35. அசைந்தாடும் மயில் ஒன்று காணும்!
நண்பர்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று வேளாண் மக்கள் மகிழும் திருநாள்!
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் மகிழ்ந்திருக்கும் திருநாளும் கூட!
கிராமங்களில் குரவைக் கூத்துக்கு கேட்கவும் வேண்டுமோ!
கண்ணனுக்காக மார்கழி முழுதும் காத்திருந்தோம், ராதையும் நாமும்!
அதான் இப்போது மார்கழி நோன்பு முடிந்து, தை பிறந்து விட்டதே!
தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்! - கண்ணனோடு
ஆடிப்பாடி ஓடலாமே தங்கமே தங்கம்!
வாங்க, அனைவரும் ஆயர்ப்பாடியில் பொங்கல் கொண்டாடி ஆடலாம்!
நித்யஸ்ரீ அவர்களின் குரலில், அழகான பாடல் இதோ!
அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்!
(அசைந்தாடும்)
இசையாறும் குழல் கொண்டு வந்தான்
இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான்
திசைதோறும் நிறைவாக நின்றான் - என்றும்
திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான்
எங்காகிலும் எமது இறைவா இறைவா
என மனநிறை அடியவரிடம்
தங்கு மனத்துடையான் - அருள்
பொங்கும் முகத்துடையான்
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி - நின்றாட
மயிலின் இறகாட மகர குழையாட
மதி வதனமாட மயக்கும் விழியாட
மலரணி களாட மலர்மகளும் பாட
இது கனவோ நனவோ என
மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட
(அசைந்தாடும்)
அசை போடும் ஆவினங்கள் கண்டு
இந்த அதிசயத்தில் சிலைபோல நின்று
நிஜமான சுகம் என்று ஒன்று - இருந்தால்
ஏழுலகில் இதையன்றி வேறெதுவும் அன்று!
திசைதோறும் கோபாலன் நின்று - மிக
எழில் பொங்க நடமாட
எதிர் நின்று ராதைபாட
(எங்காகிலும் எமது இறைவா இறைவா)
(அசைந்தாடும்...)
மற்ற கலைஞர்களின் குரலில்.
Sudha Raghunathan
Bombay Sisters
K.J.Yesudas
தை 1 - தையொரு திங்கள் - முப்பத்தோராம் பாமாலை
வரிகள்: ஊத்துக்காடு வேங்கட கவி
ராகம்: சிம்மேந்திர மத்யமம்
தாளம்: ஆதி