வேய்ங்குழல்

![[Bharathi.jpg]](http://4.bp.blogspot.com/_O1oefrFkNkg/TEZ-yao-fVI/AAAAAAAAAr8/YLBc9TaECkA/S220/Bharathi.jpg)
பாரதியாரின் நினைவுநாளில் [11th september]
எனக்குப்பிடித்த பாரதி பாடல்களில் ஒன்று
கண்ணன் பாட்டு அன்பர்களுக்காக:
வேய்ங்குழல்
எங்கிருந்து வருகுவதோ?-ஒலி
யாவர் செய்குவதோ?-அடி தோழி!
1)
குன்றினின்றும் வருகுவதோ?-மரக்
கொம்பினின்றும் வருகுவதோ?-வெளி
மன்றினின்று வருகுவதோ?-என்றன்
மதிமருண்டிடச் செய்குதடி!-இஃது (எங்கிருந்து)
2)
அலையொலித்திடும் தெய்வ -யமுனை
யாற்றினின்றும் ஒலிப்பதுவோ?-அன்றி
இலையொலிக்கும் பொழிலிடை நின்றும்
எழுவதோ இஃதின்னமுதைப்போல்?(எங்கிருந்து)
3)
காட்டினின்றும் வருகுவதோ? -நிலாக்
காற்றைக் கொண்டு தருகுவதோ?-வெளி
நாட்டினின்றுமித் தென்றல் கொணர்வதோ?
நாதமிஃதென் உயிரையுருக்குதே!(எங்கிருந்து)
4)
பறவை யேதுமொன்றுள்ளதுவோ!-இங்ஙன்
பாடுமோ அமுதக் கனற்பாட்டு?
மறைவினின்றுங் கின்னரராதியர்
வாத்தியத்தினிசை யிதுவோ அடி!(எங்கிருந்து)
5)
கண்ணனூதிடும் வேய்ங்குழல் தானடி!
காதிலேயமு துள்ளத்தில் நஞ்சு ,
பண்ணன்றாமடி பாவையர்வாடப்
யெய்திடும் அம்படி தோழி!(எங்கிருந்து)