பி. சுசீலா - ஒரே பாட்டில் கண்ணன்+முருகன் பாட்டு!
முருகனருள்-150 உற்சவத்தின் தொடர்ச்சியாக...
கண்ணன் பாட்டிலே, சுசீலாம்மாவின் ஒரு மோகனமான பாட்டு!
இந்தப் பாட்டில், சுசீலாம்மா, கண்ணனையும் முருகனையும் மாற்றி மாற்றிப் பாடி, இசைமாலை சூட்டுவார் மாயோனுக்கும் சேயோனுக்கும்!
அட, அப்படி ஒரு பாட்டு இருக்கா என்ன?
இருக்கே! கண்டு புடிங்க பார்ப்போம்! இந்தப் படத்தில் வரும் இன்னொரு பாடல்...ரொம்பவே ஹிட்!
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல!
நீ இல்லாமல் நானும் நானல்ல!
தெய்வத்தின் முன்னே...நீயும் நானும் வேறல்ல!
இந்தப் பாட்டை...இப்பல்லாம்...தினமுமே கேட்பதால்...அப்படியே தங்கி விட்டதா? அதான் டக்-குன்னு இந்த முருகன்+கண்ணன் பாட்டும் ஞாபகத்துக்கு வந்துருச்சி! சரி முருகனருள்-150 உற்சவத்துக்கு வசதியா இங்கு இட்டு விட்டேன்! :)
என்ன கண்டு புடிச்சாச்சா? :)
படம் = இதய கமலம்! சரி தான்! ரவிச்சந்திரன் - கே.ஆர்.விஜயா
எந்தப் பாட்டு? = மலர்கள் நனைந்தன பனியாலே!

இது அவர் பாடிய மற்ற பக்திப் பாடல்கள் போலவே இருக்காது! ஏதோ வசீகரமான காதல் பாட்டு போலத் தான் இருக்கும்! (ஒரு வேளை என் காதுக்குத் தான் இப்படித் தோனுதோ? :)
நடுநடு-ல கண்ணன், முருகன்-ன்னு வருவதால், இது ஏதோ சாமிப் பாட்டு-ன்னு சொல்லலாமே தவிர...
இந்த இனிய மோகன மெலடி...என் மனம் மயக்கும் காதல் பாட்டே தான்! சந்தேகமே இல்லை!
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி-ன்னு அவங்க கண்ணனைப் பாடும் போது, கண்ணாடி முன்னாடி போய் நின்னுக்குவேன், முருகனால் காயம் இருக்கா-ன்னு பார்க்கத் தான்! :)
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
உன்னோடிருப்பேன் மலர் அடி போற்றி-ன்னு அவங்க முருகனைப் பாடும் போது...என்ன சொல்ல.....முருகா, முருகா, நான் உன்னோடு இருப்பேன்! என்னிக்கும் இருப்பேன்! நீ இல்லாமல் நானும் நானல்ல!

* பாடலின் துவக்கத்தில் வரும் புல்லாங்குழல் இசை! Prelude - Dont Miss!
* பாடலின் நடுவில் வரும் மிருதங்க பீட்! போராடி-நீராடி-கண்ணாடி-முன்னாடி! That Interlude - Dont Miss!
மயக்கும் மோகன ராகத்தில்...
மயக்கும் சுசீலாம்மா மெலடியை...
கேட்டுக்கிட்டே படிங்க!
படம்: இதயக் கமலம்
குரல்: பி.சுசீலா
இசை: கே.வி. மகாதேவன்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
ராகம்: மோகனம்

ஆண்டிக் கோல முருகனும், கண்ணனும்! - யார் இதுல தண்டாயுதபாணி? :)
மலர்கள் நனைந்தன பனியாலே!
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே!
பொழுதும் விடிந்தது கதிராலே!
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே!
(மலர்கள் நனைந்தன)
கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்!
இரு கன்னம் குழி விழ நகை செய்தான்!
என்னை நிலாவினில் துயர் செய்தான்!
அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்!
சேர்ந்து மகிழ்ந்து போராடி!
தலை சீவி முடித்தே நீராடி!
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி!
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி!
(மலர்கள் நனைந்தன)
இறைவன் முருகன் திருவீட்டில்,
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி,
உயிரெனும் காதல் நெய்யூற்றி,
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி!
(மலர்கள் நனைந்தன)
இதே மெட்டில் வேற என்ன பாட்டெல்லாம் ஞாபகம் வருது-ன்னும் சொல்லுங்க பார்ப்போம்!
சாம்பிளுக்கு நான் துவங்கி வைக்கிறேன்!
* ஆஹா இன்ப நிலாவினிலே - மாயாபஜார்
* கங்கை யமுனை இங்குதான் சங்கமம் - இமயம்
பாட்டு நல்லா இருந்திச்சா?
இப்போ சொல்லுங்க,
சுசீலாம்மா பாடுவது...கண்ணன் பாட்டா? முருகன் பாட்டா? :)
