாம் சல டோலாயாம்)

குறள் பல ராமா ராமா
குன்றம் எடுத்த வா-கண்ணா
கருத்த மேனி பொருத்த ரங்க
ஆனைக்கு அருளி, முரனை முடித்து
(பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல்)

தாருண புத்த கல்கி
தச வித அவதார
ஷீர பாணே கோ சமானே
ஸ்ரீவேங்கட கிரி கூட நிலைய
(டோலாயாம் சல டோலாயாம்)

சீருடை புத்த கல்கீ
ஐந்தும் ஐந்தும் அவதார!
ஐம்-படைகள் ஏந்தும் மால்-திரு
வேங் கடம் தனில் வாழும் பெருமாள்!
(பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல்)



பாட்டை நாதசுரத்தில் கேட்கலீன்னா எப்படி? இதோ
நாதசுரம் - ஷேக் சின்ன மெளலானா

அப்படியே, இதர கலைஞர்களின் குரலில்...
* சுதா ரகுநாதன்
* மும்பை சகோதரிகள்
* சைந்தவி

எல்லாத்துக்கும் மேலா, எம்.எஸ் - B&W Video!
அப்பவே ரொம்ப அழகா இருக்காங்க! :)
ஊஞ்சல் வேகமாப் போவதை, கையால் அசைத்துக் காட்டிச் சிரிக்கிறாங்க! 0:22 இல் பாருங்க!

Wednesday, November 24, 2010

அந்த நாளும் வந்திடாதோ !

மீரா திரைப்படத்தில் இருந்து இன்னுமொரு அற்புதமான பாடல். ராஜ்ஜியத்தை, உறவினர்களைத் துறந்த மீரா, தன் கிரிதரனைத் தேடி கால்நடையாக யாத்திரை மேற்கொள்கிறாள். பல ஊர்களில் அலைந்து திரிந்து பிருந்தாவனம் அடைகிறாள். கண்ணன் வளர்ந்த இடம் என்று அறிந்தவுடன் அவள் உள்ளத்தில் உதித்த பாடலாக இந்தப் பாடல் வருகிறது. உங்களுக்கும் பிடிக்கலாம். :-)

பாடலை எம்.எஸ் அம்மாவின் அற்புதமான குரலில் இங்கே கேட்கலாம்.

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ ! நந்த குமாரன்
விந்தை புரிந்த அந்த நாளும் வந்திடாதோ !

அனைவரும் கூடி அவன் புகழ் பாடி
நிர்மல யமுனா நதியினில் ஆடி
வனம் வனம் திரிந்து வரதனைத் தேடி 
அனுதினம் அமுதனை தரிசனம் செய்த (அந்த)
மானினம் நாணிடும் மங்கையரோடு
மாதவத்தோரும் மயங்கிடுமாறு
தேனினும் இனித்திடும் தீங்குழல் ஊதி
மானிடர் தேவரின் மேல் என செய்தான் !
கானனம் அருங்கானனம் சென்று ஆநிரை கன்று
கருணை மாமுகில் மேய்த்திட - அன்று
புனித மேனியில் புழுதியும் கண்டு
வானோர் பூமியை விழைந்ததும் உண்டு

போதமிலா ஒரு பேதை மீரா
ப்ரபு கிரிதாரி இதய சஞ்சாரி 
வேதமும் வேதியர் விரிஞ்சனும் தேடும்
பாத மலர்கள் நோக நடந்த (அந்த)

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP