Showing posts with label கல்யாணி மேனன். Show all posts
Showing posts with label கல்யாணி மேனன். Show all posts

Friday, June 22, 2007

57. "தல" அஜீத் படத்தில் "ரண்டக்க" பாடும் கண்ணன் பாட்டு!

"தல" அஜீத்குமார், லைலா நடித்து வந்த படம் பரமசிவன்!
பி.வாசு நம்ம தல-ய இயக்குகிறார்!

கல்யாணி மேனன் - இவங்க ஏற்கனவே மார்னிங் ராகா படத்துல பிரபலமாகி இருந்தாங்க! அலை பாயுதே பாட்டில் அலை பாயுதே-ன்னு இவங்களும் பாடுவாங்க!
சைந்தவி-இவங்க நான் கேள்விப்பட்ட வரைக்கும் +2 மாணவி...
இதுக்கு மேல விவரமானவங்க வந்து சொல்லுங்கப்பூ!
இவங்க ரண்டக்க ரண்டக்க பாட்டின் பிரபலம்!


இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பாடும் பாட்டு!
ஒரு கண்ணன் பாட்டு...
சின்னப் பாட்டு தான் என்றாலும் சிறப்பான பாட்டு...உங்களுக்கும் பிடிக்கும், கேட்டுப் பாருங்க!

மலைநாடான் ஐயாவுக்குப் பிடித்தமான பாடல் என்று நேற்று பேசும் போது சொன்னார்!
மாயன் கண்ணன் முல்லை நாட்டின் தெய்வம்.
முல்லைத் திணை வைத்த பதிவருக்கு, இதோ கண்ணன் பாட்டிலே நேயர் விருப்பம்! - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா!

கேட்டு மகிழ இதோ சுட்டி

பாட்டைப் பார்க்கணுமா? இந்தாங்கோவ்!


playing-vina



கண்ணன் மணி வண்ணன் - அவன் அருமை சொல்லப் போமோ!
மன்னன் மழை வண்ணன் - அவன் மகிமை எளிய தாமோ!

ஆயன் அலங் காரன் - கடல் பாயில் துயிலானோ
மாயன் மலர் தூயன் - என் இசைக்கே இசையானோ

(கண்ணன் மணி வண்ணன்)

பாற்கடலில் அவன் இருக்க
பாம்பணையாய் நான் இருப்பேன்
துவாரகையில் அவன் வசிக்க
துளசி வனம் ஆயிருப்பேன்


கீதையினை அவன் விதைக்க
பாதையிலே விழுந்திருப்பேன்
யமுனை நதி தீரத்திலே
ராதை எனக் காத்திருப்பேன்


வெண்ணைய் திருடும்
பூவிரல் என்னைத் தழுவ
ஆசையில் கன்னம் மிளிர
மாணவன் இன்னல் புரிய

நடந்தது கனவா நனவா
மயக்கத்தில் கிடந்த நான்
இன்னும் என்ன சொல்ல ஆ....

(கண்ணன் மணி வண்ணன்)


படம்: பரமசிவன்
வரிகள்: Dr. க்ருதியா
குரல்: கல்யாணி மேனன், சைந்தவி, லக்ஷ்மி ரங்கராஜன்
இசை: வித்யாசாகர்

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP