Showing posts with label Meera. Show all posts
Showing posts with label Meera. Show all posts

Monday, January 30, 2012

ஹரி தும ஹரோ! (காந்தி - மீரா - எம்.எஸ்)

இந்தப் பாடல் காந்தியண்ணலின் விருப்பப் பாடல்! ஒரு நாள் எம்.எஸ் வந்திருந்த போது, அவர் குரலில் கேட்க ஆசைப்பட்டு, திடீரென்று அவரைப் பாடச் சொன்னார்!
எம்.எஸ்.அம்மா, 'தனக்கு இந்தப் பாடலை எப்படிப் பாடணும் என்பது தெரியாதே, முன்னே பின்னே இதைப் பாடியதில்லையே' எனத் தயங்க...

"அப்படியானால் பரவாயில்லை, நீ பாட வேணாம், உன் குரலில் இந்தப் பாட்டைப் பேசியாச்சும் காட்டு" என அண்ணல் கேட்க...
அதில் நெகிழ்ந்து போய்...பாடலையும் பொருளையும் கற்றுக் கொண்டு...அடுத்த நாள் பதிவு செய்து, அண்ணலுக்கு Air Mail-இல் பிறந்தநாள் பரிசாக அனுப்பி வைத்தார்!

இந்தப் பாடலையே, அண்ணலின் படுகொலைக்குப் பின், பல முறை வானொலியில் ஒலிபரப்பினார்கள்!


ஹரி.........
தும ஹரோ...ஜன் கி பீர்

அரி...அய்யா...
அன்பரின் துயரம் தீர்!
--------



திரெளபதி கி  லாஜ் ராக்ஹி......
தும படயோ சீர்
(ஹரி தும ஹரோ)

திரெளபதை தன்-மானம் காக்க.....
துகில் வளர்க்க விரைந்தீர்!
(அரி.....அய்யா)
--------

பக்த காரண, ரூப நரஹரி,
தர்யோ ஆப் சரீர்
ஹிரண்ய கஸ்யப, மார லீந்ஹோ,

தர்யோ நாஹின தீர்
(ஹரி தும ஹரோ)


சிறுவன் பொருட்டு, ஆள்-அரி உருவம்,
நன்று நீர் எடுத்தீர்!
சீறும் இரணியன்,  சாபம் தொலைந்திட,

அன்று நீர் முடித்தீர்!
(அரி.....அய்யா)

--------

பூடதே கஜ, ராஜ ராக்யோ,
கியோ பாஹர நீர்
தாச மீரா, லால கிரதர,

துக் ஜஹான் தஹான் பீர்
(ஹரி தும ஹரோ)


காதல் களிறின், காலைத் தூக்கி,
காத்து அருள் செய்தீர்!
தாச மீரா, கிரி-தாரி இங்கோ,

துக்க வலி பெய்தீர்!
(அரி.....அய்யா)

வரிகள்: மீரா
குரல்: எம்.எஸ்.சுப்புலட்சுமி
மொழி: இந்தி
Jan 30 - அண்ணலின் நினைவு நாள்!

Wednesday, August 24, 2011

கிரிதாரிக்கு திருநீர்


மீரா என்று ஒரு முறை கூறிப்பார்க்கின் இனம் விளங்காத ஒரு வலி நம்மை பற்றிக் கொண்டு விடுகிறது. நாம் இப்போது அறியப் போகும் அவளின் பாடல், அவளுடைய இளம் பிராயத்தினது அன்று, தன்னுடைய முதிர்ந்த அகவையில் இயற்றியது. தன்னை மறுதளித்து கொண்டே வருகிறானே இந்த மாய கிரிதாரி; ஒருவேளை அவனுக்கு அவளின் பிரேமை என்பதும் சலித்தும் போனதோ? அன்று பெண்கள் என்றால் ஒவ்வாத நோயும் கொண்டானோ ? இல்லை துறவியாகி விட்டானோ ? என்று பலவாறு எண்ண அலைகள் தோன்றி மறைந்தன அந்த அடிமைக்கு!

அவன் ஒரு வேளை துறவியாக மாறிவிட்டனானால்; இனி ஒரு முறை எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்ப்பதற்கில்லை, தன்னிடம் வாராததர்க்கும் காரணம் கேட்டு அறிவதற்கில்லை; பிரேம பக்தியில் தான் அவிழ்க்க இயலாத புதிர்களின் விடைகளை அறிவதர்க்குமில்லை. ஹே ! கிரிதாரி நீ துறவியாகவே ஆகியிருப்பினும் எனக்கு ஒரு வழி சொல்லியே தீர வேண்டும்..

அந்தோ! மாயவ .. நீ துறவியாக வந்து சேர்ந்தால், உனக்கு என்னால் என்னதான் தர இயலும். வனமாலை தான் தொடுத்து சூட்ட முடியுமா ? பட்டு பீதாம்பரங்களை உடுத்த தர முடியுமா ? சுகந்தம் வீசும் திரவியங்களை அள்ளி உன் மார்பில் பூச முடியுமா ? உன் கண்களை தீரா மோகத்துடன் பார்க்க முடியுமா ? கட்டி அணைக்க முடியுமா ?
இல்லை மூச்சு முட்ட முத்தம்தான் இட முடியுமா ? எதற்கும் இம்மி அளவும் சாத்தியம் இல்லை..

அந்த துறவிக்கு அவளால் தர இயன்ற ஏதேனும் ஒன்று உண்டா? உண்டென்றால் அது என்ன? துறவிக்கு உகந்த வஸ்து ..மீராவால் தர இயன்ற ஒன்று.. சாம்பல்!

ஆம், துறவியாக வரும் அவனுக்கு இவள் தர முடிவு செய்தது, துறவிகள் அங்கமெல்லாம் பூசிக்கொள்ளும் சாம்பல்தான்.. அதென்ன அவ்வளவு சாதாரணமான ஒரு வஸ்துவை தருகிராளே, என்று யாரும் எண்ணக் கூடாது என்றேதான், அதன் செய்முறையையும் தன் பாடலில் இயற்றி உள்ளாள். துறவியும் விரும்பும் சாம்பலாகவே மாறி அவன் அங்கம் தழுவி நிற்கவும் தயாரானாள்.

ஹே பிரபு.. நீ சந்தனமென்றால் நான் தண்ணீர்..
ஹே பிரபு.. நீ சூரியனென்றால் நான் சந்திரன்
ஹே பிரபு.. நீ முத்துக்கள் என்றால் நான் நூல்..
ஹே பிரபு.. நீ துறவியானால் நான் சாம்பல்..
ஹே பிரபு..நீ கிரிதாரி நான் உந்தன் தாசி..

பாடல்..


மத் ஜா! மத் ஜா ! மத் ஜா ! - ஜோகி ..
பாவ் பரூன் மே.. சேரி தேரி..

செல்லாய்! செல்லாய்! செல்லாய்! ஸ்வாமி..
பாதம் பணிந்தேன் பேதை உந்தன்..

பிரேம பக்தி கி பெந்தோ ஹி ந்யாரோ..
ஹம்கோ கேல் பதா ஜா..

பிரேம பக்தியின் பாதையில் புதிர்கள் ..
பகர்ந்திடு பதில் ஒன்று எனக்கு ..

அகர் சந்தன் கி சிதா பனாஊன்
அப்னே ஹாட் ஜலா ஜா

சந்தனத்து விறகினில் சிதையொன்று செய்தால்
உந்தனது கையினால் எரியூட்டு..

ஜல் பல் பை பஸ்முஹீ டெரி..
அப்னே அங்கு லகா ஜா
மத் ஜா! மத் ஜா ! மத் ஜா ! - ஜோகி ..

என் சவமது எரிந்து சாம்பலாய் குறைந்தால்
உனது மேனியில் பூசிக்கொள் - ஸ்வாமி
செல்லாய்! செல்லாய்! செல்லாய்! ஸ்வாமி..

மீரா கஹே பிரபு கிரிதர நாகர
ஜோத் சே ஜோத் மிலா ஜா - ஜோகி ..

மீரா கோரும் பிரபு கிரிதர நாகர
உந்தன் ஜோதியில் கலந்திடு என்னை ..
செல்லாய்! செல்லாய்! செல்லாய்! ஸ்வாமி..

Sunday, July 24, 2011

வீரராகவர் விரதம் - 1



 சென்ற ஞாயிற்றுக்கிழமை திருவல்லிக்கேணியில் நாரதரைச் சந்திக்க நேர்ந்தது. நாரதர் என்றால் யாரோ எனக்கு மட்டும் தெரிந்தவர் என்று எண்ணிவிட வேண்டாம். நம் அனைவருக்கும் நன்றாகத் தெரிந்தவர், தேவரிஷி நாரதர் தான். இடையில் வீணையுடன் (திரைப்படங்களில் தம்புராவுடன்) "நாராயணா ! நாராயணா !" என்று உச்சரித்துக் கொண்டே அலையும் பாகவத உத்தமரே தான். அதிர்ச்சியோ ஆச்சர்யமோ அடையாமல் நம்பிக்கையுடன் மேற்கொண்டு படிக்கவும்.

அல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வேதவல்லி தாயார் சன்னிதிக்கு எதிரே ஒரு சிறு மண்டபம் இருக்கும். புளியோதரை, சக்கரைப் பொங்கல், அதிரசம், அப்பம் என்று எதை வாங்கினாலும், இங்கே வந்து அமர்ந்து சாப்பிடுவது சிலர் வழக்கம். அம்மாதிரி நானும் அன்று இரவு அங்கு அமர்ந்துக் கொண்டு, தட்டை(வடை) சாப்பிட்டுக் கொண்டே மனதில் கண்ணனைப் பலவாறாகத் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தேன். பல விதமான எண்ணங்கள். கவலை மேல் கவலைகள். மனித பிறவியே ஒரு வீணான பிறவி என்று தோன்றிற்று. திடீரென எல்லாவற்றுக்கும் காரணம் நாம் நிறைய படித்தது தான் என்று தோன்றியது. அதனால் அன்றோ இந்தக் கணினித் துறையில் சிக்கிக் கொண்டு எதற்கும் ஒழுங்கான நேரம் கிடைக்காமல் அல்லாடுகிறோம் என்று தோன்றியது. வேலையை விட்டு விட்டு விட்டலனே கதி என்று கிடக்கும் அளவிற்கு உள்ளத் துணிவும் இல்லை. ஏன் நிறைய படித்தோம் என்று தீவிரமாகச் சிந்தனை செய்து கொண்டிருந்தேன்.
திடீரென எல்லாவற்றிற்கும் மூலக் காரணம் தெய்வம் தான் என்று மனம் அடித்துச் சொல்லியது. நம்மை இவ்வளவு பாடு படுத்துவது கண்ணன் என்றால் அவனையே திட்டுவோம் என்று முடிவு செய்து தான் பலவாறு திட்டிக் கொண்டிருந்தேன். "என்னைப் பற்றி உனக்குக் கொஞ்சமாவது அக்கறை இருக்கிறதா? இப்படியே வாழ்நாள் எல்லாம் கணினி முன்பு உட்கார்ந்து கொண்டு இருக்கிறேனே, நல்ல சங்கீதம் கேட்க நேரம் கிடைக்கிறதா? நல்ல புத்தகங்கள் படிக்க முடிகிறதா? அல்லது நண்பர்களுடன் நேரம் செலவழிக்க முடிகிறதா? ஒரு காலத்தில் தினமும் உன் வீட்டு சக்கரைப் பொங்கல் உண்டு மகிழ்ந்தேனே, இப்பொழுது வாரம் ஒரு முறை பொங்கல் கிடைப்பதே அரும்பாடாய் இருக்கிறதே ! உன் மனைவி ருக்மிணி பிராட்டிக்கும் என் மேல் அக்கறை இல்லை. ராமனுக்கும் இல்லை. சீதைக்கும் இல்லை. அரங்கனுக்கும் இல்லை. யாருக்கும் இல்லை. எல்லோரும் மாலை வாங்கி வந்தால் மட்டும் சந்தோஷமாக வாங்கி சாற்றிக் கொள்கிறீர்கள். வெறும் கையுடன் வந்தால் பட்டர் மூலமாக, 'மாலை ஒன்றும் இல்லையா?' என்று கேள்வி மட்டும் கேட்கிறீர்கள் !" என்று பலவாறாக எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன்.  

தாயார் சன்னிதியில் மேல் மாடங்களில் அமைதியாக அமர்ந்திருந்த புறாக்கள் மனதில் வேறு புதுச் சிந்தனைகளைத் தோற்றுவித்தன. அவற்றின் கரு அடுத்தப் பிறவியில் என்ன உயிரினமாகப் பிறக்கலாம் என்பதே. இவ்வாறு தீவிர சிந்தனை செய்து கொண்டிருக்கும் பொழுது தான், த்ரிலோக சஞ்சாரியான நாரதர் என் முன்னர் பிரசன்னமானார். ஆயிரம் கோடி சூர்யப் பிரகாசம் என்பார்களே, அது இப்படித் தான் இருக்குமோ என்று எண்ணும் அளவிலான ஒரு தெய்விக ஒளிவட்டத்திற்குள் தேவரிஷி நாரதர் திவ்ய தரிசனம் தந்தார். "நாராயண நாராயண ! கண்ணனின் நண்ப ! கவலைகள் மறப்பாய் ! " என்ற சொற்கள் என் காதுகளில் ஒலித்தன. காண்பது கனவா இல்லை நனவா என்று தலைகால் புரியாமல், பேச்சு ஒன்றும் வராமல் திக்கித் திணறி "ஹலோ நாரதரே !" என்ற வார்த்தைகள் என் நாவில் இருந்து வெளிப்பட்டு என்னை ஆச்சர்யப்படுத்தின. "அடச்சே! இதென்ன ! இரு கை கூப்பி நாரதருக்கு நமஸ்காரம் அல்லது வணக்கம் என்று சொல்லாமல் இவ்வாறாக மரியாதை இல்லாமல் பேசினோமே !" என்று உள்மனம் கடிந்துக் கொண்டது. நாரதர் ஏன் அப்பொழுது வந்தார், அவருடன் நடந்த உரையாடல் பற்றி எல்லாம் இந்தப் பதிவிலேயே சொல்லிவிட முடியாது. ஆரம்பத்தில் நடந்தவற்றை மட்டும் சொல்கிறேன்.

என் உள்மனம் நினைத்ததை எப்படியோ அறிந்த நாரதர், "ராதா ! நீ கண்ணனிடம் மாறாத நட்புரிமை கொண்டுள்ளதால் அதன் தாக்கம் அவனைச் சேர்ந்தவர்களிடமும் வெளிப்படுகிறது. நட்பில் மரியாதை பார்க்க வேண்டாம். என்னையும் உனது நண்பராகப்   பாவிக்கலாம்." என்று செவிக்கும் மனதிற்கும் இனிமை தரும் வார்த்தைகளைப் பேசினார்.

"ஆஹா ! உங்களைக் கண்டதில் என் உள்ளத்தில் புதுத் தெம்பு ஏற்ப்பட்டுள்ளது. என் கவலைகள் எல்லாம் பறந்துவிட்டன ! " என்று உற்சாகத்துடன் பேசினேன்.

"நாராயண ! நாரயண ! இது தான் கலி காலம் என்பதோ? உனக்கே கவலை வந்திருக்கிறதே ! " என்றார் நாரதர். "உன்னை இவ்வளவு தீவிரமாகச் சிந்திக்கும்படி செய்த விஷயம் தான் என்ன ராதா ? என்னிடம் சொன்னால் தக்க உபாயம் சொல்வேன்", என்றார் நாரதர்.

நாரதர் இவ்வாறு கேட்டவுடன் எனக்கு என்ன பதில் உரைப்பது என்று தெரியவில்லை. நண்பர் என்று சொல்லிவிட்ட போதிலும், சற்று முன்னர் எல்லோரையும் குறை சொல்லிக் கொண்டிருந்தக் கதையை எல்லாம் கேட்டால் என்ன நினைப்பாரோ என்று தோன்றியது.  நமக்கு பக்தி குறைவு தான். நல்ல மன நிலையில் இருந்தால் எல்லோரையும் போற்றுவோம். இல்லையேல் வசைபாடுவோம். ஆனால் இதை எல்லாம் நாரதரிடம் சொல்லிக் கொள்ளத் தேவையில்லை என்று தோன்றியது.

திடீரென, சற்று முன்னர் இருந்த எனது கவலைகள் எல்லாம் எனக்கே மிகவும் அற்பமாகத் தோன்றின. "அது ஒன்றும் பெரிய விஷயம் எல்லாம் இல்லை நாரதரே ! கண்ணன் பாடலில் இரண்டு உருக்கமானப் பாடல்கள் பதிவு செய்யலாம் என்று எண்ணம். ரொம்ப நாள் கழித்து பதிவு எழுதப் போகிறேன். எப்படிப் பதிவிடுவது என்று சிந்தனை செய்து கொண்டிருந்தேன்" என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஒரு கதையைத் திரித்தேன்.
த்ரிகால ஞானியான நாரதர், நான் என்ன நினைத்துக் கொண்டிருந்தேன் என்பதை அறியாதவரா? ஆனாலும் பெரியோர் என்றும் பெரியோரே ! பாகவதர்களில் சிறந்தவர், நற்குண நாரதர், என்னை சங்கடத்தில் ஆழ்த்தாமல், என் கதையை உண்மையாக்கி அவை என்ன பாடல்கள் என்று கேட்க, உரையாடல் மேலும் வளர்ந்தது. அவருடன் பேசியதில் துவாரகாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்று ஒரு பாடலுடன் சம்பந்தம் பெற்றிருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். இரண்டில், "பக்த மீரா" படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை முதலில் இடுவது என்றும், நாரதர் எனக்கு சொன்ன சில தகவல்களுடன் இரண்டாம் பாடலை பதிவு செய்வது என்றும் நிச்சயம் செய்தேன். அதன்படி, மீரா படப்பாடல் வரிகளைக் கீழே பார்க்கலாம். இரவின் அல்லது பின்னிரவின் அமைதியான நேரத்தில் கேட்க வேண்டிய அற்புதமான பாடல்.

எம்.எஸ் அம்மாவின் அற்புதமான குரலில் அமைந்துள்ள இந்தப் பாடலை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


சராசரம் உன்னை யாவும் தேடுமே...
மறைகளும் மகிழ்ந்து உன்னைப் பாடுமே....ஹே ப்ரபோ !
நிராசையால் நைந்த என் நெஞ்சமும்
பராவும் உன் பாதாரவிந்தமே !
உன்னையே எனதுயிர் துணை என்று
உவந்ததென் தவறோ ஐயா !
கனவிலும் உன்னை அன்றி நினைவுண்டோ
கதி உன் கழலின் நிழலே அன்றோ !
வானகம் வையகம் தரும் இன்பங்களைக்
கருதியதும் உண்டா?
இரங்குவதறிந்திலையா ? மறந்திடலாகாதையா !

இரவெலாம் கண்ணில் நீர் அருவி பெருகும் !
அனலில் மெழுகென அகமும் உருகும் !
"ஹரி ஹரீ" என நாவும் கதறும் !
இதயமும் பதறும் ஐயா !

பாத மலரில் படிந்திடும் வண்டாய்
நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய் !
அடியாள் மீரா அன்றும் இன்றும் உன்
அடைக்கலம் ஐயா !

Friday, March 25, 2011

ஏட்டி.. நானோர் காதல் கிறுக்கி...



ராஜபுத்தானத்து அரசிகள் அந்த புரத்தை விட்டு வெளியே வந்ததாக சூரியனும் அறிகிலன். குடும்பத்து மூத்தவர்களுக்கு முன்பும் முகத்திரை அணிந்தே வலம் வந்தனர். நட்டு மக்களில் ஒருவரும் அவர்களின் வதனத்தை கண்டு அறிந்திலர்.

ஆனால், மீரா என்ற அந்த கவி படும் குயில், அரண்மனை எனும் ஸ்வர்ண கூண்டை விட்டு பறக்க வேண்டியதாயிற்று. அவளின் கிரிதரியைத் தேடி , அவளின் ஜீவதாரத்தைத் தேடி. அவளுடைய பதினாறாம் நூற்றாண்டு சமூகத்தினில், பெண்மை மற்றும் கலாச்சாரம் சார்ந்த கட்டுப்பாடுகளை தகர்த்தெறிவது ஒரு மகா பாவமாக கருதப்பட்டது.

இதற்க்கெல்லாம் மேலாக கிரிதாரியை அடையும் இயக்கத்தின் ஒரு முகமாக, தன்னை அவள் ராஜபுத்தானது சுட்டெரிக்கும் பாலைவனத்தின் நடுவே கண்டாள். மீராவின் மிருதுவான பாதங்களை மென்மையான மணல் துகள்கள் பொசுக்கியது. அலைந்தாள் திரிந்தாள், அந்த கருணையற்ற பாலையோ அவளுக்கு தர இயன்றதல்லாம் உடல் முழுதும் கொப்பளங்களும், புண்களும், முட்கீரல்களும்தான்.
தன் கிரிதாரியைத் தேடி அவள் பாலை நிலத்தில் திரிந்தது ஓர் வெப்பமான நிஜம். அந்த தருணத்திலும் அவளின் உடற் காயங்களை விட, மனக் காயங்களின் வலியானது மிகுந்தது. அழுதாள் ஆர்ப்பரித்தாள், அவன் வரவில்லை. தான் இத்துனை துயரம் எய்தியும் தன்னிடம் இரங்காத கிரிதரனின் இயல்பை எண்ணி வாடினாள்.
அவள் தன் உயிரையே உருக்கி அழும் அவ்வமயம், சூடான புழுதிப்புயல் வீசியது. எங்கும் தனிமை .. மாயவனை காணாள், மருகி நின்றாள். அவள் துன்பம் அனைத்தையும் ஒன்று திரட்டி கவிதை புனைந்தாள். அது கவிதை அல்ல, அவளின் தினக் குறிப்பு. அவள் பட்ட வேதனைகளை கூறும் ஒரு கண்ணாடி. அவள் காதல் ஆழத்தை நினைவுறுத்தும் ஒரு மேவாரி மொழிக் கிணறு.

ஹேரி மேய்ந தோ பிரேம் திவானி
மேரோ தரத் ந ஜானே கோயி..

எந்தன் வலி அறிவார் யாரும் இல்லை
ஏட்டி.. நானோர் காதல் கிறுக்கி... எந்தன்

காயல் கி கதி காயல் ஜானே
கி ஜின் காயல் ஹோய ..

ஜோஹர் கி கதி ஜோஹர் ஜானே
கி ஜின் ஜோஹர் ஹோய.. மேரோ

காயத்தின் வலியை காயமடைந்தவளே அறிவள்..
தீயின் வெம்மையை தீக்குளித்தவளே அறிவள்..
எந்தன் வலி அறிவர் யாரும் இல்லை...

சூலி ஊபரு சேஜ் ஹமாரே ; சொவனு கிசு விது ஹோய ?
ககனு மண்டலு மேய்; சேஜ் பியா கே கிசு விது மீலன்னு ஹோய ? மேரோ

முட்களின் மீது மஞ்சம் எனது நித்திரை எவ்விதமே..?
முதல்வனின் மஞ்சமோ வான வெளியில், இணைவது எவ்வழியோ ?
எந்தன் வலி அறிவர் யாரும் இல்லை...

தரத் கீ மாரி வனு வனு டோலூன்
வேய்த் மிலா நஹி கோயி
மீரா கி பிரபு பீர் மிடேகி
ஜப் வேய்த் சாவரியா ஹோய.. மேரோ ..

வலியையும் விஞ்சி வனம் துழாவி நின்றேன்
வைத்தியன் ஒருவனையும் காணேன்..
மீராவின் பிரபு இனிமையை கொணர்வான்..
அவனே வைத்தியனாய் வருவான்...

(அது வரை ) எந்தன் வலி அறிவர் யாரும் இல்லை...
ஏட்டி.. நானோர் காதல் கிறுக்கி... எந்தன்

Saturday, March 19, 2011

ரங்தே சுனரியா (மீரா பஜன்)

                              ஹோலி ஸ்பெஷல்

(இந்த மீராவின் பாட்டை முதலில் ஹிந்தித்தமிழிலும்,அதன் கீழே நமது தமிழிலும் அளிக்கிறேன்;இது முழுமையான மொழிபெயர்ப்பில்லை;அனுப் ஜலோட்டா அவர்கள் பாடிய மெட்டிலேயே இதைப் பாடிப்பாருங்கள்!ஆனந்தமாக இருக்கும்!!ஹோலி வாழ்த்துக்கள்!!!)

                            

ரங்தே சுனரியா ;ரங்தே சுனரியா ;
           ஷ்யாமு பியா மோரே ரங்தே சுனரியா!

     துகிலில் வர்ணம் வீசு-என்
துணியில் வர்ணம் பூசு!
            முகில்வண்ணா!உன்நிறமென்
துகிலில் நன்றாய்ப்பூசு!

        1 )ஐஸீ ரங்தே கே ரங்க நாஹீ சூட்டே
                                        தோபியா தோயே சாஹே சாரி உமரியா (ரங்தே)

        1 )ஆயுள் பூராவும் வண்ணான்
     அடித்துத் தோய்த்தாலும்,
 ஒட்டிய உன் வண்ணம்
                                   விட்டுவிடாதவண்ணம் (துகிலில்...........)

                                   2 )லால் நா ரங்காவூமைதோ ஹரி நா ரங்காவூம்;
          அப்நேஹீ ரங்க்மே ரங்தே சுனரியா;
ஷ்யாமு பியாமொரே(ரங்தே)

      2 )செவ்வண்ணம் வேண்டாம் ;
    பச்சைநிறமும்  வேண்டாம் ;
             உந்தன் முகில் வண்ணத்தையே
                                                    என் துகிலில் பூசு!என்னன்புக்கண்ணனே!(துகிலில்)

                        3 )பினா ரங்காயே மைதோ கர் நாஹீ ஜாவூங்கி;
                         பீத் ஹீ ஜாயே சாஹே சாரி உமரியா (ரங்தே )

3 ) வாழ்நாளெல்லாமென்னைக்
 காத்திருக்கவைத்தாலும்  
       வர்ணம் பூசிக் கொள்ளாமல்
                 வீடு செல்லமாட்டேன்!(துகிலில்)

                                          ஜல் ஸே பத்லா கௌன் ஹை?
                      கௌன் பூமி ஸே பாரி?
                                    கௌன் அகன் ஸே தேஜ் ஹை?
                         கௌன் காஜல் ஸே காலி?

நீரினும் நுண்ணியது எது?
        பூமியினும் பாரமானது  எது?
                தீயினும் வெம்மையானது  எது?
                   மையினும் கருமையானது எது?

                                       ஜல் ஸே பத்லா ஞான் ஹை!
                 பாப் பூமி ஸே பாரி!
                                           க்ரோத் அகன் ஸே தேஜ் ஹை!
                                               கலங்க காஜல் ஸே காலி!(ரங்தே)

        நீரினும் நுண்ணியது ஞானம்!
        பூமியினும் பாரமானது பாபம்!
                     தீயினும் வெம்மையானது க்ரோதம்!
                                             மையினும் கறுமையானது களங்கம்!(துகிலில்)



 
                                   4)மீரா கே பிரபு கிரிதர் நாகர்
                                      பிரபு சரணன் மே,ஹரி சரணன் மே
                                      ஷ்யாம் சரணன் மே,லாகீநஜரியா(ரங்தே)

 
                                        4) மீராவின் கிரி தரன் சரணத்திலே,
                                            பிரபு சரணத்திலே,அரிசரணத்திலே,
                                           ஷ்யாம் சரணத்திலே
                                            இணைந்ததென்னிதயம் (துகிலில்)
                     --------------------------------------------------

           இந்தப்பாட்டில் வர்ணம் (வண்ணம்) என்ற சொல்லை
'குணம்'/'தன்மை'என்ற பொருள்பட புரிந்துகொண்டால்
இதிலுள்ள  தத்துவப்பொருள்  விளங்கிவிடும்.மாளிகையில்
 மகா ராணியாக இருக்க வேண்டியவள் பாமரமக்களிடையே
பிரேமை/பக்தியைப் பரப்ப பாமர பாஷையிலேயே
பாட்டமைத்துப் பாடித்திரிந்தது,கண்ணன் என்னும் கருணாகரன்
 அவளது உள்ளத்தில் நிறப்பிவைத்த பிரேமையையும்
,கருணையையும் எவ்வளவு அழகாகப் பிரதிபலிக்கிறது?!
 கண்ணனின் வண்ணத்தை வாரி வாரிப் பூசிக் கொண்டு
ஹோலி கொண்டாடுவோம்,வாங்க!!

                                           -------------------------------





Friday, February 11, 2011

வரதனை நினைதொறும்...




எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !

யது வீரனை நந்த குமாரனை நினைந்து
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !
மலரே இருவிழி பங்கஜ மலரே திருமுகமும்
மலரே இருகரம் தாமரை மலரே திருவடிகள் !
மந்தஹாசமும் தவழ்ந்த சுந்தர முகாரவிந்தம் நினைந்து
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !

அன்னை தந்தை பதியும் அவன் !
அருந்துணை நவநிதியும் அவன் !
இன்பமும் அழகும் அவனே - என்
இன்பமும் அழகும் அவனே !
எழில் தரும் அணி பணி பவனே ! 
மீரா ப்ரபு கிரிதர கோபாலனை வரதனை நினைதொறும்
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !


டிஸ்கி: இது ஓர் மீள் பதிவு. பக்த மீரா படத்தில் இடம்பெறும் மேலே உள்ள அற்புதமான பாடலை நம் குமரன் ஏற்கனவே பதிந்து விட்டார். இருந்தாலும் சில பாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். :-) 

பாடலை இங்கே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.  

Sunday, February 06, 2011

கண்ணீரில் கரைந்திடுமோ கர்மவினை?

மீராபாயைப் பற்றி அதிகம் தெரியாது, இப்போதான் முதல் முறையா படிச்சேன்… ரா.கணபதி அவர்களின் "காற்றினிலே வரும் கீதத்" திலிருந்து ஒரு நிகழ்வையும், அதன் தாக்கத்தில் பிறந்த கவிதையையும் இங்கே பகிர்ந்துக்கறேன்...




எத்தனையோ துன்பங்களுக்கு பிறகு மீராவுடைய ஆசை நிறைவேறுகிறது. கார்மேகக் கண்ணனே அவளுக்கு கணவனாக வாய்த்து விட்டான். எப்பேர்ப்பட்ட பேறு அது. மணமான அன்று கண்ணன் தன்னைப் பிரியும் முன் அவனைப் பார்த்து மீரா கேட்கிறாளாம்:

“கண்ணா, நான் அனுபவிக்க வேண்டிய துன்பம் எல்லாம் தீர்ந்ததா? என் கர்ம வினை கழிந்ததா?” என்று.

அதற்கு பதிலாக தன் நிறத்தைத் தாங்கி அலையும் ஒரு மேகத்தைக் காட்டறான் கண்ணன்.

“மீரா, அதோ பார். அந்த கார்மேகத்தை.”

“அடேயப்பா… கண்ணா, இந்த மேகம்தான் எவ்வளவு பெரிசா, விரிஞ்சு பரந்து இருக்கு!”

“நீ தினமும் கண்ணுக்கு இட்டுக் கொள்ளும் அஞ்சனத்தின் அளவு என்ன, மீரா?”

“அதுவா? அது இந்த கார்மேகத்தில் அணுவளவு கூட இருக்காதே?”

“அந்த மை அளவுதான் உன் கர்ம வினை கழிந்திருக்கிறது, மீரா. இன்னும் கழிய வேண்டியது இந்த கார்மேகம் அளவு இருக்கு. உன் கர்ம வினை கழியக் கழிய, இந்த மேகம் அளவில் குறைஞ்சுக்கிட்டே வரும்”, அப்படின்னு சொல்றான் கண்ணன்.

அன்றிலிருந்து அந்த கார்மேகத்தை பார்ப்பதே மீராவுக்கு வேலையாயிருந்ததாம். ஏதாவது துயரம் ஏற்படும் போது, குடம் குடமா கண்ணீர் பெருக்கிட்டு, மேகம் இப்போ நல்லா சின்னதாயிருக்குமேன்னு நினைச்சு அதைப் பார்ப்பாளாம். ஆனா அது கண்ணுக்கே தெரியாத அளவுதான் குறைஞ்சிருக்குமாம்…

போகப் போக துன்பம் அவளுக்கு பழகிடுது. எவ்வளவு துயரம் வந்தாலும் கலங்கறதில்லை. எப்படிப்பட்ட துன்பம் வந்தாலும் சந்தோஷப்படறா. ‘என் கர்ம வினையைக் கழிக்க என் கண்ணன் எனக்காக அனுப்பி வச்ச உதவி இது’ன்னு நினைச்சு பரவசப்படறளாம்…

கண்ணீர் பெருகப் பெருக, கார்மேகம் கரையத்தானே வேண்டும்?


கார்மேகம் கரைந்திடுமோ?
கர்மவினை கழிந்திடுமோ?
காலன்வரும் காலம்வரை
கண்ணீர்தான் சுகவரமோ?

பலப்பலவாம் பிறவிகளும்
பழவினையைக் கரைக்கவில்லை
நீளும்துன்ப மோஎன்னை
வேண்டாம்என்று வெறுக்கவில்லை

இப்பிறவியி லேனும்உன்னை
ஏற்றும்வரம் தந்துவிட்டாய்
தப்பாதுன் மலரடிகள்
மனதில்மணக்கச் செய்துவிட்டாய்!

--கவிநயா

சுப்பு தாத்தாவின் குரல் வண்ணத்தில்... நன்றி தாத்தா.

Wednesday, November 24, 2010

அந்த நாளும் வந்திடாதோ !

மீரா திரைப்படத்தில் இருந்து இன்னுமொரு அற்புதமான பாடல். ராஜ்ஜியத்தை, உறவினர்களைத் துறந்த மீரா, தன் கிரிதரனைத் தேடி கால்நடையாக யாத்திரை மேற்கொள்கிறாள். பல ஊர்களில் அலைந்து திரிந்து பிருந்தாவனம் அடைகிறாள். கண்ணன் வளர்ந்த இடம் என்று அறிந்தவுடன் அவள் உள்ளத்தில் உதித்த பாடலாக இந்தப் பாடல் வருகிறது. உங்களுக்கும் பிடிக்கலாம். :-)

பாடலை எம்.எஸ் அம்மாவின் அற்புதமான குரலில் இங்கே கேட்கலாம்.

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த
அந்த நாளும் வந்திடாதோ ! நந்த குமாரன்
விந்தை புரிந்த அந்த நாளும் வந்திடாதோ !

அனைவரும் கூடி அவன் புகழ் பாடி
நிர்மல யமுனா நதியினில் ஆடி
வனம் வனம் திரிந்து வரதனைத் தேடி 
அனுதினம் அமுதனை தரிசனம் செய்த (அந்த)
மானினம் நாணிடும் மங்கையரோடு
மாதவத்தோரும் மயங்கிடுமாறு
தேனினும் இனித்திடும் தீங்குழல் ஊதி
மானிடர் தேவரின் மேல் என செய்தான் !
கானனம் அருங்கானனம் சென்று ஆநிரை கன்று
கருணை மாமுகில் மேய்த்திட - அன்று
புனித மேனியில் புழுதியும் கண்டு
வானோர் பூமியை விழைந்ததும் உண்டு

போதமிலா ஒரு பேதை மீரா
ப்ரபு கிரிதாரி இதய சஞ்சாரி 
வேதமும் வேதியர் விரிஞ்சனும் தேடும்
பாத மலர்கள் நோக நடந்த (அந்த)

Thursday, September 30, 2010

கண்ணனைக் காணவில்லை


பக்த மீரா படத்தில் மற்றுமொரு அருமையான பாடல். அதிகபடியான சோகத்தை வரவழைக்கும் பாடல் என்று முன்னரே சொல்லிவிடுகிறேன்.:-)

உடல் உருக உளம் உருக
ஊனெலாம் நெக்குருக
குழலூதி இசை பாடி, எனைத் தேடி வந்து
கடல் வண்ண திருமேனி எழிற் கோலம் காட்டி
கனவினிலே எனை மணந்த  கண்ணா !  என் கிரிதரனே !
படமுடியாத் துயரம் இந்தப் பேதை படவிலையோ !
பாவி உயிர் உன் பிரிவால் வேள்வது அறிந்திலையோ !
இடர் கடலில் மீராவை தவிக்க விட்டே
இன்று எங்கு சென்றாய் ?
என்னரசே ! எங்கு மறைந்தனையோ?

 மேலே உள்ள பாடலை எம்.எஸ் அம்மாவின் குரலில் இங்கே கேட்கலாம்.

யாரும் ஆழ்ந்த துக்கத்தில் இருப்பது நமக்கு கஷ்டமாக இருக்கிறது அல்லவா? இப்படி "என்னரசே ! என்னரசே! எங்கு மறைந்தனையோ?" என்று அவள் கதறியது அரசன் காதில் விழுந்தது. துக்கத்தில் ஆழ்ந்த மீராவை மேலும் தவிக்க விடாமல்,  காவிரி ஆற்றங்கரையில்  கிடந்தபடியே உலகை ஆளும் அரசன், அரங்கன், அவளுக்கு தரிசனம் தருகிறானாம். கொவ்வைக் கனி போன்று சிவந்த வாய், செந்தாமரைக் கண்கள் இவற்றை கண்ட உடன்  தொண்டரடிப் பொடி ஆழ்வார் அடைந்த ஆனந்த நிலையை மீராவும் அடைந்தாள். :-)

இனிதிரைத் திவலை மோத எறியும் தண் பரவை மீதே*
தனிகிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்*
கனியிருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்*
பனியரும்பு உதிருமாலோ? என் செய்கேன் பாவியேனே ?
                                                      
பாயுநீர் அரங்கந் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்வும் மரகத உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவரிதழ்ப் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே.
                              (திருமாலை - 18, 20)
மேலே உள்ள தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரங்களை ஜானகி ராமானுஜம் அவர்கள் பாடி இங்கே கேட்கலாம்.

Sunday, September 26, 2010

பணியாளாய் என்னைப் பணித்திடுவாய் !



எனக்கு மிகவும் பிடித்த ஒரு இனிய மீரா பஜன் (ஹிந்தி பாடல்). உங்களுக்கும் பிடிக்கும் என்று இங்கே பகிர்ந்து கொள்கிறேன். :-)
கலைமகள் மகள் எம்.எஸ் அவர்கள் இந்தப் பாடலைப் பாடுவதை இங்கே கேட்கலாம்.


[மீரா பஜனை]

சாக்கர் ராகோ ஜி ! மனே சாக்கர் ராகோ ஜி !

சாக்கர் ரஹஸூ பாக் லகாஸு நித உட் தர்சன பாஸூ
ப்ருந்தாவன கீ குஞ்சகலின் மே தேரீ லீலா காஸூ

மோர முகுட பீதாம்பர ஸோஹ கல பைஜந்தி மாலா
ப்ருந்தாவன மே தேனு சராவே மோஹன முரளி வாலா

யோகி ஆயா யோக கரண கோ, தப கரணே சன்யாசி
ஹரி பஜன கோ சாது ஆயா, ப்ருந்தாவன கே வாசி

மீரா கே ப்ரபு கஹர கம்பீரா ஹ்ருதய தரோ ஜீ தீரா
ஆதிராத ப்ரபு தரசன தேன்ஹே ப்ரேம நதீ கே தீரா



[பொருள்]

வைராக்யம் வாய்ந்த தீரர்கள் தங்கள் இதயத்தில் வைத்துப் போற்றும் மீராநாதன் அளவிட முடியாத ஆழமானவன் ! கம்பீரமானவன் ! தீரர்களுக்கு எல்லாம் தீரன் ! இவன் வைஜயந்தி மாலை அணிந்தவனாக, மயிற்பீலி அலங்கார கிரீடம் தரித்தவனாக, பீதாம்பரனாக, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டு பிருந்தாவனத்தில் மாடுகள் மேய்ப்பவன். காண்போர் மனதை மயக்கும் அழகன்.

மோஹன கிருஷ்ணா ! பணியாளாய் என்னைப் பணித்திடுவாய் ! உன் தரிசனத்தை தினமும் பெறுவேன். கொடி மண்டபங்கள் நிறைந்த பிருந்தாவன தெருக்களில் எல்லாம் உன் லீலைகளைப் பாடி செல்வேன். உனது சேவையாக ஒரு தோட்டம் அமைப்பேன். அந்தத் தோட்டத்திற்கு பிருந்தாவன வாசிகள் பலரும் வருகை புரிவர். யோகம் செய்ய யோகிகள் வருவர். தவம் செய்ய சன்யாசிகள் வருவர். ஹரி பஜனை செய்ய சாது ஜனங்கள் வருவர். அமைதியான இரவில் உள்ளத்தில் அன்பு பொங்கும் வேளையில் நீயும் வருவாய். அனைவருக்கும் உன் இன்ப தரிசனம் தருவாய். ஐயே ! பணியாளாய் என்னைப் பணித்திடுவாய் !

Sunday, September 19, 2010

மீரா இதயம் கோவில் கொண்டான்

பக்த மீரா படத்தில் வரும் ஓர் இனிய பாடல்.
அமரர் கல்கி எழுதிய  இந்தப் பாடலை எம்.எஸ் அவர்கள் பாடி இங்கே கேட்கலாம்.



லீலைகள் செய்வானே - கண்ணன்
மாயைகள் புரிவானே!
லீலைகள் செய்வான் பாலகோபாலன்
நீலமுகில் மணிவண்ணன் - கண்ணன் (லீலைகள்)

கானக மடுவில் காளியன் தலையில்
களிநடம் புரியும் பாதன் !
வானவர் வாழ மாநிலம் மீது
ஆனிரை மேய்த்த என் நாதன் - கண்ணன் (லீலைகள்)

ஆயர் மனையில் வெண்ணைய் திருடுவான்
அகமும் கவர்ந்திடுவானே !
மாய புன்னகை செய்து மயக்கும்
மீராவின் ப்ரபு தானே ! - கண்ணன் (லீலைகள்)

ப்ரேம நதியின் தீரமதனில்
மீரா ப்ரபுவும் வருவான் !
திருமுகம் அதனில் குறுநகை மலர
அகமும் புறமும் நிறைவான் - கண்ணன் (லீலைகள்)

மாயனைக் காண மாமுனியோர்கள்
பாற்கடல் தேடியே வந்தார் !
ஆலிலை மேலே துயில் கொள்ளும் அமுதை
காண்கிலம் என்று வியந்தார் !

சங்கரன் வந்தான் இந்திரன் வந்தான்
சந்திர சூரியர் வந்தார் !
அங்குமிங்குமாய் ஐயனைத் தேடி
ஆயர் மனைதனில் கண்டார் !

மீரா ஹிருதயம் கோவில் கொண்டான் !
மீளா அடிமை கொண்டான்  - பேதை
மீரா ஹிருதயம் தனில் - அடியாள் மீரா...
 
மீரா ஹிருதயம்  கோவில் கொண்டான் !
மீளா அடிமை கொண்டான் !
மாறி மாறி வரும் பிறவிகள் தனிலும்
மாறா ப்ரேமையைத் தந்தான் - கண்ணன் (லீலைகள்)

 

Sunday, September 05, 2010

மறவேனே எந்நாளிலுமே...

பக்த மீரா படத்தில் வரும் ஒரு பாடல். மீராவின் பக்தியைப் புரிந்து கொள்ளாத சிலர் அவளைக்  கொல்ல சதி செய்வர். மீராவிற்கு விஷம் கலந்த பால் கொடுக்கப்படும். அவள் அதனைக் குடித்தவுடன், அருகில் உள்ள கிருஷ்ண விக்ரகத்தின் முக நிறம் மாறிவிடும். (அதே நேரத்தில் த்வாராகாவில் உள்ள கண்ணன் கோயில் கதவுகள் தானே அடைத்து கொள்ளும்.)

மீராவிற்கு விஷம் கலந்த பால் கொடுத்த உறவுக்காரப் பெண் உண்மையை சொல்லிவிடுவாள். மீரா விஷம் தன்னை ஒன்றும் செய்யவில்லை என்பதையும், தனக்கு எந்த ஒரு துன்பமும் வராமல் அவள் வணங்கும் கிரிதர கோபாலன் அருள் செய்ததையும் உணர்கிறாள். அந்த நேரத்தில் பொங்கி வரும் பாடல் இது.

படத்தில் எம்.எஸ் அவர்கள் பாடிய  பாடலை இங்கே கேட்கலாம்.



மறவேனே எந்நாளிலுமே - கிரி
தாரி உனதருளே - கிரி
தாரி உனதருளே !

நஞ்சை நீ உண்டனையோ - இந்தப்
பஞ்சையைக் காத்தனையோ - ஒரு
விஞ்சை புரிந்தனையோ !

ஆரங்கள் சூடிடுவேன் - அலங்
காரங்கள் செய்திடுவேன் - பல
கீதங்கள் பாடிடுவேன் !

கண்ணா என் கண்மணியே - முகில்
வண்ணா எந்தன் துரையே - உன்னைப்
பண்ணால் துதித்திடுவேன் !

மறவேனே எந்நாளிலுமே !
ஜெய மீரா ப்ரபு கிரிதாரி !!
ஜெய மீரா ப்ரபு கிரிதாரி !!

Friday, February 26, 2010

அருள் பாடும் பறவை - பக்த மீரா


ராகம்: கமாஸ்

மறைந்த கூண்டில் இருந்து விடுதலை பிறந்த பறவை விரைந்தோடுதே !
நிறைந்த வெளி நீல வானிலே தன்னை மறந்து இறைவன் அருள் பாடுதே ! - மடை
திறந்த வெள்ளம் போல் என் உள்ளம் கண்ணனின் மலர்ந்த கருணை கழல் நாடுதே !
பிறந்த பயன் இன்றடைந்த மீராவின் உயிர் உவந்து ஆனந்த கடலாடுதே !

பாடல் பின்னனி:
பக்த மீரா அரண்மனை வாழ்வைத் துறந்து, கண்ணனைத் தேடும் ஆனந்த பயணத்தைத் தொடங்கும் கட்டம். இந்தப் பாடல் சோகத்தையும் ஆனந்தத்தையும் ஒருங்கே தர வல்லது. பாடல் தரும் அனுபவம் கேட்பவர் மனநிலையைப் பொருத்த விஷயம். :)

பாடலை எம்.எஸ் அவர்களின் தேன் போன்ற  குரலில் இங்கே கேட்கலாம்.
~
கிரிதாரியின்,
ராதா

Thursday, December 31, 2009

தாஸ மீரா லால கிரதர !


"ஆடி ஆடி அகம் கரைந்து இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி எங்கும்
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ்வாணுதலே."

மேலே உள்ள நம்மாழ்வார் பாசுரத்தை நினைவுபடுத்தும் வகையில், "ஹரி ஹரி ஹரீ" என்ற உருக்கமான அழைப்பினோடு ஒரு மீரா பஜனை, கண்ணனும் அபகரிப்பவன் (ஹரி) தான் என்ற வகையில் கண்ணன் பாடலில் தரப்படுகிறது. :)

"அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார்?" என்ற பாடலில் புகழப்பெற்ற அதே லீலைகளை இந்த ஹிந்தி மீரா பாடலிலும் காணலாம். எம்.எஸ் அம்மா அவர்களின் உருக வைக்கும் குரலில் இங்கே கேட்கலாம்.

ஹரி தும ஹரோ ஜன கீ பீர ||

த்ரௌபதி கி லாஜ ராகி
தும படா யோ ஜீர் ||

பகத காரண ரூப நரஹரி
தர்யோ ஆப சரீர |
ஹரினகஸ்யப மார லீன்ஹு
தர்யோ நான்ஹின தீர் ||

பூடதே கஜராஜ ராக்யோ
கியோ பாஹர நீர |
தாஸ மீரா லால கிரதர
துக ஜஹா தஹா பீர ||

ஹரி ஹரீ ஹரீ ஹரீ
தும ஹரோ ஜன கீ பீர் ||

யானைக்கு அருள் செய்ததையும், பாலனை பாலனம் செய்ததையும், சபையில் பக்தையின் மானம் காத்த அருளையும்  பாடி அடியாள் மீரா  கிரிதரநாதனை எல்லோர் சார்பாகவும் எல்லா துயர்களையும் களைய வேண்டுகிறாள்.

2010 புத்தாண்டு தினத்தில் ஹரி அனைத்து உயிர்களின் துன்பங்களையும் களைய நாமும் அவன் அருள் வேண்டுவோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு !! :)

ராதே கிருஷ்ணா !!
~
கிரிதாரியின்,
ராதா

Friday, December 25, 2009

யதுநந்தனா ! கோபாலா !

சாது ஜனங்கள் ஒன்று கூடினால் கிரிதாரிக்கு கொண்டாட்டம் தான். அதுவும் மீரா போன்ற ஒரு பக்தையின் தலைமையில் கூடுகிறது என்றால் கிரிதாரியின் கொண்டாட்டத்திற்கு கேட்கவே வேண்டாம். இதோ இங்கே ஒரு அருமையான பஜனை பாடலை எல்லோரும் சேர்ந்து பாடிக் களிக்கிறார்கள். கண்ணனையும் குளிர வைக்கிறார்கள்.

அரங்கா உன் மகிமையை அறிந்தவர் யார்?
அறிந்தவர் யார்?  எங்கும் நிறைந்தவனே !

யானை அன்று "ஆதிமூலமே !"  என்று
ஓலமிடவும் ஓடி வந்தனையே !!

ஈனர்கள் சபையில் த்ரௌபதி கதற
மானம் காத்தனையே !! ஆஹா நீ !!

ப்ரஹலாதனையே பாலனம் செய்ய
நரஹரியாய் வந்த நாரணனே !

தாரணியில் உன்னை அன்றி வேறே
யார் துணை சங்க கதாதரனே ?

யதுநந்தனா ! கோபாலா !
ஜெய பிருந்தாவன லோலா !

ஜெய தீன வத்ஸலா !!
ஜெய வேணுகான லோலா !!

வரதா !! அருள் தருவாய் வனமாலீ !!
ஜெய மீரா ப்ரபு கிரிதாரி !!!
ஜெய மீரா ப்ரபு கிரிதாரி !!!

மீராவின் காலத்தில் அந்த சாதுக்கள் கூட்டத்தில் சேர்ந்து பாடும் பாக்கியம் செய்யாவிடினும், இதோ இங்கே மறுபடி எம்.எஸ் அம்மாவின் குரலில் நம்மை மீரா வழி நடத்துகிறாள்.

இந்தப் பாடல் மிகவும்  ப்ரபலமான (அதாவது எனக்கு மிகவும் பிடித்த :)) ஹிந்தி மீரா பஜன் ஒன்றின் திரண்ட பொருளை தழுவியதாகக் கொள்ளலாம்.  கிரிதாரியின் அருளால்  பின்னர் ஒரு பதிவில் அந்தப் பாடல் கண்ணன் பாட்டில் வரும்.  ராதே கிருஷ்ணா !!
~
கிரிதாரியின்,
ராதா


Sunday, December 20, 2009

எங்கள் கண்களில் வசிக்க வா!

சொந்தமாக கவிதை எழுதும் திறமை இல்லாவிடினும், இருக்கும் கவிதைகளை நன்றாக காப்பி அடிக்க தெரியும். :)

இதோ இங்கே ஒரு மீரா பஜனை பாடல் - ஹிந்தி மூலமும், "காற்றினிலே வரும் கீதம்" என்ற ரா.கணபதி எழுதிய புத்தகத்தில் இருந்து தமிழாக்கமும்.

(மீரா பஜன் -1)

பஸோ மொரே நை னன மேம் நந்தலாலா ||

மோஹனீ மூரத ஸாம்வரீ ஸூரத நைநா பனே பிஷால் ||


மோர முகுட மகராக்ருதி குண்டல, அருண திலக சோஹ பால் ||

அதர சுதா ரஸ முரளி, ராஜதி உர (பை)பம்ஜதீ மால் ||


சுத்ர கண்டிகா கடி தட ஷோபித நூபுர ஸபத ரஸால் ||

மீரா ப்ரபு ஸந்தன சுகதாயீ ப-க-த-வ-ச-ல கோ-பா-ல் ||


(தமிழாக்கம் - நன்றி ரா.கணபதி, கிரிதாரி)


அந்தமில் அழக, நந்தலால,

கண்ணில் வசிக்க வா, கண்ண, பால


மோகன மூர்த்தி

சியாமள சீர்த்தி

நயனம் விரி நேர்த்தி


மயிற்பீலி மங்கலம்

மகரமீன் குண்டலம் - நெற்றி

திலக முகமண்டலம்


ஆரமுதம் பொழியும் அதரம் - அதனில்

தீங்குழல் பொழியும் இன்சுரம்

பேரெழில் வைஜயந்தி உறை உரம்


உயிரை கவர் உதரம் - அதனில்

மோகன கிண்கிணி மதுரம்

இன்னிசைக்கும் நூபுரம்


மீரா இதய பூபாலன்

அன்பர்க்கு இனிய க்ருபாலன் - பக்த

கன்றுகள் கோபாலன்.


இந்தப் பாடலை பாரதத்தின் ஈடு இணையற்ற பொக்கிஷமாக திகழ்ந்த எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் பக்தி ரசம் நிறைந்த குரலில் இங்கு கேட்கலாம்.
(மற்றுமொரு சுட்டி.)
Baso More - M S Su...


~
கிரிதாரியின்,
ராதா

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP