Showing posts with label *ஸ்ரீமன் நாராயண. Show all posts
Showing posts with label *ஸ்ரீமன் நாராயண. Show all posts

Friday, July 16, 2010

விடியற்காலை எம்.எஸ்: ஸ்ரீமன் நாராயண! ஸ்ரீமன் நாராயண!

கண்ணன் பாட்டில பதிவிட்டு ரொம்ப நாளாயிரிச்சி போல! முருகனருள் மோகத்திலேயே இருந்தா எப்படி? :) பொறந்த வீட்டையும் கொஞ்சம் பார்க்கணும்-ல்ல? :))இதோ...மிகவும் பிரபலமான பாட்டு, பிரபலமான பாடகர், பிரபலமான கவிஞர்!
இது ஒரு வைகறைப் பாட்டு! விடியற்காலைப் பாட்டு!
அதுவும் எம்.எஸ்.அம்மா குரலில் கேட்டால்...நள்ளிரவு கேட்டாலும் சிற்றஞ் சிறுகாலே தான்! எனக்கு மிகவும் பிடித்த எளிமையான பாட்டு!

மெட்டு மாறாமல், தமிழிலும் மொழியாக்கி உள்ளேன்!
வாய் விட்டுப் பாடி/படித்துப் பார்த்து, பொருந்தி வருதா-ன்னு சொல்லுங்க!
எங்கே...உரக்கச் சொல்லுங்க பார்ப்போம்...

ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே!
ஸ்ரீமதே நாராயணாய நம:


மேற்சொன்ன த்வய மந்திரத்தை, அன்னமய்யா இசை வடிவில் எழுதி வச்சாப் போலவே இருக்கும் பாட்டு!
பாடல்: ஸ்ரீமன் நாராயண! ஸ்ரீமன் நாராயண!
குரல்: எம்.எஸ்.சுப்புலட்சுமி
வரிகள்: அன்னமாச்சார்யர்




ஸ்ரீமன் நாராயண! ஸ்ரீமன் நாராயண!
ஸ்ரீமன் நாராயண நீ ஸ்ரீபாதமே சரணம்!


திருநாரணன் திரு! திருநாரணன் திரு!
திருநாரணன் திரு! திருவடிகளே சரணம்!



கமலா சதீ, முக கமல, கமல ஹித!
கமல ப்ரியா, கமலேக்ஷனா!
கமலாசன ஹித, கருட கமன ஸ்ரீ!
கமல நாப நீ பத கமலமே சரணம்!

(ஸ்ரீமன் நாராயண)

தாமரை யாள் அவன், தாமரை முகம்-அகம்!
தாமரை வேள், செந் தாமரைக் கண்ணா!
தாமரை யில் உறை, கருடனின் மேல் நிறை
தாமரை உந்தி, உந்தன் மலரடிகளே சரணம்!

(திருநாரணன் திரு)

பரம யோகிஜன பாகதேயஸ்ரீ
பரம புருஷா பராத்பரா!
பர மாத்மா பரமாணு ரூபஸ்ரீ
திருவேங்கடகிரி தேவா சரணம்!
(ஸ்ரீமன் நாராயண)

பரமான அன்பருக்கு வரமான வரதனே
பரமான பரமே, பரம் பொருளே!
பரமானே, பரம அணுவில் அணுவே
திருவேங்கடம் உடையானே சரணம்!

(திருநாரணன் திரு)

திருநாரணன் திரு! திருநாரணன் திரு!
திருநாரணன் திரு! திருவடிகளே சரணம்!

மூலம்: வடமொழி
(தெலுங்கில் அன்னமய்யா நிறைய கவிதைகள் செய்திருந்தாலும், அவரின் வடமொழிக் கீர்த்தனைகளும் மிகவும் ஆழ்ந்தவை! அதில் இது மிகவும் பிரபலமானது)
தலம்: திருமலை-திருப்பதி
ராகம்: பெளளி
தாளம்: ஆதி


இசைக் கருவிகளில்:

நாதசுரம் - MPN சேதுராமன்
வயலின் - குன்னக்குடி
வீணை - காயத்ரி
புல்லாங்குழல்-சிக்கல் சகோதரிகள்

இசையரசி எம்.எஸ் இந்தப் பாடலின் ஆத்மா என்றாலும்...
இதர கலைஞர்களின், அவர்களுக்கே உரிய குரலில்/நடையில்...

எம்.எல்.வசந்தகுமாரி:


சுதா ரகுநாதன்:


நடனம்:


குழந்தை நடனம்:


வீட்டு மாடி நடனம்:


சிறுவன் - ஆதித் மூர்த்தி

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP