Showing posts with label லலிதா மிட்டல். Show all posts
Showing posts with label லலிதா மிட்டல். Show all posts

Saturday, March 31, 2012


ராமநாம மகிமை
 (ராமநவமியான இன்று  அப்புனிதநாமமுள்ள ஒரு மினி
   பஜனையாவது பாடணும்னு மனத்தில் படவே எனக்கு
   சுமாராத்தெரிந்த மெட்டில் பாடிட்டேன்;தாங்கமுடியாதவர்கள்      மன்னிக்கவும்!எல்லோருக்கும் ராமநவமித்திருநாள் வாழ்த்துக்கள்!!)
 

தூய அன்பில் தோய்ந்து சொல்லு
ராம்,ராம்,ராம்,...ஸ்ரீ ராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்,
ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்.

எங்குமின்பம் பெருகச் சொல்லு ,ராம்,ராம்,ராம்,
பொங்கும் மங்களம் தங்கச்சொல்லு,ராம்,ராம்,ராம்,
ராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்,
ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்.

துன்பம் யாவும் தொலையச்சொல்லு,ராம்,ராம்,ராம்,
ஜன்மம் கடைதேறச்சொல்லு ,ராம்,ராம்,ராம்,
ராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்,
ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்.

தோத்திரமாய்த் தொடர்ந்து சொல்லு,ராம்,ராம்,ராம்,
நாத்தழும்பு ஏறச்சொல்லு ராம்,ராம்,ராம்.
ராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்,
ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்.


தூய அன்பில் தோய்ந்து சொல்லு
ராம்,ராம்,ராம்,...ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்,

ஸ்ரீராம்,ராம்,ராம்,..ஸ்ரீராம்,ராம்,ராம்.

Tuesday, March 06, 2012

கிரிதாரியுடன் ஹோலி

           

மக்கே உரிய எளியநடையில் நமக்களித்த பல
ஆன்மிகப் படைப்புக்கள் மூலம் என் ஒவ்வொரு
பதிவுக்கும் தூண்டுதலாய் இருந்த அமரர் ரா.கணபதி
அவர்களது "காற்றினிலே வரும் கீதம் "என்ற
மீராவைப்பற்றிய படைப்பில் எனக்குக் கிடைத்த
"ஹோரி கேலத் ஹை கிரிதாரி" எனும்
மீரா பஜனைத் தழுவிய என் தமிழ் ஹோலி கீதம் கீழே :
---------------------------------------

கிரிதாரியுடன் ஹோலி



ஹோரி கேலத் ஹை கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி ,கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி !

முரளி சங்கு பஜத் டப் ந்யாரோ,
ஸங்கு ஜுவதி ப்ரஜ்னாரீ |

வேய்ங்குழலூதி மத்தளந்தட்டி
பூம்பாவையர் புடைசூழ
கொண்டாடுகிறான் ஹோலி ,கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி !

சந்தன் கேசர் சிரகத் மோகன் ,
அப்னே ஹாத் பிஹாரி |

சந்தனத்துகளைக் கைகளாலள்ளி
மங்கையர் மேனியில் பூசி
கொண்டாடுகிறான் ஹோலி ,கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி !


பரி பரி மூட்டி குலால் லால் சஹுன்
தேத் சபன் பை டாரி |

வண்ணப்பொடியை பிடிப்பிடியாய் எடுத்து
கன்னியர் மேல் வாரியடித்து
கொண்டாடுகிறான் ஹோலி ,கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி !


சேல் சபீலே நவல் கான்ஹ ஸங்கு
ஸயாமா பிராண் பியாரி |

செல்லமாய் வஞ்சியரை வளையவந்து
சல்லாபித்துள்ளம் கவர்ந்து
கொண்டாடுகிறான் ஹோலி ,கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி !


காவத் சார் தமார் ராக் தஹ்ன்
தை-தை கல் கர்தாரி |

தமார் பண்ணிலின்ப கானம்பாடி
கைதட்டிக் குதித்துக் கூத்தாடி
கொண்டாடுகிறான் ஹோலி ,கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி !


மீரா கே பிரபு கிர்தர் மில் கயே ,
மோகன் லால் பிஹாரி |

கண்ணாளனை மீரா கண்டனளின்று !
களிக்கின்றாள் அவனைக் கலந்து !
கொண்டாடுகிறான் ஹோலி ,கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி !


















            

Friday, January 13, 2012

பஜகோவிந்தம் (தமிழில்) - 1



பஜகோவிந்தம்
(எனது வலையில் [சர்வம் நீயே] சென்ற ஆண்டு பதிவிட்ட
தமிழ் பஜகோவிந்தத்தில் எம் எஸ் பாடிய பத்து பதங்களின்
தமிழ்ப்பதங்களை இங்கு கண்ணன் பாட்டு அன்பர்களுக்காக
அளிக்கிறேன் ;குற்றங்குறைகளை கண்ணன் மன்னிப்பான் )


(1)
பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
.பஜகோவிந்தம் மூடமதே |
சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே
நஹிநஹி ரக்ஷதி டுக்ரிங்கரணே

Seek Govind,Seek Govind,Seek Govind,o fool!When the appointed time comes[death],
grammar -rules surely will not save you.(சுவாமி சின்மயானந்தா)

துதி கோவிந்தனை,துதிகோவிந்தனை ,
கதி கோவிந்தனே, மடமதியே!
கதவினைக்காலன் தட்டிடும் நேரம்
உதவிடுமோ உந்தன் இலக்கண ஞானம் ?

(2).
மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம்
.குரு சத்புத்தி மனசி வித்ருஷ்ணாம் |
யல்லபசே நிஜகர்மோபாத்தம்
.வித்தம் தேன விநோதயசித்தம் ||

O fool!Give up the thirst to possess wealth.Create in your mind,devoid of passions ,
thoughts of the Reality.With whatever you get [as a reward of the past] entertain
your mind [be content] (சுவாமி சின்மயானந்தா)

மூடா!பொன்பொருள் மோகம் அறுப்பாய் ;
நாடுவாய் மெய்ப்பொருள் நிர்மல நெஞ்சால் ;
பாடுபட்டுழைத்து நீதேடிடும் தனத்தால்
கூடிடும் சுகத்துடன் குறையின்றி வாழ்வாய்.

(5)
யாவத்வித்தோபார்ஜனசக்த--
ஸ்தாவன்நிஜபரிவாரோ ரக்த :|
பச்சாஜ்ஜீவதி ஜர்ஜரதேஹே
வார்த்தா கோபி ந ப்ருச்சதி கேஹே ||

As long as there is the ability to earn and save so long are all your dependents
attached to you.later on ,when you come to live with an old infirm body,no one at home
cares to speak even a word with you!!(சுவாமி சின்மயானந்தா)

சம்பாதித்திடும் தெம்புள்ளவரையில்
அன்பைப் பொழிந்திடும் உன்பரிவாரம்,
ஓடாய் உழைத்துநீ ஓய்ந்திடும் நேரம்
வேண்டாதவனாய் ஒதுக்கிடும் உன்னை.

(11)
மா குறு தனஜன யௌவன கர்வம்
ஹரதி நிமேஷத்கால : சர்வம் |
மாயாமயமிதமகிலம் ஹித்வா
ப்ரம்ஹபதம் த்வம் பிரவிஷா விதித்வா ||

Take no pride in your possession,in the people at your command,in your youthfulness;
time loots away all these in a moment ;leaving aside all these ,after knowing their
illusory nature,realise the state of brahman .(சுவாமி சின்மயானந்தா)

பணம்,படை,இளமையால் ஆணவம் வேண்டாம் ;
கணத்தினிலழிபவை இவையென அறிவாய் ;
மாயாமயமிந்த வாழ்வென உணர்ந்தே
தூயப்ரம்ம நிலைதனை யடைவாய் .

(18)
சுரமந்திரதரு மூலநிவாசஹ
ஷய்யாமூதலமஜினம் வாசஹ |
ஸர்வப்பரிக்ரஹமோகத்யாகஹ
கஸ்ய சுகம் ந கரோதிவிராகஹ ||

Who can disturb a man's happiness,if he can be happy ,living in the open halls
of temples or under the trees lying on the bare ground and wrapped in skins
giving up every possession and enjoyment ?(சி.ராஜகோபாலாச்சாரி)

உறங்கிட ஆலயமும் மரநிழலும் ;
உடலினை மூடுவதோ தோலாடை ;
இங்ஙனம் யாவும் துறந்தவர் மனத்தில்
பொங்கிடும் மகிழ்ச்சி மங்குவதேது ?

(20)
பகவத்கீதா கிஞ்சித தீதா
கங்காஜலலவகணிகா பீதா |
சக்ருதபி ஏன முராரி சமர்ச்சா
த்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா ||

A little study of Bhagavad gita ,drinking a drop of ganga water,a casual worship of
murari--these will save you from debate with death .(சி.ராஜகோபாலாச்சாரி)

சில வரியேனுங் கீதை படிப்போரும்,
துளியேனுங் கங்கை நீர் குடிப்போரும்,
அரங்கனைக் கணமேனுந் துதிப்போரும்,
கலங்குவதில்லை கூற்றுவன் வரினும்.

(21)
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனிஜடரே சயனம் |
இஹ சன்சாரே பஹுதுஸ்தாரே gain death,and
க்ருபயா பாரே பாஹி முராரே ||

Again birth,again death,and again lying in mother's womb--this samsaaraa process
is very hard to cross over...save me Muraare!through thy infinite kindness!(சுவாமி சின்மயானந்தா)

மாண்டபின் ஜனனம்;மறுபடி மரணம் ;
மீண்டுந்தாயின் கருப்பையிலுறக்கம்;
பிறவிக்கடலிதைக் கடப்பது கடினம்;
கரை சேர்த்தருள்வாய் ,முராரி!சரணம் .

(27)
கேயம் கீதா நாம சஹஸ்ரம்
த்யேயம் ஸ்ரீபதிரூபமஜஸ்ரம் |
நேயம் சஜ்ஜன சங்கே சித்தம்
தேயம் தீனஜனாய ச வித்தம் ||

Sing the Gita and the thousand names of God;continuously meditate on
Lakshmi's Lord;turn the mind to the company of the good;give away your
wealth to the needy.(சி.ராஜகோபாலாச்சாரி)

கீதையும்,அரங்கனின் ஆயிரம்பேரும்
ஓதி நினைப்பாய் கமலையின் பதியை;
நிதம் நாடிடுவாய் நல்லோர் நட்பை;
இதயங்குளிர்வாய் இல்லார்க்கீந்தே!

(29)
அர்த்தமனர்த்தம் பாவய நித்யம்
நாஸ்தி தத ஹ சுகலேஷஹ சத்யம் |
புத்ராதிபி தனபாஜாம் பீதிஹி
சர்வத்ரைஷா விஹிதா ரீதிஹி ||

'wealth is calamitous',thus reflect constantly;the truth is that there is no happiness
at all to be got from it.To the rich,there is fear even from his own son.This is the way
with wealth everywhere.(சுவாமி சின்மயானந்தா)

செல்வத்தால் தொல்லையே சுகமென்றுமில்லை;
உள்ளத்திலுறுதியாய்ப் பதி இவ்வுண்மையை.
தனயனும் சொத்தால் உன்பகையாவான் .
மனித இயல்பிதை மறந்திடவேண்டாம் .

(31)
குருசரணாம்புஜ நிற்பர பக்தஹ
சம்சாராதசிராத்பவமுக்தஹ |
செந்த்ரியமானச நியமாதேவம்
த்ரக்ஷ்யசி நிஜஹ்ருதயச்தம் தேவம்

O Devotee of the lotus feet of the teacher !May you become liberated soon from the
samsaaraa through the discipline of sense -organs and the mind.You will come to
experience [behold]the Lord that dwells in your heart .(சுவாமி சின்மயானந்தா)

குருவின் பதகமலம் பற்றிய பக்தா!
அறநெறி நின்று, ஐம்புலனடக்கி
விடுபடு பிறவிப் பிணியிலிருந்து ;
உணர்ந்திடுன்னுளமுறை பரம்பொருள்தன்னை !




சுப்பு ஐயா குரலில் ...

Friday, December 23, 2011

தூண்டிற் புழுவினைப் போல்...

          (கணிக்)கண்ணபிரான் [&co] ஒலிபரப்பிய
கோதைத்தமிழ்ப்பா(வை)காதைத்தீண்டி இழுக்க,
அரங்கன் பைந்நாகப்பாய் சுருட்டிக்கொண்டு
மாதவிப்பந்தல் நோக்கி நடை கட்டிட்டான் ;
பாய் ஜாக் பண்ணப்பட்ட அரங்கனை இங்கு
மீட்டு வர பாரதியின் காதல்கீதம் கீழே!



கண்ணன்  என் காதலன்

தூண்டிற்  புழுவினைப்போல் ---வெளியே
           சுடர்விளக்கினைப் போல் ,
நீண்ட பொழுதாக-- எனது
          நெஞ்சந்துடித்ததடீ!
கூண்டுக்கிளியினைப்போல் --தனிமை
           கொண்டு மிகவும் நொந்தேன் ;
வேண்டும் பொருளையெல்லாம்--மனது
          வெறுத்து விட்டதடீ!

பாயின்மிசை நானும் --தனியே
             படுத்திருக்கையிலே,
தாயினைக்கண்டாலும்,--சகியே!
              சலிப்பு வந்ததடீ!
வாயினில் வந்ததெல்லாம் ,--சகியே!
              வளர்த்துப் பேசிடுவீர்;
நோயினைப்போலஞ்சினேன் ;--சகியே!
               நுங்களுறவையெல்லாம் .

உணவு செல்லவில்லை ;--சகியே!
               உறக்கங் கொள்ளவில்லை.
மணம்   விரும்பவில்லை;--சகியே!
              மலர் பிடிக்கவில்லை;
குணமுறுதி யில்லை ;--எதிலும்
               குழப்பம் வந்ததடீ !
கணமும் உள்ளத்திலே --சுகமே
               காணக் கிடைத்ததில்லை.

பாலுங் கசந்ததடீ!--சகியே!
              படுக்கை  நொந்ததடீ!
கோலக்கிளி மொழியும் --செவியில்
              குத்தலெடுத்ததடீ !
நாலு வயித்தியரும் --இனிமேல்
            நம்புதற்கில்லைஎன்றார்;
பாலத்துச் சோசியனும் --கிரகம்
            படுத்துமென்றுவிட்டான்

கனவு கண்டதிலே-- ஒருநாள்
             கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்கவில்லை --எவனோ
              என்னகந் தொட்டுவிட்டான் .
வினவக் கண் விழித்தேன் ;--சகியே!
              மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே --புதிதோர்
                மகிழ்ச்சி கண்ட தடீ !

உச்சி குளிர்ந்ததடீ;--சகியே!
            உடம்பு நேராச்சு ;
மச்சிலும் வீடுமெல்லாம் --முன்னைப்போல்
            மனத்துக் கொத்ததடீ!
இச்சை பிறந்ததடீ!--எதிலும்
             இன்பம் விளைந்ததடீ!
அச்சமொழிந்ததடீ!--சகியே!
            அழகு வந்ததடீ !

எண்ணும்  பொழுதிலெல்லாம் --அவன்கை
           இட்ட விடத்தினிலே
தண்ணென்றிருந்ததடீ !--புதிதோர்
           சாந்தி பிறந்ததடீ!
எண்ணி  எண்ணிப் பார்த்தேன் ;--அவன்தான்
            யாரெனச் சிந்தை  செய்தேன்;
கண்ணன் திருவுருவம் --அங்கனே
            கண்ணின் முன் நின்றதடீ!
.


  

Sunday, August 21, 2011

அதோ வருகிறான் குட்டிக் கண்ணன்


    
 
முட்டித் தேய தவழ்ந்து நகர்ந்து
சட்டிவெண்ணைதனை முகர்ந்து,

எட்டி உதைத்துருட்டித் தள்ளி,

கொட்டிப்போன கட்டிவெண்ணை

குட்டிக்கைகள் வழிய அள்ளி,

மொட்டுவாயில் அடைத்து,சப்புக்

கொட்டி ரசித்து,ருசித்து,-வயிறு

முட்டத் தின்னும் குட்டி அரியின்

சுட்டித்தனம் கண்ட அன்னை,

''பட்டு விடும கண்?''என்றஞ்சி,

பட்டுக்கன்னம் தொட்டு வழித்து,

முட்டிமடக்கி த்ருஷ்டி கழித்து,

கட்டக்கரு மை பொட்டுஒன்று
முகில்வண்ண முகத்திலிட்டு,

சிறுமாலை மடியில் போட்டு,

பாடுகிறாள் திருத்தாலாட்டு!
தாயவள்கை தள்ளி உருண்டு

தத்தக்கா புத்தக்கா நடை நடந்து,

விழுந்து,மீண்ட தாய்மடியில்

படுக்கிறான் அரிக்கொழுந்து!

பாலூட்டும் தாய் கையிலிருந்து

பாலாடை சங்கு பறித்து,

கரத்தில் சங்கு ஏந்தும் அரியாய்

அருள்கிறான் திருக் காட்சி.!

தட்டிக்கொட்டிய பாலில் விழுந்து

பட்டாடை நனையப் படுத்து

பாற்கடலில்  பள்ளி கொண்டு

அருள்கிறான் திருக் காட்சி!.

Sunday, June 05, 2011

அருள்விழியைத் திருப்பு

     



          அருள்விழியைத் திருப்பு  

                       
                  
ஓரடியால் இந்த உலகளந்த 
பேரருட் கடலே! பரந்தாமா!
ஓரடி எடுத்துக் கொடுத்துவிட்டு
ஓடி ஒளிவதுதான் நியாயமா? (கோவிந்தா,ஹரிகோவிந்தா..)


                              

புள்ளுக்கும் வாகனப்பதவி தந்து 
கௌரவப்படுத்திய  கனஷ்யாமா!
உள்ளத்திலோர்வரி சொல்லிவிட்டு
கள்ளன்போல் காணாமற்போகலாமா?(கோவிந்தா..)

புல்லுக்குன்  பூவிதழில் குழலாய்
முகவரி அருளிய முரளீதரா!
முதலடி எடுத்துக்கொடுத்ததுமே
தலைமறைவாவது முறைதானா?(கோவிந்தா..)





 கன்றுக் குட்டிகளைக் குழலூதிக்
கூப்பிட்டுக் கொஞ்சிடும் கோவிந்தா!
நின்னையே நாளெல்லாம் நினைத்தேங்கும்
எந்தனுக்குமுந்தன் தரிசனந்தா!(கோவிந்தா..)

உன்பிழையே அன்றோ என் பிறப்பு?
சொள்ளையோ,சொத்தையோ,உன் படைப்பு!
நான் கடைதேறுவதுன் பொறுப்பு!
என்பக்கம் அருள் விழியைத்திருப்பு!(கோவிந்தா..)

Saturday, May 07, 2011

'வண்டு'த்துதி

                                          'வண்டு'த்துதி

                                     [shanmatha+sthapanacharya.jpg] 


'சங்கர ஜெயந்தி'யான இன்று சங்கரர் பெருக்கிய
  புனித கவிகங்கையிலிருந்து சில துளிகளையாவது
  ப்ரோக்ஷணம் செய்து கொள்வோம்,வாங்க!




      சங்கரரின் 'வண்டு' ஸ்தோத்ரம்

                 [வண்டுத்துதி பற்றிய எனது இந்தப்பதிவைப்   படிப்போர்க்கு  
                       ஒரு  'கொசு'(ரு)த்துதியும் விளக்கமும் இலவசம்!!]
                
               முதலில் இந்தத்துதியின் ஆறு ஸ்லோகங்களை 
   பொருட்சுருக்கத்துடன் அளிக்கிறேன்;இதைப் படித்ததும், இந்த
   ஸ்தோத்திரத்தைப்பற்றி அறியாதவர்கள் ,

  "ஸ்தோத்ரத்துக்கும் வண்டுக்கும் என்ன சம்பந்தம்?"
   "இதுலே வண்டைப்பற்றி  எதுவுமே இல்லையே?" 

   என்று வினாக் கணைகள்   விடுவீர்கள்!   
  
                                பொறுமை!பொறுமை!!

                        நிதானமாகக் கீழுள்ள ஒவ்வொரு  சொல்லையும்
  பக்தியோடு படித்து விடுங்களேன்!

   வண்டுப்புதிருக்கு விடையும் உங்களுக்காகக்  காத்திருக்கு!



                                            ஷட் பதீ  (விஷ்ணு ஸ்தோத்ரம்) 

         (1 )  அவிநய-மபநய விஷ்ணோ
                 தமய மந  :சமய விஷய ம்ருக த்ருஷ்ணாம் I
                 பூத -தயாம் விஸ்தாராய
                 தாரய சம்ஸார-ஸாகரத :  
                                                                       
 "  ஹே    விஷ்ணுவே!பணிவின்மையைப் போக்குவாய்!
    மன அடக்கமும்,(பலவித வேட்கைகள் எனும் கானல்
   நீர் நோக்கி இந்திரியங்கள் ஓடாதபடி)புலனடக்கமும்
    அருள்வாய்!
   அனைத்துயிருக்கும் தயைகாட்டும் பரந்தமனமருள்வாய்!
   பிறவிக்கடல் தாண்டிக் கடைதேறக்கருணை  புரிவாய்!"

           (2 ) திவ்ய-துநீ மகரந்தே
                  பரிமள பரிபோக சச்சிதானந்தே I
                 ஸ்ரீபதி பதாரவிந்தே
                பவ-பய-கேத-ச்சிதே வந்தே
  
   "புனித கங்கை எனும் தேனைச்சொரிவதும்,
    பரமானந்தம் எனும் பரிமள சுகந்தத்தால் 
    சுகமளிப்பதுமான  ஸ்ரீபதியின் சரண கமலத்தை,
    சம்ஸாரபயத்தையும் துக்கத்தையும் சிதைக்க  
    வல்லதான  பாதாரவிந்தத்தை  நமஸ்கரிக்கிறேன்."

         (3 )ஸத்யபி பேதாபகமே
              நாத தவாஹம் ந மாமகீனஸ் -த்வம் I
              ஸமுத்ரோ ஹி தரங்க :
             க்வசந ஸமுத்ரோ ந தாரங்க :

    "பகவானே!நீயும் நானும் வேறில்லை என்றாலும்
      நீ என்னுடைமை என்பது தவறே;
      நான் உன்னுடைமை என்பதே மெய்;
      நீ மகா சாகரமென்றால் நான் அதில்
      ஒரு சின்ன அலை ;ஜீவாத்மாவான நான்தான்  உன்னைச்
      சார்ந்தவனே அன்றி ,பரமாத்வான நீ என்னைச்
      சார்ந்திருப்பவனல்ல"

           (4 )உத்த்ருத -நக நகபிதனுஜ
                தனுஜகுலாமித்ர மித்ர-சசி -த்ருஷ்டே I
               த்ருஷ்டே பவதி ப்ரபவதி
               ந பவதி கிம் பவ -திரஸ்கார :




    "மலையைத் தாங்கியவனே!(அம்ருதம் எடுக்கக் கடல்
      கடைந்தபோது ஆமை அவதாரத்தில் மந்தரமலை
      சுமந்தவன்,கோகுலத்தில் இந்திரனின் சதியால் 
      பெய்த பேய்மழையிலிருந்து  மக்களைக்காக்க
       கோவர்தனகிரியைக் குடையாய்ச் சுமந்தான்)
     மலையைப் பிளந்த இந்திரனுக்கு இளையோனே!
     (இந்திரன் முதலான  தேவர்களின் பெற்றோரான
       கஷ்யப அதிதி தம்பதிக்குபிள்ளையாக அவதரித்தவர்தான்
       வாமனர்!)அசுரர்களின் பகைவனே!சூரிய சந்திரரை
       இரு கண்களாகக் கொண்டவனே!உன் தரிசனம்
        கிடைத்துவிட்டால்,பிறவிப்பிணி
        போகாமலிருக்கமுடியுமா?"

                (5 )   மத்ஸ்யாதிபி-ரவதாரை -
                         ரவதாரவதா-வதா ஸதா வஸுதாம் I
                         பரமேஸ்வர பரிபால்யோ
                         பவதாபவ -தாப-பீதோஹம் II




       " மீனவதாரம் முதலான பல அவதாரங்களாக
        இறங்கிவந்து உலகைக் காக்கும் பகவானே!
        சம்ஸாரத்தில்  மூழ்கி  பீதியடைந்திருக்கும் 
        என்னையும் காத்தருளவேண்டும்."

                (6 ) தாமோதர குணமந்திர
                      சுந்தர -வதநாரவிந்த கோவிந்த I      
                       பவ-ஜலதி-மதன மந்தர 
                      பரமம் -தர-மபனய த்வம் மே II  



  " ஹே,தாமோதரா!குணக்குன்றே!அழகிய கமலவதனமுடைய
  கோவிந்தா!சம்ஸார சாகரத்தைக் கடைந்து ஆத்மதத்வமெனும்
 அம்ருதத்தை  எடுக்க மத்தான மந்தரமலையாய் இருப்பவனே!
 என்னைக்கலங்கவைக்கும் சம்ஸாரபயத்தைப் 
 போக்கியருள்வாய்!"
                                                  
                                        படித்தாகிவிட்டதா?


      "ஷட் பதீ " என்ற  தலைப்பைக்   கவனித்தீர்களா?
        அதிலேயே பாதி விடை ஓளிந்திருக்கு!


      பொருள்  ( 1 )  ஷட் = ஆறு  , பதீ =பதங்கள்/ஸ்லோகங்கள்
                                 ஷட்பதீ =ஆறு பதங்களுள்ள ஸ்தோத்ரம். 

       பொருள் (2 )ஷட்பதீ =ஆறு காலுள்ள  ஜீவஜந்து.-(வண்டு)


       சங்கரர் என்ற மஹாகவி  நமக்குள் பக்தியூட்டுவதற்காக
       செய்த யுக்தி தான் இந்த  ஸ்லேடை  நயமுள்ள தலைப்பு!!
   ['வண்டுத்துதி' என்ற தலைப்பு  தூண்டும் ஆர்வத்தையும் ஆவலையும்,ஒரு
       சாதாரண தலைப்பு தூண்டி இருக்க முடியுமா ?]


        பலஸ்ருதி போல் அமைந்துள்ள ஏழாவது ஸ்லோகத்தைப்
        படித்தால் மீதி விஷயமும் புரிந்துவிடும்!


                   ஏழாவது ஸ்லோகமும் அதன் விளக்கமும் இதோ :


 (7 )நாராயண கருணாமய சரணம் கரவாணி
       தாவகௌ சரணௌ!  
       இதி ஷட்பதீ மதீயே வதன-ஸரோஜே ஸதா வஸது II


                           


    "நாராயணனே!கருணாமயமானவனே!உன்னிரு
      திருவடிகளைத்தஞ்சமடைகிறேன்;
     இந்த ஆறுஸ்லோகங்கள்(ஷட்பதீ) எந்தன் வதனம்
     எனும் தாமரையில் எப்பொழுதும் வசிக்கட்டும்"
  
                          ''இதி ஷட்பதீ....'' எனும் கடைசி  வரியில்,


      'பதீ '="ஸ்லோகங்கள்" என்று கொண்டால்


      ''இந்த ஆறு சுலோகங்களும் என் வதனத்தாமரையில்
       எப்போதும் இருக்கட்டும்''   என்றிருக்க,


     'பதீ' '= ''சொற்கள்"  என்று பொருள் கொண்டாலும்,
     "இந்த ஆறு சொற்களும்  என் வதனத்தாமரையில்  
       எப்போதும் இருக்கட்டும்" என்று  பொருளமையுமாறு
       சொல்லாடல் செய்திருக்கிறார்  சங்கரர்!


                                    எந்த ஆறு சொற்கள்? 


 "கருணாமயமான நாராயணா! உன் இணையடியில்
  சரண் புகுகிறேன்" என்ற பொருளமைந்த
"நாராயண கருணாமய சரணம் கரவாணி தாவகௌ சரணௌ!"         
  என்ற ஆறு சொற்கள்!


                 முதல் ஆறு ச்லோகங்களையோ அல்லது ஏழாவது
    ஸ்லோகத்தின் ஆறு சொற்கள் கொண்ட முதல் வரியையோ
    எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தால்,அந்த ஆறு  
     ஸ்லோகத்தில் நாம் வேண்டுவதெல்லாம் நிறைவேறும் 
    என்று சொல்லாமல்   சொல்கிற பலஸ்ருதியாக 
     அமைந்திருக்கிறது ஏழாவது சுலோகம்.


                                              அதெல்லாம் சரிதான் !!
     ஆனால் வினயத்திற்கோர் உதாரணமாக விளங்கிய
     சங்கரர், "வதன சரோஜே " என்று தன் வதனத்தைத்  தானே
     தாமரையோடு ஏன் ஒப்பிட்டுக்கொள்ள வேண்டும்?


            இதன் காரணவிளக்கமே வண்டுப்புதிரையும்  முழுமையாக 
   அவிழ்த்துவிடுவதைப்  பார்ப்போம் வாங்க!

         "ஷட்பதீ"என்றால் ஆறுபத ஸ்தோத்ரம்  என்ற  பொருளோடு,
    வண்டு  என்றோர்  பொருளுமுண்டு  என்று  பார்த்தோமல்லவா?   
  
               "இந்த  ஆறுபதங்கள்   ஸதா   என் வதனத்திலிருக்கட்டும்!"
   என்று சொல்ல வந்த சங்கரர், ஷட் பதீயின்  வண்டு எனும்  
   இரண்டாம் பொருளையும் மனத்தில் கொண்டு
   
                      "வண்டு  (ஷட்பதீ) ஸதா இருக்கிற இடமாக என்  
            வதனம் இருக்க வேண்டுமானால் அது தாமரையாக
        இருந்தால் தானே முடியும்?" என்றெண்ணியவராய்,
        "வதன சரோஜே"என்று போட்டுவிட்டார்! 

  

                  ஸ்ரீபதியின் பாதாரவிந்தம்பற்றி ஸதா பேசிக்
    கொண்டிருக்கும் ஒருவரின் வதனம் தூய கமலமாக இருப்பதும் 
    இயற்கைதானே?


             ''வண்டு ஸ்தோத்ரம்''என்ற நாமகரணம் எப்படி
           இந்த ஸ்தோத்ரத்திற்குப் பொருத்தம் என்று இப்போ  
          தெளிவாயிருக்குமே!

ஜெய ஜெய சங்கர!ஹர ஹர சங்கர!
   
                 அடுத்தபடியாக,நான் இலவசம் என்று அறிவித்த 
     "கொசு[ரு]" ஸ்தோத்ரத்தைப் பார்ப்போமா?


                                        'கொசு'த்துதி

                                       சக்ர ப்ரமண-கரத்வாத்
                                       குத்ருஷ்டிபிர்  -தூரவர்ஜ்யமாநத்வாத்
                                       ச்ருத்யந்த -கேலநத்வாத்
                                       மசக த்வாமேவ மாதவம் மந்யே II 


                   இந்த சின்ன நாலுவரி ஸ்லோகத்தில் ஓங்கி
            உலகளந்த உத்தமனையும்,கொசுவையும்
           குறித்து,இரு பொருள்பட  பாடி இருக்கிறார் பெயர்
           தெரியாத ஒரு சம்ஸ்க்ருதப் புலவர்!

        (ஸ்லேடைச்சொற்கள் பச்சை வண்ணத்திலும் அதற்கான
         இரு பொருள்களில் விஷ்ணுவைப்பற்றிய பொருள்
         செவ்வண்ணத்திலும்  கொசுவைக்குறிக்கும் பொருள்
         நீலவண்ணத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன)


                


         பொருட்சுருக்கம்:     "ஏ கொசுவே! 
சக்ரப்ரமணம் செய்தல் (சக்கரம் சுற்றுதல் /-வட்டமடித்தல் ),    
குத்ருஷ்டி(துர்நோக்கம் /-கண்வலி)உள்ளவர்களை 
தூரப்போகச்செய்தல்,
ச்ருத்யந்தத்தில் (வேதாந்தத்தில் /-காதோரத்தில்)
ஆனந்தமாக வளையவந்து விளையாடுதல்,
ஆகிய காரியங்களை நீ செய்வதால்,
உன்னையே மகாவிஷ்ணுவாக நினைக்கிறேன் ! !"

         
                                                         

           ''இத்தனூண்டு கவியில் இவ்ளோ ச்லேடையா?''ன்னு
         வாய் பிளந்துட்டீங்களா? கொசு பூந்துடப்போறது!
         
             இந்தக் கவிஞரைப்போல் கொசுவைக் கேசவனாய்
         நினைக்கும்  பக்குவமிருந்தால்   நோ ப்ராப்ளம் ! 

             கேசவன் நம்முள் புகுந்துவிட்டால்,அதற்குமேல் நமக்கு
           வேறென்ன வேண்டும் ?


[நன்றி:ர கணபதியின் 'தெய்வத்தின் குரல்' (3 ,4 ) இல் பரமாச்சாரியாரின் உபன்யாசங்கள் ]
disclaimer:images taken from google search








       
    




  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP