Showing posts with label *ஆடுகின்றான் கண்ணன். Show all posts
Showing posts with label *ஆடுகின்றான் கண்ணன். Show all posts

Wednesday, October 03, 2007

ஆடுகின்றான் கண்ணன்.

இந்தப்பாடல் ஏற்கனவே எனது பதிவொன்றில் இடப்பட்டதுதான். இருந்தாலும், இது கண்ணன் பாட்டில் இருப்பதுவும் ஒரு அழகுதான் என்றெண்ணி, இங்கே பதிவு செய்கின்றேன்.

"ஆடுகின்றான் கண்ணன்" எனும் தொலைக்காட்சித் தொடரின், தலைப்புப் பாடலாக வரும் இப்பாடலைப் பாடியிருப்பவர் பின்னணிப்பாடகர், சிறிநிவாஸ். பாடலுக்கான இசை சத்யா. பாடலை யாத்தவர் யாரெனத் தெரியவில்லை.

பாடலில் வரும் இடையிசை மிக அற்புதமாகவிருக்கும். அதுபோலவே பாடலுக்கான காட்சிப்படுத்தலும் அழகாகவிருந்தது. சரணத்தின் முன்னதாக வரும் இடையிசையில் காணப்படும் கலவை நுணுக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். ரசிப்பேன், நீங்களும் ரசிக்கலாம்.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP