Thursday, August 13, 2009

Rock இசையில்....கிருஷ்ணா முகுந்தா முராரே!

கிருஷ்ணா முகுந்தா முராரே! - கந்தா கடம்பா கதிர்வேலா-ன்னு மாத்திப் பாடி கலாட்டா பண்ணிய கல்லூரிக் காலங்கள் எல்லாம் உண்டு! தேவா கூட இப்படி மாத்திப் பாடி மண்ணாங்கட்டித்தனமா ஒரு பாட்டு போட்டிருக்காரு! :)

MK தியாகராஜ பாகவதர்-ன்னாலே, அலறி அடிச்சிக்கிட்டு ஓடும் இளைய தலைமுறை கூட அவரின் ஒரே ஒரு பாட்டை மட்டும் விரும்பிக் கேட்கும்! கும்மியும் அடிக்கும்! :)
அதை ரீ-மிக்ஸ் எல்லாம் பண்ணாம, கொஞ்சம் Rock இசையில் கிண்டலாப் போட்டா? Rock-முத்து-Rocku! கண்ணா Rock-கொடியைச் சூட்டு :)

கண்ணன் பிறந்த நாள், இரவுப் பதிவுகளின் தொடர்ச்சியாக, இன்று கண்ணன் பாட்டு வலைப்பூவில்.....
The Ever Green கிருஷ்ணா முகுந்தா முராரே! = பாடலுக்கு இசை: ஜிரா! :))

அட நம்ம பதிவர் ஜிரா இல்லீங்க! இவரு வேற ஜிரா! ஜி.ராமநாதன்! :))
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணா! Happy Birthday!
ஊரு ஃபுல்லா Swine Flu ஏவி விட்டிருக்கான் கம்சன்! பார்த்து! ஜாக்கிரதையா இரு! தண்ணி காய்ச்சிக் குடி! முகமூடி போட்டுக்கிட்டு புல்லாங்குழல் வாசி! :)



நம்ம துளசி டீச்சருக்குப் புடிச்ச பாட்டாம்-ல?
மொதல்ல ராக் மீஜிக்-ல கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க! :)
KrishnaMukundaMura...


1944-இல் வந்த படம் ஹரிதாஸ்! ப்ளாக் & வொயிட் அலர்ஜி இல்லாதவங்க, அந்தச் சூப்பர் ஹிட் படத்தை இன்னிக்கும் பார்க்கலாம்! :)
அதிலும் தேவதாசியா நடக்கும் டி.ஆர்.ராஜகுமாரி அவர்களின் வில்லித்தனமான ரோலுக்காகவே பார்க்கலாம்! நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் எல்லாம் பிச்சை வாங்கணும்! :)

அப்போது வந்த படங்கள் எல்லாம் நாலு மணி நேரம் ஓடும்! ஆனா அப்பவே ஹரிதாஸ் பண்ணுச்சி புரட்சி! ரெண்டே மணி நேரம் தான்! நம்ப முடியல-ல்ல? ஆனா ரெண்டே மணி நேரத்தில் மொத்தம் 18 பாட்டு! :))))) ஆனா படம் செம ஹிட்டு! ரெண்டு தீபாவளி வரைக்கும் படம் ஓடிச்சி!

புராணப் படமாவும் இல்லாம, பக்திப் படமாவும் இல்லாம, ஒரு சமூகப் படமா எடுத்திருக்காங்க!

ஓவராப் பெண்ணாசை வீக்னஸ் உள்ள வாலிபன், அதே சமயம் வாய்த் துடுக்கும் எக்கச்சக்கம்! அவன் எப்படியெல்லாம் சிக்கல்-ல மாட்டிப்பான்? ஆண்-பெண் உறவுகளை வெளிப்படையாப் பேசத் தயங்கிய அந்தக் காலத்தில் வந்த நல்ல சமூகப் படம்!

ஒரு தேவதாசியின் மாயையில் விழுந்த ஹரிதாஸ், சொத்தை இழந்து, மனைவியை இழந்து, ஆனாலும் வயசான அம்மா அப்பாவை முதியோர் இல்லத்தில் வைக்காம, தானே எப்படி வச்சிக் காப்பாத்தறான் என்பது தான் கதை!

முதல் பாதி அருணகிரிநாதரின் இளவயது வீக்னெஸ்களைப் போல் சொல்லி, இரண்டாம் பாதியில் பாண்டுரங்கன் கதையில் வருவது போன்ற சில காட்சிகள்! பெற்றோருக்காக கண்ணனையே செங்கல் வீசி உட்கார வைச்ச புண்டரீகன் கதை போல முடியும்!





கேட்க மட்டுமான ஒலிச்சுட்டி!
(பாடலின் ஓப்பனிங் ம்யூசிக்கைக் கட்டாயம் கேளுங்க - அருமையான புல்லாங்குழல்!)

கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
(கிருஷ்ணா முகுந்தா முராரே)

கருணா சாகர கமலா நாயக
கருணா சாகர கமலா நாயக
கனகாம்பர தாரி கோபாலா

(கிருஷ்ணா முகுந்தா முராரே)
(கருணையின் கடலே, திருமகள் தலைவா - பொன் ஆடை சூடி, கோபாலா)

காளிய மர்த்தன கம்சனி தூஷண
காளிய மர்த்தன கம்சனி தூஷண
கமலாதள நயனா கோபாலா

(கிருஷ்ணா முகுந்தா முராரே)
(காளிங்க ஆட்டம், கம்சனின் ஓட்டம் - தாமரை தளக் கண்ணா, கோபாலா)

குடில குண்டலம் குவலய தள நீலம்
மதுர முரளீர் அவ லோலம்
கோடி மதன லாவண்யம்
கோபி புண்யம் பஜாமி கோபாலம்

(வளைந்த காதணி, குவளையின் நீலம்
இனிய குழலோ மயக்கும் நாதம்
கோடி மன்மத அழகு மோகம்
கோபியர் வரமே, பஜனை செய்வோம் கோபாலம்)

கோபி ஜன மனமோகன வியாபக
கோபி ஜன மனமோகன வியாபக
கோபி ஜன மனமோகன வியாபக
குவலய தள நீலா கோபாலா...
குவலய தள நீலா கோபாலா...
குவலய தள நீலா கோபாலா...

(கிருஷ்ணா முகுந்தா முராரே)
(கோபியர் மனத்தின் மோகனன் நீயே!
குவளை நிறக் கண்ணா - கோபாலா)

குரல்: எம்.கே.டி (தியாகராஜ பாகவதர்)
இசை: ஜி.ராமநாதன்
வரிகள்: பாபநாசம் சிவன்
படம்: ஹரிதாஸ் (1944) - 768 நாட்கள் ஓடியது.
ராகம்: நவ்ரோஜ்


பாட்டு-ல தமிழ்ச் சொற்கள் இல்லீன்னாக் கூட, இந்தப் பாடல் ஒரு பெரிய ஹிட் என்பதால் இங்கிட்டு கொடுத்தேன்! ஆனால் இதை எழுதிய பாபநாசம் சிவன் அவர்கள் சிறந்த தமிழ் மேதை!

தமிழிசைப் பாடல்கள் செய்து கொடுத்து, தமிழ்த் தியாகராஜர் என்ற சிறப்பு பெற்ற தமிழ்க் கவிஞர்! அவரு சினிமாவில் பாப்புலர் ட்யூனுக்கும் என்ன அருமையா பாடல் பண்ணிக் கொடுத்திருக்கார் பாருங்க! அதுவும் நவ்ரோஜ் ராகத்துல!

இதைக் குத்துப்பாட்டு-ன்னு கூட ஒரு வகையில் சொல்லலாம்!
இந்தப் பாட்டு வந்த காலத்தில், குத்துப்பாட்டுக்கு இலக்கணம் கூட இருந்திருக்காது! ஆனா குத்துக்கு உரிய அதே துள்ளல், ஸ்பீடு, ஆட்டம்-னு எல்லா இலக்கணமும் இந்தப் பாட்டுக்கும் இருக்கு! அதான் Rock Version-ல கேட்டீங்க-ல்ல? மயங்காத மனமும் உண்டோ?

Dandiya, Garba, கோலாட்டத்துக்கு மட்டும் இந்தப் பாட்டை வச்சாக்கா எப்படி இருக்கும்?...ஆகா! ஆடிப் பாருங்க! ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே!

Wednesday, August 12, 2009

இளையராஜா & பாலமுரளி: சின்னக் கண்ணன் அழைக்கிறான்!

கண்கள் சொல்கின்ற கவிதை - இளம் வயதில் எத்தனை கோடி?-ன்னு ஒத்தை வரியில் கண்ணனையும் காதலையும் ஒரு சேரக் காட்டியவர் இசைஞானி இளையராஜா! - சின்னக் கண்ணன் அழைக்கிறான் என்னும் மனம் மயக்கும் பாட்டில்!
ராஜாவின் இன்னொரு பலமான முகத்தைக் காட்டிய "முதல் பாட்டு" பற்றி இன்னிக்கி பார்க்கலாம் வாங்க! எங்கள் சின்னக் கண்ணனும் ஒரு "இளைய" ராஜா தானே! :)

இன்று கண்ணன் பிறந்தநாள்! (Aug-13-2009)!
ஜன்மாஷ்டமி என்று வடக்கிலும், கோகுலாஷ்டமி என்று ஒரு சிலர் தெற்கிலும் சொன்னாலும்,
கிருஷ்ண ஜெயந்தி என்றோ கண்ணன் பிறந்த நாள் என்றோ சொல்லும் போது தான், அவன் பேரும் அதில் ஒட்டிக் கொண்டு, விழாவுக்கே இனிப்பு சேர்க்கிறது! :)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணா! Have a sweet & sexy birthday dude! :)
கண்ணா-ன்னு உனக்கு வாழ்த்து சொல்லும் போது,
எனக்கே நான் சொல்லிக்கிறாப் போல ஒரு ஃபீலிங்! :)



முல்லை நிலத் தமிழ்த் தலைவன் = தமிழ்க் கடவுள் = கண்ணன்!

* அக நானூறு வழியில் = நப்பின்னையைத் தழுவினான்! ஏறு தழுவி, வீறு தழுவி, அவளுடல் கூறு தழுவி, இன்பச் சேறு தழுவி, நூறு தழுவல் தழுவிய அழகிய காதல்!

* புற நானூறு வழியில் = தூது சென்று, போரை வென்று, தன் நாட்டு மக்களுக்கென்று தனி நகரமே உருவாக்கினான்! இந்திரனின் மூடப் பழக்க வழக்கம் ஒழித்து, குன்றுக்குப் பூசை கண்டான்! குன்றின் மேல் விளக்காக இன்னிக்கும் ஒளிர்கிறான் இந்தப் பிறந்த நாள் பையன்!

காதல் என்றால் கண்ணன் - கண்ணன் என்றால் காதல் என்று அல்லவா உலக வழக்கில் ஆகிப் போனது? அவன் பிறந்த ராத்திரியில் இருந்து, கடைசி வரை.....அவன் வாழ்க்கை, ஒரு நல்ல தமிழ் சினிமாவைப் போலவே சூடும் சுவையும் குறையாதது! :)



இளையராஜாவைக் கிராம ராஜா என்று பேசிக் கொண்டிருந்த காலம்! அன்னக்கிளி-க்கு அப்புறம் பெரும்பாலும் கிராமியச் சாயல் மெட்டுக்களே போட்டுக் கொண்டிருந்த காலம்!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி கலக்கிக்கிட்டு இருந்த காலம்......விதம் விதமா வித்தை காட்டுவாரு! ராஜாவுக்கோ அன்னக்கிளி ஹிட் ஆனதால், ஒரு மாறுபட்ட கிராமச் சூழல் பாடல்களுக்குக் கொஞ்சம் வரவேற்பு! அவ்ளோ தான்! ஆனால் அது போதுமா?

பின்னாளில் இசைஞானி-ன்னு சொல்லணும்-ன்னா இன்னும் பல முகங்களைக் காட்டணுமே? அப்போது ராஜாவுக்குக் கைகொடுத்த படங்கள் இரண்டு!

* முள்ளும் மலரும் - மெலடியும் பின்னணியும் பிச்சி வாங்கிய படம்! செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்-ன்னு மெலடி! ராமன் ஆண்டாலும்-ன்னு லைட் குத்து! இப்படி, இயக்குனர் மகேந்திரன் ராஜாவைப் பிழிஞ்சி எடுத்தாரு-ன்னே சொல்லலாம்! இது பற்றி கா.பி. அண்ணாச்சி றேடியோஸ்பதியில் இட்ட சூப்பர் பதிவு இங்கே!

* கவிக்குயில் - சினிமா இசை உலகில், கிளாசிக்கல் முகமும் காட்டினாத் தான் ஒரு மரியாதையே கெடைக்குது! பணத்துக்கும் ஹிட்டுக்கும் மெல்லிசை முகம்-ன்னா, மரியாதைக்கும் "ஞானி" போன்ற சொற்களுக்கும் கிளாசிக்கல் முகம் கொஞ்சம் காட்டணும்! நம்ம கிராம ராஜாவுக்கு அந்த முகம் காட்டத் தெரியுமா? :)

ராஜா-வின் அதி அற்புதமான கிளாசிக்கல் முகம் முதலில் வெளிப்பட்ட பாட்டு - கவிக்குயில் படத்தில் - சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
ஏன்னா அதுக்கு அவரு எடுத்துக்கிட்ட மெட்டு-ராகம் = ரீதி கெளளை!

ரொம்ப ரொமான்டிக் ராகம்! ஆனா அவ்வளவு சீக்கிரம் டைல்யூட் பண்ணவே விடாது! ஸ்வர வரிசையும் ரொம்ப சிக்கலானது! வேணும்-ன்னே அதைக் கையில் எடுத்தார் ராஜா! :)
அதுவும் தன் முதன்முதல் கிளாச்சிக்கல் முயற்சியில்! இதற்கு முன் இதை எடுத்த இசையமைப்பாளர்கள் மிக மிகக் குறைவு! (அ) இல்லவே இல்லை!

ஆனானப்பட்ட எம்.எஸ்.வி கூட மெல்லிய சுகமான ராகங்களைத் தான் அதிகம் கையாண்டாரே தவிர, "சிக்கலான" ராகத்தில் கையைப் போட்டு ரிஸ்க் எடுக்கவில்லை!
சொதப்பிருச்சீன்னா அவ்ளோ தான்! இதுக்குப் பேரே "கன ராகம்"! அம்புட்டு கனமா இருக்கும்! அதை எப்படி லைட் பண்ணுறது? மக்களுக்குப் பிடிக்கச் செய்யறது?

சூடு மேல சூடு போட்டா ஜூரம் போகும்-ங்கிற மாதிரி, ரிஸ்க் மேல ரிஸ்க் போட்டாரு ராஜா! அந்த ரிஸ்க்கான பாட்டைப் பாட, அவர் அழைத்தது யாரை.....................?
மக்கள் செல்வாக்குள்ள எஸ்.பி.பி போன்ற பாடகர்களையா? இல்லை! கச்சேரிப் பாடகர் - பாலமுரளி கிருஷ்ணாவை! ஹா ஹா ஹா! எடுபடுமா?



என்ன தான் பாலமுரளி கச்சேரிப் பாடகரா இருந்தாலும், மென்மையான குரல் கொண்டவர்! புதுசா செஞ்சிப் பார்க்கும் ஆராய்ச்சி மனப்பான்மை உள்ளவர்! தியாகராஜர் பாட்டுகள் சிலவற்றைத் தமிழில் மொழி மாற்றிக் கூடப் பாடியிருக்காரு!

பாலமுரளியின் ஆற்றலைச் சினிமாவில் முதல்ல கண்டுபிடிச்சிப் பாட வைத்ததே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி தான்! "தங்கரதம் வந்தது வீதியிலே, தளிர் மேனி வந்தது தேரினிலே"-ன்னு பாட்டு! கலைக்கோயில் படத்துக்காக சுசீலாம்மாவோடு பாடிய பாட்டு தான் பாலமுரளியின் முதல் சினிமாப் பாட்டு!

அப்பறம் "ஒரு நாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?"-ன்னு திருவிளையாடல் படத்தில் சவடால் பாலையா பாடுவது! :)
அது பாலமுரளி பாடி ஹிட் ஆச்சி! அப்பறமா குன்னக்குடி, சங்கர் கணேஷ் இசையில் கூடப் பாடி இருக்காரு!
ஆனால் "சின்னக் கண்ணன் அழைக்கிறான்" போல ஒரு மெகா ஹிட் பாலமுரளியே எதிர்பார்க்கவில்லை! அந்தளவுக்கு எல்லாருக்கும் பாட்டு மனப்பாடம் ஆனது! அதான் ராஜாவின் ராசி! :)

இந்தக் கடினமான ரீதி கெளளை ஹிட்டைப் பார்த்துக் கச்சேரிப் பாடகர்களே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு ஆனது!
அந்த உற்சாகத்தில் தான், அதே ரீதி கெளளையில் பின்னாளில் இன்னொரு பாட்டும் போட்டார் = தலையைக் குனியும் தாமரையே! அதுவும் செம ஹிட்! :)

* அப்பறம் இதையே ரஹ்மான் ட்ரை பண்ணிப் பாத்தாரு! = அழகான ராட்சசியே, அடிநெஞ்சில் குதிக்கிறியே! = சரியா வரலை! விட்டுட்டாரு! :)
* யுவன் கூட துள்ளுவதோ இளமை-ல ட்ரை பண்ணாரு! = தீண்டத் தீண்ட மலர்ந்ததென்ன? = சரியா வரலை! அவரும் விட்டுட்டாரு!

ஆக, ரீதி கெளளையைத் தமிழ்ச் சினிமாவில் வெற்றிகரமாக் கையாண்ட ஒரே தல = நம்ம இளையராஜா தான்! :)



கண்ணன்-ராதையின் காதலாக இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம்,
ஒரு மாஸ்டர் பீஸ் பாடலைக் கேட்கும் திருப்தி கிடைக்கும்.
இதே பாட்டை இன்னொரு வெர்ஷனாக, ஜானகி அதே படத்தில் பாடியிருப்பார். ஆனால் பாலமுரளி பாடியது தான் ஹிட்டோ ஹிட்!

இந்தக் கிளாசிக்கல் பாட்டில் வரும் வாத்திய இசைக்கு, ஐரோப்பிய Baraoque இசைப் பாரம்பரியத்தைப் பயன்படுத்தியதாகச் சொல்லுவார்கள்;
ரீதிகெளளை ராகம் ஒரு பக்கம், Baraoque மறு பக்கம்! - ஆனால் ஒன்றை ஒன்று விழுங்காது! பாடல் வரிகளும் விழுங்காது வந்து விழும் இனிய இசை! ராஜாவின் இசை ஆய்வு (experiment) அப்போதே தொடங்கி விட்டது அல்லவா?

எல்லாம் சரி! பாடல் எதோ? - இதோ! மாயனின் லீலையில் மயங்குது உலகம்! நாமும் மயங்குவோம்! வாங்க!

Radha%20Krsna
கண்கள் சொல்கின்ற கவிதை - உன் புன்னகை சொல்லாத அதிசயமா?

* எஸ்.ஜானகி பாடுவது
*** பாலமுரளி கிருஷ்ணா பாடுவது


இந்தப் பதிவிலேயே கேட்க play button-ஐச் சொடுக்கவும்!


கண்ணன் என்றாலே புல்லாங்குழல் தானே! பாடலின் ஓப்பனிங், Flute Bit-ஐ, Baroque-வோடு கேட்கத் தவறாதீர்கள்! :)

சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
ராதையை, பூங் கோதையை,
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!


கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி?
என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை!
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை!
(சின்னக் கண்ணன்)

நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
உன் புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகே இளமை ரதமே!
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்!
(சின்னக் கண்ணன்)

படம்: கவிக்குயில்
இசை: இளையராஜா
குரல்: பாலமுரளி கிருஷ்ணா
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
ராகம்: ரீதி கெளளை


கேள்வீஸ் ஒன்லி கேள்வீஸ்:
இதே கவிக்குயில் படத்தில், பாலமுரளி இன்னொரு கண்ணன் பாட்டும் பாடி இருக்காரு! ராஜா இசையில்! என்னா-ன்னு சொல்லுங்க பார்ப்போம்!

சின்னக் கண்ணன் அழைக்கிறான் - காணொளி:


Jaya TV Concert - Yuvan sings his dad's tune! - Sothappal! :))


Airtel Top Singer:


போனஸ்: தலையைக் குனியும் தாமரையே! - அதே சூப்பர் ரீதி கெளளை

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP