Wednesday, August 15, 2007

64. ஆடிப்பூரம் - SPB பாடிய "வந்தாள் மகாலக்ஷ்மியே"!

வந்தாள் மகாலக்ஷ்மியே என்னும் இந்தப் பாடல் கண்ணன் பாட்டு வலைப்பூவுக்குச் சரிப்பட்டு வருமா? இன்று ஆடிப்பூரம்! (Aug, 15 2007)
இன்று வந்தாள், கோதை என்னும் ஆண்டாள்.
இன்று வந்தாள் மகாலக்ஷ்மியே!
நிலமகளாய், அலைமகளாய், திருவாடிப் பூரத்தில் ஜகத்துதித்தாளை,
இந்தப் பாடல் வரிகளில் தொடர்புபடுத்திப் பார்த்தால், பொருந்தவே செய்கிறது!

இசை ஞானியின் இசையில், SPB சிரித்துச் சிரித்துப் பாடும் பாடல் இது!
கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல்.
விழா மூடில் கேட்டால், அழகான எளிமையான இசை! - மனம் துள்ளும்!
இரட்டை அர்த்தங்கள், காதல் விளிப்புகள் எல்லாம் எதுவும் இல்லாமல், ஒரு ஆலாபனைப் பாடல்!
எனவே, ஆண்டாளையே பாடுவதாக நினைத்துக் கொண்டும் பாடலாமே!

பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்!
பாடல் பற்றிய ஆங்கிலப் பதிவை, நம்ம வற்றாயிருப்பு சுந்தர், இங்கே இட்டுள்ளார்! பாடும் நிலா பாலு - பார்த்து, கேட்டு, மகிழலாம்!



வந்தாள் மகாலக்ஷ்மியே - என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
வந்தாள் மகாலக்ஷ்மியே - என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே

(இது பெருமாள் பாடுவதாகவே கற்பனை செய்து கொள்ளுங்கள் - அவனையே ஆண்டவள் ஆண்டாள். அதனால் அவன் வீட்டில் அவள் ஆட்சி தான்! :-)

அடியேனின் குடி வாழ
தனம் வாழ - குடித்தனம் புக
வந்தாள் மகாலக்ஷ்மியே - என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
(இது பெரியாழ்வார் பாடுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய், ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய், அடியேனின் குடி வாழ= குடி வாழ வந்தவள் தானே!)

பக்தனின் வீட்டோடு தங்கி விட்டாள்
பண்டிகை நாள் பார்த்து (ஹாஹா) பொங்கலிட்டாள்
காமாட்சியோ மீனாட்சியோ
அபிராமியோ சிவகாமியோ
அம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு
உருவம் எடுத்து
உலவி நடந்து

(வந்தாள் மகாலக்ஷ்மியே)
(பொங்கல் இட்டதை - நோன்பு நோற்றதாகவும் கொள்ளலாம் அல்லவா?
காமாட்சி, மீனாட்சி, அபிராமி, சிவகாமி - எல்லாரும் அலைமகளின் தோழிகள் தானே!)


நண்பா பெண்பாவை கண்வண்ணம்
கள்ளம் இல்லாத பூவண்ணம்
கண்டேன் சிங்காரக் கைவண்ணம்
தொட்டால் எல்லாமே பொன்வண்ணம்
பந்தம் சொந்தம் இல்லாமல்
வந்தது இங்கொரு வண்ணமயில்
வீடு வாசல் எல்லாமே
மின்னுது மின்னுது புன்னகையில்
மயங்கினேன்........... சபாஷ்.... ஆ ஆ ஆ ஆ
(ஸ்வரங்கள்.....)
(தொட்டால் எல்லாமே பொன்வண்ணம் = அவள் தொட்டுச் சூடிக் களைந்தது தானே, கண்ணனுக்குப் பொன்மாலையைக் காட்டிலும் பெரிது?)

என்வழி நேராக ஆக்கி வைத்தாள்
என்னையும் சீராக மாற்றி வைத்தாள்
தெய்வீகமே பெண் ஆனதோ
நான் காணவே தேர் வந்ததோ
மங்களம் பொங்கிடும்
மந்திரப் புன்னகை
இதழில் வடிய
இனிமை விளைய
(வந்தாள் மகாலக்ஷ்மியே)

( தெய்வீகமே பெண் ஆனதோ = இது உண்மை தானே?
என்வழி நேராக ஆக்கி வைத்தாள் = மற்றை நம் காமங்கள் களைந்து, நேரான வழியாக ஆக்கி வைத்தாள்!
என்னையும் சீராக மாற்றி வைத்தாள் = நோன்பினால், தான் மட்டுமன்றி, நோற்ற பெண்கள் அனைவரையும் அவனுக்குச் சீராக அல்லவோ ஆக்கி வைத்தாள்! சீரே உயிர்க்கு உயிராய் அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!
)



படம்: உயர்ந்த உள்ளம்
குரல்: SPB
இசை: இளையராஜா
வரிகள்: ?
ராகம்: கல்யாணி

Saturday, August 11, 2007

ஆயிரம் பெயரால் அழைப்பினும் ஆயிரம் உரு மாறினும் ...


சிவனையும் விஷ்ணுவையும் ஓருருவாகப் பாடும் ஒரு கர்நாடக இசைப் பாடல். திரு. பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றியது. வார்த்தை விளையாட்டு இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்தது.

பல்லவி:

மா ரமணன் உமா ரமணன்
மலரடி பணி மனமே தினமே (மா ரமணன்)

அனுபல்லவி:


மார ஜனகன் குமார ஜனகன்
மலை மேல் உறைபவன் பாற்கடல்
அலை மேல் துயில்பவன் பாவன (மா ரமணன்)

சரணம்:

ஆயிரம் பெயரால் அழைப்பினும்
ஆயிரம் உரு மாறினும் உயர்
தாயினும் மிகு தயாபரன் பதம்
தஞ்சம் என்பவரை அஞ்சல் என்றருளும் (மா ரமணன்)

பல்லவி:

மா என்றால் திருமகள். மா ரமணன் என்றால் திருமகள் மணவாளன் திருமாலவன். உமா ரமணன் என்றால் உமையன்னையின் மணவாளன் சிவபெருமான். அவன்(அவர்கள்) மலரடி பணி மனமே. தினமே.

அனுபல்லவி:

மாரன் என்றால் மன்மதன். அவன் தந்தை கண்ணன். அதனால் மார ஜனகன் விஷ்ணு. குமார ஜனகன் குமரனின் தந்தையான நடராஜன். கைலாய மலை மேல் உறைபவன் முக்கண்ணன். பாற்கடல் அலை மேல் துயில்பவன் மாயவன். தூயவர்கள் இவர்கள்.

சரணம்:

ஆயிரம் பெயர் கொண்டு அழைத்தாலும், ஆயிரம் உருவங்களால் வழிபட்டாலும், உயர்ந்த தாயை விட கருணையுடைய தயாபரன் அவன். அவனுடைய திருவடிகளைத் தஞ்சம் என்று வந்தவர்களை அஞ்சேல் என்று அருளுபவன் அவன்.

பாடலை பிரியா சகோதரிகள் பாடி இங்கே கேட்கலாம்.

Thursday, August 02, 2007

62. கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா!

நண்பர் ஆசிப் மீரான் அவர்களின் துணைவியார்,
யாஸ்மீன் பாத்திமா அவர்களின் நினைவஞ்சலிக்கு அடியேன் இந்தப் பாடலைச் சமர்பிக்கிறேன்!
அது என்னமோ, குழந்தைகள் விஷயங்களில் ஏற்படும் மனதின் கனம், இறங்க மிகவும் கடினமாக உள்ளது!
ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா...
அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா...

ஷாஜியின் பதிவு
செந்தழல் ரவியின் பதிவு
சற்று முன்..



பாடலைக் கேட்க இங்கு சொடுக்கவும்!


கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா

ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா
ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா

சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா
தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா
(கேட்டதும் கொடுப்பவனே)

தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா
தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா

ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா
அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா

(கேட்டதும் கொடுப்பவனே)

நீயுள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா
நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா

கோயிலில் குடி புகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா
குடைநிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா

கிருஷ்ணா கிருஷ்ணா...
கிருஷ்ணா கிருஷ்ணா... கிருஷ்ணா கிருஷ்ணா...

எண்ணை இல்லாது ஒரு தீபம் எரிந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
உன்னை நினைந்தது உருகி இருந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
கண்களைப் போல் எமைக் காவல் புரிந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா
கண்ணன் திருவடி எண்ணியிருந்தது...கிருஷ்ணா கிருஷ்ணா


கிருஷ்ணா கிருஷ்ணா...
(கேட்டதும் கொடுப்பவனே)



படம் : தெய்வ மகன்
இசை : M.S.விஸ்வநாதன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: T.M.சௌந்தரராஜன்
ராகம்: கல்யாணி

(இந்தப் பாடல், நண்பர் ஸ்ரீநிவாசனின் நேயர் விருப்பமும் கூட)
இதில் வரும் சிதார் (Sitar) இசையை மறக்காமல் கேட்கவும்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மூன்று வேடங்களில் நடித்த படம்.
இதை ஆஸ்கர் அவார்டுகளுக்கு அனுப்பி வைத்ததாய் எங்கோ படித்த நினைவு!
கல்யாணி ராகத்தில் அமைந்த கண்ணதாசனின் மிகவும் உருக்கமான பாடல்!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP