Showing posts with label *கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா. Show all posts
Showing posts with label *கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா. Show all posts

Thursday, August 02, 2007

62. கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா!

நண்பர் ஆசிப் மீரான் அவர்களின் துணைவியார்,
யாஸ்மீன் பாத்திமா அவர்களின் நினைவஞ்சலிக்கு அடியேன் இந்தப் பாடலைச் சமர்பிக்கிறேன்!
அது என்னமோ, குழந்தைகள் விஷயங்களில் ஏற்படும் மனதின் கனம், இறங்க மிகவும் கடினமாக உள்ளது!
ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா...
அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா...

ஷாஜியின் பதிவு
செந்தழல் ரவியின் பதிவு
சற்று முன்..



பாடலைக் கேட்க இங்கு சொடுக்கவும்!


கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா

சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா
தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா
(கேட்டதும் கொடுப்பவனே)

தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா

ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா
அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா

(கேட்டதும் கொடுப்பவனே)

நீயுள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா
நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா

கோயிலில் குடி புகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
குடைநிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா

கிருஷ்ணா கிருஷ்ணா...
கிருஷ்ணா கிருஷ்ணா... கிருஷ்ணா கிருஷ்ணா...

எண்ணை இல்லாது ஒரு தீபம் எரிந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
உன்னை நினைந்தது உருகி இருந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
கண்களைப் போல் எமைக் காவல் புரிந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
கண்ணன் திருவடி எண்ணியிருந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா


கிருஷ்ணா கிருஷ்ணா...
(கேட்டதும் கொடுப்பவனே)



படம் : தெய்வ மகன்
இசை : M.S.விஸ்வநாதன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: T.M.சௌந்தரராஜன்
ராகம்: கல்யாணி

(இந்தப் பாடல், நண்பர் ஸ்ரீநிவாசனின் நேயர் விருப்பமும் கூட)
இதில் வரும் சிதார் (Sitar) இசையை மறக்காமல் கேட்கவும்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மூன்று வேடங்களில் நடித்த படம்.
இதை ஆஸ்கர் அவார்டுகளுக்கு அனுப்பி வைத்ததாய் எங்கோ படித்த நினைவு!
கல்யாணி ராகத்தில் அமைந்த கண்ணதாசனின் மிகவும் உருக்கமான பாடல்!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP