Showing posts with label கே.வி.மகாதேவன். Show all posts
Showing posts with label கே.வி.மகாதேவன். Show all posts

Friday, August 09, 2013

ஆண்டாள் பிறந்தநாள்! ஆடியில் சிறந்தநாள்!

இன்று Aug 9
என் இன்-உயிர்த் தோழி, கோதையின் பிறந்தநாள்!

அவளுக்கு, என்னவன் முருகவன் சொல்லும் வாழ்த்து = இங்கே!

இதோ முத்தாய்ப்பாக ஒரு காட்சி! அப்பாவும் பொண்ணும் போட்டி போட்டு பாடும் கண்ணன் பாட்டு!
இந்தப் பாட்டின் வேகம்... கேட்கும் போதெல்லாம் என்னை என்னமோ பண்ணும்!
இந்தப் பாட்டின் காட்சி... பார்க்கும் போதெல்லாம் என்னை என்னமோ பண்ணும்!

*அப்பாவாக = நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
*சின்னப் பொண்ணாக = குட்டி பத்மினி
*பெரிய பொண்ணாக = கே.ஆர்.விஜயா

வரிகள் போட்டி போட்டுக் கொண்டு வந்து விழுகின்றன = கண்ணனின் தாசனான கண்ணதாசன் தூரிகையில்!
TMS ஒரு பாய்ச்சல் பாய்ஞ்சா, சுசீலாம்மா எட்டு பாய்ச்சல் பாயறாங்க!

சிறுமி கோதைக்கு குரல் கொடுப்பது: மாஸ்டர் டி.எல்.மகாராஜன்
(ஆண் குரல் நல்லாத் தெரியுது; சின்னப் பொண்ணு கோதை ஒரு வேளை ஆம்பிளைப் புள்ளை போல் ரொம்ப பிடிவாதமோ? அதான் ஆம்பிளைக் குரலோ? :)

பெரியவள் கோதைக்கோ குரல் கொடுப்பது: பி.சுசீலா
இந்தப் பாட்டைக் கேட்டு, சுசீலாம்மாவிடம், நீங்க தான் அந்தக் கடவுள்-ன்னு யாரோ சொல்ல, அவர்கள் புன்னகையுடன் மறுத்தார்களாம்! :)
http://psusheela.org/fans/subbu_pothigai.html

இதோ: அரி அரி கோகுல ரமணா உந்தன் - திருவடி சரணம் கண்ணா!



அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!
அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!

பாரத தேவா பாண்டவர் நேசா
பதமலர் பணிந்தோமே - உன்
பதமலர் பணிந்தோமே!
(அரி அரி கோகுல ரமணா)

ஞான மலர்க் கண்ணா, ஆயர்க் குல விளக்கே
வானமும் கடலும் வார்த்து எடுத்த பொன் உருவே
கானத்தில் உயிர் இனத்தைக் கட்டுவிக்கும் கண்ணா!

(தானே உலகாகி தனக்குள்ளே தான அடங்கி
மானக் குல மாதர் மஞ்சள் முகம் காத்து
வாழ்விப்பாய் என்றும் மலர்த்தாள் கரம் பற்றி
நானும் தொழுதேன் நம்பி பரந்தாமா - உன்
நாமம் உரைக்கின்ற நல்லோர் நலம் வாழியவே!)

அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!

படம்: திருமால் பெருமை
வரிகள்: கண்ணதாசன்
குரல்: TMS, பி.சுசீலா, டி.எல்.மகாராஜன்
இசை: கே.வி.மகாதேவன்


Happy Birthday Kothai!
உனக்கு அவனோடு (கண்ணனோடு) பல்லாண்டு பல்லாண்டு...
எனக்கு அவனோடு (முருகவனோடு) பல்லாண்டு பல்லாண்டு...



Friday, June 21, 2013

பெரியாழ்வார் பிறந்தநாள்: பல்லாண்டு பல்லாண்டு!

"பல்லாண்டு பல்லாண்டு" = இந்தப் பாட்டு தெரியுமா?

ஓ... ஆழ்வார் படத்தில், தல அஜீத் பாடுவாரே! அந்தச் சினிமாப் பாட்டு தானே?

அதே அதே!
* ஆனா பாட்டுக்குத் தலை அசைத்தது மட்டுமே = தல!
* மத்தபடி, பாட்டைப் பாடினது = தல-யை விடப் பெரிய தல!:)

பெரிய "தல" = பெரிய ஆழ்வார்
இயற்பெயர்: விட்டு சித்தன்; தெக்கத்தி வில்லிபுத்தூர்க்காரரு; simpleஆச் சொல்லணும்-ன்னா..
நம்ம தோழி ஆண்டாளோட (வளர்ப்பு) அப்பா! = தன் மகளைச் "சான்றோள்" எனக் கேட்ட தந்தை!

என் காதல் முருகனையும் பாடிய சில ஆழ்வார்களுள் ஒருவர் - வள்ளி கொழுநன்;
"டேய் கண்ணா, ஒழுங்காத் தேய்ச்சிக் குளி; இல்ல, உன் ஆளு ஒன்னையப் பாத்துச் சிரிப்பா"-ன்னு பயமுறுத்தியவரு:) = நப்பின்னை காணில் சிரிக்கும்


அவரோட பிறந்த நாள் தான் இன்னிக்கி - ஆனியில் சுவாதி (Jun 20)
ஆனி மாசம் சுவாதி = அவரு; ஆடி மாசம் சுவாதி = நானு:)

சரி... அவருக்கு ஒரு வாழ்த்தைச் சொல்லீருவோம்; "ஒரு குறையும் இல்லாம, நல்லா இரு" -ன்னு ஆண்டவனையே வாழ்த்துனவரு ஆச்சே!
*Happy Birthday Periazhwar!
*இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெரியாழ்வாரே!

வாழ்த்த வயதில்லை; வணங்குகிறேன் -ன்னு... இன்னிக்கி அவனவன் வயசைக் கொறைச்சிக்கிறான்:)
ஆனா வாழ்த்த = "வயசு" தேவையில்ல; "மனசு" தான் தேவை!

அதான், ஆண்டவனை விட.. வயசில், கல்வியில், செல்வத்தில், அதிகாரத்தில்..
எல்லாத்திலுமே சின்னவரான ஆழ்வார்,
பெரியவரான இறைவனையே = "நல்லா இரு" -ன்னு வாழ்த்துறாரு!

ஆனா... இறைவனை விட ஒன்றே ஒன்றில் மட்டும் இவரு பெரியவரு; எதில்? = அன்பில்!
(... -பொங்கும், 
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்)


"பல்லாண்டு பல்லாண்டு" = இந்த 1000 yr song, பலருக்கும் தெரிஞ்சிருக்கும்! ஆனா, இதே பாட்டை..
*சினிமா,
*Dance
*தமிழ்ப் பண்ணிசை,
*கோயில் ஓதல்,
* SPB -ன்னு, பலப்பல குரலில் கேட்போம் இன்னிக்கி!
----------

* AP Nagarajan இயக்கிய திருமால் பெருமை படத்தில், சீர்காழியார்


இசை: கேவி. மகாதேவன்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
படம்: திருமால் பெருமை
வரிகள்: பெரியாழ்வார்

பல்லாண்டு பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு! 
பலகோடி நூறாயிரம்!!
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் 
சேவடி செவ்வி திருக்காப்பு!!
(உன் தோள் வலிமை = மல் (எ) வலிமை; 
ஆனா உனக்கும்-எங்களுக்கும், காப்பு = தோள் அல்லதிருவடிகளே!)

அடியோமோடும் நின்னோடும் 
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு! = (நானும் நீயும்)
வடிவாய் நின் வல மார்பினில்       
வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு! = (அன்னை திருமகளும்)

வடிவார் சோதி வலத்து உறையும்      
சுடர் ஆழியும் பல்லாண்டு! = (சக்கரமும்)
படை போர் புக்கு முழுங்கும் - அப்
பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே!! = (சங்கும்)

* ஆழ்வார் படத்தில்... (உன்னி கிருஷ்ணன் & செந்தில் தாஸ்; Music by Srikanth Deva)
வடைமாலை கோக்கும் போது, அஜீத் தங்கை நைசா ஒரு வடை உருவ,
சாமிக் குத்தம் -ன்னு அஜீத் அவளை ஓங்கித் தட்டிட்டு, Sideல தான் வாயில் லபக்கும் காட்சி - so cute Ajeeth!:)
  

*தமிழ்ப் பண்ணிசை வடிவில்....
 

* SPB குரலில் (album) கேட்க, இங்கே

* "அரையர் சேவை" வடிவில் - அரையர் ஸ்ரீராம பாரதி & துணைவியார்
 

* கோயிலில் வேதம் ஓதும் "தொனியில்"... தமிழ் ஓதல்
 


* பல்லாயிரத்தாண்டு = x1,000
* பல கோடி = x10,000,000
* நூறாயிரம் = 100,000

சுவைக் குறிப்பு (Tid bits):

1. தமிழில், "லட்சம்" (இலட்சம்) என்ற சொல் இல்லை; நூறாயிரம் என்பதே சரி

2. திவ்ய பிரபந்தம் என்ற பெயர் பின்னாளில் வந்தது; ஆழ்வார்கள் யாரும் அந்தப் பெயரை வைக்கவில்லை;
திவ்ய பிரபந்தம் = "அருளிச் செயல்" என்பதே தூய தமிழ்ப் பெயர்;

3. காலத்தால் மூத்த முதலாழ்வார் (பொய்கை ஆழ்வார்), "உலகம்" -ன்னு வச்சி தொடங்குன பாட்டு தான், முதல் பாசுரம் (வையம் தகளியா வார்கடலே) !
ஆனா, எல்லாப் பாசுரங்களையும் பின்னாளில் வரிசைப்படுத்தும் போது, "பல்லாண்டு" -ன்னு மங்களகரமா வரிசைப்படுத்தியதால்...

பெரியாழ்வாரின் இந்தக் கவிதையே, திவ்யப் பிரபந்தத்தில், முதல் பாட்டாக அமைந்து விடுகிறது!

(எப்படி வேதத்துக்கு = "ஓம்" என்பது துவக்கமோ,
தமிழ் வேதத்துக்குப் = "பல்லாண்டு" என்பது துவக்கம்!
வேதத்துக்கு ஓமென்னுமாப் போலே, உள்ளதுக்கெல்லாம் சுருக்காய். தான் மங்கலம் ஆதலால்..ன்னு அருளிச் செயல் ஈடு!)


After a year looong gap, writing in Kannan Songs;
TMS triggered it; Dank u புல்லாங்குழல் குடுத்த TMS குரலே!

Tuesday, June 11, 2013

TMS: பச்சைமா மலைபோல் மேனி!

TMS அவர்களின் நீங்கா நினைவாக, முருகனருள் வலைப்பூவில், 2 வாரங்களாய், பாடல் இட்டுக் கொண்டே வரும் போது.......

அட, கண்ணன் பாட்டிலே, இன்னும் இடவில்லையே -ன்னு இன்று தான் மின்னல் போலத் தோன்றியது; அதான் இந்தச் சினிமாப் பாடல்;
பலருக்கும் தெரிஞ்ச பாடல்... ஆனா TMS-இன் "பின்குறிப்பு" தெரியாத பாடல்....

அதென்ன "பின்குறிப்பு"?



1967-68
TMS அவர்களின் அருமை மகன் = பாலசுப்பிரமணி;
பாலன் தான் = 16 வயது;
வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய வயது; திடீரென்று மஞ்சள் காமாலை; ஒரேயடியாயப் படுத்து விட்டான்:(

TMS சொல்வதையே கேளுங்கள்:

"பல வைத்தியர்களை அழைத்தேன்; பணத்தைக் கொட்டி வைத்தியம் பார்த்தேன்; ஆனால் அவனோ கடைசி வரை படுக்கையை விட்டு எழுந்திருக்கவே இல்லை;
"முருகா முருகா" என்ற சொற்கள், அவன் வாயிலிருந்து வந்தபடியே, அவன் உயிர் பிரிந்தது;

அன்றிலிருந்து, நான் எதிலும் பற்றற்று இருக்கிறேன்;
என் வாழ்க்கை துயரம் மிகுந்ததாக இருப்பினும், ஆண்டவனின் பாதங்களில் சரணம் அடைந்து விட்டதால்... காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறேன்!

அந்தச் சமயத்தில், எனக்கு ஒரு பாட்டு அமைந்தது; விக்கித்துப் போனேன்;
"உறவு மற்றொருவர் இல்லை; யார் உளர் குறை களைய அம்மா? அரங்க மா நகருளானே!"

என் அப்பன் முருகன் மேல் எத்தனையோ பாடல்கள் பாடி இருக்கிறேன்; 
எத்தனையோ அம்மன் பாடல்கள் பாடி இருக்கிறேன்; எத்தனையோ கண்ணன் பாடல்கள் பாடி இருக்கிறேன்;
ஆனால், 1968இல் வந்த திருமால் பெருமை என்கிற இந்தப் படத்தில், இந்த ஒரு பாடல், இந்த ஒரு வரி... அப்போது என்னை மிகவும் அசைத்து விட்டது;

என் மகன் பாலசுப்பிரமணி; அவன் ஆன்மா சாந்தி அடையணும்; உறவு மற்றொருவர் இல்லை; யார் உளர் குறை களைய அம்மா, அரங்க மா நகருளானே"
(பொக்கிஷம்: நேர்காணல் - 29/5/1977)



TMS (எ) அந்த முருக உள்ளத்தை உருக்கிய திருமால் பாடலை,
இன்று பாடுவோம்...
அவர் மகனும், அவரும்
ஈசன் எந்தை இணையடி நீழலே - ன்னு இளைப்பாற வேண்டுவோம்;

அவரின் துணைவியார் திருமதி. சுமித்ரா செளந்தரராஜன் & மற்ற பிள்ளைகளுக்கு, அவரின் ஆசி நிலைத்து நிற்கவும் வேண்டுவோம்!

TMS = அவனுக்கென்ன?
* மரணமும் இல்லை - அவனுக்கென்ன?
* முருகனின் குரல் - அவனுக்கென்ன?
* ஆண்மையின் தமிழ் - அவனுக்கென்ன?
* இளகிய மனம் - அவனுக்கென்ன?
* உயிருள்ள வரை தொடர்ந்து வரும்.....



பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்


இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே

----------

ஊர் இலேன் காணி இல்லை
உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி!


காரொளி வண்ணனே என்
கண்ணனே கதறு கின்றேன்,
ஆருளர் களைக் கணம்மா
அரங்க மா நகர் உளானே



படம்: திருமால் பெருமை
இசை: கேவி மகாதேவன்

வரிகள்: தொண்டரடிப்பொடி ஆழ்வார்
குரல்: ஏழிசை மன்னர் TMS (எ) Thoguluva Meenatchi Soundararajan

கண்ணன் பாட்டில்,TMS பாடல்களின் தொகுப்பு = இங்கே!



Monday, January 31, 2011

#tnfisherman #தமிழ் மீனவர்கள் (AVM & பி.சுசீலா!)

கண்ணன் பாட்டு அன்பர்களே,
தமிழக மீனவர்களின் உயிர் காக்கும் முயற்சியாக, நிரந்தரத் தீர்வுக்கு, உங்கள் குரலையும் இங்கே கொடுங்கள்! மிகப் பெரும் இணைய முயற்சி ஒன்று நடந்து கொண்டிருக்கு - எட்டிப் பாருங்கள்!

எம்பெருமான் திருவுள்ளம், இந்த உயிர்களைக் காக்கும்! வேண்டுவோம்!
விண்ணப்ப மனுவில், நம்முடைய ஒரேயொரு கையெழுத்தையாவது போட்டு, அல்லல்படுவோர் தலையெழுத்தை மாற்றுவோம்!
இங்கு போடுங்கள், உங்கள் கையெழுத்தை! கண்ணன் உள்ளம் உங்களை வாழ்த்தும்!



இன்றைய கண்ணன் பாட்டுப் பாடல், மிக மிக சூப்பர் ஹிட் சுசீலாம்மா பாடல்!
அன்பே வா என்ற சூப்பர் ஹிட் படம் எடுத்த கையோடு,
ஏ.வி.எம் நிறுவனத்தார் எடுத்த அடுத்த வண்ணப் படம் = ஆன்மீகப் படம்! :)

ஐயோ! பலரும் வேண்டாம் என்றார்கள்! சூப்பர் ஹிட் எம்.ஜி.ஆர் படத்துக்குப் பிறகு, ஒரு ஆன்மீகப் படமா? ஃப்ளாப் ஆகி விடும் என்று பயமுறுத்தினார்கள்!
ஆனால் ஏவிஎம் எடுத்துக் காட்டினார்! தந்திரக் காட்சிகள் சூப்பர் ஹிட்! பி.சுசீலா பாடல் = நாராயண மந்திரம்....ஒலிக்காத பட்டி தொட்டியே இல்லை!
குழந்தைப் பிரகலாதனாக நடித்த குழந்தையை அனைவருக்கும் பிடித்துப் போனது!


பக்த பிரகலாதா = தெலுங்கு, தமிழ், இந்தி என்ற மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் எடுத்தனர்!
தந்திரக் காட்சிகள் ஏ.வி.எம் புகழுக்கு எடுக்கப்பட்டன! தந்திரக் காட்சிப் புகழ் பாபுபாய் மிஸ்திரியின் உதவியாளர் ரவிகாந்த் எடுத்தார்!

இரணியன் = எஸ்.வி. ரங்காராவ்
அவன் மனைவி கயாது = அஞ்சலி தேவி
சிறுவன் பிரகலாதன் = பேபி ரோஜா ரமணி
நாரதர் = பிரபல பாடகர் பாலமுரளி கிருஷ்ணா

தெலுங்கு டப்பிங் என்பது தெரியாமல் இருப்பதற்காக, தமிழில் தனி நகைச்சுவை Track!
டி.எஸ்.பாலையா & ஏ.கருணாநிதி = இவர்களே பிரகலாதனின் ஆசிரியர்கள்!
ஓம் இரணியாய நம என்று சொல்லிக் கொடுத்து, கடைசியில் அவர்களே ஓம் நாராயணாய நம என்பதற்கு மாறி விடுவார்கள்! Class Room நகைச்சுவை சூப்பரா இருக்கும்! :)



அஹம் பிரம்மாஸ்மி = நான் கடவுள் என்ற மகா வாக்கியம்! வேதம்!
இதைத் தானே இரணியனும் சொன்னான்?
ஓம் இரணியாய நமஹ! நானே கடவுள்! :)
அப்போ அவன் தான் முதன்முதல் அத்வைத குருவா? :)

* அஹம் பிரம்ம ஆஸ்மி = நான் கடவுளாய் "இருக்கிறேன்"!
நானே கடவுள் அல்ல! நான் கடவுளின் வெளிப்படு பொருளாய் (வடிவமாய், உடம்பாய்) இருக்கிறேன்!
* தத் தவம் அஸி = அது நானாக இருக்கிறது!
கடவுள் நானாக என்னுள் இருக்கிறார்! இது தான் இவ் வேத வாக்கியங்களுக்குப் பொருள்! அதனால்....நான் தான் கடவுள்-ன்னு "ஞானத்தில்" ஓவராத் துள்ள வேண்டாம்! :)

நான் தான் "அதுவா"?
"அது" பண்ணுற வேலையை எல்லாம் என்னால் பண்ண முடியுமா? என்னைக் காப்பாத்திக்கவே எனக்கு வக்கில்லை! அப்பறம் எப்படி நான் மொத்த உலகத்தைக் காப்பாத்துவேன்? :)
மொதல்ல எனக்கு "கருணை"-ன்னு ஒன்னு வருமா? என்னை தாழ்த்திக் கொண்டாலும், அடியவர்களுக்காக இறங்கி வருகிறேன்-ன்னு சொல்லும் மனசு எனக்கு இருக்கா? அது வரட்டும்! அப்பறமா சொல்லிக்கலாம் "அஹம் பிரம்மாஸ்மி"-ன்னு! :)

ஓம் இரணியாய நம-ன்னு சொன்னான், ஊரையே சொல்ல வைத்தான் இரணியன்! -அதுவும் எட்டெழுத்து தான் பாருங்கள்!
ஓம்(1)+இரணியாய(5)+நம(2) = அஷ்டாட்சரம்! :)
அறிந்தோ அறியாமலோ அஷ்டாட்சரம் சொல்லி, குழந்தையின் அசைக்க முடியாத நம்பிக்கையால், உணரப் பெற்றான், அந்தப் பெற்றவன்! நாம பாட்டைப் பார்ப்போம் வாருங்கள்!

சுசீலாம்மாவின் அன்றைய சூப்பர் ஹிட் பாடல்! பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த பாடல்! கேட்டுக் கொண்டே பதிவை வாசியுங்கள்!



படம் : பக்த பிரகலாதா
குரல் : பி.சுசீலா
இசை: கேவி மகாதேவன்
வரி: கண்ணதாசன்

நாராயண மந்திரம் - அதுவே நாளும் பேரின்பம்
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து....
பரமன் அருள் தரும் சாதனம்
...
(நாராயண மந்திரம்)

உடலினை வருத்தி மூச்சினை அடக்கும்
தவத்தால் பயனில்லை!
உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும்
யாகங்கள் தேவையில்லை!
மா தவா மது சூதனா என்ற மனதில் துயரமில்லை
(நாராயண மந்திரம்)

ஆதியும் அந்தமும் = நாராயணனே
அன்னையும் தந்தையும் = நாராயணனே
பக்தியும் முக்தியும் = நாராயணனே
பகலும் இரவும் = நாராயணனே
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து,
பரமன் அருள் தரும் சாதனம்
(நாராயண மந்திரம்)

நாராயணா அரி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா
நாராயணா அரி நாராயணா
நாராயணா லட்சுமி நாராயணா



எம்பெருமான் திருவுள்ளம், இந்த உயிர்களைக் காக்கும்! வேண்டுவோம்!
விண்ணப்ப மனுவில், நம்முடைய ஒரேயொரு கையெழுத்தையாவது போட்டு, அல்லல்படுவோர் தலையெழுத்தை மாற்றுவோம்!
இங்கு போட்டு விட்டீர்களா, உங்கள் கையெழுத்தை? கண்ணன் உள்ளம் உங்களை வாழ்த்தும்!

Tuesday, January 11, 2011

சீர்காழி+TMS - சேர்ந்து பாடி இருக்காங்களா, கண்ணனை?

சீர்காழி + TMS = முருகனைச் சேர்ந்து பாடி இருக்காங்க! திருச்செந்தூரில் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்-ன்னு! தெய்வம் படத்தில்...
* பொன்னழகு மின்னி வரும் வண்ணமயில் கந்தா-ன்னு அவர் எடுக்க
* கண்மலரில் தண்ணருளைக் காட்டி வரும் கந்தா-ன்னு இவர் முடிக்க...
ஆகா! கண்கொள்ளாக் கந்தக் காட்சி! என் முருகச் சொந்தக் காட்சி!

ஆனால் இந்த கலக்கல் ஜோடி, கண்ணனைச் சேர்ந்து பாடி இருக்காங்களா?
உம்...உம்...உம்...தனித்தனியாப் பாடி இருக்காங்க தெரியும்!
* புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே-ன்னு TMS Hall of Fame!
* திருப்பதி மலை வாழும் வேங்கடேசா-ன்னு சீர்காழியின் பெருமை!

ஆனால் இருவரும் சேர்ந்து பாடினதா தெரியலையே! சேர்ந்து பாடி இருக்காங்களா என்ன, கண்ணனை?
ஒரு வேளை, முருகனருள் முன்னின்றது போல், கண்ணனருள் முன்னிற்கலையோ? :)




கண்ணன் அருள், மெய்யாலுமே "முன்" நின்றது!
முருகனைப் பாடும் முன்னரே...., கண்ணனைப் பாட ஜோடி சேர்ந்து விட்டனர் நம்ம சீர்காழி + TMS! அதுவும் சினிமாவில்! :)
முப்பத்து மூவர் அமரர்க்கும், "முன் சென்று" கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!

ஆகா! அது என்ன படம்? அது என்ன படம்?
நீங்களே பாருங்க! கேட்டுக்கிட்டே படிங்க!


பாதுகையே துணையாகும் எந்நாளும் உன்
பாதுகையே துணையாகும்!
பூவுலகெல்லாம் போற்றிடும் தேவா
(பாதுகையே துணையாகும்)

நீதியும் நேர்மையும் நெறியோடு இன்பமும்
நிலவிடவே எங்கள் மனத்துயர் மாறவே
(பாதுகையே துணையாகும்)

உனது தாமரைப் பதமே
உயிர்த் துணை யாகவே
மனதினில் கொண்டே நாங்கள்
வாழுவோம் இங்கே ராமா!
பதினான்கு ஆண்டும் உந்தன்
பாதுகை நாட்டை ஆளும்
அறிவோடு சேவை செய்ய‌
அருள் வாயே ராமா!


த‌யாள‌னே சீதா ராமா! சாந்த‌ மூர்த்தியே ராமா!
ச‌ற்குணாதிபா ராமா! ச‌ர்வ‌ ர‌ட்ச‌கா ராமா!

தந்தை சொல்லைக் காக்கும் த‌ன‌ய‌னான‌ ராமா!
தவசி போல கானிலே வாசம் செய்யும் ராமா!
தத்வ வேத ஞானியும் பக்தி செய்யும் ராமா!
சத்ய ஜோதி நீயே.......நித்யனான ராமா!
(நித்யனான ராமா......நித்யனான ராமா)

படம்: சம்பூர்ண ராமாயணம்
இசை: கே.வி. மகாதேவன்
வரி: மருதகாசி
குரல்: சீர்காழி, TMS

இறைவனின் திருவடி நிலைகளை, அழகான குழுப் பாடலாக (பஜனைப் பாடலாக) பாட, இந்தப் பாடலின் மெட்டு, பொருந்தி வருகிறது அல்லவா?

பாதுகை-ன்னா என்ன? வெறும் கால் செருப்பா? அது எப்படி ஒருவருக்குத் துணையாகும்?
பாதுகைகளின் பெருமை தான் என்ன? பின்னூட்டத்தில் பேசுங்களேன்! ஏதுமறியா என்னைப் போன்றவர்கள் அறிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும்!

Wednesday, September 01, 2010

அப்பாவும் பொண்ணும் போட்டிப் பாட்டு! கண்ணன் பாட்டு!

கண்ணன் பிறந்த நாளில், இங்கு நியூயார்க்கின் இரவிலே...
மாலையில் மருத்துவரிடம் ஓடி, இல்லம் வந்து சோர்ந்து தூங்கி, பிட்சாவையே பலகாரமாய் உண்டு...
இதோ இரவு பத்து மணிக்கு, தம்பி பாலாஜி நினைவுபடுத்த, அவசரம் அவசரமாக...
நெற்றியில் என்றுமில்லாத திருநாளாய், ஒற்றைக் கீற்றில் நாமம் தரித்து, அதைக் கண்ணாடியில் சரி பார்த்து :) ...
பால் பொங்கி, திடீர்ப் பாயசம் செய்து, வெண்ணெய் உருட்டி, ஒரே ஒரு பழைய ஆப்பிளொடு..
கை வலிக்க மணி ஒலிக்க முடியாது, தம்பி பாலாஜி மெல்லொலி ஒலிக்க, கருமைச் சுருள் இரவிலே, கேண்டில் விளக்கிலே, பச்சைக் கர்ப்பூர ஒளி ஜொலிக்க...

மாணிக்கம் கட்டி, மணி வைரம் இடைக் கட்டி,
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்
பேணி உனக்கு நாங்கள் விடு தந்தோம்
மாணிக் குறளனே தாலேலோ!
வையம் அளந்தானே தாலேலோ!

பிறந்த உடனேயே நல்லாத் தூங்கி விடு கண்ணா!
இதோ சற்று நேரத்தில் இடம் மாறப் போகிறாய்! இனி உனக்குத் தூக்கமே போச்சு! உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்ததடா கண்ணா! அதற்கு நீயும் விதிவிலக்கு அல்லடா!



இதோ முத்தாய்ப்பாக ஒரு காட்சி! அப்பாவும் பொண்ணும் போட்டி போட்டு பாடும் கண்ணன் பாட்டு!
இந்தப் பாட்டின் வேகம்... கேட்கும் போதெல்லாம் என்னை என்னமோ பண்ணும்!
இந்தப் பாட்டின் காட்சி... பார்க்கும் போதெல்லாம் என்னை என்னமோ பண்ணும்!

அப்பாவாக = நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
சின்னப் பொண்ணாக = குட்டி பத்மினி
பெரிய பொண்ணாக = கே.ஆர்.விஜயா

வரிகள் போட்டி போட்டுக் கொண்டு வந்து விழுகின்றன! கண்ணனின் தாசனான கண்ணதாசன் தூரிகையில்!
TMS ஒரு பாய்ச்சல் பாய்ஞ்சா, சுசீலாம்மா எட்டு பாய்ச்சல் பாயறாங்க!

சிறுமி கோதைக்கு குரல் கொடுப்பது: மாஸ்டர் டி.எல்.மகாராஜன் (ஆண் குரல் நல்லாத் தெரியுது, சின்னப் பொண்ணு கோதை ஒரு வேளை ஆம்பிளைப் புள்ளை போல் ரொம்ப பிடிவாதமோ? அதான் ஆம்பிளைக் குரலோ? :)

பெரியவள் கோதைக்கோ குரல் கொடுப்பது: பி.சுசீலா
இந்தப் பாட்டைக் கேட்டு, சுசீலாம்மாவிடம், நீங்க தான் அந்தக் கடவுள்-ன்னு யாரோ சொல்ல, அவர்கள் புன்னகையுடன் மறுத்தார்களாம்! :)
http://psusheela.org/fans/subbu_pothigai.html

இதோ: அரி அரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா!



அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா
அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா

பாரத தேவா பாண்டவர் நேசா
பதமலர் பணிந்தோமே - உன்
பதமலர் பணிந்தோமே
(அரி அரி கோகுல ரமணா)

ஞான மலர்க் கண்ணா, ஆயர்க் குல விளக்கே
வானமும் கடலும் வார்த்து எடுத்த பொன் உருவே
கானத்தில் உயிர் இனத்தைக் கட்டுவிக்கும் கண்ணா

தானே உலகாகி தனக்குள்ளே தான அடங்கி
மானக் குல மாதர் மஞ்சள் முகம் காத்து
வாழ்விப்பாய் என்றும் மலர்த்தாள் கரம் பற்றி
நானும் தொழுதேன் நம்பி பரந்தாமா - உன்
நாமம் உரைக்கின்ற நல்லோர் நலம் வாழியவே!

அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!

படம்: திருமால் பெருமை
வரிகள்: கண்ணதாசன்
குரல்: TMS, பி.சுசீலா, டி.எல்.மகாராஜன்
இசை: கே.வி.மகாதேவன்



புறம் போல் உள்ளும் கறுத்துப் போன கண்ணா!
இவளுக்கு எப்படி அறிமுகம் ஆனாயோ, அப்படியே இருந்து விடேன்!
வெண்ணைய்க்காடும் பிள்ளையாய்!
அனைவரும் விரும்பும் PoRkki பிள்ளையாய்!

* கம்ச வதம், சிசுபால தண்டனை எல்லாம் வேறு தெய்வங்கள் பார்த்துக் கொள்ளட்டும்!
* பாஞ்சாலி மானம் வேறு தெய்வம் காத்துக் கொள்ளட்டும்!
* பகவத் கீதை, வேறு எவனோ உளறிக் கொள்ளட்டும்!

* போலிச் சடங்குகளை/இந்திர பூசையை வேறு ஒருவர் வந்து தடை செய்யட்டும்!
* துவரைப்பதிக்கு, பொது மக்களை வேறு யாரோ ஒருவர் வழிநடத்தட்டும்!
* புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகளை உன் தேரில் தானா ஏற்ற வேண்டும்? வேறு ஒரு புரட்சியாளர் வந்து அவர்களுக்கு மதிப்பு ஏற்படுத்தட்டும்!

பாரதப் போரில், திறமையால் போரிடாமல், வரம் வாங்கிப் போர் புரிவார்களை எதிர்த்து, வேறு யாராவது மாயங்கள் செய்து கொள்ளட்டுமே! உனக்கு எதுக்குடா வீண் சாபமும், பொல்லாப்பும்?
பிறந்த நாள் காணும் போலிப் பண்பாளா!
மகரந்த வாசம் வீசும் மாதவா! ராகவா!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கள்ளமில்லாத கள்ளக் குழந்தையாய்,
பல அனாதைக் குழந்தைகளோடு ஆடி விளையாடி,
நீ எப்பமே நல்லா இருக்கணும்!

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து...
பல்லாண்டு பல்லாண்டு, எம்மோடு பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு!



எங்கள் முழு"முதல்" தெய்வமே...
தொன்மைத் தமிழ்க் குடிக்கு...மாயோன் மேய மைவரை உலகே...

என் பால் நோக்காயே ஆகிலும்...
தரு துயரம் தரினும்...
ஆராய்ந்து அருள்வதாகச் சொல்லி அருளா விடினும்...

உன் மார்பில் அகலகில்லேன் என்று இருப்பவள் போலே
நானும் என் நெஞ்சில் அகலகில்லேன் என்று என் முருகனை இருத்தி
அவனோடு பல்லாண்டு பல்லாண்டு...

அரி அரி கோகுல ரமணா, உந்தன் திருவடி சரணம் கண்ணா!
அரி அரி கோகுல ரமணா, உந்தன் திருவடி சரணம் கண்ணா!

அப்பா! எங்கள் பெருமாளே!
புகல் ஒன்றில்லாப் பேதை...
இரு கரம் தூக்கினேன்! ஏலோர், ஏலோர்!

அரி அரி கோகுல ரமணா, உந்தன் திருவடி சரணம் கண்ணா!
அரி அரி கோகுல ரமணா, உந்தன் திருவடி சரணம் கண்ணா!
திருவடி சரணம் கண்ணா!
திருவடி சரணம் கண்ணா!

Monday, March 29, 2010

பி. சுசீலா - ஒரே பாட்டில் கண்ணன்+முருகன் பாட்டு!

முருகனருள்-150 உற்சவத்தின் தொடர்ச்சியாக...
கண்ணன் பாட்டிலே, சுசீலாம்மாவின் ஒரு மோகனமான பாட்டு!
இந்தப் பாட்டில், சுசீலாம்மா, கண்ணனையும் முருகனையும் மாற்றி மாற்றிப் பாடி, இசைமாலை சூட்டுவார் மாயோனுக்கும் சேயோனுக்கும்!

அட, அப்படி ஒரு பாட்டு இருக்கா என்ன?

இருக்கே! கண்டு புடிங்க பார்ப்போம்! இந்தப் படத்தில் வரும் இன்னொரு பாடல்...ரொம்பவே ஹிட்!
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல!
நீ இல்லாமல் நானும் நானல்ல!
தெய்வத்தின் முன்னே...நீயும் நானும் வேறல்ல!

இந்தப் பாட்டை...இப்பல்லாம்...தினமுமே கேட்பதால்...அப்படியே தங்கி விட்டதா? அதான் டக்-குன்னு இந்த முருகன்+கண்ணன் பாட்டும் ஞாபகத்துக்கு வந்துருச்சி! சரி முருகனருள்-150 உற்சவத்துக்கு வசதியா இங்கு இட்டு விட்டேன்! :)



என்ன கண்டு புடிச்சாச்சா? :)
படம் = இதய கமலம்! சரி தான்! ரவிச்சந்திரன் - கே.ஆர்.விஜயா

எந்தப் பாட்டு? = மலர்கள் நனைந்தன பனியாலே!

இது அவர் பாடிய மற்ற பக்திப் பாடல்கள் போலவே இருக்காது! ஏதோ வசீகரமான காதல் பாட்டு போலத் தான் இருக்கும்! (ஒரு வேளை என் காதுக்குத் தான் இப்படித் தோனுதோ? :)

நடுநடு-ல கண்ணன், முருகன்-ன்னு வருவதால், இது ஏதோ சாமிப் பாட்டு-ன்னு சொல்லலாமே தவிர...
இந்த இனிய மோகன மெலடி...என் மனம் மயக்கும் காதல் பாட்டே தான்! சந்தேகமே இல்லை!

கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி-ன்னு அவங்க கண்ணனைப் பாடும் போது, கண்ணாடி முன்னாடி போய் நின்னுக்குவேன், முருகனால் காயம் இருக்கா-ன்னு பார்க்கத் தான்! :)
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
உன்னோடிருப்பேன் மலர் அடி போற்றி-ன்னு அவங்க முருகனைப் பாடும் போது...என்ன சொல்ல.....முருகா, முருகா, நான் உன்னோடு இருப்பேன்! என்னிக்கும் இருப்பேன்! நீ இல்லாமல் நானும் நானல்ல!



* பாடலின் துவக்கத்தில் வரும் புல்லாங்குழல் இசை! Prelude - Dont Miss!
* பாடலின் நடுவில் வரும் மிருதங்க பீட்! போராடி-நீராடி-கண்ணாடி-முன்னாடி! That Interlude - Dont Miss!

மயக்கும் மோகன ராகத்தில்...
மயக்கும் சுசீலாம்மா மெலடியை...
கேட்டுக்கிட்டே படிங்க!


படம்: இதயக் கமலம்
குரல்: பி.சுசீலா
இசை: கே.வி. மகாதேவன்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
ராகம்: மோகனம்

ஆண்டிக் கோல முருகனும், கண்ணனும்! - யார் இதுல தண்டாயுதபாணி? :)


மலர்கள் நனைந்தன பனியாலே!
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே!
பொழுதும் விடிந்தது கதிராலே!
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே!
(மலர்கள் நனைந்தன)

கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்!
இரு கன்னம் குழி விழ நகை செய்தான்!
என்னை நிலாவினில் துயர் செய்தான்!
அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்!

சேர்ந்து மகிழ்ந்து போராடி!
தலை சீவி முடித்தே நீராடி!
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி!
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி!
(மலர்கள் நனைந்தன)

இறைவன் முருகன் திருவீட்டில்,
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி,
உயிரெனும் காதல் நெய்யூற்றி,
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி!
(மலர்கள் நனைந்தன)


இதே மெட்டில் வேற என்ன பாட்டெல்லாம் ஞாபகம் வருது-ன்னும் சொல்லுங்க பார்ப்போம்!
சாம்பிளுக்கு நான் துவங்கி வைக்கிறேன்!
* ஆஹா இன்ப நிலாவினிலே - மாயாபஜார்
* கங்கை யமுனை இங்குதான் சங்கமம் - இமயம்

பாட்டு நல்லா இருந்திச்சா?
இப்போ சொல்லுங்க,
சுசீலாம்மா பாடுவது...கண்ணன் பாட்டா? முருகன் பாட்டா? :)

Friday, June 08, 2007

55. பாரதியாரும் கண்ணதாசனும் கூட்டு சேர்ந்து போட்ட பாட்டு!

பாரதியாரும் கண்ணதாசனும் கூட்டாச் சேர்ந்து ஒரு பாட்டு எழுதினாங்க! :-)
என்ன.......அது ஆப்பரேஷன் கில்மா-ன்னு நினைக்கறீங்களா?
இல்லை இல்லை! அது எல்லாம் நம்ம வெட்டிப்பயல் தான் பதிவு போடுவாரு!
நான் சொல்வது உண்மை, உண்மை, உண்மையைத் தவிர வேறு ஒண்ணுமே இல்லீங்கோ!

கண்ணன் என் சேவகன் பாட்டு, பாரதியார் எழுதினார்.
ஆனால் அதைச் சினிமாவிற்கு அப்படியே எடுத்தாள முடியாது!
வரகவி கண்ணதாசனுக்கு, கண்ணன் மேல் இல்லாத உரிமையா?
பாரதியையும் கண்ணனையும் கோடம்பாக்கம் ஸ்டூடியோவில் உலவ விட்டுவிட்டார், நம்ம கவிஞர்!

மொதல்ல பாரதி பாட்டைக் கொஞ்சம் தொட்டுக்குவோம்!
ஹூம்......இந்தக் காலத்துல எங்க நல்ல வேலைக்காரங்க கிடைக்கறாங்க?
அப்படியே கிடைச்சாலும் "வேலைக்காரங்களையும் ட்ரைவர்களையும் வேலைய விட்டுத் தூக்கவே முடியாது...அப்பிடி ஒரு பாசம்"-னு நம்ம கவுண்டமணி ஒரு படத்துல மந்திரவாதியா அருள்வாக்கு டயலாக் கொடுப்பாரு!
ஆனா எல்லாக் காலங்களிலும் நெலமை, இதே தான் போலும்!
பாரதியாரே புலம்புவதைப் பாருங்க! :-)

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
'ஏனடா, நீ நேற்றைக்கு இங்குவர வில்லை' யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;

வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்;
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்;
தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார்;

உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊர அம்பலத்து உரைப்பார்;
எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்;
சேவகரால் பட்ட சிரமம் மிக உண்டு கண்டீர்;



சோர்ந்தான் பாரதி....வந்து சேர்ந்தான் கண்ணன்!

எங்கிருந்தோ வந்தான், 'இடைச்சாதி நான்' என்றான்;
மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன்
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
.....
காட்டுவழி யானாலும், கள்ளர் பயமானாலும்;
இரவிற் பகலிலே எந் நேரமானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே
சுற்றுவேன், தங்களுக்கோர் துன்பமுறாமல் காப்பேன்;
கற்ற வித்தை ஏதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!


......என்று கண்ணன் தன் பாட்டுக்கு அடுக்குகிறான்!

கண்ணனுக்கு இடம் கொடுத்த பாரதியின் கதி என்னவாயிற்று?
ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது


கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன்
......

நண்பனாய், மந்திரியாய், நல் ஆசிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான்
இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்!

கண்ணன் எனது அகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய்ச்
செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,
கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம்,
தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்!



இதைச் சினிமாவிற்கு அப்படியே போட்டா,
மினிமா ஆக வேண்டியது தான்:-)

பாருங்க, கண்ணதாசன் கலக்கும் சுவையான காப்பியை!
இதைக் காப்பின்னு சொல்லுறதே பெருங்குற்றம்...ஆனாலும் சுவைக்காகச் சொல்கிறேன்....
பாரதியை டிகாஷனில் இறக்கி, மணக்க மணக்க, ஏ.ஆர்.ரகுமான் தந்த லியோ காப்பியைப் போல் கொடுக்கிறான்!

படிக்காத மேதை படத்தில் ரங்காராவின் கவலையும் துக்கமும், சிவாஜியின் குணங்களையும் மனசு முன்னால கொஞ்சம் ஓட விட்டுக்குங்க!
ஓடலைன்னா....இருக்கவே இருக்கு youtube காட்சி....பதிவின் இறுதியில்!


சீர்காழியாரின் உருக்கும் குரலில், இதோ கேளுங்கள்!

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
கண்ணன்...
(எங்கிருந்தோ வந்தான்)


சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன்
கண்ணன்...
(எங்கிருந்தோ வந்தான்)


பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் - கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய் ...
மந்திரியாய் ...
நல்லாசிரியனுமாய் ...

(யதா யதா ஹி தர்மஸ்ய க்ளானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய தத் ஆத்மானம் ச்ருஜாம் அகம்)

பண்பிலே தெய்வமாய் ...
பார்வையிலே சேவகனாய் ...
ரங்கன்.....

எங்கிருந்தோ வந்தான்

ரங்கன் ரங்கன் ரங்கன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா!




படம்: படிக்காத மேதை
இசை: K.V.மகாதேவன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்

Monday, May 28, 2007

52. கங்கைக் கரைத் தோட்டம், கன்னிப் பெண்கள் கூட்டம்!

ஒரு பெண்ணின் காதலை, ஒரு ஆண் பரிபூர்ணமாக, முழு மனதுடன் புரிந்து கொள்ள முடியுமா?
கவியரசர் கண்ணதாசனின் சொற்களைக் கொஞ்சம் கடன் வாங்கினால், முடியும்!
"கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை
கண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ" என்ற ஏக்கம், அப்போது நன்றாகவே புரியும்!

இந்தப் படத்தில், இதைப் பாடுவது யார்?
தேவிகாவா? இல்லை விஜயகுமாரியா?
இரண்டு பேரும் கண்ணன் பாட்டு பாடியிருக்கிறார்கள். ரெண்டுமே கொஞ்சம் சோகமான பாட்டு தான். அதான் கொஞ்சம் குழப்பம்! :-)
"அதே பாட்டு, அதே பாவம்...பாடம்மா....நீ பாடு" என்று "பாடு சாந்தா பாடு" டயலாக் இந்தப் பாடலிலும் வரும்!

பாடலை இதோ கேளுங்கள்!

சுந்தரம் என்ற நண்பர் கேட்ட நேயர் விருப்பம்!


bhojan-lila_01

கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே...ஓஓ...கண்ணன் நடுவினிலே


காலை இளம் காற்று
பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே...ஓஓ...எதிலும் அவன் குரலே


கண்ணன் முகத்தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண்மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாகி நின்றேன்

என்ன நினைந்தேனோ...தன்னை மறந்தேனோ!
கண்ணீர் பெருகியதே...ஓ...கண்ணீர் பெருகியதே!!
(கங்கைக்கரை)

கண்ணன் என்னைக் கண்டுகொண்டான்
கை இரண்டில் அள்ளிக் கொண்டான்
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் சூடித் தந்தான்


கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை!
கண்ணீர் பெருகியதே...ஓ...கண்ணீர் பெருகியதே!!


அன்று வந்த கண்ணன் அவன்
இன்று வர வில்லை அவன்!
என்றோ அவன் வருவான்...ஓ...என்றோ அவன் வருவான்!


கண்ணன் முகம் கண்டகண்கள்
மன்னன் முகம் காண்பதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை


கண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ...
காற்றில் மறைவேனோ!
நாடி வரும் கண்ணன், கோல மணி மார்பில்
நானே தவழ்ந்திருப்பேன்!!
கண்ணா...!!கண்ணா...!!கண்ணா...!!




படம்: வானம்பாடி
வரிகள்: கண்ணதாசன்
குரல்: பி. சுசீலா
இசை: கே.வி. மகாதேவன்
ராகம்: ஆபேரி (கரெக்டா?...:-)

Saturday, May 26, 2007

51. திருப்பதி மலை வாழும் வெங்கடேசா

திருமலை தென்குமரி படத்தில் இடம்பெற்ற பாடல். சீர்காழியில் குரலில் அருமையாக அமைந்த பாடல். வீடியோ தேடலாம்னு பார்த்தா திருப்பதினு போட்டா அஜித் படம் வருது, திருமலைனு தேடினா விஜய் படம் வருது. என்ன கொடுமை கோவிந்தா?

உங்க யாருக்காவது வீடியோ லிங் கிடைத்தால் கொடுக்கவும்.


பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்...



திருப்பதி மலைவாழும் வெங்கடேசா


திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்

மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா


திருப்பதி...

அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்
அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்

என் மனம் உருகிடவே பாடி வந்தேன்
உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்


திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா
திருப்பதி...


நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா

மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா
உரைத்தது கீதை என்ற தத்துவமே
அதை
உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலை வாசா


திருப்பதி...

இந்த விடியோவையும் பார்க்கவும்


Monday, May 14, 2007

திருமால் பெருமைக்கு நிகரேது!!!





திருமால் பெருமைக்கு நிகரேது - உன்றன்

திருவடி நிழலுக்கு இணையேது!
பெருமானே உன்றன் திருநாமம் - பத்து
பெயர்களில் விளங்கும் அவதாரம்

(திருமால்)



கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் - தனைக்
காப்பதற்கே கொண்ட அவதாரம்
- மச்ச அவதாரம்!

அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் - எங்கள்
அச்சுதனே உன்றன் அவதாரம்
- கூர்ம அவதாரம்!

பூமியைக் காத்திட ஒரு காலம் -நீ
புனைந்தது மற்றொரு அவதாரம்
- வராக அவதாரம்!

நாராயணா என்னும் திருநாமம் - நிலை
நாட்டிட இன்னும் ஒரு அவதாரம்
- நரசிம்ம அவதாரம்!

மாபலிச் சிரம் தன்னில் கால் வைத்து - இந்த
மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம்
- வாமன அவதாரம்!

தாய் தந்தை சொல்லே உயர் வேதம் - என்று
சாற்றியதும் ஒரு அவதாரம்
- பரசுராம அவதாரம்!

ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் - எனும்
உயர்வினைக் காட்டிய அவதாரம்
- ராம அவதாரம்!

ரகு குலம் கொண்டது ஒரு ராமன் - பின்பு
யது குலம் கண்டது பலராமன்
- பலராமன்

அரசு முறை வழிநெறி காக்க - நீ
அடைந்தது இன்னொரு அவதாரம்
- கண்ணன் அவதாரம்


விதி நடந்ததென மதி முடிந்ததென
வினையின் பயனே உருவாக,
நிலைமறந்தவரும், நெறியிழந்தவரும்
உணரும் வண்ணம் தெளிவாக,
இன்னல் ஒழிந்து புவி காக்க - நீ
எடுக்க வேண்டும் ஒரு அவதாரம்
- கல்கி அவதாரம்!

(திருமால்)

பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்...


Thursday, December 21, 2006

10. காக்கைச் சிறகினிலே நந்தலாலா

பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - பாரதியார் எழுதி, உன்னி கிருஷ்ணன் அவர்கள் பாடியது
மற்ற கலைஞர்கள் பாடியது/இசைத்தது பதிவின் இறுதியில்!



காக்கைச் சிறகினிலே நந்த லாலா! - நின்றன்
கரியநிறம் தோன்று தையே, நந்த லாலா!


பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்த லாலா! - நின்றன்
பச்சை நிறம் தோன்று தையே, நந்த லாலா!


கேட்கும் ஒலியில் எல்லாம் நந்த லாலா! - நின்றன்
கீதம் இசைக்குதடா, நந்த லாலா!


தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா! - நின்னைத்
தீண்டும் இன்பம் தோன்றுதடா, நந்த லாலா!




திரைப்படங்களில்:
ஜேசுதாஸ் - L.வைத்யநாதன் = படம்: ஏழாவது மனிதன்
சூலமங்கலம் ராஜலட்சுமி - K.V.மகாதேவன் = படம்: திருமால் பெருமை

கர்நாடக இசை/ஹிந்துஸ்தானி/மெல்லிசை:
Bombay Jayashree
Bombay Sisters
Veenai-Rajesh Vaidya


மார்கழி 7 - கீசுகீசு என்றெங்கும் - ஏழாம் பாமாலை
இன்று திருப்பாவையில் கீசுகீசு என்ற பறவைப் பாட்டு! அதனால் இங்கும் "காக்கைச் சிறகினிலே"!

எழுதியவர்: சுப்ரமணிய பாரதியார்
ராகம்: யதுகுல காம்போதி (அ) பஹாடி (ஹிந்துஸ்தானி)
தாளம்: ஆதி

Wednesday, December 20, 2006

10. கோபியர் கொஞ்சும் ரமணா!

இப்பதிவு நம் ஐயா ஞானவெட்டியான் அவர்களின் சார்பாக!
மேலும் சில அழகான பாடல் ஒலி (ஆடியோ), அனுப்பி உள்ளார்; ஒவ்வொன்றாகப் பதிவில் இடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இன்று, "கோபியர் கொஞ்சும் ரமணா"



பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - கவிஞர் கண்ணதாசன் எழுதி, TMS அவர்கள் பாடியது, K.V. மகாதேவன் இசையில்
படம்: திருமால் பெருமை


கோபியர் கொஞ்சும் ரமணா
கோபால கிருஷ்ணா

(கோபியர் கொஞ்சும் ரமணா)

மாபாரதத்தின் கண்ணா
மாயக்கலையின் மன்னா
மாதவா கார்மேக வண்ணா - மதுசூதனா!

(கோபியர் கொஞ்சும் ரமணா)

தாயின் கருணை உள்ளம்
தந்தையின் அன்பு நெஞ்சம்
தந்தவன் நீயே முகுந்தா
ஸ்ரீ வைகுந்தா

(கோபியர் கொஞ்சும் ரமணா)




மார்கழி 6 - புள்ளும் சிலம்பின காண் - ஆறாம் பாமாலை
பாடியவர்: டி.எம்.எஸ்
எழுதியவர்: கண்ணதாசன்

படம்: திருமால் பெருமை

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP