Monday, June 24, 2013

MSV & இளையராஜா - "கூட்டாப் போட்ட பாட்டு"

* இன்று திரையிசைச் சக்கரவர்த்தி MSV அவர்களின் பிறந்தநாள்! (Jun24)

"பணியுமாம் என்றும் பெருமை - சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து"   - இந்தக் குறளுக்கு - எழுத்து அசை, சீர் தளை, அடி தொடை -ன்னு முழுக்க முழுக்க எடுத்துக்காட்டு = MSV; பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா!

* கண்ணனின் தாசன், கண்ணதாசனுக்கும் இன்றே பிறந்தநாள்! (Jun24)
Happy Birthday Kannadasa!

Photo Credit: Sabesan, MSVtimes
என்னவொரு ஒற்றுமை! MSV & Kannadasan!
"எலே பணிவுள்ள விஸ்வநாதா, நீ விஜய"வாடா"-வைக் கூட, விஜய"வாங்க" -ன்னு தான் சொல்லுவியா?" -ன்னு MSVயை ஓட்டிய கவிஞர்:)

இந்த நாளில், lemme re-publish a post from 2008!
Sick & In Hosp. Dont have energy to write a new post; So...pardon for the re-post;


எம்.எஸ்.வி-இளையராஜாவைச் சேர்த்து வைத்த கண்ணன் பாட்டு!

"மெல்லத் திறந்தது கதவு-ன்னு ஒரு படம் வந்துச்சி! அதுல யாரு மீஜீக் போட்டாங்க?-ன்னு சொல்லுங்க பார்ப்போம்!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி - இசை ஞானி இளையராஜா = ரெண்டு பேரும் சேர்ந்து!"

"ஆ...இப்படி ஒரு உலக அதிசயம் நம்ம தமிழ்ச் சினிமாவிலா?"

"ஆமா! ஆமா!"

"அட, என்ன தான் குரு-சிஷ்யன் உறவு ரெண்டு பேருக்கும் இருந்துச்சி-ன்னாலும், இவிங்கள இப்படிச் சேர்த்து வச்சது யாருப்பா?"

"சாட்சாத், நம்ம கண்ணபிரான் தான்!"

"யாரு? கேயாரெஸ் கேயாரெஸ்-ன்னு கூப்புடறாங்களே? அவனா?"

"அடச்சே! அவன் பொடிப் பையன்! படம் வந்தப்போ அவனுக்குப் பத்து வயசு கூட இருக்காது! நான் சொல்லுறது ஒரிஜினல் கண்ணன், பரந்தாமன்!
சண்டை வேணாம்-னு தூது போவாரே? ஆனா, போயி தூண்டிட்டு வந்து சூப்பராச் சண்டை போடுவாரே! அவரே தான்!":)

"அடங் கொக்க மக்கா! கண்ணனா சேர்த்து வச்சாரு? எத வச்சி சொல்லுற நீயி?"

"மெல்லிசை மன்னரு, "குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டு கேக்குதா?"-ன்னு இசை அமைக்க...
இளையராஜா, "பாவன குரு-பவன-புரா"-ன்னு இன்னொரு கண்ணன் பாட்டுக்கு அதே படத்தில் இசை அமைச்சாரு!"

"சூப்பரு! கண்ணன் லீலையே லீலை! மேல தகவலைச் சொல்லு மக்கா!"

"சரி, இதன் பின்னணி என்னான்னு சொல்லுறேன்! மத்த கதையெல்லாம் எம்.எஸ்.வி-யின் சிஷ்யப் பிள்ளையான எங்க ஜிரா வந்து சொல்லுவாரு!"


இளையராஜாவின் கொடி பறக்க ஆரம்பித்து விட்டது!

வெகு ஜனக் கலைஞர்-னா அது ராஜா தான்! புதுசு புதுசா இசை!
கிராமத்து இசையும் கொடுப்பாரு! அதே சமயத்தில் தமிழ் சினிமா இது வரை பார்த்திராத மெட்டுகளையும் அள்ளித் தருவாரு!

*இளையராஜா வீட்டு இட்லி சட்டியும் இசை அமைக்கும்!
*தோசைத் தட்டும் தோடி பாடும்!
- அப்படி, இப்படி-ன்னு ஒரே புகழ்மாலை தான்!:)

எந்த ஒரு மகோன்னதமான இசையமைப்பாளருக்கும், ஆறுமுகத்தால், முதலில் ஏறுமுகம், பின்னர் இறங்குமுகம்-னு இருக்கும்-ல?
எல்லாமே அவன் திருவிளையாடல் தானே? மெல்லிசை மன்னருக்கு அப்போது இறங்கு முகம்!
அவரால் சூப்பர் ஹிட்களைத் தொடர்ச்சியாகத் தர முடியாத காலகட்டம்! MSV இசை out-of-date என்றெல்லாம் பேசப்பட்ட காலகட்டம்!
Photo Credit: Subha Photo & Ragasudha

ராஜா-ராஜாதி ராஜன் இந்த ராஜா! ராஜா-தூக்காதே வேறு எங்கும் கூஜா!
இப்படி எல்லாம் ஒரு இசை அமைப்பாளரைப் பாடல் வரிகளில் கொஞ்சம் ஓவராகவே கொண்டாடி,
கட்-அவுட் வைத்த கதையைத் தமிழ் சினிமா எப்போதும் கண்டதில்லை!

இத்தனைக்கும் ராஜா, எம்.எஸ்.வி மீது மதிப்பு வைத்திருப்பவர் தான்!
ஆனால் தொழில்-னு வந்துட்டா குருவாவது? சிஷ்யராவது?? என்கிற நிலைமை!

பஞ்சு அருணாச்சலம் மூலமாகக் கச்சேரியைத் துவங்கிய ராஜா..
எம்.எஸ்.வி-யின் ஆஸ்தான இயக்குனர்களை எல்லாம் கூட வலை வீசிப் பிடித்து விட்டார்! ஸ்ரீதர், கே.பாலாஜி என்று பழைய ஆட்களும் கூட கட்சி மாறிய நேரம்!
போதாக்குறைக்கு, எம்.எஸ்.வி சொந்தப் படம் எடுத்து அதனால் பணப் பிரச்சனை!

அப்போது ராஜா, தன் படங்களின் பின்னணி இசைக்கு மட்டும் எம்.எஸ்.வி அவர்களை இசை அமைக்கச் சொல்லி நிலைமையை ஓரளவு சரி செய்ய உதவியதாகச் சொல்லுவார்கள்!
ஆனால் இப்படிச் செய்யப்பட்ட இசையமைப்பு பரவலாக வெளிப்படுத்தப் படவில்லை!:(

* அந்தச் சமயத்தில் வந்த படம் தான் = மெல்லத் திறந்தது கதவு!
* ராஜா-MSV ஒற்றுமைக்காக = மெல்லத் திறந்தது கதவு!




இளையராஜாவும்-எம்.எஸ்.வியும் இணைந்து இசை அமைக்கிறார்கள் என்று பயங்கரமாக விளம்பரப் படுத்தப்பட்டது!
*ஏற்கனவே கிருஷ்ண கானம் Album-இல் = MSV இசையமைப்பில், ராஜா பாடி இருப்பாரு;
*தாய் மூகாம்பிகை படத்திலோ = ராஜா இசையமைப்பில், MSV பாடி இருப்பாரு;

ஆனால், இருவரும் "இசை அமைப்பிலேயே" ஒன்றிணைவது??
= மெல்லத் திறந்தது கதவு!


முதல் பாட்டே கண்ணன் பாட்டு!
குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டு கேட்குதா?

அதுக்குப் பின்னாடியே இன்னொரு கண்ணன் பாட்டு! ஆனா meaning தான் புரியலை!
பாவன குரு-பவன-புரா...

எம்.எஸ்.வி = பாடல்களுக்கு இசை அமைப்பாரு!
பின்னணி-க்கு = இளையராஜா இசை அமைப்பாரு! (opening/interlude)

இப்படி ஒரு Gentleman Agreement போட்டுகிட்டாங்க!
பாடல்கள் அத்தனையும் இனிமை! எல்லாப் பாடல்களும் ஹிட் தான்!
And you have all of them: Susheelamma, Janaki, Chitra, SP Sailaja, Sasirekha:)

* தில் தில் தில் மனதில் - SPB/சுசீலாம்மா
* வா வெண்ணிலா உன்னைத் தானே - SPB/ஜானகி
* ஊரு சனம் தூங்கிருச்சி - ஜானகி
* சக்கர கட்டிக்கு சிக்குற குட்டிக்கு - சசிரேகா & குழுவினர்
* இன்னும் ரெண்டு பாட்டு...யாராச்சும் கொமென்ட்டுல சொல்லுங்க!:)

கண்ணன் பாட்டுல, இன்னிக்கி அந்த ஒற்றுமைப் பாட்டு(க்கள்)!


1) முதலில் MSV இசை, ராஜா பின்னணி!
* குழலூதும் கண்ணனுக்கு - Note the துள்ளல் instrument beats in prelude/ interludes - typical Raja style; whereas humble single beat melody ("chak chak") - throught the song in MSV style:)

குழலூதும் கண்ணனுக்குக், குயில் பாடும் பாட்டு கேட்குதா?
குக்கூ குக்கூ குக்கூ!
என் குரலோடு மச்சான், உங்க குழலோசை போட்டி போடுதா?
குக்கூ குக்கூ குக்கூ!


இலையோடு பூவும், தலையாட்டும் பாரு!
இலையோடு பூவும் காயும், தலையாட்டும் பாரு பாரு!
(குழலூதும்)

மலைக்காத்து வீசுற போது, மல்லிகைப் பூ பாடாதா?
மழைமேகம் கூடுற போது, வண்ண மயில் ஆடாதா?


என் மேனி தேனரும்பு! என் பாட்டு பூங்கரும்பு!!
மச்சான் நான் மெட்டெடுப்பேன்! உன்னைத் தான் கட்டிவைப்பேன்!


சுகமாகத் தாளம் தட்டிப் பாடட்டுமா?
உனக்காச்சு எனக்காச்சு, சரி ஜோடி நாமாச்சு,கேளைய்யா!

(குழலூதும்)

கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா?
கற்கண்டு சக்கரை எல்லாம் இப்பத் தான் கசக்குறதா?


வந்தாச்சு சித்திரை தான்! போயாச்சு நித்திரை தான்!
பூவான பெண்ணைத் தொட்டா, ராவானா ஏங்குது தான்!


மெதுவாகத் தூது சொல்லிப் பாடட்டுமா?
விளக்கேத்தும் பொழுதானா, இளநெஞ்சு படும்பாடு, கேளைய்யா!

(குழலூதும்)

குரல்: சித்ரா
வரிகள்: கங்கை அமரன் (can some one dbl chk?)
இசை: MSV (பாட்டுக்கு), இளையராஜா (பின்னணிக்கு)


இப்போ Role Change!
2) ராஜா இசையமைக்க, MSV பின்னணி!
** பாவன குரு பவன புரா! Same MSV style in the beginning/end, whereas Non conservative style of Raja throughout the lines; Tabla beats, for a carnatic song!


பாவன குரு - பவன புராதி - ஈசம் ஆச்ரயே!

ஜீவன தர சங்காசம், 
கிருஷ்ணம் கோ லோகேசம்!
பாவித நாரத கிரீசம், 

திரி புவனா வனவேசம்!!
(பாவன குரு)

பூஜித விதி புரந்தரம், 
ராஜித முரளீதரம்!
விரஜ லலா (ஆ)னந்த கரம், 

அஜித முதாரம்!! - கிருஷ்ணா

ஸ்மர சத சுபகா (ஆ)காரம், 

நிரவதி கருணா பூரம்!
ராதா வதன-ச கோரம், 

லலிதா சோதரம் பரம்!!
(பாவன குரு)

(இந்தப் பாட்டின் Melody சூப்பரா இருக்குப்பா, Tabla-வுல வாசிப்பு!
பாட்டின் பொருள் யாராச்சும் சொன்னீங்கனா புண்ணியமாப் போகும்! அனுபவிச்சிக் கேட்கலாம்....)

குரல்: சித்ரா
வரிகள்: லலிதா தாசர்
இசை: இளையராஜா (பாட்டுக்கு), MSV (பின்னணிக்கு),

ராகம்: ஹம்சானந்தி
தாளம்: ரூபகம்


படத்தில் மோகன், ராதா & Juvenile Fantasy = "my அமலா"!:)

இசைக் கல்லூரியில் பர்தா போட்டுக் கொண்டு "பாவன குரு"-ன்னு பாடும் போது, பர்தாவுக்குள் அந்தக் கண்கள் சூப்பர் தான்!

என்றாலும்...
படத்திலும், மனத்திலும் எப்போதும் நிக்குறது
அமலா! அமலா! அமலா! :-)

Friday, June 21, 2013

பெரியாழ்வார் பிறந்தநாள்: பல்லாண்டு பல்லாண்டு!

"பல்லாண்டு பல்லாண்டு" = இந்தப் பாட்டு தெரியுமா?

ஓ... ஆழ்வார் படத்தில், தல அஜீத் பாடுவாரே! அந்தச் சினிமாப் பாட்டு தானே?

அதே அதே!
* ஆனா பாட்டுக்குத் தலை அசைத்தது மட்டுமே = தல!
* மத்தபடி, பாட்டைப் பாடினது = தல-யை விடப் பெரிய தல!:)

பெரிய "தல" = பெரிய ஆழ்வார்
இயற்பெயர்: விட்டு சித்தன்; தெக்கத்தி வில்லிபுத்தூர்க்காரரு; simpleஆச் சொல்லணும்-ன்னா..
நம்ம தோழி ஆண்டாளோட (வளர்ப்பு) அப்பா! = தன் மகளைச் "சான்றோள்" எனக் கேட்ட தந்தை!

என் காதல் முருகனையும் பாடிய சில ஆழ்வார்களுள் ஒருவர் - வள்ளி கொழுநன்;
"டேய் கண்ணா, ஒழுங்காத் தேய்ச்சிக் குளி; இல்ல, உன் ஆளு ஒன்னையப் பாத்துச் சிரிப்பா"-ன்னு பயமுறுத்தியவரு:) = நப்பின்னை காணில் சிரிக்கும்


அவரோட பிறந்த நாள் தான் இன்னிக்கி - ஆனியில் சுவாதி (Jun 20)
ஆனி மாசம் சுவாதி = அவரு; ஆடி மாசம் சுவாதி = நானு:)

சரி... அவருக்கு ஒரு வாழ்த்தைச் சொல்லீருவோம்; "ஒரு குறையும் இல்லாம, நல்லா இரு" -ன்னு ஆண்டவனையே வாழ்த்துனவரு ஆச்சே!
*Happy Birthday Periazhwar!
*இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெரியாழ்வாரே!

வாழ்த்த வயதில்லை; வணங்குகிறேன் -ன்னு... இன்னிக்கி அவனவன் வயசைக் கொறைச்சிக்கிறான்:)
ஆனா வாழ்த்த = "வயசு" தேவையில்ல; "மனசு" தான் தேவை!

அதான், ஆண்டவனை விட.. வயசில், கல்வியில், செல்வத்தில், அதிகாரத்தில்..
எல்லாத்திலுமே சின்னவரான ஆழ்வார்,
பெரியவரான இறைவனையே = "நல்லா இரு" -ன்னு வாழ்த்துறாரு!

ஆனா... இறைவனை விட ஒன்றே ஒன்றில் மட்டும் இவரு பெரியவரு; எதில்? = அன்பில்!
(... -பொங்கும், 
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்)


"பல்லாண்டு பல்லாண்டு" = இந்த 1000 yr song, பலருக்கும் தெரிஞ்சிருக்கும்! ஆனா, இதே பாட்டை..
*சினிமா,
*Dance
*தமிழ்ப் பண்ணிசை,
*கோயில் ஓதல்,
* SPB -ன்னு, பலப்பல குரலில் கேட்போம் இன்னிக்கி!
----------

* AP Nagarajan இயக்கிய திருமால் பெருமை படத்தில், சீர்காழியார்


இசை: கேவி. மகாதேவன்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
படம்: திருமால் பெருமை
வரிகள்: பெரியாழ்வார்

பல்லாண்டு பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு! 
பலகோடி நூறாயிரம்!!
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் 
சேவடி செவ்வி திருக்காப்பு!!
(உன் தோள் வலிமை = மல் (எ) வலிமை; 
ஆனா உனக்கும்-எங்களுக்கும், காப்பு = தோள் அல்லதிருவடிகளே!)

அடியோமோடும் நின்னோடும் 
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு! = (நானும் நீயும்)
வடிவாய் நின் வல மார்பினில்       
வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு! = (அன்னை திருமகளும்)

வடிவார் சோதி வலத்து உறையும்      
சுடர் ஆழியும் பல்லாண்டு! = (சக்கரமும்)
படை போர் புக்கு முழுங்கும் - அப்
பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே!! = (சங்கும்)

* ஆழ்வார் படத்தில்... (உன்னி கிருஷ்ணன் & செந்தில் தாஸ்; Music by Srikanth Deva)
வடைமாலை கோக்கும் போது, அஜீத் தங்கை நைசா ஒரு வடை உருவ,
சாமிக் குத்தம் -ன்னு அஜீத் அவளை ஓங்கித் தட்டிட்டு, Sideல தான் வாயில் லபக்கும் காட்சி - so cute Ajeeth!:)
  

*தமிழ்ப் பண்ணிசை வடிவில்....
 

* SPB குரலில் (album) கேட்க, இங்கே

* "அரையர் சேவை" வடிவில் - அரையர் ஸ்ரீராம பாரதி & துணைவியார்
 

* கோயிலில் வேதம் ஓதும் "தொனியில்"... தமிழ் ஓதல்
 


* பல்லாயிரத்தாண்டு = x1,000
* பல கோடி = x10,000,000
* நூறாயிரம் = 100,000

சுவைக் குறிப்பு (Tid bits):

1. தமிழில், "லட்சம்" (இலட்சம்) என்ற சொல் இல்லை; நூறாயிரம் என்பதே சரி

2. திவ்ய பிரபந்தம் என்ற பெயர் பின்னாளில் வந்தது; ஆழ்வார்கள் யாரும் அந்தப் பெயரை வைக்கவில்லை;
திவ்ய பிரபந்தம் = "அருளிச் செயல்" என்பதே தூய தமிழ்ப் பெயர்;

3. காலத்தால் மூத்த முதலாழ்வார் (பொய்கை ஆழ்வார்), "உலகம்" -ன்னு வச்சி தொடங்குன பாட்டு தான், முதல் பாசுரம் (வையம் தகளியா வார்கடலே) !
ஆனா, எல்லாப் பாசுரங்களையும் பின்னாளில் வரிசைப்படுத்தும் போது, "பல்லாண்டு" -ன்னு மங்களகரமா வரிசைப்படுத்தியதால்...

பெரியாழ்வாரின் இந்தக் கவிதையே, திவ்யப் பிரபந்தத்தில், முதல் பாட்டாக அமைந்து விடுகிறது!

(எப்படி வேதத்துக்கு = "ஓம்" என்பது துவக்கமோ,
தமிழ் வேதத்துக்குப் = "பல்லாண்டு" என்பது துவக்கம்!
வேதத்துக்கு ஓமென்னுமாப் போலே, உள்ளதுக்கெல்லாம் சுருக்காய். தான் மங்கலம் ஆதலால்..ன்னு அருளிச் செயல் ஈடு!)


After a year looong gap, writing in Kannan Songs;
TMS triggered it; Dank u புல்லாங்குழல் குடுத்த TMS குரலே!

Thursday, June 20, 2013

முத்தம் தாடா கண்ணா!



சின்னச் சின்னச் சின்னக் கண்ணா
கன்னம் மின்னும் மணி வண்ணா
கன்னங் கரு விழி கள்ள விழியாக
வெண்ணெயுண்ட கண்ணா வாடா, வந்து
வெல்ல முத்தம் ஒன்று தாடா!

கற்றைக் குழல் காற்றை அளைய, அதில்
ஒற்றைக் குழல் நெற்றி தயங்க
தோகை மயிற் பீலி வாகாய் அசைந்திட
நேராய் என்னிடத்தில் வாடா, வந்து
ஜோராய் முத்தம் ஒன்று தாடா!

பாதச் சதங்கைகள் கிணுங்க, அதில்
ஏழு ஸ்வரங்களும் மயங்க
மார்பில் தவழ்கின்ற ஆரம் அசைந்திட
மானைப் போலத் துள்ளி வாடா, வந்து
வாயில் முத்தம் ஒன்று தாடா!

தேவர் அசுரரும் வணங்க, அன்னை
யசோதையோ கொஞ்சிப் பிணங்க
ஏழுலோக முன்றன் வாயில் காட்டிய பின்
ஓடி என்னிடத்தில் வாடா, வந்து
கோடி முத்தங்களைத் தாடா!


-கவிநயா

Friday, June 14, 2013

காணாமலே வந்த காதல்!


முதன் முதலாய் என் உள்ளங் கவர்ந்தவனை நேரில் பார்க்கப் போகிறேன். நெஞ்சம் படபடவென்று துடிக்கிறது. அடி வயிற்றில் பட்டாம்பூச்சி படபடக்கிறது. பகலென்றும் பாராமல், இரவென்றும் பாராமல் கண்களைக் கனவுகள் வந்து கவ்விக் கொள்கின்றன. யாரோ என்னவோ செய்கிறார்கள், யாரோ என்னவோ பேசுகிறார்கள் என்று மட்டும்தான் தெரிகிறது. என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள், என்று ஒன்றும் விளங்கவில்லை. அவனைக் காதலிக்க ஆரம்பித்தது முதலே இப்படித்தான். என்னைப் பைத்தியமாக அடித்துக் கொண்டிருக்கிறான்.

அவனைக் கண்ணால் காணாமலேயே எப்படி இவ்வளவு காதல் வயப்பட்டேன் என்பது எனக்கே புரியாத புதிராகத்தான் இருக்கிறது. அவனை மனதில் எண்ணி எண்ணியே என் மனதிற்கு மிகவும் நெருக்கமாகிவிட்டான். இப்போது என் மனமே அவனென்று ஆகி விட்டது. என் தோழிகள் வந்து என்னைத் தொட்டு ஏதோ சொல்கிறார்கள். பிறகு வெள்ளிக் காசுகளை அள்ளி வீசினாற் போல் கலகலவென்று சிரிக்கிறார்கள். எனக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. தூக்கத்திலிருந்து எழுந்த குழந்தை போல் நான் விழிப்பதைப் பார்த்து, சிரிப்பு சப்தம் இன்னும்தான் அதிகமாகிறது!

“பாரேன் இவளை… ஒன்றும் தெரியாத பச்சைப் பிள்ளை போல் விழிப்பதை!”

“ஆமாம்… ஒன்றுமே தெரியாதுதான் அவளுக்கு. அவனைத் தவிர!”

“அதெப்படி. நாமெல்லாம் சிறு வயது முதல் இவள் தோழிகள். நம்மிடம் எப்போதாவது இவள் இந்த அளவு அன்பு செலுத்தியதுண்டா?”

“நீயும் காதல் வயப்பட்டிருந்தால் இப்படி ஒரு கேள்வியே கேட்டிருக்க மாட்டாய்!”

“ம்… அப்படி என்னதான் இருக்கிறதோ, இந்தக் காதலில்…” அழகு காட்டி உதட்டை வலிக்கிறாள், அவள்.

“அது மட்டுமில்லையடி. அவனோ எங்கேயோ இருக்கிறான். நாமெல்லாம் எப்போதும் இவள் கூடவே இருக்கிறோம். அதனால்தான் இவள் நம்மைச் சட்டை செய்வதே இல்லை. என்ன இருந்தாலும் தொலைவில் இருக்கும் பொருளுக்குத்தான் மதிப்பு அதிகம்!”

“ம்… அவன் வந்த பிறகு இவள் அவனுடன் போய் விடப் போகிறாள். நாமெல்லாம் சேர்ந்து இருக்க இனி எப்போது வாய்ப்பு கிடைக்குமோ? அது வரையாவது இவள் நம்முடன் சிறிது பேசி, விளையாடி, மகிழ்ந்திருக்கலாமல்லவா?”


இவர்கள் பாட்டுக்குப் பேசிக் கொண்டேயிருக்க, அவை என் செவிகளில் விழுந்தாலும், என் மனதில் பதியவில்லை.

“அவன் எப்படி இருப்பான்? நான் கற்பனையில் கண்டது போலவே இருப்பானா? என்னைக் கண்டதும் என்ன நினைப்பான்? என்னைப் பிடிக்குமோ பிடிக்காதோ அவனுக்கு? நான் அனுப்பிய செய்தி அவனுக்குக் கிடைத்திருக்குமா? காணாமலேயே காதலா என்று அவன் நினைத்து விட்டால் என்ன செய்வது?  அப்படியே நினைக்கவில்லையென்றாலும், என் கடிதத்தை அவன் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளா விட்டால் என் கதி என்னவாகும்?”

“ஏனடி இப்படியெல்லாம் கவலைப்படுகிறாய்? அவன் கட்டாயம் வருவான். உன்னை அப்படியே அள்ளிக் கட்டித் தூக்கிக் கொண்டு போய் விடுவான், பாரேன்!”

அப்போதுதான் உணர்கிறேன், என் மனதிற்குள் நினைப்பதாக நான் நினைத்த அனைத்தையும் வாய் விட்டுப் பேசியிருக்கிறேன் என்று! எல்லாம் இந்தக் கள்வனால் வந்தது. மனதிற்குள் அவனிடம் பொய்க் கோபம் காட்டுகிறேன். இந்தக் கள்ளிகளிடம் நானே இப்படி மாட்டிக் கொண்டேனே… வெட்கத்தால் என் முகமும் கன்னங்களும் சிவந்து சூடாவது எனக்கே தெரிகிறது.

“ஐய... வெட்கத்தைப் பார்! எங்களுக்குத்தான் உன் வண்டவாளமெல்லாம் ஏற்கனவே தெரியுமே!”, செல்லமாக என் கன்னத்தைக் கிள்ளுகிறாள் ஒருத்தி.

“கவலைப்படாதே ருக்மிணி. இந்நேரம் அந்த புரோஹிதர் உன் கடிதத்தை உன் கண்ணனிடம் சேர்த்திருப்பார்… “

“ஆமாம், அந்தக் கடிதத்தில் அப்படி என்னதான் எழுதியிருந்தாய், சொல்லேன்!” என் மனநிலையை மாற்றுவதற்கென்றோ என்னவோ என் தோழி ஒருத்தி கேட்கிறாள்.

“ம்… அப்படி ஒன்றும் சுவாரஸ்யமாக இல்லையடி. நான் என்ன என் மனதில் உள்ள காதலை எல்லாம் கொட்டிப் பக்கம் பக்கமாக எழுதுகிற மனநிலையிலா இருந்தேன்?”

அந்தக் கடிதம் என் மனக் கண்ணில் ஓடுகிறது…

“கிருஷ்ணா, நீயே என் உயிர். உன்னைப் பற்றிக் கேள்வியுற்றது முதல், உன் மீது காதல் கொண்டு, உன்னையே என் மணாளனாக வரித்து விட்டேன். ஆனால் இங்கு எனக்கு வேறு திருமண ஏற்பாடு நடக்கிறது. மணமகளான நான், திருமணத்திற்கு முதல் நாள் குல வழக்கப்படி கௌரி பூஜைக்கு ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். நான் கடிதம் அனுப்பியிருக்கும் என் நம்பிக்கைக்குரிய புரோஹிதருடன் உடனே புறப்பட்டு அங்கு வந்து என்னைக் காப்பாற்று.”

எந்தப் பெண்ணின் முதல் காதல் கடிதமேனும் இப்படி இருக்குமா, என்று எண்ணம் ஓடுகிறது.

நாளைக்குத்தான் கௌரி பூஜை.

அவன் வருவானா?


--கவிநயா






Tuesday, June 11, 2013

TMS: பச்சைமா மலைபோல் மேனி!

TMS அவர்களின் நீங்கா நினைவாக, முருகனருள் வலைப்பூவில், 2 வாரங்களாய், பாடல் இட்டுக் கொண்டே வரும் போது.......

அட, கண்ணன் பாட்டிலே, இன்னும் இடவில்லையே -ன்னு இன்று தான் மின்னல் போலத் தோன்றியது; அதான் இந்தச் சினிமாப் பாடல்;
பலருக்கும் தெரிஞ்ச பாடல்... ஆனா TMS-இன் "பின்குறிப்பு" தெரியாத பாடல்....

அதென்ன "பின்குறிப்பு"?



1967-68
TMS அவர்களின் அருமை மகன் = பாலசுப்பிரமணி;
பாலன் தான் = 16 வயது;
வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய வயது; திடீரென்று மஞ்சள் காமாலை; ஒரேயடியாயப் படுத்து விட்டான்:(

TMS சொல்வதையே கேளுங்கள்:

"பல வைத்தியர்களை அழைத்தேன்; பணத்தைக் கொட்டி வைத்தியம் பார்த்தேன்; ஆனால் அவனோ கடைசி வரை படுக்கையை விட்டு எழுந்திருக்கவே இல்லை;
"முருகா முருகா" என்ற சொற்கள், அவன் வாயிலிருந்து வந்தபடியே, அவன் உயிர் பிரிந்தது;

அன்றிலிருந்து, நான் எதிலும் பற்றற்று இருக்கிறேன்;
என் வாழ்க்கை துயரம் மிகுந்ததாக இருப்பினும், ஆண்டவனின் பாதங்களில் சரணம் அடைந்து விட்டதால்... காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறேன்!

அந்தச் சமயத்தில், எனக்கு ஒரு பாட்டு அமைந்தது; விக்கித்துப் போனேன்;
"உறவு மற்றொருவர் இல்லை; யார் உளர் குறை களைய அம்மா? அரங்க மா நகருளானே!"

என் அப்பன் முருகன் மேல் எத்தனையோ பாடல்கள் பாடி இருக்கிறேன்; 
எத்தனையோ அம்மன் பாடல்கள் பாடி இருக்கிறேன்; எத்தனையோ கண்ணன் பாடல்கள் பாடி இருக்கிறேன்;
ஆனால், 1968இல் வந்த திருமால் பெருமை என்கிற இந்தப் படத்தில், இந்த ஒரு பாடல், இந்த ஒரு வரி... அப்போது என்னை மிகவும் அசைத்து விட்டது;

என் மகன் பாலசுப்பிரமணி; அவன் ஆன்மா சாந்தி அடையணும்; உறவு மற்றொருவர் இல்லை; யார் உளர் குறை களைய அம்மா, அரங்க மா நகருளானே"
(பொக்கிஷம்: நேர்காணல் - 29/5/1977)



TMS (எ) அந்த முருக உள்ளத்தை உருக்கிய திருமால் பாடலை,
இன்று பாடுவோம்...
அவர் மகனும், அவரும்
ஈசன் எந்தை இணையடி நீழலே - ன்னு இளைப்பாற வேண்டுவோம்;

அவரின் துணைவியார் திருமதி. சுமித்ரா செளந்தரராஜன் & மற்ற பிள்ளைகளுக்கு, அவரின் ஆசி நிலைத்து நிற்கவும் வேண்டுவோம்!

TMS = அவனுக்கென்ன?
* மரணமும் இல்லை - அவனுக்கென்ன?
* முருகனின் குரல் - அவனுக்கென்ன?
* ஆண்மையின் தமிழ் - அவனுக்கென்ன?
* இளகிய மனம் - அவனுக்கென்ன?
* உயிருள்ள வரை தொடர்ந்து வரும்.....



பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்


இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே

----------

ஊர் இலேன் காணி இல்லை
உறவு மற்று ஒருவர் இல்லை
பாரில் நின் பாத மூலம்
பற்றிலேன் பரம மூர்த்தி!


காரொளி வண்ணனே என்
கண்ணனே கதறு கின்றேன்,
ஆருளர் களைக் கணம்மா
அரங்க மா நகர் உளானே



படம்: திருமால் பெருமை
இசை: கேவி மகாதேவன்

வரிகள்: தொண்டரடிப்பொடி ஆழ்வார்
குரல்: ஏழிசை மன்னர் TMS (எ) Thoguluva Meenatchi Soundararajan

கண்ணன் பாட்டில்,TMS பாடல்களின் தொகுப்பு = இங்கே!



  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP