61. பிருந்தா வனமும் ந(நொ)ந்த குமாரனும் - மிஸ்ஸியம்மா!
ஃபிகருங்க அல்வா கொடுத்த பசங்களுக்கு, இதை அப்படியே உல்டா பண்ணிக் கல்லூரியில் பாடிக் காட்டுவாய்ங்க! -
பிருந்தா வனமும் நொந்த குமாரனும், யாவருக்கும் பொதுச் செல்வமன்றோஏனோ குமரா இத்தனை சோகம், யார் தான் காதலில் வழுக்கி விழாரோ? :-)
ஸ்லோ டூயட்! (Slow Duet)...
மிஸ்ஸியம்மா படத்தில் ஒரு அழகான கண்ணன் பாட்டு.
கேட்கும் போது அப்படியே ஏரியில் ஓர் ஓடம் அப்படியும் இப்படியும் அசைவதைப் போல இருக்கும்!
அதுவும் துவக்கத்தில் வாசிக்கும் ஒரு ஓப்பனிங் பீஸ்...அது என்ன வாத்தியம்-ங்க? இசை இன்பத்துக்காரங்க வந்து சொல்லுங்கப்பா!
அதுவும் AM ராஜா குரலில், சுசீலாம்மாவும் கூடப் பாடுகிறார்! பொதுவா AM ராஜா-ன்னா, கூட ஜிக்கி பாடறது தான் காம்பினேஷன். ஆனா இங்க சுசீலாம்மா குழந்தைக் குரலில் கொஞ்சும் குழைவுக்குச் சொல்லவும் வேண்டுமா?
ஜி-ன்னு ஒரு படம் வந்துச்சி. அஜீத்-த்ரிஷா. அதுல "சரளாக் கொண்டையில் சாமந்திப் பூ"-ன்னு ஒரு பாட்டு வரும் :-)
அப்படியே அட்டைக் காபி, இதே மெட்டில்! நீங்களே கேளுங்க!
வித்யாசாகரின் சினிமா-காரம்-காபி = CVR உங்க லிஸ்டுல சேத்துக்குங்க! :-)
ஜிரா இந்தப் பாட்டைக் கண்ணன் பாட்டில் ரொம்ம நாளா தேடினார்-ன்னு காத்து வாக்குல ஒரு சேதி வந்துச்சு! :-)
ஜெமினி-சாவித்ரியை மறந்துட்டு
கண்ணன்-ராதை ஸ்லோ டூயட் ஆடறதா கற்பனை செஞ்சிக்கோங்கப்பா! :-)
பிருந்தா வனமும் நந்த குமாரனும்
யாவருக்கும் பொதுச் செல்வ மன்றோ
ஏனோ ராதா இந்தப் பொறாமை
யார்தான் அழகால் மயங்கா தவரோ(பிருந்தா வனமும் நந்த குமாரனும்)
புல்லாங் குழலின் இனிமை யினாலே
உள்ளமே ஜில் லெனெத் துள்ளாதா
ராகத்திலே அனு ராக மேவினால்
ஜகமே ஊஞ்சலில் ஆடாதா
(பிருந்தா வனமும் நந்த குமாரனும்)
கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திடச் செய்யாதா
ஏனோ ராதா இந்தப் பொறாமை
யார்தான் அழகால் மயங்கா தவரோ
(பிருந்தா வனமும் நந்த குமாரனும்)
இன்று Jul 24, 2007 - பதிவர் CVR அவர்களின் பிறந்த நாள் நேயர் விருப்பம்! மெலடி ரசிகரான அவருக்குக் கண்ணன் பாட்டில் அனைத்து நண்பர்களின் சார்பாகவும்...."Happy Birthday CVR!"
படம்: மிஸ்ஸியம்மா (மிஸ் மேரி என்று இந்தியில் வந்தது)
இந்தியில் இதே பாட்டு எப்படி வரும் என்று யாராச்சும் வந்து போலோ, ப்ளீஸ்!:-)
வரிகள்: T.N. ராமையா தாஸ்
குரல்: A.M.ராஜா, P.சுசீலா
இசை: S.ராஜேஸ்வர ராவ்
ராகம்: ச்யாமா
அப்படின்னு தான் நினைக்கிறேன். சங்கராபரணம் படத்துல "மானச சஞ்சரரே"-ன்னு ஒரு பாட்டு வரும்! சதாசிவப் பிரம்மம் எழுதியது! கிட்டத்தட்ட அந்த ராகம் மாதிரி தான் தெரியுது!
இசை வாணர்கள், அடியேன் தப்பா சொல்லியிருந்தா, கோச்சிக்காம வந்து திருத்தி விடுங்க!