Showing posts with label அன்னமய்யா. Show all posts
Showing posts with label அன்னமய்யா. Show all posts

Wednesday, May 15, 2013

"தெலுங்கு" இராமானுசர்!

இன்று (14-May-2013) = சித்திரைத் திருவாதிரை!


"ஆதிரையான்" எனப்படும் சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரத்திலே...
"ஆம் முதல்வன்" என்று தோன்றிய = இராமானுசர்;

இவரை வைணவர்கள் கொண்டாடுவதில் வியப்பேதும் இல்லை;
ஆனால்... பழுத்த நாத்திகர்கள் கொண்டாடுவது??
அதுவே = "இவர் குணம் என்ன?" என்பதை ஓரளவு சொல்லி விடும்!


பாரதிதாசன், புரட்சிக் கவிஞர் ஆவதற்கு முன்பே (ஆரம்ப காலத்தில்).. என் காதல் முருகன் மேல் பாட்டெழுதி இருக்காரு; (மயிலம் சுப்ரமணியர் துதியமுது)
ஆனா, பழுத்த திராவிடத் தலைவரான பின்னால்?? = மூச்:)
சீரங்க நாதனையும், சிதம்பரநட ராசனையும்
பீரங்கி கொண்டு பிளப்பது எந்நாளோ? :))

தான் நாத்திகரான பிறகும், போற்றிப் பாடிய ஆன்மீக அருளாளர்கள் = ரெண்டே ரெண்டு பேரு தான்
1) இராமானுசர்
2) வள்ளலார்

ஏன்?
= அதையும் பாரதிதாசனே சொல்லீடறாரு;

முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில்
இத் தமிழ்நாடு தன் இருந்தவப் பயனாய்
இராமானுசனை ஈன்ற தன்றோ?

சச்சரவுபட்ட தண்டமிழ் நாடு,
மெச்சவும் காட்டுவான் வேண்டும் என்றெண்ணி
இராம லிங்கனை ஈன்ற தன்றோ?
(பாரதிதாசன் கவிதைகள்)

*பல பக்திமான்களும், தங்கள் பாட்டு/ தங்கள் பதிகம் என்ற அளவில் நின்று விடுவார்கள்... 
= "தன்னளவில் இறையன்பு"

*ஆனால், சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மக்களையும், அரவணைத்துக், கூடி இருந்து குளிர்ந்து?
= "பொதுநலம் மிக்க இறையன்பு"


ஆயிரம் ஆண்டுகட்கும் முன்னரே, அக்ரஹாரங்கள் கட்டாவாகக் கோலோச்சிய காலத்திலேயே...
பல "மேலாளர்களின்" எதிர்ப்பையும் மீறி...

* ஒதுக்கப்பட்டோரை ஆலயத்துள் சேர்ப்பித்து, "திருக்குலத்தார்" என்று ஏற்றம் தந்தது
* ஆலயப் பணியில் உள்ள வண்ணான் முதலானோரை = ஈரங் கொல்லி உடையார் -ன்னு, ஊதியம் + மதிப்பு செய்வித்தது

* தமிழைக், கருவறைக்குள்ளேயே முழங்கச் செய்தது

ஊர்வலங்களில், தமிழ் தான் முன்னே செல்லணும்; பெருமாள் தமிழைப் பின்பற்றியே வர வேண்டும்...
வடமொழி வேதங்கள் பெருமாளுக்கும் பின்னே வந்தால் போதும் என்று வகுத்துக் குடுத்த கோயில் ஒழுகு!

* இன்றைய 21ஆம் நூற்றாண்டிலும், ஒரு அரசாங்கமே போராட வேண்டிய நிலையில் உள்ள "அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டம்
= இதை அன்றே நடத்திக் காட்டியது; (பூநூல்) "சார்த்தாத ஸ்ரீ வைணவர்கள்" என்றும் "கருப்பு அந்தணர்கள்" என்றும், தக்க பயிற்சியோடு, கோயில் அர்ச்சகர்களாய் நியமித்தது

கிட்டத்தட்ட, தந்தை பெரியார் போன்ற அதே "கூர்மையான" சொல்லால்.....
"அடியார்களைக் குலம் விசாரிப்பவன், பெற்ற தாயை யோனி விசாரித்தவன் ஆகின்றான்"
- ன்னு அதிரடியாப் பேசி, பலர் பகையைச் சம்பாதித்துக் கொண்டது; இருப்பினும் தளராமல் நின்றது...

இவை தான் பாரதிதாசனே, வியந்து பாடக் காரணம்!

இது தவிர,
* ஆழ்வார் பாசுரங்களுக்கு உரை எழுதப் பண்ணியது
* ஸ்ரீ பாஷ்யம் எழுதியது
-ன்னு ஆன்மீகப் பணிகளையெல்லாம் நான் இங்கு பட்டியல் இடப் போவதில்லை; சமூகப் பணிகள் மட்டுமே இங்கு சொல்லியது;

இந்தச் சமூகப் பணிகள், தமிழகம் மட்டுமல்ல! ஆந்திராவிலும் பரவியுள்ளது!

"இராமானுஜ கூடமுலு" (இராமானுச கூடம்) - என்று ஒரு குறிப்பிட்ட தெலுங்கு வர்க்கத்தினர், இன்றும்... ஊர் முழுதும் நடத்தும் பணி

- தங்களுக்குச் சாதி என்பதே கிடையாது என்றும் சொல்லுவார்கள் இந்த இயக்கத்துத் தெலுங்கு மக்கள்;
திருவாய்மொழி/ திருப்பாவை -ன்னு இந்தத் தெலுங்கர்கள் பாடுவதே வித்தியாசமாய் இருக்கும்:)


அப்படியொரு "வித்தியாசமான" பாட்டு இன்னிக்கி...

கர்நாடக சங்கீதப் பிதாமகர், தியாகராஜருக்கும் காலத்தால் முன்னவர் என்று போற்றப்படும் "அன்னமாச்சாரியர்";
அந்த அன்னமய்யா, இராமானுசர் மேல் எழுதின ஒரு பாட்டு!

(இராமானுசர் மேல், அன்னமய்யா எல்லாம் பாட்டு எழுதி இருக்காங்களா? என்பதே சிலருக்கு வியப்பா இருக்கும்)



எடுப்பு: (பல்லவி)

உன்னதோ உன்னதுடு உடையவரு
என்ன நன்னந்துடே ஈ உடையவரு

உன்னதம் உன்னதமாம் உடையவரே
உன்னையே நம்பி வந்தோம் உடையவரே
(
உன்னதோ உன்னதுடு உடையவரு)
----------------

முடிப்பு: (சரணம்)
சர்வ லோகமுல சாஸ்திர ரகசியமுல
ஊர்வி போதம நீ உடையவரு
பூர்வபு வேதாந்த புண்ய சாஸ்திரமுலு
நிர்வகிஞ்சே நன்னித நூ உடையவரு

உலகம் யாவையும் ஊரும் - அறிந்து கொள்ள
மறைகளை மறைக்காது சொன்னவரே
சொன்ன வண்ணம் அந்த - ஓல மறையெல்லாம்
நல்ல வண்ணம் சீர் செய்த உடையவர் நீ்ரே!
(உன்னதோ உன்னதுடு உடையவரு)
----------------

வெக்க சம்பு ஸ்ரீ விஷ்ணு பக்தியே
ஒக்க ரூபமே உடையவரு
சக்க நைன சு ஞானமுன கிரவை
உக்கு மீரே நிதே உடையவரு

உன் தன்னோடு உறவே - திருமாலின் மெய்யன்பே
உருவமாய் வந்திட்ட உடையவரே
கண்ணன் கழலை நண்ணும் - மனமும் குணமும்
திகட்டாமல் ஊட்டிடும் உடையவர் நீரே!
(உன்னதோ உன்னதுடு உடையவரு)
----------------

கதினே மோட்ச சாகரமு தானை
வுடுதுன நிலிசே நீயு உடையவரு
இதிகோ ஸ்ரீ வேங்கடேஸ்வரு யீ நீடை
பொதலுசு நுன்னாடு பூவீனு உடையவரு

பிறவிப் பெருங்கடலை - நீந்துவார் நீந்திடப்
பரிசல் துடுப்பே உடையவரே
இதுவே வேங்கட அன்னமய்யன் பாடிய
காரேய்க் கருணை உடையவர் நீரே
(உன்னதோ உன்னதுடு உடையவரு)
----------------

கவிஞர்: தாளபாக்கம் அன்னமய்யா (1408-1503)
ராகம்: சாமந்தம்
(கிட்டத்தட்ட அதே மெட்டில், தமிழாக்கியும் குடுத்துள்ளேன்; பிழை இருப்பின் மன்னித்துச் சுட்டிக் காட்டுங்கள்)

Tuesday, June 21, 2011

அன்னமய்யா தெலுங்கு படப் பாடல்...தமிழில்!

இது மிகப் பிரபலமான பாடல்! அன்னமய்யா படத்தில், சித்ராவுடன், எல்லாரும் சேர்ந்து பாடும் கடைசிப் பாடல்....

திருவேங்கடமுடையான் மீது அன்னமய்யா 14th CE-இல் இசையமைத்த பாடல்! இதைப் பாடாத மேடையோ, பாடகரோ இல்லை!
எம்.எஸ் அம்மா முதற்கொண்டு, இன்று சபையில் அறிமுகமாகும் என் தங்கச்சி பொண்ணு வரை, இந்தப் பாடலுக்கு அப்படி என்ன முக்கியத்துவம்?

சில சமயம், தமிழ்ச் சொற்களை இசையில் போட்டு உடைப்பது போல், பிரம்ம க'டி'க்கின என்று அழுத்திக் கடிப்பவர்களும் உண்டு!:)

அன்னமாச்சார்யர் தெலுங்கில் மட்டுமே கீர்த்தனைகள் எழுதினாலும், ஆழ்வார்கள் மீது மாறாத அன்பு கொண்டவர்! உடையவர் மீது தனிக் கீர்த்தனையே செய்துள்ளார்!
அதான் ஆழ்வார் பாசுரக் கருத்தை, இந்தப் பாடலில் அப்படியே பொழிந்துள்ளார்! என்ன பாசுரம்-ன்னு கண்டுபுடிங்க பார்ப்போம்! :)

பிரம்ம கடிகின பாதமு
பிரம்மமு தானினி பாதமு





சித்ராவின் குரலோடு, அனுராதா ஸ்ரீராம், பூர்ண சந்தர், சுஜாதா என்று பலரும் ஒன்று சேர்ந்து பாடி, படத்தை நிறைவு செய்வது...அவசியம் கேட்கவும்!!!
* அன்னமய்யா தெலுங்குப் படத்தில்....கடைசிப் பாட்டு!

(அல்லது)

எம்.எஸ்.அம்மா உருகிப் உருகிப் பாடுவதைக் கேட்டுக் கொண்டே படிக்கவும்!
தமிழாக்கம், அதே மெட்டில் வருகிறதா என்றும் பார்த்துச் சொல்லவும்!
@சங்கர் - இதை எனக்குப் பாடித் தருகிறாயா?:)




பிரம்ம கடிகின பாதமு
பிரம்மமு தானினி பாதமு
பிரம்மன் துலக்கிடும் பாதமே! - பரப்
பிரம்மம் தான்-இந்தப் பாதமே!
(பிரம்மன் துலக்கிடும் பாதமே)

செலகி வசுத கொலி, சின நீ பாதமு
பலி தல மோபின பாதமு
தலகக ககனமு, தன்னின பாதமு
பலரிபு காசின பாதமு

சென்றது பூமியில் செவ்வடிப் பாதமே!
பலி தலை மீது உன் பாதமே!
அவனியும் புவனியும் அளந்தநின் பாதமே!
அடியவர் ஆதரி பாதமே!
(பிரம்மன் துலக்கிடும் பாதமே)

காமினி பாபமு கடிகின பாதமு
பாமு தல நிடின பாதமு
ப்ரேமபு ஸ்ரீசதி பிசிகெடி பாதமு
பாமிடி துரகபு பாதமு

பேதையின் சாபத்தைப் போக்கிய பாதமே!
பாம்பின் தலை நிலை பாதமே!
நெஞ்சிலுன் திருமகள் கொஞ்சிடும் பாதமே!
பரிமேல் அழக-நின் பாதமே!
(பிரம்மன் துலக்கிடும் பாதமே)

பரம யோகுலகு பரிபரி விதமுல
வரமு செகடி நீ பாதமு
திருவேங்கட கிரி திரமணி சூப்பின
பரம பதமு நீ பாதமு

ஞானிகள் பலப்பல பாதைகள் வழிவர
வரங்களை வழங்கிடும் பாதமே!
சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழும் பாதமே! - எங்கள்
பரமபதம் உன் பாதமே!!!
(பிரம்மன் துலக்கிடும் பாதமே)











இன்னும் சில குரல், கருவிகளில்...
* பாலமுரளி வயலின் வாசிக்க-காயத்ரி வீணையில்
* உன்னி கிருஷ்ணன்
* யேசுதாஸ்
* பால முரளி கிருஷ்ணா

குரல்: சித்ரா
இசை: மரகதமணி (எ) கீரவாணி
படம்: அன்னமய்யா
வரிகள்: அன்னமாச்சார்யர்


பிரம்ம கடிகின பாதமு...
பரம பதமு நீ...பாதமு!

Saturday, December 11, 2010

MS ஊஞ்சல் பாட்டு! டோலாயாம் சல டோலாயாம்!

கண்ணன் பாட்டில் இது 197-ஆம் இடுகை!
இன்னும் சில நாளில்...மார்கழியில்...200! :)
மொத்த பேரும், குழுவாக என்ன செய்யலாம்-ன்னு யோசனை சொல்லுங்க!




வழக்கமா, இந்தக் கேஆரெஸ் பய, சினிமாப் பாட்டைத் தான் கண்ணன் பாட்டில் போடுவான்! மீண்டும் கோகிலா படத்தில், கமல் பாடும் போது, "கண்ணா"-ன்னு ஒத்தைச் சொல் வந்துறக் கூடாது! அதையும் கண்ணன் பாட்டில் கொண்டாந்து போடும் அவன், இன்னிக்கி நம்ம திராச ஐயாவைப் பார்த்து திருந்திட்டான்! :)

திராச ஐயா தான், நல்ல மரபிசைப் பாடல்களை, கர்நாடக இசைப் பாடல்களை வலையேற்றுபவர்! அவர் வழியில், இன்னிக்கி கொஞ்சம் போல் திருந்தி...
இதோ எம்.எஸ் அம்மா அவர்கள் பாடிய ஊஞ்சல் பாட்டு ஒன்னைப் பார்க்கலாம்!

எம்.எஸ்-க்கு என்றே சில பாடல்கள் அமைந்து விடும்!
வேறு யார் பாடினாலும், அதிலும் எம்.எஸ் சாயல் தான் இருக்கும்!
அப்படியான பாடல்களில் இது ஒன்று!

திருவேங்கடமுடையானுக்கு என்றே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த அன்னமய்யா!
பெருமாள் ஊஞ்சலில் வேகமாக ஆடுவதை,
அப்படியே வார்த்தைகளில் வேகமாக நகர்த்திக் காட்டுகிறார்!

கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்ற பாரதியின் வாக்கு...
கூடவே, தமிழில், மெட்டு மாறாமால், தர முயன்றுள்ளேன்!
பாடிப் பார்த்து, பொருளும் இசையும் பொருந்தி வருகிறதா-ன்னு சொல்லுங்க!

ஊஞ்சல் போய் வருவது போலவே, பாடலும் போய்ப் போய் வருகிறது! டோலாயாம் சல டோலாயாம்! ஆடு பொன்னூஞ்சல்!



இங்கே, எம்.எஸ் குரலில் பாடலைக் கேட்டுக் கொண்டே வாசிக்கவும்!

ராகம்: கமாஸ்
தாளம்: ஆதி
குரல்: எம்.எஸ்.சுப்புலட்சுமி
வரி: அன்னமாச்சார்யர்

டோலாயாம் சல டோலாயாம் ஹரே டோலாயாம்
பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல், அரி பொன்னூஞ்சல்

மீன கூர்ம வராக
மிருக பதி அவதார
தானவ அறே குண செளரே
தரணீ தர மரு ஜனக
(டோலாயாம் சல டோலாயாம்)

மீனும் ஆமை கேழலாய்
ஆளரி அவ தாரமாய்
பர...கால குண...வீர
பாரைத் தாங்கும் மாரன் எந்தை
(பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல்)

வாமன ராமா ராமா
வர கிருஷ்ண அவதார
சியாமளாங்க ரங்க ரங்க
சாமஜ வரத முர ஹரண
(டோலாயாம் சல டோலாயாம்)

குறள் பல ராமா ராமா
குன்றம் எடுத்த வா-கண்ணா
கருத்த மேனி பொருத்த ரங்க
ஆனைக்கு அருளி, முரனை முடித்து
(பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல்)

தாருண புத்த கல்கி
தச வித அவதார
ஷீர பாணே கோ சமானே
ஸ்ரீவேங்கட கிரி கூட நிலைய
(டோலாயாம் சல டோலாயாம்)

சீருடை புத்த கல்கீ
ஐந்தும் ஐந்தும் அவதார!
ஐம்-படைகள் ஏந்தும் மால்-திரு
வேங் கடம் தனில் வாழும் பெருமாள்!
(பொன்னூஞ்சல் ஆடு பொன்னூஞ்சல்)



பாட்டை நாதசுரத்தில் கேட்கலீன்னா எப்படி? இதோ
நாதசுரம் - ஷேக் சின்ன மெளலானா

அப்படியே, இதர கலைஞர்களின் குரலில்...
* சுதா ரகுநாதன்
* மும்பை சகோதரிகள்
* சைந்தவி

எல்லாத்துக்கும் மேலா, எம்.எஸ் - B&W Video!
அப்பவே ரொம்ப அழகா இருக்காங்க! :)
ஊஞ்சல் வேகமாப் போவதை, கையால் அசைத்துக் காட்டிச் சிரிக்கிறாங்க! 0:22 இல் பாருங்க!

Friday, July 16, 2010

விடியற்காலை எம்.எஸ்: ஸ்ரீமன் நாராயண! ஸ்ரீமன் நாராயண!

கண்ணன் பாட்டில பதிவிட்டு ரொம்ப நாளாயிரிச்சி போல! முருகனருள் மோகத்திலேயே இருந்தா எப்படி? :) பொறந்த வீட்டையும் கொஞ்சம் பார்க்கணும்-ல்ல? :))இதோ...மிகவும் பிரபலமான பாட்டு, பிரபலமான பாடகர், பிரபலமான கவிஞர்!
இது ஒரு வைகறைப் பாட்டு! விடியற்காலைப் பாட்டு!
அதுவும் எம்.எஸ்.அம்மா குரலில் கேட்டால்...நள்ளிரவு கேட்டாலும் சிற்றஞ் சிறுகாலே தான்! எனக்கு மிகவும் பிடித்த எளிமையான பாட்டு!

மெட்டு மாறாமல், தமிழிலும் மொழியாக்கி உள்ளேன்!
வாய் விட்டுப் பாடி/படித்துப் பார்த்து, பொருந்தி வருதா-ன்னு சொல்லுங்க!
எங்கே...உரக்கச் சொல்லுங்க பார்ப்போம்...

ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே!
ஸ்ரீமதே நாராயணாய நம:


மேற்சொன்ன த்வய மந்திரத்தை, அன்னமய்யா இசை வடிவில் எழுதி வச்சாப் போலவே இருக்கும் பாட்டு!
பாடல்: ஸ்ரீமன் நாராயண! ஸ்ரீமன் நாராயண!
குரல்: எம்.எஸ்.சுப்புலட்சுமி
வரிகள்: அன்னமாச்சார்யர்




ஸ்ரீமன் நாராயண! ஸ்ரீமன் நாராயண!
ஸ்ரீமன் நாராயண நீ ஸ்ரீபாதமே சரணம்!


திருநாரணன் திரு! திருநாரணன் திரு!
திருநாரணன் திரு! திருவடிகளே சரணம்!



கமலா சதீ, முக கமல, கமல ஹித!
கமல ப்ரியா, கமலேக்ஷனா!
கமலாசன ஹித, கருட கமன ஸ்ரீ!
கமல நாப நீ பத கமலமே சரணம்!

(ஸ்ரீமன் நாராயண)

தாமரை யாள் அவன், தாமரை முகம்-அகம்!
தாமரை வேள், செந் தாமரைக் கண்ணா!
தாமரை யில் உறை, கருடனின் மேல் நிறை
தாமரை உந்தி, உந்தன் மலரடிகளே சரணம்!

(திருநாரணன் திரு)

பரம யோகிஜன பாகதேயஸ்ரீ
பரம புருஷா பராத்பரா!
பர மாத்மா பரமாணு ரூபஸ்ரீ
திருவேங்கடகிரி தேவா சரணம்!
(ஸ்ரீமன் நாராயண)

பரமான அன்பருக்கு வரமான வரதனே
பரமான பரமே, பரம் பொருளே!
பரமானே, பரம அணுவில் அணுவே
திருவேங்கடம் உடையானே சரணம்!

(திருநாரணன் திரு)

திருநாரணன் திரு! திருநாரணன் திரு!
திருநாரணன் திரு! திருவடிகளே சரணம்!

மூலம்: வடமொழி
(தெலுங்கில் அன்னமய்யா நிறைய கவிதைகள் செய்திருந்தாலும், அவரின் வடமொழிக் கீர்த்தனைகளும் மிகவும் ஆழ்ந்தவை! அதில் இது மிகவும் பிரபலமானது)
தலம்: திருமலை-திருப்பதி
ராகம்: பெளளி
தாளம்: ஆதி


இசைக் கருவிகளில்:

நாதசுரம் - MPN சேதுராமன்
வயலின் - குன்னக்குடி
வீணை - காயத்ரி
புல்லாங்குழல்-சிக்கல் சகோதரிகள்

இசையரசி எம்.எஸ் இந்தப் பாடலின் ஆத்மா என்றாலும்...
இதர கலைஞர்களின், அவர்களுக்கே உரிய குரலில்/நடையில்...

எம்.எல்.வசந்தகுமாரி:


சுதா ரகுநாதன்:


நடனம்:


குழந்தை நடனம்:


வீட்டு மாடி நடனம்:


சிறுவன் - ஆதித் மூர்த்தி

Thursday, June 05, 2008

94. தாயார் குளிக்கும் அழகு - வெள்ளிக்கிழமை நீராட்டம் காணுங்கள்!

குளிப்பதைக் காணலாமா? குளிர்விப்பதைக் காணலாமா?
இறைவன் இறைவிக்குச் செய்யும் திருமுழுக்கு (அபிஷேகம்), திருமஞ்சனங்கள் வெறுமனே குளிப்பாட்டும் செயல் அல்ல!
உலகையும் உலகைத் தாங்கி நிற்கும் அகண்ட பரிபூர்ண சக்தியையும் குளிர்விக்கும் செயல் அது! கண்ணாரக் கண்டு தரிசிக்க வேண்டிய காட்சி!

உங்கள் வீட்டுக் குழந்தையைக் குளிப்பாட்டும் காட்சியை எத்தனை பேர் ரசித்துப் பார்த்து இருக்கீங்க?
என்ன என்னவெல்லாம் பாப்பாவுக்கு வீட்டில் பண்ணுவாங்க?
முதலில் மிதமான இதமான வெந்நீரில் சுகந்தப் பொடிகள் தூவி, நீர் வார்த்து விளவி வைப்பாங்க! பின்பு எண்ணெய்க் காப்பு! பின்பு வாசனைத் தூள் சீயக்காய் சேர்த்து, பூசி நீராட்டுவாங்க!

குளித்து முடித்ததும், தலையும் மேனியும் துவட்டி, பஞ்சுத் துவாலையால் ஒத்தி ஒத்தி எடுப்பாங்க!
கூடைக்கு அடியில் சாம்பிராணிப் புகை போட்டு, பாப்பாவின் கூந்தலை கூடை இடுக்கில் காட்டி நறுமணம் சேர்ப்பாங்க! ஆகா...அந்தக் காட்சியே காட்சி அல்லவா? இப்பவும் யாராச்சும் கூடை-சாம்பிராணிப் புகை காட்டுறாங்களா?

பின்பு மேனியெங்கும் பவுடர் பூசி, நெற்றியில் திலகமிட்டு, கன்னத்தில் கருஞ்சாந்து பொட்டு வைத்து திருஷ்டி கழிப்பாங்க! பட்டாடை உடுத்தி, நவமணி நகைகள் பூட்டி, கண்ணே நவமணியே என்று கண்ணேறு கழிப்பாங்க! "நாரணா நீராட வாராய்"-ன்னு பெரியாழ்வார் குழந்தைக் கண்ணனின் நீராட்டுக்கு என்றே பல பாசுரங்கள் பாடியுள்ளார்!



குழந்தைக்குச் செய்வதையே தான், இங்கு தாயாருக்கும் செய்கிறார்கள்!
தாயார் யார்? யாருக்குத் தாயார்? - எனக்கா? உனக்கா? உங்களுக்கா?
அவனுக்கா? அவளுக்கா? தேவனுக்கா? அசுரனுக்கா? விலங்குக்கா?
அனைவருக்கும் தாயார் அவள்! உலகன்னை! ஜகன் மாதா! ஜன்ம மாதா!

நம்மை ஈன்ற தாய் இந்த ஒரு ஜன்மத்துக்கு மட்டும் தான் அன்னை ஆகிறாள்! ஆனால் இவளோ ஜென்ம ஜென்மத்துக்கும் அன்னை!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நம் ஜீவனுக்குப் பாலூட்டிச் சீராட்டும் அம்மா!

அவளை நீராட்டும் திருமஞ்சனக் காட்சி கீழே! கீழ்த் திருப்பதி என்று சொல்லப்படும் திருச்சுகனூர்! (திருச்சானூர்).
அங்கே அன்னைக்குப் பார்த்து பார்த்துச் செய்யும் ஸ்நானாதி தூப தீப சேவை! கீழுள்ள வீடியோவில் கண்ணாரக் காணுங்கள்!

சிவாலயங்களில் அபிஷேகம் என்றால் பெருமாள் ஆலயங்களில் திருமஞ்சனம்...நீரில் கொஞ்சம் மஞ்சள் கலந்து நீராட்டுவதால் இந்தப் பெயர்! அவ்வளவு தான் இரண்டிற்கும் வித்தியாசம்! அந்த நீரில் சுகந்த பரிமள பொருட்களான பச்சைக் கர்ப்பூரம், ஏலக்காய், வெட்டிவேர், மலர்கள்,
எல்லாவற்றுக்கும் மேலாக மிக மிகப் பவித்திரமான துளசீ தளம்!
நீர்-பால்-தயிர்-தேன்-இளநீர் என்று பஞ்சாமிர்த முழுக்கு!


ஒவ்வொரு அபிஷேகம் முடிந்ததும் தூபம் காட்டி, பட்டுத் துணியால் ஒத்தி எடுப்பது வழக்கம்!
ஐந்து அபிஷேகங்களும் முடிந்த பின் மஞ்சள் காப்பு செய்து, குங்குமப் பூ இடுகிறார்கள்! ஆயிரம் துளைகள் கொண்ட தாம்பாளத் தட்டின் வழியாக, தாரை தாரையாக அபிஷேகம்! சஹஸ்ர தாரை என்று பெயர்!
Shower Bath என்று சொல்லலாமா? :-)

கண்ணாரச் சேவித்துக் கைகூப்பி மகிழுங்கள்! நம்மைச் சிறுவயதில் குளிப்பாட்டிய அன்னைக்கு, இன்று நாம் செய்யும் திருமஞ்சனம்!
இசையரசி எம்.எஸ்.அம்மாவின் தேன் குரலில், அன்னமாச்சார்ய கீர்த்தனை பின்னணியில் ஒலிக்கிறது! அதை எளிமையான தமிழாக்கம் செய்துள்ளேன்! பாட்டின் மெட்டு மாறாமல்!

படித்துக் கொண்டே பாடிப் பார்த்து தமிழாக்கம் எப்படி இருக்குன்னும் சொல்றீங்களா?
ஒலிச்சுட்டிகள் இதோ:
* இசையரசி எம் எஸ் அம்மா
* பாலமுரளி
* பம்பாய் சகோதரிகள்
* வீணை - காயத்ரி


ஷீராப்தி கன்யககு ஸ்ரீ மகாலக்ஷ்மி கினி
நீரஜா லயகுனு நீராஜனம்

பாற்கடல் பாவையாம் திருமகள் லட்சுமிக்கு
தாமரைத் தாய்க்கொரு தீப ஆரத்தி


ஜலஜாக்ஷி மோமுனகு ஜக்குவ குசம்பு லகு
நெலகொன்ன கற்பூரப்பு நீராஜனம்
பங்கயக் கண்ணினள் பால்முலைத் தாயினள் - அவள்
நிலையழகு கற்பூரத் தீப ஆரத்தி

அளிவேணி துருமுனகு, ஹஸ்த கமலம் புலகு
நிலுவு மாணிக்யமுல நீராஜனம்

மட்டுவார் குழலிக்கு, அவள் பங்கயக் கைநலம்
மாணிக்க மணியினால் தீப ஆரத்தி


பகடு ஸ்ரீ வேங்கடேசப் பட்டப் புராணீயை
நெகடு சதி களல குனு நீராஜனம்

அழகனவன் வேங்கடவன் பட்டத்து அரசிக்கு
நற்குண நங்கைக் கொரு தீப ஆரத்தி

ஜகதி அலமேலு மங்கா சக்கதன முல கெல்ல
நிகுடு நிஜ ஷோபனபு நீராஜனம்

அவனி அலர்மேல் மங்கைச் செல்வ நாயகி அவள்
அழகான வடிவுக்கு ஒரு தீப ஆரத்தி


ஷீராப்தி கன்யககு நீராஜனம்!ஸ்ரீ மகாலக்ஷ்மி கினி நீராஜனம்!நீரஜா லயகுனு நீராஜனம்!
பாற்கடல் பாவைக்குத் தீப ஆரத்தி!
திரு மகாலட்சுமிக்குத் தீப ஆரத்தி!
தாமரைத் தாய்க்கொரு தீப ஆரத்தி!


பாடல்: க்ஷீராப்தி கன்யககு
ராகம்: குறிஞ்சி
தாளம்: கண்டசாபு
வரிகள்: அன்னமாச்சார்யர்



கண்ணன் பாட்டு இன்னும் சில நாட்களில் செஞ்சுரி அடிக்கப் போகிறது! நூறைத் தொடும் இந்த நல்வேளையில்,
அடுத்த வாரம் முழுதும் திருவரங்கப் ப்ரியா என்னும் பதிவரின் தலைமையில் சிறப்புக் கச்சேரிகள் இருக்கு! எல்லாரும் வந்து கொண்டாடி மகிழுங்கள்!
Stay Tuned! :-))

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP