Saturday, December 31, 2011

அன்புடன் ஒன்றாய் நாமும் யமுனைக்கரையில் சந்திப்போமே!

ஓ கிருஷ்ணா...

என்னாசை இராதா..
என்னன்பு இராதா...
என்றென்றும் நீயே என் ஜீவன் தானே...
கண்ணன் அழைக்கின்றேனே யமுனைக்கரைக்கு வா நீ...
என்னாசை கண்ணா...
என்னன்பு கண்ணா...
என்றென்றும் நீயே என் உயிர் கண்ணா...
இராதை அழைக்கின்றேனே யமுனைக்கரைக்கு வா நீ...
ஓ இராதா....
ஓ கிருஷ்ணா...
ஆதவன் நீ என்றால் ஒளிக்கதிர் நான் தானே...
விண்மீன்கள் நீ என்றால் முழுமதி நானே...
நம் வாழ்வின் இனிமேல் என்றும் ஆனந்தம் தானே...
(என்னாசை கண்ணா)
 
ஏழேழு ஜன்மமுமாய் உனக்கென்றும் நான் தானே...
என் வாழ்வில் எது வந்தாலும் எந்தன் துணை நீயே...

உன்னை விட்டு நானும் நொடியும் பிரிந்தே வாழ்ந்திட மாட்டேன்...
என்னாசை இராதா...
என்னன்பு இராதா...
என்றென்றும் நீயே என் தெய்வம் தானே...
அன்புடன் ஒன்றாய் நாமும் யமுனைக்கரையில் சந்திப்போமே! ஓ இராதா...
ஓ கிருஷ்ணா...

Saturday, December 24, 2011

சத்தம் போடாதே!

முன்னெல்லாம் ஆயர்பாடியில் திருட்டு பயமே இல்லையாம். அதனால, யாருமே வீட்டை பூட்ட மாட்டாங்களாம். கிருஷ்ணன் பொறந்தோன்ன, கதையே மாறிப் போச்சு. இந்த வெண்ணெய் திருடிக்கு பயந்து எல்லாரும் வீட்டை பூட்டி வெக்க ஆரம்பிச்சிட்டாங்க! ஆனா, எப்படிப் பூட்டினாலும் அவன் திருடறதை தடுக்கவே முடியறதில்லை.


ஒரு நாள், யசோதா வெண்ணெய் கடைஞ்சு உறியில் கட்டி வெச்சிட்டு, அடுக்களைல வேலையா இருந்தாளாம். அப்ப மெதுவா பூனை போல அங்கே வந்த கண்ணன், இருந்த வெண்ணெயெல்லாம் வழிச்சு எடுத்து சாப்பிட்டுட்டானாம். கையில வெண்ணெய் ஒட்டியிருந்தா தெரிஞ்சு போயிரும்னு, எல்லா விரலையும் அழகா நாக்கால சுத்தம் பண்ணிட்டான். கை ரெண்டையும் உத்தரீயத்தில் நல்லா தொடச்சிட்டான். அப்பதான் அடுப்பு வேலைய முடிச்சிட்டு வந்தா யாசோதா. அவ எங்கே போயிட்டு வந்தாலும், அவளோட மொத வேலை என்ன தெரியுமோ? வெண்ணெய் இருப்பை செக் பண்றதுதான்! இப்பவும் அதான் செய்தா. ஆனா, வெண்ணெய் இருந்த இடமே தெரியலை!

“கண்ணா, இங்கே வா!”, அம்மா குரல்ல இருந்தே, கண்டுபிடிச்சிட்டான்னு தெரிஞ்சு போச்சு கண்ணனுக்கு.

எப்படிடா சமாளிக்கிறதுங்கிற யோசனையோட, “என்னம்மா?”, அப்படின்னு கொஞ்சிக் கொஞ்சி குழலைப் போலவே குழையற குரல்ல அப்படி ஒரு செல்லமா கேக்கறான்.

அம்மாவுக்கு மனசு உருகின உருக்கத்துல கோவமே மறந்துரும் போல ஆயிருச்சு! நினைவுபடுத்தி வரவழைச்சுக்கிட்ட கோவத்தோட, “வெண்ணெய் தின்னியா?”ங்கிறா.

“ஊஹூம். இல்லையேம்மா. நீ வேணா பாரு…”, தாமரைப்பூ போல செவந்த உள்ளங்கை ரெண்டையும் விரிச்சு, இப்படியும் அப்படியுமா திருப்பித் திருப்பிக் காட்டறான். “ஐயோ பாவம், இந்த பால் வடியும் மொகத்தையா சந்தேகப்பட்டோம்”, அப்படின்னு சொல்ற மாதிரி மொகத்தில் அப்படி ஒரு பாவம்!

ஆனா என்ன, மொகத்தில் பாலுக்கு பதிலா வெண்ணெய்! அவ்வளவு கவனமா ரெண்டு கையையும் சுத்தம் பண்ணினவன், வாயைத் துடைக்க மறந்துட்டான்! வாய் ஓரமா, வெண்ணெய் மெய் மறந்து உட்கார்ந்திருந்தது! அதோட ஆனந்தம் அதுக்கு! அம்மாகிட்ட நல்ல்லா மாட்டிக்கிச்சு புள்ளை!

“உன்னை என்ன பண்றேன் பாரு!”

விறிவிறுன்னு போயி தாம்புக்கயிறை எடுத்துக்கிட்டு வர்றா. அவன் இடுப்பைச் சுத்தி கயிறைக் கட்டி, பிறகு அந்தக் கயிறை உரலோட கட்டி அவனை உக்கார வெக்கிறா.


ஆனா, மறு நாளும் இதே கதை! அடுத்த நாளும்; அதற்கு அடுத்த நாளும்… இப்படியே. உறியை எப்படி இடம் மாத்தி வெச்சாலும், கண்ணன்கிட்ட இருந்து வெண்ணெயைக் காப்பாத்த முடியலை. என்ன பண்ணலாம்னு மண்டையைப் பிச்சிக்கிட்ட பிறகு, யசோதைக்கு ஒரு யோசனை தோணுது!

அன்றைக்கு குட்டிக் கண்ணனுக்கு குளிப்பாட்டி, அலங்காரம் பண்ணும்போது, அவனுக்கு கழுத்துல, இடுப்புல, கைல, கால்ல, இப்படி, நெறய்ய நகை போட்டு விடறா. சாதாரண நகை இல்லை, லேசா அசைஞ்சாலும் சத்தம் செய்யற மாதிரி நகை! அவன் கொஞ்சம் அசைஞ்சாலும், இவ எங்கே இருந்தாலும் கேக்குமாம்! அதோட மட்டும் இல்லாம, வெண்ணெயை உறில கட்டும் போது, மூடியைத் தொறந்தா, உடனே சத்தம் போடற மாதிரி, ஒரு மணியையும் கட்டி வெக்கிறா! “இன்னிக்கு எப்படித் திருடறான்னு பாக்கிறேன்”, அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சுக்கறா.

அவன் மேல கிடந்த நகையெல்லாம், “ஆகா, நம்ம பரந்தாமனை அலங்கரிக்க என்ன பாக்கியம் பண்ணியிருக்கோம்”னு நினைச்சு, சந்தோஷத்தில் இயல்பை விட அதிகமாவே சத்தம் போட்டுச்சாம்! ஆனா நம்ம குட்டிப் பயல், தன் மேல கிடந்த நகைகளோட ஒரு ரகசிய ஒப்பந்தம் பண்ணிக்கிறான்: “நீங்கள்லாம் என்மேல அன்பு வெச்சிருக்கது உண்மையா இருந்தா, நான் வெண்ணெய் திருடப் போகும் போது நீங்கள்லாம், சத்தமே போடாம இருக்கணும்!” அப்படின்னு! அவன் வார்த்தைக்கு மறு வார்த்தை உண்டா, என்ன? “என் உகப்பு பெரிதில்லை; உன் திருமுக உகப்போ பெரிது”, அப்படின்னு அவையும் பேசாம, சத்தம் போடாம, அவன் அசையும் போதெல்லாம் மூச்சைப் பிடிச்சுக்கிட்டு, கஷ்டப்பட்டு சும்மா இருந்ததாம். அப்படியே மெதுவா பானையை எட்டிட்டான். அப்பதான் அங்கே இருந்த மணியை பார்த்தான்!

“ஆகா, நம்ம அம்மா இவ்வளவு ப்ளான் பண்ணியிருக்காளா”ன்னு நெனச்சவன், அந்த மணிகிட்டயும் அதே மாதிரி ஒப்பந்தம் செய்துகிட்டானாம். “நான் வெண்ணெய் திருடும் போது நீ சத்தம் போடக் கூடாது”, அப்படின்னு! அந்த மணியும் ஒத்துக்கிச்சாம்.

பானையை எடுத்தான், மணி அடிக்கலை.
மூடியைத் தொறந்தான், மணி அடிக்கலை.
வெண்ணெயை அள்ளினான், மணி அடிக்கலை.
அள்ளின வெண்ணெயை வாயில் வெச்சான், அவ்வளவுதான்! ‘கிணி கிணி’ன்னு மணி வேகமா அடிச்சிருச்சு!

கண்ணனுக்கே ஷாக் ஆயிடுச்சு! “நான் சொன்னது மறந்து போச்சா! ஏன் அடிச்சே?” அப்படின்னு கோவிச்சுக்கறான்.

“என்ன கண்ணா பண்ணுவேன்? உனக்கு நெய்வேத்தியம் பண்ணும்போதெல்லாம் சத்தம் போட்டே பழகிட்டேனே? அந்த பழக்க தோஷம்தான். என்னை மன்னிச்சிரு”, அப்படின்னு சொல்லுச்சாம், அந்த மணி!

அன்றைக்கும் தாம்புக் கயிறுதான், உரல்தான். பா…வம் நம்ம குட்டிக் கண்ணன்!

--கவிநயா

பி.கு.: மணி விஷயம், ஒரு உபன்யாசகர் சொல்லக் கேட்டது.

Friday, December 23, 2011

தூண்டிற் புழுவினைப் போல்...

          (கணிக்)கண்ணபிரான் [&co] ஒலிபரப்பிய
கோதைத்தமிழ்ப்பா(வை)காதைத்தீண்டி இழுக்க,
அரங்கன் பைந்நாகப்பாய் சுருட்டிக்கொண்டு
மாதவிப்பந்தல் நோக்கி நடை கட்டிட்டான் ;
பாய் ஜாக் பண்ணப்பட்ட அரங்கனை இங்கு
மீட்டு வர பாரதியின் காதல்கீதம் கீழே!



கண்ணன்  என் காதலன்

தூண்டிற்  புழுவினைப்போல் ---வெளியே
           சுடர்விளக்கினைப் போல் ,
நீண்ட பொழுதாக-- எனது
          நெஞ்சந்துடித்ததடீ!
கூண்டுக்கிளியினைப்போல் --தனிமை
           கொண்டு மிகவும் நொந்தேன் ;
வேண்டும் பொருளையெல்லாம்--மனது
          வெறுத்து விட்டதடீ!

பாயின்மிசை நானும் --தனியே
             படுத்திருக்கையிலே,
தாயினைக்கண்டாலும்,--சகியே!
              சலிப்பு வந்ததடீ!
வாயினில் வந்ததெல்லாம் ,--சகியே!
              வளர்த்துப் பேசிடுவீர்;
நோயினைப்போலஞ்சினேன் ;--சகியே!
               நுங்களுறவையெல்லாம் .

உணவு செல்லவில்லை ;--சகியே!
               உறக்கங் கொள்ளவில்லை.
மணம்   விரும்பவில்லை;--சகியே!
              மலர் பிடிக்கவில்லை;
குணமுறுதி யில்லை ;--எதிலும்
               குழப்பம் வந்ததடீ !
கணமும் உள்ளத்திலே --சுகமே
               காணக் கிடைத்ததில்லை.

பாலுங் கசந்ததடீ!--சகியே!
              படுக்கை  நொந்ததடீ!
கோலக்கிளி மொழியும் --செவியில்
              குத்தலெடுத்ததடீ !
நாலு வயித்தியரும் --இனிமேல்
            நம்புதற்கில்லைஎன்றார்;
பாலத்துச் சோசியனும் --கிரகம்
            படுத்துமென்றுவிட்டான்

கனவு கண்டதிலே-- ஒருநாள்
             கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்கவில்லை --எவனோ
              என்னகந் தொட்டுவிட்டான் .
வினவக் கண் விழித்தேன் ;--சகியே!
              மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே --புதிதோர்
                மகிழ்ச்சி கண்ட தடீ !

உச்சி குளிர்ந்ததடீ;--சகியே!
            உடம்பு நேராச்சு ;
மச்சிலும் வீடுமெல்லாம் --முன்னைப்போல்
            மனத்துக் கொத்ததடீ!
இச்சை பிறந்ததடீ!--எதிலும்
             இன்பம் விளைந்ததடீ!
அச்சமொழிந்ததடீ!--சகியே!
            அழகு வந்ததடீ !

எண்ணும்  பொழுதிலெல்லாம் --அவன்கை
           இட்ட விடத்தினிலே
தண்ணென்றிருந்ததடீ !--புதிதோர்
           சாந்தி பிறந்ததடீ!
எண்ணி  எண்ணிப் பார்த்தேன் ;--அவன்தான்
            யாரெனச் சிந்தை  செய்தேன்;
கண்ணன் திருவுருவம் --அங்கனே
            கண்ணின் முன் நின்றதடீ!
.


  

Monday, December 19, 2011

கண்ணம்மா எனது குலதெய்வம்

ராகம் - புன்னாக வராளி
பல்லவி
நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா !
நின்னைச் சரணடைந்தேன் !

சரணங்கள்
 பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்)

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று (நின்)

 தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம் (நின்)

 துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட (நின்)

 நல்லது தீயது நாமறியோம் அன்னை
நல்லது நாட்டுக ! தீமையை ஓட்டுக ! (நின்)

கண்ணம்மா எனது குலதெய்வம்
காரைக்குறிச்சி பி.அருணாச்சலம் அவர்களின் நாதஸ்வர இசை.

Saturday, December 10, 2011

பாஞ்சாலியின் பிரார்த்தனை

                                               
[Bharathi.jpg]   




             பாரதியாரின்  பிறந்தநாளான  இன்று (11.12.11)அவரது நினைவாக  பாஞ்சாலிசபதத்தில்  கணவர்களும்   
 உதவாத நிலையில்  பூரண சரணாகதி நிலையில்  
திரௌபதி கண்ணனை ப்ரார்த்திக்கும் பகுதி
கண்ணன் பாட்டு அன்பர்களுக்காக:

               பாஞ்சாலியின் பிரார்த்தனை  

                                              

"அரி, அரி, அரி!"என்றாள் ."கண்ணா!
       அபயமபயமுனக்கபயம்" என்றாள்.
கரியினுக்கருள் புரிந்தே-அன்று
      கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய்!
கரிய நன்னிறமுடையாய்!-அன்று
     காளிங்கன் தலைமிசை நடம்புரிந்தாய்!
பெரியதோர் பொருளாவாய்!-கண்ணா!
    பேசரும் பழமறைப் பொருளாவாய்!
சக்கரமேந்தி நின்றாய் ! -கண்ணா!
    சார்ங்கமென்றொரு வில்லைக் கரத்துடையாய்!
அக்கரப் பொருளாவாய் ! -கண்ணா!
    அக்கார அமுதுண்ணும் பசுங்குழந்தாய்!
துக்கங்கள் அழித்திடுவாய்! -கண்ணா!
    தொண்டர்கண்ணீர்களைத்   துடைத்திடுவாய்!
தக்கவர் தமைக் காப்பாய்,--அந்தச்
    சதுர்முக வேதனைப் படைத்துவிட்டாய் !
வானத்துள்  வானாவாய்,--தீ,
    மண்,நீர்,காற்றினில் அவையாவாய்;
மோனத்துள் வீழ்ந்திருப்பார் -தவ
   முனிவர்தம் அகத்தினிலொளிர் தருவாய்;
கானத்துப் பொய்கையிலே -தனிக்
   கமலமென் பூமிசை வீற்றிருப்பாள்,
தானத்து சீதேவி, -அவள்
    தாளிணை கைக்கொண்டு -மகிழ்ந்திருப்பாய்!
ஆதியிலாதியப்பா!--கண்ணா!
    அறிவினைக்கடந்த விண்ணகப்பொருளே !
சோதிக்குஞ்சோதியப்பா !--என்றன்
    சொல்லினைக்கேட்டருள் செய்திடுவாய் !
மாதிக்கு வெளியினிலே -நடு
    வானத்திற் பறந்திடும் கருடன்மிசை
சோதிக்குள் ஊர்ந்திடுவாய்--கண்ணா!
    சுடர்ப்பொருளே ,பேரடற்பொருளே!
"கம்பத்திலுள்ளானோ?--அடா !
     காட்டுன்றன் கடவுளைத் தூணிடத்தே!
வம்புரை செயுமூடா!"--என்று
     மகன்மிசையுறுமியத் தூணுதைத்தான்
செம்பவிர்குழலுடையான்;--அந்தத்
     தீயவல்லிரணியனுடல் பிளந்தாய்!
நம்பி நின்னடி தொழுதேன்;--என்னை
     நாணழியாதிங்கு காத்தருள்வாய்.
வாக்கினுக்கீசனையும் --நின்றன்
    வாக்கினிலசைத்திடும் வலிமையினாய் ,
ஆக்கினை கரத்துடையாய் --என்றன்
    அன்புடை எந்தை !என் அருட்கடலே!
நோக்கினிற்கதிருடையாய் !--இங்கு
     நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்தருள்வாய்!
தேக்குநல் வானமுதே!--இங்கு
    சிற்றிடையாய்ச்சியில் வெண்ணையுண்டாய்!
வையகம் காத்திடுவாய்!--கண்ணா!
    மணிவண்ணா,என்றன் மனச்சுடரே!
ஐய,நின்பதமலரே    --சரண்
   அரி,அரி, அரி, அரி, அரி!"என்றாள்.










Wednesday, November 30, 2011

ரங்கா, கிருஷ்ணா - எனக்கு எதுவுமே தெரியாதுப்பா!



* ராமாயணம், பாரதம், பாகவதம் இப்படி எல்லாவற்றிலுமிருந்தும் சிறந்த பக்தர்களை மேற்கோள் காட்டி தாசர் பாடும் பாடல்.

* தியானம், காதல், பக்தி, நட்பு, பாட்டு இப்படி பல்வேறு விதங்களில் இறைவனை பக்தி செய்த பக்தர்களின் சிறப்புகளை பற்றி பாடும் பாடல்.

* அப்படி இந்த பக்தர்களுக்குத் தெரிந்த எதுவுமே எனக்கு தெரியாது. ஆனாலும் உன்னை நம்பி வந்துவிட்டேன். என்னை காப்பாற்று என்று ரங்கனை ஸ்ரீ புரந்தரதாசர் பாடும் பாடல்.

* இவ்வளவு விதமாக அந்த கிருஷ்ணனை வணங்கி வழிபடலாமென்று நமக்கு எடுத்துரைக்கும் பாடல்.

* தாயின் அன்பு, மனைவியின் காதல் - ஆகிய உணர்சிகளை வெகு அழகாக காட்டும் பாடல்.

* பக்தி மார்க்கத்தில் மிக மிக உன்னதமான நிலையை அடைந்த ஸ்ரீ புரந்ததாசரின் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக இந்த பாடலை குறிப்பிட்டு சொல்வார்கள்.

* ஸ்ரீ புரந்தரதாசர் எந்த அளவுக்கு இதை பக்தியுடன் படைத்துள்ளாரோ, அதற்கு சற்றும் குறையாத அளவில் (தவறாக ஒப்பிட்டிருந்தால் மன்னிக்க) நம் பீமண்ணர் பாடியுள்ளார் என்பதை, கீழேயுள்ள காணொளியை சொடுக்கி, கேட்டு,  அனுபவியுங்கள்.

* தாசர் இறைவனிடம் கேட்பது என்ன? பொன்னோ பொருளோ அல்ல. அப்புறம்? கீழே பாட்டில் இருக்கு. வாங்க பார்க்கலாம்.

***

கருணிசோ ரங்கா கருணிசோ

ஹகலு இருளு நின்னா
ஸ்மரணே மரெயேதந்தே (கருணிசோ)

அருள் செய்வாய், ரங்கா, அருள் செய்வாய்

பகலும் இரவும் உந்தன்
நினைவு மறக்காதிருக்க (கருணிசோ)


ருக்குமாங்கதனந்தே வ்ரதவ நானறியேனோ
சுகமுனியந்தே ஸ்துதிசலுஅறியே
பகவைரியந்தே த்யானவ மாடலறியே
தேவகியந்தே முத்திசலறீயேனோ ரங்கா (கருணிசோ)

ருக்குமாங்கதனைப் போல் விரதங்களை கடைப்பிடிக்க எனக்குத் தெரியாது
சுக முனிவரைப் போல் ஸ்லோகங்களைச் சொல்லி துதி செய்யத் தெரியாது
பகாசுரனின் பகைவன் [பீமன்] போல் தியானம் செய்யத் தெரியாது
தேவகியைப் போல் உன்னை கொஞ்ச தெரியாது (கருணிசோ)


கருடனன்ததி பொத்து திருகலு அறியே
கரெயலு அறியே கரிராஜனந்தே
வரகபியந்தே தாச்யவ மாடலறியே
சிரியந்தே நெரெது மோஹிசலறியேனு கிருஷ்ணா (கருணிசோ)

கருடனைப் போல் [என்] தோளில் [உன்னை] சுமந்து வரத் தெரியாது
கரிராஜன் [ஆதிமூலம் - யானை] போல் உன்னை கூப்பிடவும் தெரியாது
வரகபி [ஆஞ்சநேயர்] போல் உனக்கு சேவை செய்யவும் தெரியாது
ஸ்ரீ மஹாலக்ஷ்மியைப் போல் உன் மேல் காதல் செய்யவும் தெரியாது கிருஷ்ணா (கருணிசோ)


பலியந்தே தானவ கொடலு அறியேனு
பக்தி சலவனு அறியே ப்ரஹ்லாதனந்தே
ஒலிசலு அறியே அர்ஜுனனந்தே சகனாகி
சலஹோ தேவர தேவா
புரந்தரவிட்டலா ஸ்ரீ (கருணிசோ)

பலிச் சக்கரவர்த்தியைப் போல் தானம் கொடுக்கத் தெரியாது
பிரகலாதனைப் போல் திடமான பக்தி செய்யவும் தெரியாது
அர்ஜுனனைப் போல் உன் மேல் நட்பு பாராட்டவும் தெரியாது
என்னை காப்பாற்று இறைவனின் இறைவனே
ஸ்ரீ புரந்தர விட்டலனே (கருணிசோ)


***



***

கருணிசோ ரங்கா கருணிசோ

***

Tuesday, September 27, 2011

9ராத்திரி-01: காத்திருப்பான் கமலக் கண்ணன்!

உத்தம புத்திரன் என்ற படத்தில் இந்தப் பாட்டு மிகவும் பிரபலம்;
பி.லீலா அவர்கள் பாடுவார்கள்! அழகான நாட்டியமும், இசையும் சேர்ந்து இதை ஒரு கடந்த கால வசந்தம் ஆக்கி விட்டது!

sringara-lila

வேடிக்கையாய்ச் செய்வான்
அலங்காரம்
playing-vina
வீணைஇசைக்கச் சொல்லி
வேண்டுவான் - சிலநேரம்


காத்திருப்பான் கமலக் கண்ணன் அங்கே
காத்திருப்பான் கமலக் கண்ணன்!

கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து - கண்ணுறங்காமல்
காத்திருப்பான் கமலக் கண்ணன்


ஆற்றங்கரை தனிலே அந்திப் பொழுதினிலே
பூத்த மென்மலர் போலப்
புனிதமான வனிதை ராதை வருகையைக் - காணக்
காத்திருப்பான் கமலக் கண்ணன்


கோபியர் கொஞ்சும் சல்லாபன் - வேய்ங்
குழலிசை அமுதூட்டும் எழிலொடு சுகம்காட்டும்
கோபியர் கொஞ்சும் சல்லாபன்


தாவிப் பிடிப்பான்...தாவிப் பிடிப்பான்
வெண்ணைத் தயிர்க் குடத்தைத் தடுப்பான்
தரையில் அமர்ந்து ராதை உருவம் வரைந்து கொண்டு - அங்கு
காத்திருப்பான் கமலக் கண்ணன்


வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம்
வீணைஇசைக்கச் சொல்லி வேண்டுவான் - சிலநேரம்
வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம்


பாடுவான்... அதற்கவள் ஆடுவாள்
பல நேரம் பாதம் நோகுமே
என்று பரிவுடன் காதல் இன்பமே
தந்த நாயகன் - வந்து


காத்திருப்பான் கமலக் கண்ணன்
கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து - கண்ணுறங்காமல் காத்திருப்பான் கமலக் கண்ணன் !



வரிகள்: சுந்தர வாத்தியார்
குரல்: பி.லீலா
இசை: ஜி. ராமநாதன்
படம்: உத்தம புத்திரன்

Tuesday, September 20, 2011

குடை பிடித்த கிரிதாரி

சமீபத்தில் கேட்டதில் மிகவும் பிடித்த ஒரு கண்ணன் பாடல்(விருத்தம்). காலையில் தூங்கி எழுந்தவுடன் கேட்கலாம் வகை.  கண்ணன் பாடலில் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. இந்த விருத்தத்தை வலையேற்ற அனுமதி அளித்த ரஞ்சனி-காயத்ரி சகோதரிகளுக்கு மிக்க நன்றி.

 

குளிர் மழை காக்க குடை பிடித்த கிரிதாரி
துளிரிடை த்ரௌபதி துகில் நீட்டிய உபகாரி
பிளிறு கேட்டோடி களிறு மீட்ட சக்ரதாரி
வளர்த்தென்னை இங்கு பரிபாலி


Sunday, September 11, 2011

மேகங்களை கண்டு மிரள்கிறேன்



பல்லவி:

மேகங்களை கண்டு மிரள்கிறேன் - கண்ணா
தேகத்தை மட்டுமே நனைக்கவரும் - நீர்
(மேகங்களை)

அனுபல்லவி:

பாகனின் கட்டை மீறிய மதக்களிறென
வேகவேகமாய் வந்து சூழ்ந்திடும் - கரு
(மேகங்களை)

சரணங்கள்:

மின்னல்களே வேள்வித் தீயாக - அந்தப்
பேரிடிகள் மந்திரங்கள் தான் முழங்க
குளிர்காற்றே என்னை புகையாய்த் தழுவி
பலனாக பிரிவை மேலுமுணர்த்த வரும்
(மேகங்களை)

கூடும் பொழுதை எதிர்காணும் பேடைமுன்
ஆடும் மயிலின் அகவல் சத்தமும்
நாடும் நங்கையரின் கலியை தீர்த்திட
ஓடும் ஆடவரின் காலோசையும் தந்திடும்..
(மேகங்களை)

வெள்ளம் புரளும் யமுனைக் கரையில்
கள்ளன் வருகைக்கு காக்கக் கண்டு
வெள்ளை நிலவு எள்ளாத குறையை
முல்லை மலர்களே போக்கத் தூண்டும்

மேகங்களை கண்டு மிரள்கிறேன் - கண்ணா
தேகத்தை மட்டுமே நனைக்கவரும் - நீர்

Tuesday, September 06, 2011

நீல வண்ண கண்ணா வாடா !


அமைதியான இரவில் கேட்க  அருமையான இன்னொரு கண்ணன் பாடல். கிருஷ்ண ஜெயந்தியின் போது வானொலியில் கேட்க நேர்ந்தது.


நீல வண்ண கண்ணா வாடா !
நீ ஒரு முத்தம் தாடா !
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா வாடா !

பிள்ளையில்லாக்  கலியும் தீர
வள்ளல் உன் தன் வடிவில் வந்தான்

எல்லை இல்லாக்  கருணை தன்னை
என்னவென்று சொல்வேனப்பா !

வானம்பாடி கானம் கேட்டு
வசந்தகால தென்றல் காற்றில்
தேன் மலர்கள் சிரிக்கும் காட்சி
செல்வன் துயில் நீங்கும் காட்சி


தங்கநிறம் உன்தன் அங்கம்
அன்புமுகம் சந்திர பிம்பம்

கண்ணால் உன்னைக் கண்டால் போதும்
கவலை எல்லாம் பறந்தே போகும்

சின்னஞ்சிறு திலகம் வைத்து
சிங்காரமாய் புருவம் தீட்டி

பொன்னாலான நகையும் பூட்ட
கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு

நடுங்கச் செய்யும் வாடைக் காற்றே
நியாயமல்ல உன்தன் செய்கை
தடை செய்வேன் தாளைப் போட்டு
முடிந்தால் உன் திறமை காட்டு

விண்ணில் நான் இருக்கும் போது
மண்ணில் ஒரு சந்திரன் ஏது
"அம்மா என்ன புதுமை ஈது?!" என்றே
கேட்கும் மதியைப் பாரு

இன்ப வாழ்வின் பிம்பம் நீயே !
இணையில்லா செல்வம் நீயே!
பொங்கும் அன்பின் ஜோதி நீயே !
புகழ் மேவி வாழ்வாய் நீயே !

Wednesday, August 24, 2011

கிரிதாரிக்கு திருநீர்


மீரா என்று ஒரு முறை கூறிப்பார்க்கின் இனம் விளங்காத ஒரு வலி நம்மை பற்றிக் கொண்டு விடுகிறது. நாம் இப்போது அறியப் போகும் அவளின் பாடல், அவளுடைய இளம் பிராயத்தினது அன்று, தன்னுடைய முதிர்ந்த அகவையில் இயற்றியது. தன்னை மறுதளித்து கொண்டே வருகிறானே இந்த மாய கிரிதாரி; ஒருவேளை அவனுக்கு அவளின் பிரேமை என்பதும் சலித்தும் போனதோ? அன்று பெண்கள் என்றால் ஒவ்வாத நோயும் கொண்டானோ ? இல்லை துறவியாகி விட்டானோ ? என்று பலவாறு எண்ண அலைகள் தோன்றி மறைந்தன அந்த அடிமைக்கு!

அவன் ஒரு வேளை துறவியாக மாறிவிட்டனானால்; இனி ஒரு முறை எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்ப்பதற்கில்லை, தன்னிடம் வாராததர்க்கும் காரணம் கேட்டு அறிவதற்கில்லை; பிரேம பக்தியில் தான் அவிழ்க்க இயலாத புதிர்களின் விடைகளை அறிவதர்க்குமில்லை. ஹே ! கிரிதாரி நீ துறவியாகவே ஆகியிருப்பினும் எனக்கு ஒரு வழி சொல்லியே தீர வேண்டும்..

அந்தோ! மாயவ .. நீ துறவியாக வந்து சேர்ந்தால், உனக்கு என்னால் என்னதான் தர இயலும். வனமாலை தான் தொடுத்து சூட்ட முடியுமா ? பட்டு பீதாம்பரங்களை உடுத்த தர முடியுமா ? சுகந்தம் வீசும் திரவியங்களை அள்ளி உன் மார்பில் பூச முடியுமா ? உன் கண்களை தீரா மோகத்துடன் பார்க்க முடியுமா ? கட்டி அணைக்க முடியுமா ?
இல்லை மூச்சு முட்ட முத்தம்தான் இட முடியுமா ? எதற்கும் இம்மி அளவும் சாத்தியம் இல்லை..

அந்த துறவிக்கு அவளால் தர இயன்ற ஏதேனும் ஒன்று உண்டா? உண்டென்றால் அது என்ன? துறவிக்கு உகந்த வஸ்து ..மீராவால் தர இயன்ற ஒன்று.. சாம்பல்!

ஆம், துறவியாக வரும் அவனுக்கு இவள் தர முடிவு செய்தது, துறவிகள் அங்கமெல்லாம் பூசிக்கொள்ளும் சாம்பல்தான்.. அதென்ன அவ்வளவு சாதாரணமான ஒரு வஸ்துவை தருகிராளே, என்று யாரும் எண்ணக் கூடாது என்றேதான், அதன் செய்முறையையும் தன் பாடலில் இயற்றி உள்ளாள். துறவியும் விரும்பும் சாம்பலாகவே மாறி அவன் அங்கம் தழுவி நிற்கவும் தயாரானாள்.

ஹே பிரபு.. நீ சந்தனமென்றால் நான் தண்ணீர்..
ஹே பிரபு.. நீ சூரியனென்றால் நான் சந்திரன்
ஹே பிரபு.. நீ முத்துக்கள் என்றால் நான் நூல்..
ஹே பிரபு.. நீ துறவியானால் நான் சாம்பல்..
ஹே பிரபு..நீ கிரிதாரி நான் உந்தன் தாசி..

பாடல்..


மத் ஜா! மத் ஜா ! மத் ஜா ! - ஜோகி ..
பாவ் பரூன் மே.. சேரி தேரி..

செல்லாய்! செல்லாய்! செல்லாய்! ஸ்வாமி..
பாதம் பணிந்தேன் பேதை உந்தன்..

பிரேம பக்தி கி பெந்தோ ஹி ந்யாரோ..
ஹம்கோ கேல் பதா ஜா..

பிரேம பக்தியின் பாதையில் புதிர்கள் ..
பகர்ந்திடு பதில் ஒன்று எனக்கு ..

அகர் சந்தன் கி சிதா பனாஊன்
அப்னே ஹாட் ஜலா ஜா

சந்தனத்து விறகினில் சிதையொன்று செய்தால்
உந்தனது கையினால் எரியூட்டு..

ஜல் பல் பை பஸ்முஹீ டெரி..
அப்னே அங்கு லகா ஜா
மத் ஜா! மத் ஜா ! மத் ஜா ! - ஜோகி ..

என் சவமது எரிந்து சாம்பலாய் குறைந்தால்
உனது மேனியில் பூசிக்கொள் - ஸ்வாமி
செல்லாய்! செல்லாய்! செல்லாய்! ஸ்வாமி..

மீரா கஹே பிரபு கிரிதர நாகர
ஜோத் சே ஜோத் மிலா ஜா - ஜோகி ..

மீரா கோரும் பிரபு கிரிதர நாகர
உந்தன் ஜோதியில் கலந்திடு என்னை ..
செல்லாய்! செல்லாய்! செல்லாய்! ஸ்வாமி..

Sunday, August 21, 2011

அதோ வருகிறான் குட்டிக் கண்ணன்


    
 
முட்டித் தேய தவழ்ந்து நகர்ந்து
சட்டிவெண்ணைதனை முகர்ந்து,

எட்டி உதைத்துருட்டித் தள்ளி,

கொட்டிப்போன கட்டிவெண்ணை

குட்டிக்கைகள் வழிய அள்ளி,

மொட்டுவாயில் அடைத்து,சப்புக்

கொட்டி ரசித்து,ருசித்து,-வயிறு

முட்டத் தின்னும் குட்டி அரியின்

சுட்டித்தனம் கண்ட அன்னை,

''பட்டு விடும கண்?''என்றஞ்சி,

பட்டுக்கன்னம் தொட்டு வழித்து,

முட்டிமடக்கி த்ருஷ்டி கழித்து,

கட்டக்கரு மை பொட்டுஒன்று
முகில்வண்ண முகத்திலிட்டு,

சிறுமாலை மடியில் போட்டு,

பாடுகிறாள் திருத்தாலாட்டு!
தாயவள்கை தள்ளி உருண்டு

தத்தக்கா புத்தக்கா நடை நடந்து,

விழுந்து,மீண்ட தாய்மடியில்

படுக்கிறான் அரிக்கொழுந்து!

பாலூட்டும் தாய் கையிலிருந்து

பாலாடை சங்கு பறித்து,

கரத்தில் சங்கு ஏந்தும் அரியாய்

அருள்கிறான் திருக் காட்சி.!

தட்டிக்கொட்டிய பாலில் விழுந்து

பட்டாடை நனையப் படுத்து

பாற்கடலில்  பள்ளி கொண்டு

அருள்கிறான் திருக் காட்சி!.

கண்ணன் பிறந்த நாள்: பால் வடியும் முகம்!

கண்ணன் பாட்டு மக்களுக்கு....இனிய கண்ணன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்! (Aug-21, 2011)

கோகுலாஷ்டமி - கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!

இன்னிக்கி எனக்கு மிகவும் பிடிச்ச
பால் வடியும் முகம்...நினைந்து நினைந்து...என் உள்ளம்
பரவசம் மிகவாகுதே - கண்ணா!


பித்துக்குளி-ன்னாலே என்ன ஞாபகத்துக்கு வரும்?
எனக்கு முருகன் ஞாபகம் வருவான்! :)
அப்பறமா முருகதாஸ்-இன் கூலிங் க்ளாஸ், தலையில் காவி Scarf!
மனுசன் அப்பவே என்ன ஸ்டைலா இருக்காரு-ன்னு பாருங்க! :))

ஒத்தை ஹார்மோனியம் மட்டுமே வச்சிக்கிட்டு......இந்தக் கொங்கு நாட்டுத் தங்கம், எதையும் கொஞ்சம் வித்தியாசமா பண்ணும்!

கர்நாடக பாடல்களை, அப்படியே இழு இழு-ன்னு இழுக்காம, அதை வேறொரு ஸ்டைலில், மக்களோடு மக்களாச் சேர்ந்து, பாடிக் காட்டியவர்!
இதனால் தான், இந்தக் காலத்திலும், ஹார்மோனியம் மட்டுமே வச்சிக்கிட்டு, கல்லூரி மாணவர்களைக் கூடப் பித்துக்குளிக்கு, "ஓ" போட வைக்குது!

Fast Beat காவடிச் சிந்தை, செஞ்சுருட்டி/சுருட்டி/நாதநாமக் கிரியை-ன்னு போடறது தப்பில்லை!
ஆனா காவடிச் சிந்தின் அந்த ஜீவனான "துள்ளல்" போயிறக் கூடாதுல்ல? பண்டிதர்கள் அதை இழுத்து இழுத்தே ஜீவனைப் போக்கிருவாங்க! :)
ஆனால் நம்ம பித்துக்குளியார் காவடிச் சிந்தைக் கேளுங்க! சுருட்டி ராகமும் இருக்கும்! காவடியைச் "சுருட்டிக்"கிட்டு போகாமலும் இருக்கும்! :)

சான்றாக, இந்தப் பாட்டையே எடுத்துக்கோங்க!
பால் வடியும் முகம் - கண்ணா, என்பது ஊத்துக்காடு வேங்கட கவியின் கீர்த்தனை! நடனத்துக்குன்னே பாடப்பட்ட அழகான கண்ணன் பாடல்! இதை எப்படி முருகதாஸ் Handle பண்றாரு?

* முதலில் பச்சை மாமலை போல் மேனி-ன்னு, ஆழ்வாரை Hum பண்ணி ஆரம்பிக்கறாரு!
* அடுத்து, ஒரு டெம்ப்போ உருவாக்க, மெல்லிய பஜனை...மக்களோடு!
* அடுத்து, பாஆஆஆஆஆல் வடியும் முகம்...நினைந்து நினைந்து உள்ளம்.....பரவசம் மிகவாகுதே....கண்ணாஆஆஆஆ!

கேட்டுக்கிட்டே பதிவை வாசிக்க, இதோ சொடுக்குங்கள்: பித்துக்குளியின் மாயக்குரலில், மாயோன் பாட்டு - பால் வடியும் முகம்! Bhajan Version, here

பால் வடியும் முகம்...



பால் வடியும் முகம்
நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவசம் மிக வாகுதே - கண்ணா!
(பால் வடியும்)

நீலக் கடல் போலும் நிறத்தழகா - எந்தன்
நெஞ்சம் குடி கொண்ட
அன்று முதல் இன்றும்
எந்தப் பொருள் கண்டும்
சிந்தனை செலா தொழிய
(பால் வடியும்)
நீர் வடியும் முகம்...

வான முகட்டில் சற்றே
மனம் வந்து நோக்கினும்
மோன முகம் வந்து தோனுதே!

தெளிவான தண்ணீர் தடத்தில்
சிந்தனை மாறினும்
சிரித்த முகம் வந்து காணுதே!

கானக் குயில் குரலில்
கருத்(து) அமைந்திடினும் - உன்
கானக் குழலோசை மயக்குதே!

கருத்த குழலொடு நிறுத்த மயில் சிறகு - இறுக்கி அமைத்த திறத்திலே
கான மயிலாடும் மோனக்குயில் பாடும் - நீல நதியோடும் வனத்திலே
குழல் முதல் எழிலிசை, குழைய வரும் இசையில் - குழலொடு மிளிர் இளங் கரத்திலே
கதிரும் மதியும் என நயன விழிகள் இரு - நளினமான சலனத்திலே

காளிங்கன் சிரத்திலே
பதித்த பதத்திலே
என் மனத்தை இருத்திக்
கனவு நனவினொடு
பிறவி பிறவி தொறும்
கனிந்துருக வரம்தருக பரங்கருணை....
(பால் வடியும்)

வரிகள்: ஊத்துக்காடு வேங்கட கவி
ராகம்: நாட்டக் குறிஞ்சி
தாளம்: ஆதி
குரல்: பித்துக்குளி முருகதாஸ்

இசைக் கருவிகளில்:
* வயலின் - குன்னக்குடி
* நாதசுரம்
* வீணை

Monday, August 15, 2011

ரகுபதி ராகவ ராஜாராம் !


 


ரகுபதி ராகவ ராஜாராம் !
பதீத பாவன சீதாராம் !

சீதாராம் ஜெய சீதாராம் !
பஜ து ப்யாரே சீதாராம் !

ஈஸ்வர அல்லா தேரே நாம் !
சப்கோ சன்மதி தே பகவான் !

ரகுபதி ராகவ ராஜா ராம் !
பதீத பாவன சீதாராம் !

ராம ராம ராம ராம ராம ராம ராம் !
ராம ராம ராம சீதா ராம ராம ராம் !

ஜெய ஜெய ராம் !
கோவிந்த ஹரி ஹரி !
ஜெய ஜெய ராம் !
முகுந்த ஹரி ஹரி !

கோவிந்த ஹரி ஹரி !
முகுந்த ஹரி ஹரி !

ராம ராம ராம ராம ராம ராம ராம் !
ராம ராம ராம சீதா ராம ராம ராம் !

பாடலை எம்.எஸ் அம்மாவின் அற்புதமான குரலில் கீழே கேட்கலாம்.

இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Friday, August 05, 2011

'கிரிதாரிக்குத் தொண்டு' என்னும் இனிய கரும்பு!



ஆழமான கருத்துகள் கொண்டு இனிமையான எளிதான பாடல் இது.

பல்லவி
க2ள்ளி க2வொ க2ள்ளி க2வொ--நிச்சு
கைங்கர்யம் மெனஸ்தான் கொப்பு3 க2ள்ளி க2வொ [க2]

எடுத்து உண்ணுங்கள் எடுத்து உண்ணுங்கள் - தினம்
தொண்டு என்னும் கரும்பு எடுத்து உண்ணுங்கள் (எ)

அநுபல்லவி
கரெ கர்முன் த4மய்
ஹரிக் பாய்ம்பொடி3 பொ3வொ துமி [க2]

செய்த வினைகள் ஓடும்
ஹரியை வணங்கி அழையுங்கள் - நீங்கள் (எ)

சரணு
தா3ஸ் ஹோனாஜியெத் மோஸ் அவயி ஹரி
தா3ஸ§நுக் தா3ஸ்ஹொயெத் ஹரி க்ருபகரயி
தொ3ங்க3ர் ராணும் ஹிங்க3ன் வேஸ் நீ:
தொ3ங்க3ர் அங்க்3ளிதெ4ரெ ரெங்கா3க் ஸெங்கு3 ஸவொ யேட்[க2]

தொண்டன் ஆகாவிட்டால் மோசம் வருமே - ஹரி
தொண்டருக்கு தொண்டன் ஆனால் ஹரி கருணை செய்வானே
காடு மலை ஏறத் தேவையில்லையே - மலையை
விரலால் தொட்ட ரெங்கனைத் துணை கொள்ளுங்கள் இங்கே (எ)

மத்திம் உஜி மத்திம் ஹொடி3 மத்திமூஸ்ஜாய் ஸெரிர்
ப4க்தி கிஸொதி கரொ
வடபத்ரஸாயி ஹொய்கிநு மொகொ
நடனக்ருஷ்ண தா3ஸ§ந் ஜொவளும் ஜெய் [க2]

மண்ணில் பிறந்து மண்ணில் வளர்ந்து மண்ணிலே போகும் உடல்
பக்தி எப்படியாவது செய்யுங்கள்
வடபத்ரசாயி ஆகி என்னை
நடனகிருஷ்ண தாசர்கள் உடன் கொண்டு சென்று (எ)

இந்தப் பாடலை டி.எம். சந்திரசேகர் குரலில் இங்கே கேட்கலாம்.

Thursday, August 04, 2011

எங்கெங்கும் என் கண்ணன்



கண்ணா கண்ணா என்றலைந்தேன்
கண்ணீராலே தினந் தொழுதேன்
கண்ணன் எங்கே என்றறியேன்
கண்ணால் காணும் வகையறியேன்

ஒரு நாள் கண்ணன் குழல் கேட்டேன்
குழல் வழியே அவன் குரல் கேட்டேன்
எங்கும் நானே இருக்கின்றேன்
ஏனோ கண்ணீர் எனச்சொன்னான்

காற்றாகி குழல் கலைக்கின்றான்
மழையாகி மனம் நனைக்கின்றான்
சேற்றிலும் அவனே இருக்கின்றான்
செந்தாம ரையாய் சிரிக்கின்றான்!

நேற்றாய் இன்றாய் நாளானான்
நாளும் பொழுதும் அவனானான்
கேட்கும் ஒலியில் இசையானான்
பார்க்கும் அனைத்தும் அவனானான்!

எங்கும் அவனாய் இருந்தாலும்
ஏக்கம் ஏனோ தீரவில்லை -

தொட்டுப் பிடித்து விளையாட
கட்டி யணைத்துக் கதை பேச
கணமும் என்னைப் பிரியாமல்
கண்ணுக்குள்ளே கண் பார்க்க...

எனக்கே எனக்காய் என்கண்ணன்
என்றன் முன்னே வருவானோ?
கனிவாய்க் கண்ணீர் துடைப்பானோ?
தணியா இன்பம் தருவானோ?


--கவிநயா

Monday, August 01, 2011

krs100: தோழி கோதை பிறந்தநாள்!

இன்று....

என் அந்தரங்கத் தோழியின் பிறந்தநாள்!
அந்த-ரங்கத் தோழியின் பிறந்தநாள்! (Aug-02, 2011)!
திரு ஆடிப் பூரத்துச் செகத்து உதித்தாள் வாழியே! Happy Birthday dee, Kothai! :)

உன்னோட கடைசிப் பாட்டு ரொம்ப தொல்லை குடுக்குதுடீ! வரவர தாங்க முடியல! நானும் உன்னைப் போலவே ஆயிருவேனோ-ன்னு பயமா இருக்கு! :(
இது கண்ணன் பாட்டிலே....KRS என்னும் சிறுவனின் 100வது இடுகையும் ஆகும்!
வாழ்விலே பல தருணங்கள், இவளை ஒட்டித் தான் எனக்கு அமைஞ்சிருக்கு!

* என் பிறந்த நாள் ஆகட்டும், வாழைப் பந்தல் கிராமத்துப் பள்ளிச் சேர்க்கை ஆகட்டும்,
* சென்னை திராவிடர் கழக வாசம் ஆகட்டும், TVS நிறுவன வேலை ஆகட்டும்,
* அமெரிக்காவில் ஆற்றிய சொற்பொழிவுகள் ஆகட்டும், பந்தல் பதிவுகள் ஆகட்டும்....
* இனியது கேட்கின் ஆகட்டும்....எட்டாம் வகுப்பில் இவளைப் போலவே பெண் வேடமிட்டு, பள்ளியில் ஆடிய நடனப் புகைப்படம் ஆகட்டும்

...........ஒவ்வொன்றிலும் கோதையின் சாயல் வீசாம இருக்கவே இருக்காதோ? :)

இவள் பிறந்த நாளை ஒட்டி, இவளின் மகுடமான கனவுப் பாட்டை, நனவுப் பாட்டாக....இதோ...கண்ணன் பாட்டிலே!


வாரணமாயிரம் = பல திரைப்படங்களில், பல்வேறு இசையமைப்பாளர்கள் கை வண்ணத்தில் வந்திருக்கு!
ஆனால் அத்தனைக்கும் மகுடமாக, இளையராஜாவின் இசையில்.....கேளடி கண்மணி படத்தில்.....ஜானகி பாடும் ஏக்கமான மெல்லிசை!

சிங்கார வேலனே தேவா போல்.....ஜானகிக்கு அமைந்து விட்ட மிகப் பெரும் நல்லூழ் (அதிருஷ்டம்) என்று தான் சொல்லணும்!
ஏன்-ன்னா வேற யாரும் இதைச் சினிமாவில் முழுக்கப் பாடலை! ஏக்கம் இழையோடும் குரலில் கேட்டுக்கிட்டே பதிவை வாசியுங்கள்!


ஹே ராம் படத்திலும், சிறு சிறு துணுக்குகளாக.....கோயில் அரையர்கள் ஓதும் நடையில் இந்த ஆண்டாள் பாட்டு! இதுவும் இளையராஜே இசையே! விபா சர்மா பாட, அரையர்கள் ஓதுவது!


நாட்டியப் பேரொளி பத்மினி நடனமாடுவது! - செந்தாமரை என்னும் படத்தில்!MSV இசையிலே, பி. லீலா பாடுகிறார்கள்!


** சுசீலாம்மாவும் இந்தப் பாட்டைப் பாடி இருக்காங்க! ஆனால் முதல் இரு வரிகள் மட்டுமே! அப்பறம் Track மாறீடும்! திருமால் பெருமை படத்தில்! இதோ!

** SPB, அதே கேளடி கண்மணியில் பாடுவது!

** வியப்பு என்ன-ன்னா மரபிசை-கர்நாடக இசையில், எவருமே இதை இதுவரை பாடாதது தான்! பிரபல கலைஞர்கள், இதைப் பாடிக் குறையைப் போக்கிக் கொள்ள வேண்டும்!

ஆண்டாள் கல்யாணத்துக்காக, ஷைலஜா அக்கா
பிரத்யேகமாக போட்டு அனுப்பிய, வண்ணக் கோலம் (தண்-மண்டலம்).

இவ்வளவு நாள், சூடிக் கொடுத்த மாலையை, அப்பா கிட்ட கொடுத்து, பெருமாளுக்குப் போட்டாள்! இன்று அவளே தன் கைப்பட, மாலை மாற்றப் போகிறாள்!

* பெரிய திருவடியான கருடன், எங்கள் மாப்பிள்ளையை, வாயு வேகத்தில் பறந்தடித்துக் கொண்டு வர...
* நிகழும் திருவள்ளுவராண்டு 2042 (கர வருடம்), ஆடித் திங்கள் (Aug-02-2011), பூர நட்சத்திரம் கூடிய நன்னாளிலே...

* மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத,
* அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ,
* ஆன்றோர்-சான்றோர்-ஆச்சார்யர்கள் மங்களாசாசனம் பாட
* ஆழ்வார்கள்-நாயன்மார்கள் நாலாயிரப் பாசுரங்களாலும், தேவாரப் பதிகங்களாலும் நல்லாசி கூற,

* மதுரை-வில்லிபுத்தூர், பட்டர் பிரானின் செல்ல மகள் = திருநிறை செல்வி. கோதைக்கும்
* திருநாட்டுத் தலைவன், அமலன் ஆதிப் பிரான் = திருநிறை செல்வன். அரங்கனுக்கும்
எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்குமாய், காதல் திருமணம் இனிதே நடக்கின்ற போழ்தினிலே,

* நீங்கள் எல்லாரும்... சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து,
* முத்துடை தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ் எழுந்தருளி,

* ஆண்டாள்-அரங்கன் இன்னுயிர் இணைகளை,
* பல்லாண்டு பல்லாண்டு என்னுமாறு,
* கண்ணாரக் கண்டு, கையாரத் தொழுது,
* தம்பதிகளை ஆசிர்வதித்து அருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

- இப்படிக்கு,
மாதவிப் பந்தல்: கோதையின் ஆருயிர்-நட்புச் சமூகம்.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்ட....
நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுத...
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகள்பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்ட...
நாற்றிசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்-தன்னை
காப்பு நாண் கட்ட...
கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்திச்
சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும்
அதிரப் புகுத...
(கெட்டி மேளம், கெட்டி மேளம்.....)
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்ற...
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக்
காய்சின மா-களிறு அன்னான் என் கைப்பற்றித்
தீவலம் செய்ய...
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதிக்க...
வரிசிலை வாள்முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கைவைத்து
பொரிமுகம் தட்ட...
குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம்செய்து மணநீர்
அங்கு அவனோடும் உடன்சென்று அங்கு, ஆனைமேல்
மஞ்சனம் ஆட்ட...
(ஆயனுக்காகத் தான் "கொண்ட மணாவினை")
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே!



வாரணமாயிரம் பாசுரத்தில், "கனாக் கண்டேன்" என்னும் சொற்களை எழுத எனக்கு மனசு வரலை!

அவள் வாழ்க்கை வெறும் கனவு-ன்னு நினைச்சிப் பார்க்கக் கூட முடியலை! அதான் "கனாக் கண்டேன்" என்ற சொற்களை எழுதாமல்.....
அப்படியே நிகழ்வாகவே எழுதி விட்டேன்! பாசுரத்தில் கைவைத்து விட்டேன்-ன்னு தவறாக எண்ண வேண்டாம்! அன்பர்கள் மன்னிக்க!

பாம்பணையில், உன் பிஞ்சுக் கால் விரல்கள் அழுத்தி,
பரபர என்று மேல் ஏறி, மால் ஏறி,
எங்கள் செல்வ மகள், தென்னரங்கச் செல்வனைச் சேர்ந்தாள்! சேர்ந்தாள்!



வாரணமாயிரம் சூழ வலஞ் செய்து
ஏரக முருகன் ஏகின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் ஏந்திப் புறமெங்கும்
தோரணம் நாட்ட...


மத்தளம் கொட்ட, நாதசுரம் நின்றூத
முத்துடை தாமம், மாதவிப் பந்தல்கீழ்
மைத்துனன் முருகன், திருத்தாலி கட்டியெனைக்
கைத்தலம் பற்ற...


இன்னைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
என்னை உடையவன், எழில்முருகத் திருநம்பி
முன்னை என் கால்பற்றி, முன்றில் அம்மியின் மேல்
பொன்மெட்டி பூட்ட...

அவனுக்கே என்னை விதிக்கிற்றியே! - நாங்கடவா வண்ணமே நல்கு!!

Saturday, July 30, 2011

வீரராகவர் விரதம் - 2


மிக வேகமாக ஓட்டி வந்த தேரை தாருகன் சரியாக மகாராணி சத்தியபாமாவின் மாளிகைக்கு எதிரில் லாவகமாக நிறுத்தினார். சற்று தொலைவில் இருக்கும்போதே தேர்ப் புரவிகள் எழுப்பிய சத்தத்தைக் கேட்டு துவாரகாதீசன் வந்துவிட்டார் என்பதை அறிந்த ருக்மிணி பிராட்டியும் பாமா தேவியும் வாசலை நோக்கி விரைந்தனர். திடீரென அதே நேரத்தில், துவாரகா நகரத்தையே உலுக்கிவிடும் அளவிற்கு  "கிருஷ்ணாஆஆஆஆஆ...கிருஷ்ணாவோஓஓஓஓஓ..." என்ற பேரலறல் கேட்டது. அவ்வளவு தான். அந்த நீலமேக கருணைக் கடல் தேரை விட்டு வேகமாகக் கீழே குதிக்கிறார் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் போதே தரையில் கால் பதிக்காமலேயே புவி ஈர்ப்பு விசையை மீறி விண்ணில் தாவினார். திடீரென தன் எஜமானன் விண்ணில் பறப்பதை அறிந்த கருடன் ஆச்சர்யமும் வெட்கமும் அடைந்து, ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு தன் பெரிய சிறகுகளை விரித்துக் கொண்டு அவசரமாக அவரைப் பின் தொடர்ந்தது.
மேற்படி காட்சியை ருக்மிணி பிராட்டி மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். பாமாவின் கண்களிலோ கண்ணீர்.

"நாராயண ! நாராயண ! " என்றபடியே அவர்களிருந்த இடம் நோக்கி திரிலோக சஞ்சாரியான நாரதர் வந்தார்.

"வாருங்கள் நாரதரே !" என்று அவரை பட்ட மகிஷிகள் இருவரும் வரவேற்றனர்.

"மிக அவசர காரியம் போலிருக்கிறது ! " என்றார் நாரதர்.

"ஆம். கருடனால் கூட இன்று அவர் அவசரத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை." என்றார் ருக்மிணி பிராட்டி.

"பட்ட மகிஷிகளைக் கூட பொருட்படுத்தாமல் பகவான் தனியாகச் செல்கிறார் என்றால் யாரோ உயர்ந்த பக்தராக இருக்க வேண்டும்." என்றார் நாரதர்.

"துவரகாதீசர் என்னைப் பொருட்படுத்தாவிடினும் பரவாயில்லை. ருக்மிணி அக்காவையாவது அழைத்துச் சென்றிருக்கலாமே." என்றார் பாமா. இந்த வார்த்தைகளைச் சொல்லும் பொழுதே அவர் குரல் தழுதழுக்க ஆரம்பித்திருந்தது.

"இது என்ன அம்மா ! நீங்கள் பேசுவதைப் பார்த்தால் அந்த நீலமேக ஷ்யாமளன் தங்களை அழைத்துச் செல்வேன் என்று சொல்லிவிட்டு ஏமாற்றி விட்டார் என்பது போலிருக்கிறதே ! " என்றார் நாரதர்.

"நாரதரே ! இது துவாரகா என்பது நினைவிருக்கட்டும். உங்கள் வேலையை இங்கே காண்பிக்க வேண்டாம். எச்சரிக்கை !" என்றார் ருக்மிணி பிராட்டி.

"நாரதரை கடிந்து என்ன பிரயோஜனம் அக்கா ! அவர் உண்மையைத் தானே சொல்கிறார் !" என்றார் பாமா.

"ஆஹா ! நான் ஏனம்மா இங்கு வந்து கலகம் செய்யப் போகிறேன்.  அடடா ! இந்த அபாண்டமான குற்றச்சாட்டை விசாரிக்க இப்பொழுது எனது நாதன், கோவிந்தன், மாதவன், மதுசூதனன், உத்தமன், சத்யசந்தன், தீனதயாளன், பரம காருண்யன் இங்கில்லாமல் போய்விட்டானே. இருக்கட்டும். ஆனால் ஒன்று மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரியும்." என்று சொல்லிய நாரதர் சற்று நிதானித்து,
"ராதாவின் தங்கம் யாருக்கும் வாக்கு கொடுத்து ஏமாற்றியதாக எந்த யுகத்திலும், எந்த கல்பத்திலும் இல்லை. நாராயண ! நாரயண ! " என்றார் நாரதர்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட பாமா தேவி, "ஒரு பேச்சிற்கு கூட 'பாமாவின் தங்கம்' என்று சொல்லக் கூடாதா...." என்று அங்கலாய்த்தார்.

"நாராயணா ! நாராயணா ! இன்று நான் என்ன பேசினாலும் விவகாரம் ஆகிவிடும் போலிருக்கிறதே." என்றார் நாரதர்.
"சற்று நன்றாக யோசித்து பாருங்கள் அம்மா ! தங்கள் மாளிகையில் தங்கத்திற்கு மதிப்புத் தான் உண்டா? துவாரகாதீசன் எடைக்கு எடை தங்க ஆபரணங்கள் வைக்க உங்களைத் தவிர எவரேனும் யோசிக்கக் கூட முடியுமா ? " என்று நாரதர் சொல்லும் பொழுதே ருக்மிணி பிராட்டியின் கண்களில் கோபத்திற்கான அறிகுறி தென்பட்டது.
"அதாவது அம்மா...பாமா தேவியின் மாளிகையில் தங்கம் மிகச் சாதாரணமான ஒரு பொருள். பிருந்தாவன ஜனங்கள் எல்லாம் தங்கள் உயிராகக் கொண்டாடுபவரை 'பாமாவின் தங்கம்' என்று சொன்னால், அவரை எல்லோரையும் போல சாதாரணமானவர் என்று குறிப்பது போல் ஆகிவிடுமே...என்று தான்...சொல்ல வந்தேன்..." என்று சர்ச்சைக்குரிய ஒரு நீண்ட விளக்கத்தை நாரதர் அளித்தார்.

"நாரதரே, அன்புற்றவரை பிரிவுறும் நோய்...அதனை நீர் அறியீர். நாம் எவர் மேல் அதிகப் பிரேமை வைத்திருக்கிறோமோ அவரால் உதாசீனப்படுத்தப்பட்டால் அடையும் வேதனை...அதனையும் நீர் அறியீர்...உமக்கு எல்லாமே வேடிக்கை தான். விஷயத்தை தெளிவாக அறிந்து கொண்டு அமைதியாக இரும்." என்று ருக்மிணி பிராட்டி ஆணையிட்டார்.

"நாரயணா ! நாரயணா ! யாரையும் புண்படுத்தும் எண்ணமில்லை அம்மா ! விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ள எனக்கும் ஆவலாகத் தான் இருக்கிறது."

"துவரகாதீசர் இன்று இரவு தனக்கு மிகவும் பிரியமான ஒரு உயர்ந்த பக்தனுக்கு தரிசனம் தர வேண்டும் என்று முன்னரே பாமாவிடம் சொல்லி இருந்தார். ஆனால் யார் அந்த பக்தர் என்று யாருக்கும் தெரியாது. சற்று முன்னர் கூட பக்தனுக்கு தரிசனம் தர வேண்டும் என்று சொல்லி பாமாவை தயாராக இருக்கச் சொல்லி ஆள் அனுப்பினார். யாராக இருக்கும் என்று நானும் பாமாவும் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் அவர் இங்கு வந்ததும் தெரியவில்லை. மாயமாய் மறைந்ததும் புரியவில்லை. மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த பாமா ஏமாற்றம் அடைந்துள்ளாள்." என்று ருக்மிணி பிராட்டி விஷயங்கள் நடந்த சூழ்நிலையை விவரித்தார்.

"இப்பொழுது நன்றாக புரிகிறது அம்மா ! பாமா தேவியின் கட்சியில் அடியேனும் உள்ளேன் என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். துவாரகாதீசன் அடியேனையும் இதே காரணம் பற்றி இங்கு வரச் சொல்லியிருந்தார். அடியேனுக்கும் பெருத்த ஏமாற்றம் தான். வெளியில் சொல்லிக் கொள்ளவில்லை. அவ்வளவு தான். ஆனால் ஜனார்த்தனர் எதைச் செய்தாலும் அதில் ஒரு பொருள் இருக்கும் என்று அமைதியாக இருக்கிறேன். நாராயணா ! " என்றார் நாரதர்.

"ஆமாம் பாமா. 'கிருஷ்ணாவோ' என்ற அந்த அபயக் குரல் என் காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எந்த உயிர்க்கு தாங்க முடியாத துன்பமோ ? ஜனார்த்தனர் எப்பொழுதும் உயிர்களுக்கு அபயம் அளிப்பதிலேயே கண்ணாக இருப்பார் என்பது நீ அறியாததா? " என்று பாமா தேவையை ருக்மிணி பிராட்டி தேற்றினார்.

"ஆனால் பட்டமகிஷி பாமாதேவியின் பேரில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் வைத்திருக்கும் அன்பினை யாரும் குறைவாக எடைபோட வேண்டாம் என்று விண்ணப்பித்துக் கொள்கிறேன்..." என்றபடியே நாரதர் பாமா தேவியின் பக்கம் திரும்பினார்.

"உங்களுக்காக அன்றோ யதுகுலதிலகம் பாரிஜாத மரத்தை இந்திரலோகத்தில் இருந்து துவரகாவிற்கு கொணர்ந்தார்...அந்தப் பரந்தாமன், சர்வேஸ்வரன், புருஷோத்தமன், பகவான் வாசுதேவன், உங்கள் ஒரு வார்த்தைக்கு மதிப்பளித்து, தவறு தவறு, உங்கள் கள்ளம் கபடமில்லா அன்பிற்கு கட்டுப்பட்டு ஒரு தராசு தட்டில் அமர்ந்து தன்னை எடைபோடும்படி தாழ்த்திக் கொண்டானே ! ஆனால் இன்று ஏதோ மிக அவசரமான காரியம் தான் என்று நினைக்கிறேன். இல்லையேல் அந்தக் கருணை மாமுகில் நிச்சயம் தங்களை உதாசீனப்படித்தி விட்டுத் தனியே சென்று இருக்க மாட்டார்." என்றார் நாரதர்.

"நாரதரே ! ஒரே சமயத்தில் அமிழ்தமும் விஷமும் கலந்த வார்த்தைகளைச் சொல்கிறீர் " என்றார் பாமா.

"ஆஹா ! இதே வார்த்தைகளை ஒரு சமயம் சீதாதேவியும் உரைத்ததாகக் கேள்வி." என்றார் நாரதர்."

"அது எப்பொழுது நாரதரே ? " என்று ருக்மிணி பிராட்டி வினவினார்.

"ராமன் தன்னைப் பிரிந்து சொல்ல முடியாத துயரத்தில் காட்டில் பித்துப் பிடித்தவன் போல அலைகிறான் என்று அசோக வனத்தில் சீதாப் பிராட்டியிடம் அனுமன் சொல்லியபொழுது..." என்று நாரதர் சொல்லி முடிப்பதற்குள் பாமாதேவி மூர்ச்சையாகி இருந்தார். நல்ல வேளையாக கீழே விழ இருந்தவரை ருக்மிணி பிராட்டி பிடித்துவிட்டார்.

"ஆஹா ! சீதை, அசோக வனம் என்று கேட்டாலே இவள் மூர்ச்சையாகி விடுவாள். தாங்கள் வந்த காரியம் ஆனதா நாரதரே ? " என்று ருக்மிணி பிராட்டி கேட்கவும், நாரதர், " இன்று நான் எதை செய்தாலும் எல்லோரும் தவறாக நினைக்கிறார்கள் அம்மா. இன்னொரு நாள் வருகிறேன். விடை கொடுங்கள். ஆனால் ஒரு விஷயம் மட்டும் இன்று அறிந்து கொண்டேன்..."

"நீங்கள் அறிந்து கொண்டதை இன்னொரு சமயம் வந்து சொல்லவும். இப்பொழுது நான் பாமாவை கவனிக்க வேண்டும்.  இப்பொழுது விடை பெறுகிறீரா ?" என்று விரட்டாத குறையாக நாரதரை ருக்மிணி பிராட்டி அனுப்பி வைத்தார்.

*****************************************************************************

"இரவெலாம் கண்ணில் நீரருவி பெருகும்" என்று சென்ற பதிவில் இடம்பெற்ற மீராப் பாடலைப் பற்றி நாரதருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அந்தப் பாடல் ஆழ்வார் திருமகள் ஆண்டாள், சத்யபாமா பாவனையில் பாடியுள்ள, "என்பு உருகி இனவேல் நெடுங்கண்கள் இமைப் பொருந்தா பல நாளும்..."  என்ற நாச்சியார் திருமொழி பாசுரத்தை நினைவுபடுத்துகிறது என்றேன். அப்பொழுது தான் நாரதர் தனக்கு ஒரு முறை துவாரகாவில் பாமாதேவியின் தூய அன்பினை அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் அமைந்தது என்று சொல்லி மேற்படி நிகழ்ச்சிகளை விவரித்தார். மேலும் அன்று தான் ருக்மிணி பிராட்டியிடம் சரியாக விடை பெற்று கொள்ள முடியவில்லை என்றும், அவரைப் பார்த்து சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகத் தான் திருவல்லிக்கேணி வந்ததாகவும் உரைத்தார். [இதன் பின்னர் டீக்கடையில் நடந்த உரையாடல் இந்தப் பதிவில் இல்லை.]

நாரதர் விளக்கிய மேற்படி துவாரகா நிகழ்ச்சியில் ஜனார்த்தனர் எங்கே சென்றார் என்ற கேள்விக்கு விடையாக இந்த சூர்தாஸ் பஜன் அமைந்துள்ளது. இதுவும் இரவின் அமைதியில் கேட்க வேண்டிய இன்னொரு அற்புதமானப் பாடல்.


ஆனையின் துயர் தீர்த்த அம்மான் தன்னையும் காக்க வேண்டும் என்று சூரதாசர் பிரார்த்திக்கிறார். பாடலை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

[பாடல்]
ஹே கோவிந்த ! ஹே கோபால ! ஹே கோவிந்த
ராகோ சரண அப்தோ ஜீவனஹாரே

நீர பிவன ஹேது கயோ சிந்து கேகி நாரே
சிந்து பீச்ச பஸத க்ராஹ சரணதரி பசாரே

சார ப்ரஹர யுத்த பயோ லேகயோ மஜ்தாரே
நாகே கானதுப் ந லாகே க்ருஷ்ண கோ புகாரே

த்வாரகா மே ஷபத கயோ ஷோர பயோ த்வாரே
சங்க சக்ர கதா பதும கருடல சிதாரே
சூர கஹே ஷ்யாம சுனோ ஷரணஹே திஹாரே
அபகி பார பார் கரோ நந்த கே துலாரே

[பொருள்]
ஹே கோவிந்தா ! ஹே கோபாலா ! என் வாழ்வின் இறுதிக்கட்டம் வந்துவிட்டது. அபயமளிப்பாய் ! ஷ்யாமா!  நான் சொல்வதைக் கேட்பாய். அன்றொருநாள் தன் நீர் வேட்கையைத் தணிக்க வேழமொன்று சிந்துவில் இறங்கியது. அப்போது அங்கு வாழ்ந்து வந்த முதலை ஒன்று அந்த வேழத்தின் காலைக் கவ்வியது. பல காலம் அந்த முதலையிடம் போராடி சோர்வுற்ற அந்த வேழம், தன் இறுதி நெருங்கிவிட்டதை எண்ணி "கிருஷ்ணா" என்று அலறியது. அந்த அபயக்குரல் துவாரகாவில் ஏற்படுத்திய அதிர்வு அடங்குமுன், நீ சங்கு சக்ர கதாதாரியாய் கருடாரூடனாய் அவ்விடம் சென்று அந்த யானைக்கு நற்கதி அளித்தாயே ! அவ்வாறே நானும் உன்னை சரணடைந்து விட்டேன். நந்தனின் செல்லமே ! காலம் தாழ்த்தாமல் என்னையும் கரை சேர்ப்பாய்.



Sunday, July 24, 2011

வீரராகவர் விரதம் - 1



 சென்ற ஞாயிற்றுக்கிழமை திருவல்லிக்கேணியில் நாரதரைச் சந்திக்க நேர்ந்தது. நாரதர் என்றால் யாரோ எனக்கு மட்டும் தெரிந்தவர் என்று எண்ணிவிட வேண்டாம். நம் அனைவருக்கும் நன்றாகத் தெரிந்தவர், தேவரிஷி நாரதர் தான். இடையில் வீணையுடன் (திரைப்படங்களில் தம்புராவுடன்) "நாராயணா ! நாராயணா !" என்று உச்சரித்துக் கொண்டே அலையும் பாகவத உத்தமரே தான். அதிர்ச்சியோ ஆச்சர்யமோ அடையாமல் நம்பிக்கையுடன் மேற்கொண்டு படிக்கவும்.

அல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வேதவல்லி தாயார் சன்னிதிக்கு எதிரே ஒரு சிறு மண்டபம் இருக்கும். புளியோதரை, சக்கரைப் பொங்கல், அதிரசம், அப்பம் என்று எதை வாங்கினாலும், இங்கே வந்து அமர்ந்து சாப்பிடுவது சிலர் வழக்கம். அம்மாதிரி நானும் அன்று இரவு அங்கு அமர்ந்துக் கொண்டு, தட்டை(வடை) சாப்பிட்டுக் கொண்டே மனதில் கண்ணனைப் பலவாறாகத் திட்டி தீர்த்துக் கொண்டிருந்தேன். பல விதமான எண்ணங்கள். கவலை மேல் கவலைகள். மனித பிறவியே ஒரு வீணான பிறவி என்று தோன்றிற்று. திடீரென எல்லாவற்றுக்கும் காரணம் நாம் நிறைய படித்தது தான் என்று தோன்றியது. அதனால் அன்றோ இந்தக் கணினித் துறையில் சிக்கிக் கொண்டு எதற்கும் ஒழுங்கான நேரம் கிடைக்காமல் அல்லாடுகிறோம் என்று தோன்றியது. வேலையை விட்டு விட்டு விட்டலனே கதி என்று கிடக்கும் அளவிற்கு உள்ளத் துணிவும் இல்லை. ஏன் நிறைய படித்தோம் என்று தீவிரமாகச் சிந்தனை செய்து கொண்டிருந்தேன்.
திடீரென எல்லாவற்றிற்கும் மூலக் காரணம் தெய்வம் தான் என்று மனம் அடித்துச் சொல்லியது. நம்மை இவ்வளவு பாடு படுத்துவது கண்ணன் என்றால் அவனையே திட்டுவோம் என்று முடிவு செய்து தான் பலவாறு திட்டிக் கொண்டிருந்தேன். "என்னைப் பற்றி உனக்குக் கொஞ்சமாவது அக்கறை இருக்கிறதா? இப்படியே வாழ்நாள் எல்லாம் கணினி முன்பு உட்கார்ந்து கொண்டு இருக்கிறேனே, நல்ல சங்கீதம் கேட்க நேரம் கிடைக்கிறதா? நல்ல புத்தகங்கள் படிக்க முடிகிறதா? அல்லது நண்பர்களுடன் நேரம் செலவழிக்க முடிகிறதா? ஒரு காலத்தில் தினமும் உன் வீட்டு சக்கரைப் பொங்கல் உண்டு மகிழ்ந்தேனே, இப்பொழுது வாரம் ஒரு முறை பொங்கல் கிடைப்பதே அரும்பாடாய் இருக்கிறதே ! உன் மனைவி ருக்மிணி பிராட்டிக்கும் என் மேல் அக்கறை இல்லை. ராமனுக்கும் இல்லை. சீதைக்கும் இல்லை. அரங்கனுக்கும் இல்லை. யாருக்கும் இல்லை. எல்லோரும் மாலை வாங்கி வந்தால் மட்டும் சந்தோஷமாக வாங்கி சாற்றிக் கொள்கிறீர்கள். வெறும் கையுடன் வந்தால் பட்டர் மூலமாக, 'மாலை ஒன்றும் இல்லையா?' என்று கேள்வி மட்டும் கேட்கிறீர்கள் !" என்று பலவாறாக எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன்.  

தாயார் சன்னிதியில் மேல் மாடங்களில் அமைதியாக அமர்ந்திருந்த புறாக்கள் மனதில் வேறு புதுச் சிந்தனைகளைத் தோற்றுவித்தன. அவற்றின் கரு அடுத்தப் பிறவியில் என்ன உயிரினமாகப் பிறக்கலாம் என்பதே. இவ்வாறு தீவிர சிந்தனை செய்து கொண்டிருக்கும் பொழுது தான், த்ரிலோக சஞ்சாரியான நாரதர் என் முன்னர் பிரசன்னமானார். ஆயிரம் கோடி சூர்யப் பிரகாசம் என்பார்களே, அது இப்படித் தான் இருக்குமோ என்று எண்ணும் அளவிலான ஒரு தெய்விக ஒளிவட்டத்திற்குள் தேவரிஷி நாரதர் திவ்ய தரிசனம் தந்தார். "நாராயண நாராயண ! கண்ணனின் நண்ப ! கவலைகள் மறப்பாய் ! " என்ற சொற்கள் என் காதுகளில் ஒலித்தன. காண்பது கனவா இல்லை நனவா என்று தலைகால் புரியாமல், பேச்சு ஒன்றும் வராமல் திக்கித் திணறி "ஹலோ நாரதரே !" என்ற வார்த்தைகள் என் நாவில் இருந்து வெளிப்பட்டு என்னை ஆச்சர்யப்படுத்தின. "அடச்சே! இதென்ன ! இரு கை கூப்பி நாரதருக்கு நமஸ்காரம் அல்லது வணக்கம் என்று சொல்லாமல் இவ்வாறாக மரியாதை இல்லாமல் பேசினோமே !" என்று உள்மனம் கடிந்துக் கொண்டது. நாரதர் ஏன் அப்பொழுது வந்தார், அவருடன் நடந்த உரையாடல் பற்றி எல்லாம் இந்தப் பதிவிலேயே சொல்லிவிட முடியாது. ஆரம்பத்தில் நடந்தவற்றை மட்டும் சொல்கிறேன்.

என் உள்மனம் நினைத்ததை எப்படியோ அறிந்த நாரதர், "ராதா ! நீ கண்ணனிடம் மாறாத நட்புரிமை கொண்டுள்ளதால் அதன் தாக்கம் அவனைச் சேர்ந்தவர்களிடமும் வெளிப்படுகிறது. நட்பில் மரியாதை பார்க்க வேண்டாம். என்னையும் உனது நண்பராகப்   பாவிக்கலாம்." என்று செவிக்கும் மனதிற்கும் இனிமை தரும் வார்த்தைகளைப் பேசினார்.

"ஆஹா ! உங்களைக் கண்டதில் என் உள்ளத்தில் புதுத் தெம்பு ஏற்ப்பட்டுள்ளது. என் கவலைகள் எல்லாம் பறந்துவிட்டன ! " என்று உற்சாகத்துடன் பேசினேன்.

"நாராயண ! நாரயண ! இது தான் கலி காலம் என்பதோ? உனக்கே கவலை வந்திருக்கிறதே ! " என்றார் நாரதர். "உன்னை இவ்வளவு தீவிரமாகச் சிந்திக்கும்படி செய்த விஷயம் தான் என்ன ராதா ? என்னிடம் சொன்னால் தக்க உபாயம் சொல்வேன்", என்றார் நாரதர்.

நாரதர் இவ்வாறு கேட்டவுடன் எனக்கு என்ன பதில் உரைப்பது என்று தெரியவில்லை. நண்பர் என்று சொல்லிவிட்ட போதிலும், சற்று முன்னர் எல்லோரையும் குறை சொல்லிக் கொண்டிருந்தக் கதையை எல்லாம் கேட்டால் என்ன நினைப்பாரோ என்று தோன்றியது.  நமக்கு பக்தி குறைவு தான். நல்ல மன நிலையில் இருந்தால் எல்லோரையும் போற்றுவோம். இல்லையேல் வசைபாடுவோம். ஆனால் இதை எல்லாம் நாரதரிடம் சொல்லிக் கொள்ளத் தேவையில்லை என்று தோன்றியது.

திடீரென, சற்று முன்னர் இருந்த எனது கவலைகள் எல்லாம் எனக்கே மிகவும் அற்பமாகத் தோன்றின. "அது ஒன்றும் பெரிய விஷயம் எல்லாம் இல்லை நாரதரே ! கண்ணன் பாடலில் இரண்டு உருக்கமானப் பாடல்கள் பதிவு செய்யலாம் என்று எண்ணம். ரொம்ப நாள் கழித்து பதிவு எழுதப் போகிறேன். எப்படிப் பதிவிடுவது என்று சிந்தனை செய்து கொண்டிருந்தேன்" என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஒரு கதையைத் திரித்தேன்.
த்ரிகால ஞானியான நாரதர், நான் என்ன நினைத்துக் கொண்டிருந்தேன் என்பதை அறியாதவரா? ஆனாலும் பெரியோர் என்றும் பெரியோரே ! பாகவதர்களில் சிறந்தவர், நற்குண நாரதர், என்னை சங்கடத்தில் ஆழ்த்தாமல், என் கதையை உண்மையாக்கி அவை என்ன பாடல்கள் என்று கேட்க, உரையாடல் மேலும் வளர்ந்தது. அவருடன் பேசியதில் துவாரகாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்று ஒரு பாடலுடன் சம்பந்தம் பெற்றிருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். இரண்டில், "பக்த மீரா" படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை முதலில் இடுவது என்றும், நாரதர் எனக்கு சொன்ன சில தகவல்களுடன் இரண்டாம் பாடலை பதிவு செய்வது என்றும் நிச்சயம் செய்தேன். அதன்படி, மீரா படப்பாடல் வரிகளைக் கீழே பார்க்கலாம். இரவின் அல்லது பின்னிரவின் அமைதியான நேரத்தில் கேட்க வேண்டிய அற்புதமான பாடல்.

எம்.எஸ் அம்மாவின் அற்புதமான குரலில் அமைந்துள்ள இந்தப் பாடலை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


சராசரம் உன்னை யாவும் தேடுமே...
மறைகளும் மகிழ்ந்து உன்னைப் பாடுமே....ஹே ப்ரபோ !
நிராசையால் நைந்த என் நெஞ்சமும்
பராவும் உன் பாதாரவிந்தமே !
உன்னையே எனதுயிர் துணை என்று
உவந்ததென் தவறோ ஐயா !
கனவிலும் உன்னை அன்றி நினைவுண்டோ
கதி உன் கழலின் நிழலே அன்றோ !
வானகம் வையகம் தரும் இன்பங்களைக்
கருதியதும் உண்டா?
இரங்குவதறிந்திலையா ? மறந்திடலாகாதையா !

இரவெலாம் கண்ணில் நீர் அருவி பெருகும் !
அனலில் மெழுகென அகமும் உருகும் !
"ஹரி ஹரீ" என நாவும் கதறும் !
இதயமும் பதறும் ஐயா !

பாத மலரில் படிந்திடும் வண்டாய்
நாதனே உன் இசை பாடுவேன் கண்டாய் !
அடியாள் மீரா அன்றும் இன்றும் உன்
அடைக்கலம் ஐயா !

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP