Friday, May 06, 2011

உடல் நிலையில்லை! ஆனால் உலகை வெறுக்கவேண்டாம்!


கோன் வேளும் கோட்பொடி3 ஜேடை3கி ஏ ஸரீர்? ஜியேத்
கோன் ஜெலுமவைகி? கோநொக்கி? த்யே கொங்க்ஹால்தி ஜநன் ஹோய்கி? (கோன்)


எவ்வேளையில் எங்கு விழுந்து போகுமோ இவ்வு டல்? போனால்
எந்த ஜென்மம் வருமோ? என்னவோ? இதை யாரா லும் அறிய முடியுமோ? (எவ்)

மான்ஹோர் ஐகுநாஸ்தக் கான்தீ3 ஐகோ ஐகோ!
த்4யாந் கரோ! ஹரி முக்தி தே3நவயி ஸெத்ல! (கோன்)


கவனமின்றிக் கேட்காமல் காது கொடுத்து கேட்பீர்!
தியானம் செய்யுங்கள்! ஹரி முக்தி தர வருவான் சத்தியம்! (எவ்)


ஸுநொ மஞ்ஜ்ரி கூ4ஸொ:ய் உஜெதி3ந்நு பு4ந்நஹா?
ஸுக2 து3க்குநு பு2ந்நஹா? பொந்தெ3
ஸுக2 து3க்குநு பு2ந்நஹா?
ஹநநவஸ்தெ யெமாக் காய்கரன்ஹோய் தும்ரா:ல்?
மொந் ஹரிஹோர் தொ2வொ! முக்திதே3யி ஸெத்ல! (கோன்)


நாய் பூனை பெருச்சாளியாய் பிறந்த நாட்கள் போதாதா?
சுக துக்க ங்கள் போதாதா? அடைந்த
சுகம் துக்க ங்கள் போதாதா?
அடிக்க வரும் எமனை என்ன செய்ய இயலும் உம்மால்?
மனம் ஹரி மேல் வையுங்கள்! முக்தி தருவான் சத்தியம்! (எவ்)

கள கொ3ரொ ரூப்ஹொய் உஜெதி3ந்நு பு2ந்நஹா?
கரெ கருமுன் பு2ந்நஹா? பு2ள்ளோ
கரெ கருமுன் பு2ந்நஹா?
கெ3ளரவஸ்தெ யெமாக் காய்கரன்ஹோய் தும்ரா:ல்?
ஸிள ஹரிக் த4யாந்கரோ! ஸெய்முக்தி தே3ய் ஸெத்ல! (கோன்)


கருப்பு சிவப்பு உருவுடன் பிறந்த நாட்கள் போதாதோ?
செய்த கர்மங்கள் போதாதோ? முன்னால்
செய்த கர்மங்கள் போதாதோ?
(கழுத்தை)நெறிக்க வரும் எமனை என்ன செய்ய இயலும் உம்மால்?
குளிர் ஹரியை தியானியுங்கள்! பார்த்து முக்தி கொடுப்பான் சத்தியம்! (எவ்)



ஸீன்ஸெர ஜென்முந் க2டெ3 தி3ந்நுந் பு2ந்நஹா?
ஸேநும் கிடொ3 ஹோரெ:நிஹா? யே ஸெய்லுவோ
ஸேநும் கிடொ3 ஹோரெ:நிஹா?
பான்ப2ட3ஸ்தெ யெமாக்காய்கரன் ஹோய் தும்ரால்?
ஸீன் திர்ஜாய் த்4யான்கரோ! ஸெய்முக்தி தே3ய்ஸெத்ல! (கோன்)


இளைப்புடன் ஜென்மங்களை எடுத்த நாட்கள் போதாதோ
சாணப்புழு ஆகவில்லையா? பாருங்கள் (நாம்)
சாணப்புழு ஆகவில்லையா?
சீட்டைக் கிழிக்கும் எமனை என்ன செய்யமுடியும் உம்மால்?
இளைப்பு தீரும் தியானம் செய்வீர்! பார்த்து முக்தி கொடுப்பான் சத்தியம்! (எவ்)

மொ:டொதெநொ யெநொ மெநேத் ஸொட்டி3 ஜேடை3ஹா யெமுட்?
பு2ட்டுநா ரா:ய்ஹா து3ருகு3? யெமுட3வேத்
பு2ட்டுநா ரா:ய்ஹா து3ருகு3?
வடபத்ரார்யுநு க்ருபஹால் மொ:டொ மந்தூர் அப்3பே3ஸ் மொகொ!
நடனகோ3பாலூஸ் தே3வ்! நஜ்ஜாநகோநைகொ! (கோன்)


(என்னைவிட) மூத்தவன் அவன் இவன் என்றால் விட்டுச் செல்வானா எமன்?
உடையாமல் போகுமோ பானை? எமன் வந்தால்
உடையாமல் போகுமோ பானை?
வடப த்ரார்யர் கிருபையினால் பெரியமந்திரம் எனக்கு கிட்டியது!
நடனகோபாலனே கடவுள்! கெட்டு விடாதீர் கேளும்! (எவ்)



இயற்றியவர்: மதுரையின் ஜோதி ஸ்ரீமந் நடனகோபால நாயகி ஸ்வாமிகள்
பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்
மொழி: சௌராஷ்ட்ரம்

இந்தப் பாடலை ஏற்கனவே நண்பர் சிவமுருகன் மொழிபெயர்த்து இங்கே இட்டிருக்கிறார். மொழிபெயர்ப்பில் நான் சில சொற்களை மட்டும் மாற்றியமைத்து இங்கே இடுகிறேன்.

உடலின் நிலையாமையைப் பாடும் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இயற்கையை மனிதரை உயிர்களை இறையை அன்புடன் போற்ற வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்குவிக்கும் இந்தப் பாடல் கேட்கும் போதும் பாடும் போதும். ஆனால் நிலையாமையைப் பாடும் இந்தப் பாடல் சிலருக்கு வேறு வகையான எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றன என்று தோன்றுகிறது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

Thursday, May 05, 2011

உடலே பண்டரி உயிரே விட்டலன்!


இதோ இன்னொரு வைஷ்ணவாத்வைதி! விசிஷ்டாத்வைதி என்று தான் சொல்ல வேண்டுமோ? தெரியவில்லை! எதுவாக இருந்தாலும் இவர் ஒரு பேரடியார்! மராட்டிய ஆழ்வார்! சந்த் ஏகநாதர்!

மராட்டிய பக்தர்கள் பாடிய அபங்கங்களை முதலில் கேட்டது நாரத கான சபாவில். அவ்வளவாகப் புரியவில்லையே என்று தான் தோன்றியது. 'புரியணுமா? அப்படின்னா மராத்தி தெரியணுமே. உனக்குத் தெரியுமா?' என்று கேட்காதீர்கள். அங்கங்கே ஓரிரு வார்த்தைகள் புரிவதால் மொத்தமாக ஒரு புரிதல் கிடைக்கும் சில வேற்று மொழிப் பாடல்களைக் கேட்கும் போது. அது போல் அபங்கங்களும் புரியும் என்று நினைத்தேன்.

ஏகநாதரின் இந்தப் பாடலில் வடமொழிச் சொற்கள் மிகுதியாக இருக்கின்றன. அது மட்டும் இல்லாமல் ஏதோ ஒரு நல்லவர் என்னைப் போன்றவர்களுக்காகவே இந்தக் காணொளியில் பாடலின் பொருளை ஆங்கிலத்தில் தந்திருக்கிறார்கள். இரண்டும் சேர்ந்து இந்தப் பாடலைப் புரிந்து கொள்ள உதவியது. 'எனக்கு புரியவில்லை. உங்களுக்கு என்ன புரிந்தது. தெளிவாக விளக்குங்கள்' என்று இரவிசங்கர் தூண்டில் போடுவார். இந்த மீன் மாட்டாது. :-)



வைஷ்ணவாத்வைதி என்று சொன்னேனல்லவா? ஏன் என்று கேட்கத் தோன்றியதா? தோன்றாவிட்டாலும் பரவாயில்லை. சொல்லுகிறேன். :-)

பாடலின் முதல் வரியைப் பாருங்கள். ஆத்மா ஹா விட்டல என்கிறார். ஆத்மாவே இறைவன் என்பது அத்வைதம் தானே!

அப்படி சொல்லமுடியாது என்று இன்னொரு குரல் கேட்கிறது. எனக்குள்ளிருந்து. ஆத்மாவின் குரலா? இல்லையில்லை. அறிவின் குரல் தான். அனுபவத்தின் குரலும் இல்லை.

யாருக்கு உலகம் உடலோ, யார் உலகத்திற்கு ஆத்மாவோ அவனே இறைவன்.

யாருக்கு ஆத்மா உடலோ, யார் ஆத்மாவிற்கு ஆத்மாவோ அவனே இறைவன்.

இவை வேதங்கள் சொல்பவை.

முப்பெரும் பொருட்கள் உண்டு. இயற்கை, உயிர், இறைவன் என்பவை அவை. மூன்றும் வெவ்வேறானவை. ஆனால் இயற்கைக்கும் உயிருக்கும் உயிராக இருப்பவன் இறைவன். இயற்கையையும் உயிர்களையும் விசேஷணமாக, தன்னில் அடங்கிய மெய்ப்பொருள்களாகக் கொண்டு தான் மட்டுமே இருப்பவன் இறைவன்! அந்த வகையில் இறை என்பது மட்டுமே மெய்ப்பொருள்.

இப்படி விளக்குவது தானே விசிஷ்டாத்வைதம்.

ஏகநாதரின் இந்தப் பாடலை அந்த வகையிலும் விளக்கலாமே?

விளக்கலாம் தான். ஆனால் அதனால் யாருக்கு என்ன பயன்? பாடலைக் கேட்டு அந்தப் பாடல் சொல்வதை அனுபவத்தில் கொண்டு வர இறையருள் கிட்டினால் போதாதா? அவன் அருளாலே அவன் தாள் வணங்கி இன்புறுவோம்.



காயா ஹீ பண்டரி ஆத்மா ஹா விட்டல
நாந்த3தோ கேவல பாண்டுரங்க!


உடலே பண்டரி உயிரே விட்டலன்
உள்ளே இருப்பவன் பாண்டுரங்கனே!

பா3வ ப3க்தி பீ3மா உதக தே வாஹே
ப2ரவா ஸோப3தாஹே பாண்டுரங்க! (காயா)


அன்பு பக்தி பீமா நீரின் ஊற்றே
உண்டு தாகம் தீர்பவன் பாண்டுரங்கனே! (உடலே)

த2யா க்ஷமா ஷாந்தி ஹேஜி வாளுவந்த
மிளாலாச தா4ட வைஷ்ணவாஞ்சா! (காயா)


ஈரம் பொறை அமைதி சேரும் மண்ணின் மீதே
சேரும் அன்பர் கூட்டம் கூடுவதை போலே! (உடலே)

ஞான த்3யான பூஜா விவேக ஆனந்த
ஹாஜி வேணுநாத ஸோபி3தசே! (காயா)


ஞானம் தியானம் பூஜை அறிவு ஆனந்தம்
அமையும் என்னில் குழலோசை போலே! (உடலே)

த2ச இந்த்ரியாஞ்சா ஏக மேள கேலா
ஐசா கோபால்காலா ஹோத அசே! (காயா)


பத்து புலன்களும் ஒன்றே ஆக்கி
தந்தேன் பசுபதிக்கே படையலாக! (உடலே)

தே2கிலீ பண்டரி தே2ஹி ஜனி வனி
ஏகா ஜனார்த்தனி வாரி கரி! (காயா)


காண்கிறேன் பண்டரி என்னில் உன்னில் எங்கும்
இதுவே யாத்திரை போகும் இடமே! (உடலே)



இந்தப் பாடலின் தமிழ்ப்பெயர்ப்பையும் பாடிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இரவிசங்கருக்கே!

Wednesday, May 04, 2011

மனமே பிரம்மத்தில் சஞ்சரிப்பாய்!

திருக்கோவில்களில் தெய்வத் திருநீராட்டின் போது ஓதப்படும் வேத மந்திரங்களில் முதன்மையானது புருஷ சூக்தம்.

'ஸஹஸ்ர சீருஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ ஸஹஸ்ரபாத்' என்று ஆயிரம் தலைகள் உடையவன், ஆயிரம் கண்களை உடையவன், ஆயிரம் கால்களை உடையவன் என்று தொடங்கும் புருஷ சூக்தத்தில் இறைவன் புருஷ: என்ற பொதுப் பெயராலேயே சொல்லப்படுகிறான். ஆனால் அப்படி பொதுப்பெயராலேயே சொல்லும் வேதமும் 'ஹ்ரீஸ்ச தே லக்ஷ்மீ:ச பத்ன்யௌ' என்று 'அவனுக்கு பூமியும் லக்ஷ்மியும் பத்தினிகள்' என்று மறைமுகமாக அவன் அடையாளத்தைச் சொல்லிவிடுகிறது.


அதே போல் எப்போதும் பிரம்மத் தியானத்திலேயே இருந்த அவதூதராக விளங்கிய சத்குரு சதாசிவ பிரம்மேந்திரரும் 'மனமே பிரம்மத்தில் சஞ்சரிப்பாய்' என்று பிரம்மம் என்ற பொதுப்பெயராலேயே இறைவனை இந்தப் பாட்டில் குறித்தாலும் 'மயிற்பீலி அணிந்தவன், திருமகள் கேள்வன், குழலை இசைப்பவன்' என்று இறைவனின் அடையாளங்களைக் கூறிவிடுகிறார். அத்வைத மஹாஞானியான சதாசிவ பிரம்மேந்திரரும் பிரம்மம் எனில் யார் என்பதை ஆதிசங்கரரைப் போல் மிகத் தெளிவாக இந்தப் பாட்டில் கூறுகிறார்.



மானஸ ஸஞ்சரரே! – பி3ரம்மனி
மானஸ ஸஞ்சரரே!


மனமே சஞ்சரிப்பாய்! - பிரம்மத்தில்
மனமே சஞ்சரிப்பாய்!

மத3சிகி பிஞ்சா அலங்க்ருத சிகு3ரே
மஹநீய க2போ3ல விஜித முகு3ரே (மானஸ)


மஞ்ஞையின் தோகை விளங்கிடும் திருமுடி
பிஞ்ஞகன் கன்னமோ விளங்கிடும் ஒளிகூடி (மனமே)

ஸ்ரீரமணீ குச து3ர்க விஹாரே
ஸேவக2 ஜன மந்தி3ர மந்தா3ரே
பரமஹம்ஸ முக சந்த்ர சகோ3ரே
பரிபூரித முரளீரவதா3ரே (மானஸ)


திருமகள் தனமெனும் மதிலுக்குள் அலைபவன்
அடியவர் வேண்டுதல் தருவதில் தருவவன்
பரமஹம்சர் முகம் பருகிடும் பறவையன்
உலகினில் பரவிடும் குழலினின் இசையவன் (மனமே)

தனிமையில் இயற்கைச் சூழலில் இந்தப் பாட்டின் ஒவ்வொரு சொல்லாகக் கவனித்துக் கேட்டால் ஒரு மாபெரும் தியானம் கைகூடுவதைக் கண்டிருக்கிறேன். அதனால் தானோ என்னவோ இந்தப் பாடலைப் பாடாத இசைவாணர்களே இல்லை என்று சொல்லும் வகையில் இந்தப் பாடல் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இசைவாணர்கள் பலரும் இந்தப் பாடலைப் பாடுவதை இங்கிருக்கும் காணொளிகளில் கண்டு கேட்டு மகிழுங்கள்.

தமிழ் மொழிபெயர்ப்பைப் பாடித் தரவேண்டிய பொறுப்பு இரவிசங்கருக்கு! :-)









  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP