Sunday, January 14, 2007

35. அசைந்தாடும் மயில் ஒன்று காணும்!

நண்பர்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று வேளாண் மக்கள் மகிழும் திருநாள்!
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் மகிழ்ந்திருக்கும் திருநாளும் கூட!

கிராமங்களில் குரவைக் கூத்துக்கு கேட்கவும் வேண்டுமோ!

கண்ணனுக்காக மார்கழி முழுதும் காத்திருந்தோம், ராதையும் நாமும்!
அதான் இப்போது மார்கழி நோன்பு முடிந்து, தை பிறந்து விட்டதே!
தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்! - கண்ணனோடு
ஆடிப்பாடி ஓடலாமே தங்கமே தங்கம்!
வாங்க, அனைவரும் ஆயர்ப்பாடியில் பொங்கல் கொண்டாடி ஆடலாம்!

நித்யஸ்ரீ அவர்களின் குரலில், அழகான பாடல் இதோ!

223

அசைந்தாடும் மயில் ஒன்று காணும் - நம்
அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்!
(அசைந்தாடும்)

இசையாறும் குழல் கொண்டு வந்தான்
இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான்
திசைதோறும் நிறைவாக நின்றான் - என்றும்
திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான்


எங்காகிலும் எமது இறைவா இறைவா
என மனநிறை அடியவரிடம்
தங்கு மனத்துடையான் - அருள்
பொங்கும் முகத்துடையான்


ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி - நின்றாட
மயிலின் இறகாட மகர குழையாட
மதி வதனமாட மயக்கும் விழியாட
மலரணி களாட மலர்மகளும் பாட
இது கனவோ நனவோ என
மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட

(அசைந்தாடும்)

0042

அசை போடும் ஆவினங்கள் கண்டு
இந்த அதிசயத்தில் சிலைபோல நின்று
நிஜமான சுகம் என்று ஒன்று - இருந்தால்
ஏழுலகில் இதையன்றி வேறெதுவும் அன்று!
திசைதோறும் கோபாலன் நின்று - மிக
எழில் பொங்க நடமாட
எதிர் நின்று ராதைபாட

(எங்காகிலும் எமது இறைவா இறைவா)

(அசைந்தாடும்...)


மற்ற கலைஞர்களின் குரலில்.
Sudha Raghunathan
Bombay Sisters
K.J.Yesudas

தை 1 - தையொரு திங்கள் - முப்பத்தோராம் பாமாலை


வரிகள்: ஊத்துக்காடு வேங்கட கவி
ராகம்: சிம்மேந்திர மத்யமம்
தாளம்: ஆதி

Saturday, January 13, 2007

34. கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை!

வீரமணியின் கணீர் குரலில், கவிஞர் கண்ணதாசன் பாடலைக் கேட்க இங்கு சொடுக்கவும்! மார்கழி மாதத்தில் இந்தப் பாடல் இல்லாமலா? அதுவும் சபரி கிரி வாசனின் விழாவின் போது, எல்லா ஐயப்ப பூஜைகளிலும் இந்தப் பாட்டை ஒலிக்க விடுவார்களே!



கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை
கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான்
மாதவர் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார்
ஒதியமொழி கேட்டு கண்ணன் வந்தான்

(கோதையின் திருப்பாவை)

வாரணம் அணியாக வலம்வரும் மணநாளில்
மாதவன் வடிவாகக் கண்ணன் வந்தான்
மார்கழிப் பனிநாளில் மங்கையர் இளம்தோளில்
கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான்


ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில்
அஷ்டமிதிதி பார்த்துக் கண்ணன் வந்தான்
அந்தியில் இடம்மாறி சந்தியில் முகம்மாறி
சிந்தையில் சிலையாகக் கண்ணன் வந்தான்


பொன்மகள் பாஞ்சாலி பூந்துகில் தனைகாக்க
தென்றலின் வடிவாகக் கண்ணன் வந்தான்
போர்முகம் பார்த்தனின் புயங்களைக் காத்திட
கீதையின் வடிவாகக் கண்ணன் வந்தான்


ஏழைக் குசேலனுக்கு்த் தோழமை தாள்தந்து
வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான்
வாழிய பாடுங்கள் வலம்வந்து தேடுங்கள்
வந்துநிற்பான் அந்தக் கண்ணன் என்பான்!
(கோதையின் திருப்பாவை)

மார்கழி 30 - வங்கக் கடல் கடைந்த - முப்பதாம் பாமாலை
இத்துடன் மார்கழி மாதம் - தினம் ஒரு பாமாலைகள் - நிறைந்தன!

இனிய போகித் திருநாள் வாழ்த்துக்கள்!
மேளம், பிளாஸ்டிக் குடுகுடுப்பை எல்லாம் அடிச்சாச்சா? :-)


வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
ஒலி: K.வீரமணி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

Friday, January 12, 2007

33. காத்திருப்பான் கமலக் கண்ணன்!

உத்தம புத்திரன் என்ற படத்தில் இந்தப் பாட்டு மிகவும் பிரபலம்;
பி.லீலா அவர்கள் பாடுவார்கள்! அழகான நாட்டியமும், இசையும் சேர்ந்து இதை ஒரு கடந்த கால வசந்தம் ஆக்கி விட்டது! கேட்க இங்கே சொடுக்கவும்! இந்த நாட்டியப் பாடல் ஒரு முல்லை மலர் என்றால், அந்த முல்லை மலர் மேலே, மொய்க்கும் வண்டு போலே, நாமெல்லாரும்!
தரவிறக்கம் செய்ய, இங்கே!


sringara-lila
வேடிக்கையாய்ச் செய்வான்
அலங்காரம்

playing-vina
வீணைஇசைக்கச் சொல்லி
வேண்டுவான் - சிலநேரம்

காத்திருப்பான் கமலக் கண்ணன் அங்கே
காத்திருப்பான் கமலக் கண்ணன்!

கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து - கண்ணுறங்காமல்
காத்திருப்பான் கமலக் கண்ணன்

ஆற்றங்கரை தனிலே அந்திப் பொழுதினிலே
பூத்த மென்மலர் போலப்
புனிதமான வனிதை ராதை வருகையைக் - காணக்
காத்திருப்பான் கமலக் கண்ணன்


கோபியர் கொஞ்சும் சல்லாபன் - வேய்ங்
குழலிசை அமுதூட்டும் எழிலொடு சுகம்காட்டும்
கோபியர் கொஞ்சும் சல்லாபன்


தாவிப் பிடிப்பான்...தாவிப் பிடிப்பான்

வெண்ணைத் தயிர்க் குடத்தைத் தடுப்பான்
தரையில் அமர்ந்து ராதை உருவம் வரைந்து கொண்டு - அங்கு
காத்திருப்பான் கமலக் கண்ணன்


வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம்
வீணைஇசைக்கச் சொல்லி வேண்டுவான் - சிலநேரம்
வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம்


பாடுவான்... அதற்கவள் ஆடுவாள்
பல நேரம் பாதம் நோகுமே
என்று பரிவுடன் காதல் இன்பமே
தந்த நாயகன் - வந்து


காத்திருப்பான் கமலக் கண்ணன்
கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து - கண்ணுறங்காமல் காத்திருப்பான் கமலக் கண்ணன் !



மார்கழி 30 - சிற்றஞ் சிறுகாலே - முப்பதாம் பாமாலை


வரிகள்: சுந்தர வாத்தியார்
குரல்: பி.லீலா
இசை: ஜி. ராமநாதன்
படம்: உத்தம புத்திரன்

Thursday, January 11, 2007

32. காத்திருப்பேன் கண்ணா! - இப்படிக்கு, கண்ணன்!

முனைவர் நா.கண்ணன், கண்ணன் பேரில் யாத்த கவிதை ஒன்று இன்றைய கண்ணன் பாட்டில்;
அதைக் கனடாவின் ஆர்.எஸ்.மணி அவர்கள், இசை அமைத்து அவரே பாடுகிறார்!
தனிமையின் அமைதியில் கேட்டுப் பாருங்கள், உள்ளம் உருகும்!
இதோ சுட்டி!


காத்திருப்பேன் உனக்காக கண்ணா
காத்திருப்பேன் உனக்காக


தூரத்து மணியோசை
ஒலித்திடும் போ....தெல்லாம்
தூரத்து மணியோசை
ஒலித்திடும் போ...தெல்லாம்


நீவருவாய் என்று
நானறிவேன் அதனால்
தினம்தினம் மணியோசை
கேட்டிட மனம்நாடி


வீற்றிருப்பேன் வாயில் முன்னே கண்ணா
வீற்றிருப்பேன் வாயில் முன்னே
காத்திருப்பேன் உனக்காக கண்ணா
காத்திருப்பேன் உனக்காக

செம்பவழ மாலையிலே
வைத்த கரு முத்தினைபோல்
செம்மைநிற மாலைநேரம்
உன்னுருவம் தோன்றும்வரை


தாயினது கழுத்தினிலே
ஆடும்மணி யோசைகேட்க
கொட்டிலிலே துடித்திருக்கும்
சின்னஞ்சிறு கன்றினைப்போல்


காத்திருப்பேன் உனக்காக கண்ணா
காத்திருப்பேன் உனக்காக


மார்கழி 28 - கறவைகள் பின் சென்று - இருபத்தி எட்டாம் பாமாலை.

நாளை உத்தம புத்திரன் படத்தில் இருந்து ஒரு பாடல். என்ன பாடல் என்று யூகித்து வையுங்கள்!



மேற்கண்ட பாடல், மீனா அவர்களின் வாசக(ர்)சாலை-இல் இருந்து கண்ணன் பாட்டு வலைப்பூவிற்காக ஒரு மீள்பதிவு!

நா.கண்ணன் அவர்களின் வலைப்பூக்கள்:
*
ஆழ்வார்க்கடியான் - இதில் பாசுர மடல்கள் அருமையாகப் பயின்று வருகின்றன!
**
கவினுலகம்

நா.கண்ணன் அவர்களின் வலைத்தளம்:
இ-மொழி

Wednesday, January 10, 2007

31. காற்று வெளியிடைக் கண்ணம்மா!

மகாகவியின் பாடலை, ஜி.ராமநாதனின் இசையில் அமுதமாகக் கேட்க, இங்கே சொடுக்கவும்!
பிபிசி வானொலியில் இந்தப் பாடலைப் பற்றிய ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது! இசைஞானி இளையராஜா பேசுகிறார், இங்கே. (Real Player)


Radha%20Krsna

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து


மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்

(காற்று)

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே - என்றன்


வாயினிலே அமு தூறுதே - கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே

கண்ணம்மா ம்ம்ம்
கண்ணம்மா ம்ம்ம் - கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினிலே வளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக்

(காற்று)

மார்கழி 27 - கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா - இருபத்தேழாம் பாமாலை


பாடல்: காற்று வெளியிடைக் கண்ணம்மா
படம்: கப்பலோட்டிய தமிழன்
வரிகள்: பாரதியார்
குரல்: பி.பி.ஸ்ரீனிவாஸ் - பி.சுசீலா
இசை: ஜி.ராமநாதன்

Tuesday, January 09, 2007

30. வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி!

சிப்பிக்குள் முத்து என்ற படத்தில் சிறப்பான ஒரு பாடல்!
இதே பாடல், ஸ்வாதி முத்யம் என்ற தெலுங்கு படத்திலும் சிறப்பாக இருக்கும்!
கேட்க இங்கே சொடுக்கவும்.


kris2

லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி
வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
குறும்பான கண்ணனுக்குச் சுகமான லாலி
ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி

(வரம் தந்த சாமிக்கு)
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ

கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே
யது வம்ச வீரனுக்கு யசோதை நானே
கரு யானை முகனுக்கு மலையன்னை நானே
பார் போற்றும் முருகனுக்குப் பார்வதியும் நானே

(வரம் தந்த சாமிக்கு)
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ

ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே
ஸ்ரீராமன் பாட வந்த கம்ப நாடன் நானே
ராம ராஜனுக்கு வால்மீகி நானே
ஆகாய வண்னனுக்குத் தியாகைய்யர் நானே

115858699_771cce968c


(வரம் தந்த சாமிக்கு)
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ

மார்கழி 26 - மாலே மணிவண்ணா - இருபத்தாறாம் பாமாலை


பாடல்: வரம் தந்த சாமிக்கு
படம்: சிப்பிக்குள் முத்து
வரிகள்: வைரமுத்து
இசை: இளையராஜா
குரல்: பி.சுசீலா

Monday, January 08, 2007

29. நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!

கண்ணே கனியமுதே என்ற ஒரு படம் வந்தது! ஞாபகம் இருக்கா? அதில் வரும் இந்தப் பாரதியார் பாடல் மிகவும் இனிமை! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில், ஜேசுதாஸின் தேன் குரல்!

எப்பவும் ராதை தானே கண்ணனுக்கு ஏங்குகிறாள்!
அடுத்த கண்ணன் பாட்டில், ராதைக்காக அந்தக் கண்ணன் ஏங்க வேண்டும், சொல்லிட்டேன், ஆமா! - அப்படின்னு நம்ம திருவரங்கப்ரியா ஒரு போடு போட்டார்கள்! இதோ நிறைவேற்றியாகி விட்டது அரங்கன் ஊர் ஆணையை! :-)

பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்! (Opens in Real Player)
கண்ணம்மா, கண்ணம்மா என்று கண்ணன் துடிக்கிறானே! பாவம்பா அந்தக் கண்ணன்! :-)

நண்பர் இலவசக்கொத்தனார், மகராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடிய mp3 ஒன்றைத் தனி மடலில் அனுப்பியுள்ளார்; அவருக்கு நம் நன்றி. இதோ சுட்டி!
San Diegoவில் சந்தானம் அவர்கள் பாடுவது என்று நினைக்கிறேன். ராகம்: பாகேஸ்ரீ





நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா
தன்னையே சசியென்று சரணம் எய்தினேன்

(நின்னையே)

பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே

கண்ணம்மா

மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீசநீ
கண் பாராயோ வந்து சேராயோ
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா


யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

(நின்னையே)

மார்கழி 25 - ஒருத்தி மகனாய்ப் பிறந்து - இருபத்தி ஐந்தாம் பாமாலை



வரிகள்: சுப்ரமணிய பாரதியார்
குரல்: கே.ஜே ஏசுதாஸ், S.சசிரேகா
படம்: கண்ணே கனியமுதே
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

Sunday, January 07, 2007

28. யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே!

தலைவர் படமான தளபதியில், மித்தாலி என்பவர் பாடும் பாட்டு! பாடல் வரிகளை எழுதியவர் யார் என்று தெரியவில்லை!
கேட்க, இங்கே சொடுக்கவும்!
பார்க்க, பதிவின் இறுதிக்குச் செல்லவும்!

யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே
கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட


இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட


ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசைவைப்பதே அன்புத் தொல்லையோ
பாவம் ராதா...

(யமுனை)



மார்கழி 24 - அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி - இருபத்து நான்காம் பாமாலை



படம்: தளபதி
எழுதியவர்: ?
பாடுபவர்: மித்தாலி
இசை: இளையராஜா

Saturday, January 06, 2007

27. கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல!

வெண்ணிற ஆடை படத்தில், கவியரசர் கண்ணதாசன் பாட்டின் ஒவ்வொரு அடியிலும் அடுக்குத் தொடரால் அடுக்குகிறார்!
அதை விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில், பி.சுசீலா பாடி மிடுக்குகிறார்!
பாடலைக் கேட்க இங்கு சொடுக்கவும்!
அதே பாடலை Re-Mix இல் கேட்க இங்கு சொடுக்கவும்!

பாடலை வாய்விட்டுப் பாடினாலோ, படித்தாலோ, ஊஞ்சலில் முன்னும் பின்னும் போய் வருவது போலவே இருக்கும்; அது தான் நம் கவிஞரின் அடுக்குத் தொடர் effect!



கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல
வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள

(கண்ணன்)

தென்றல் இன்று பாடும் பாடல் என்ன என்ன
சின்னக் கிளிகள் சொல்லும் கதைகள் என்ன என்ன
கண்ணும் நெஞ்சும் ஒன்றுக்கொன்று பின்னப் பின்ன
என்னைத் துன்பம் செய்யும் எண்ணம் என்ன என்ன

(கண்ணன்)

அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்
அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்
ஆசை நெஞ்சை சொல்லப் போனால் அச்சம் அச்சம்
அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில் மிச்சம் மிச்சம்

(கண்ணன்)

கண்ணன் என்று பெயரில் உள்ளவர்கள் எல்லாருக்கும் இந்தப் பாடலை dedicate செய்யலாமா? ஓ, இதெல்லாம் சூரியன் FM இல் மட்டும் தான்
செய்யணும் இல்லையா! :-)



மார்கழி 23 - மாரி மலை முழைஞ்சில் - இருபத்து மூன்றாம் பாமாலை

படம்: வெண்ணிற ஆடை
எழுதியவர்: கவியரசர் கண்ணதாசன்
பாடுபவர்: பி.சுசீலா
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

Friday, January 05, 2007

26. கண்ணனைக் காண்பதெப்போ?

பாடல்: கண்ணனைக் காண்பதெப்போ?
வரிகள்: சுப்ரமணிய பாரதி
ராகம்: ராகமாலிகா
தாளம்: ஆதி

பாம்பே சகோதரிகள் பாடியதைக் கேட்க இங்கே சொடுக்கவும்!
சுதா ரகுநாதன் குரலில் இங்கே!


கண்ணனைக் காண்ப தெப்போ - கார்மேக
வண்ணனுக் கென்மேல் என்ன வெறுப்போ
(கண்ணனை)

விண்ணவரும் பணியும் வேணுவி லோலன்
மண்ணளைந்த வாயன் மாயன் கோபாலன்
(கண்ணனை)

புண்ணியன் வந்துபோய் பொழுது மிகவாகுது
கண்ணிரெண்டும் பூத்துக் கவலை உண்டாகுது
எண்ணியெண்ணி என்மனம் ஏங்கியே நோகுது
பண்ணின பண்டமெல்லாம் பயனின்றிப் போகுது
(கண்ணனை)


ஜாதிமுல்லை ரோஜா சம்பங்கிப் பூவெடுத்து
ஆதியந்தரகித்தன் அணிய மாலை தொடுத்து
சேதியெல்லாம் வரைந்து சேடியிடம் கொடுத்து
சோதிக்க வேண்டாமென்று சொல்லித்தூது விடுத்து
(கண்ணனை)

தாமதம் இல்லாமல் தாதிஉடனே சென்றாள்
நீ மலைக்காமல் நிமிடம் வரேனென்றாள்
ஜாம நேரம்பின் சாவதானமாய் வந்தாள்
சியாமளனைக் காணச் சமயமிதில்லை என்றாள்
(கண்ணனை)

மார்கழி 22 - அங்கண் மாஞாலத்தரசர் - இருபத்தி இரண்டாம் பாமாலை

Thursday, January 04, 2007

25. ஆசை முகம் மறந்து போச்சே!

பாடல்: ஆசை முகம் மறந்து போச்சே
வரிகள்: சுப்ரமணிய பாரதி
ராகம்: ராகமாலிகா
தாளம்: ஆதி

நித்யஸ்ரீ பாடிடும் பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்.
மாண்டலின் ஸ்ரீநிவாஸ் வாசிப்பது இங்கே!



ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ
(ஆசை)

கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்
கண்ணனழகு முழுதில்லை
நண்ணு முகவடிவு காணில் - அந்த
நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்
(ஆசை)

தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த
வையம் முழுதுமில்லை தோழி
(ஆசை)


கண்ணன் முகம் மறந்துபோனால் - இந்த
கண்களிருந்து பயனுண்டோ
வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி
வாழும் வழியென்னடி தோழி
(ஆசை)


Maharajapuram Santhanam...

மார்கழி 21 - ஏற்ற கலங்கள் - இருபத்தி ஒன்றாம் பாமாலை

Wednesday, January 03, 2007

24. கண்ணன் ஒரு கைக்குழந்தை!

பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - கவிஞர் வாலி எழுதி, ஜேசுதாஸ்-பி.சுசீலா பாடியது! இளையராஜவின் ஆரம்ப கால ஹிட்களில் இதுவும் ஒன்றல்லவா?
படத்தின் பெயர் பத்ரகாளி என்று நினைக்கிறேன்! தவறு என்றால் சொல்லவும்!



கண்ணன்ஒரு கைக்குழந்தை
கண்கள்சொல்லும் பூங்கவிதை
கன்னம்சிந்தும் தேனமுதை
கொண்டுசெல்லும் என்மனதை


கையிரண்டில் நானெடுத்துப்
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ


உன்மடியில் நானுறங்க
கண்ணிமைகள் தான்மயங்க
என்னதவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ

ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தமிந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள்வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா


அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளையிது
உன்னருகில் நானிருந்தால்
ஆனந்தத்தில் எல்லையது


காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும்வரம் கிடைக்கும்வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா


மஞ்சள்கொண்டு நீராடி
மைக்குழலில் பூச்சூடி
வஞ்சிமகள் வரும்போது
ஆசைவரும் ஒருகோடி


கட்டழகன் கண்களுக்கு
மையெடுத்து எழுதட்டுமா
கண்கள்படக் கூடும்என்று
பொட்டுஒன்று வைக்கட்டுமா


(கண்ணன் ஒரு)


ஆராரிரோ ஆராரிரோ
ஆராரிரோ ஆராரிரோ



மார்கழி 20 - முப்பத்து மூவர் - இருபதாம் பாமாலை.

Tuesday, January 02, 2007

23. ஆடாது அசங்காது வா கண்ணா!

இப்பதிவு அன்பர் பிரேம்குமார் சண்முகமணி அவர்களின் சார்பாக!
பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - K.J. ஜேசுதாஸ் பாடியது
அன்பர் மலைநாடான் ஐயா, பித்துக்குளி முருகதாசர் பாடிய சுட்டியும் கொடுத்துள்ளார்; இதோ!

மற்ற கலைஞர்கள் பாடியது/இசைத்தது பதிவின் இறுதியில்!




ஆடாது அசங்காது வா கண்ணா...
உன் ஆடலில்
ஈரேழு புவனமும்
அசைந்து அசைந்தாடுதே - எனவே
ஆடாது அசங்காது வா கண்ணா


ஆடலைக் காணத் தில்லை அம்பலத்து இறைவனும் தன்
ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான்
ஆதலினால் சிறு யாதவனே - ஒரு
மாமயில் இறகுஅணி மாதவனே - நீ

(ஆடாது அசங்காது வா)

சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித் திடுமே - அதைச்
செவிமடுத்த பிறவி மனங்களித் திடுமே
பின்னிய சடைசற்றே வகைகலைந் திடுமே - மயில்
பீலி அசைந்தசைந்து நிலைகலைந் திடுமே


பன்னிரு கைஇறைவன் ஏறுமயில் ஒன்று
தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளித்திடுமே



பாடி வரும் அழகா
உனைக் காணவரும் அடியார் எவராயினும்
கனக மணிஅசையும் உனது திருநடனம்
கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே

(ஆடாது அசங்காது வா)




கர்நாடக இசை/ஹிந்துஸ்தானி/மெல்லிசை:

SP Ram
Maharajapuram Santhanam
Sudha Raghunathan
Bombay Sisters
Sowmya

மார்கழி 19 - குத்து விளக்கெரிய - பத்தொன்பதாம் பாமாலை

இன்று மார்கழித் திருவாதிரையும் கூட! தில்லை ஆருத்ரா தரிசனம்!
முனியே நான்முகனே முக்கண்ணப்பா!
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!!




எழுதியவர்: ஊத்துக்காடு வேங்கட கவி
ராகம்: மத்யமாவதி
தாளம்: ஆதி

Monday, January 01, 2007

22. குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா!

பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும், குன்னக்குடி இசையில், சீர்காழியின் வெங்கலக் குரலில்! படம்: திருமலை தென்குமரி.

குருவாயூரப்பா - திருவருள்
தருவாய் நீயப்பா
உன்கோவில் வாசலிலே - தினமும்
திருநாள் தானப்பா - தினமும்
திருநாள் தானப்பா!
(குருவாயூரப்பா)

எங்கும் உந்தன் திருநாமம்
எதிலும் நீயே ஆதாரம் - உன்
சங்கின் ஒலியே சங்கீதம்
சரணம் சரணம் உன்பாதம்

(குருவாயூரப்பா)

உலகம் என்னும் தேரினையே
ஓடச் செய்யும் சாரதி்யே
காலம் என்னும் சக்கரமே - உன்
கையில் சுழலும் அற்புதமே

(குருவாயூரப்பா)

guruvayurappa2

மார்கழி 18 - உந்து மத களிற்றன்- பதினெட்டாம் பாமாலை.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP