காதல் முல்லை
கேஆர்எஸ் - in காதல் முல்லை மாலையில் மலர்கிறது..
(கேஆர்எஸ் வெளியூர் பிரயாணத்தில் இருப்பதனால் அவர் சார்பாக இந்த கவிதையை பதிவு செய்கிறேன்.)
![](http://2.bp.blogspot.com/-Y4pBHTSiE-Y/TVkreDcmLQI/AAAAAAAAA1g/G6fXG9aflCM/s320/mullai.jpg)
மாலையில் ஒருநாள் மல்லிகைத் தோட்டம்..
மதிபோல் குதித்து வந்தாயே
நகம்போல் வெளுப்பும் சிகப்பும் கலந்த
அரும்பைப் பறித்துச் சென்றாயே
அரும்பு உந்தன் மேனியில் விரிந்து
மணமும் பரப்ப வைத்தாயே
முருகா என்னைத் தனியாய் முகர்ந்து
தினமும் அரும்பச் செய்தாயே
--------------
மாலையில் ஒருநாள் மின்னல் பளிச்ச
மறைந்தே சென்று ஒளிந்தாயே
மழையில் நனைந்த மலரை ஒதுக்கி
தனியே பின்னர் எறிந்தாயே
மழையில் நனைந்து இதயம் நனைந்து
மயிலும் நடந்து விழுகின்றேன்
நனைதல் எந்தன் குற்றம் குறையோ
மழையில் நனைந்து எரிகின்றேன்
---------------
![](http://4.bp.blogspot.com/-8MOOjutmWHE/TVks69j9QcI/AAAAAAAAA2I/LD64JfDZT5M/s320/my%2Bmurugaa.jpg)
கண்ணன் மகளே என்றே அன்று
கையில் எடுத்து மகிழ்ந்தாயே
சங்கரிப் பூவைச் சபையினில் இன்று
காலால் மிதித்து நடந்தாயே
நடந்தாய் வாழி வேல்முருகா- உன்
தடந்தாள் கிடந்தாள் நொடிப்பொழுதும்
கிடந்தாள் மேலே நடந்தாய் நீயே
நடந்தாய் வாழி தமிழ்முருகா!
3 comments :
avan kaalaal mithipada naam enna punniyam seithirukkanum?
அன்பர் கவிதை அருமை.
This kavithaifresh piece. in kannan songs / thanks shankar
& All
please see this kadal karumbe picture . tirukadal mallai perumaal nacchiyar tirukolam . see enlaarge view. realy nice .link bellow
http://thirukadalmallai.blogspot.com
ps: i know most of person see this pictures in before. but this is for new persons