Sunday, December 27, 2009

7.கண்ணன் 'அம்மா' என்றழைத்தல்.



வழ்ந்து தொடங்கிய தங்கப் பகல்மேல்
கவிழ்ந்து மறைத்தது கொண்டல். - அவிழ்ந்த
சுருள்நுரையாய்ப் புட்கள் சுழலாய்ப் பறக்க
வருகின்ற தந்ததிரு நாள்.

கோவினங்கள் காடுதேடி கூட்டமாய்ப் போயின;
பாவினங்கள் கோயிலில் பாடுவர். - ஆவினங்கள்
கட்டியக் கூரைத் தொழுவத்தில் மேய்ந்திடத்
தொட்டிலில் கண்ணன் எழுச்சி.

பக்கம்போய்த் தட்டிக் கொடுத்துப் பாலூட்டிப்
பார்த்துக் கவனமாய் நீராட்டிப் - பாலன்னம்
சோறிட்டுத் தாலாட்டிச் சொக்கி உறங்குமுன்
கூறினான் காதினில் "மா!"

குழல்நாதம் கொஞ்சம் குறுவீணை கொஞ்சம்
கழலுரசல் சேர்த்துக் கனித்தேன், - பழரசம்,

செஞ்சாந்து, யாழிசை, சேரும் அலையோசை
மஞ்சள் குளிரை மயனென்பான் - மிஞ்சியச்

செங்கரும்புச் சாற்றில் சிறுசிறு செம்பருத்தித்
தங்கக் குழம்பைத் தளிர்வாழை - எங்கும்

ஏந்திப் பனிக்கட்டிப் பாறைகள் ஊறிட,
காந்தி ஜொலிக்கும் குயில்மொழி - நீந்தி

எடுத்ததோர் முத்து எலுமிச்சை கோர்த்துத்
தொடுத்ததாம் கண்ணன் குரல்.

***

Image Courtesy :: http://www.netglimse.com/images/events/janmashtami/krishna_bakasura.jpg

5 comments :

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கோவினங்கள் காடுதேடி கூட்டமாய்ப் போயின;//

கீழ் வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு

//பாவினங்கள் கோயிலில் பாடுவர்//

புள்ளரையன் கோயிலில் வெள்ளி விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ?

அப்படியே திருப்பாவை வரிகள் போலவே இருக்கு வசந்த்! எதுக்கு என் தோழி கிட்ட இருந்து காப்பி அடிச்சீங்க? :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//செங்கரும்புச் சாற்றில் சிறுசிறு செம்பருத்தித்
தங்கக் குழம்பைத் தளிர்வாழை - எங்கும்
ஏந்திப் பனிக்கட்டிப் பாறைகள் ஊறிட//

You mean cocktail? on the rocks?? :)

//எடுத்ததோர் முத்து எலுமிச்சை கோர்த்துத்
தொடுத்ததாம் கண்ணன் குரல்//

கண்ணன் குரலுக்கு இப்படி ஒரு கிக்-கா? :)

குமரன் (Kumaran) said...

நல்ல கற்பனை வளம் உங்களுக்கு. பொருத்தமான சொற்களைப் பூட்டி கண்ணன் குரலை கேட்கும்படி செய்கிறீர்கள்.

Radha said...

//கோவினங்கள் காடுதேடி கூட்டமாய்ப் போயின;
பாவினங்கள் கோயிலில் பாடுவர். - ஆவினங்கள்
கட்டியக் கூரைத் தொழுவத்தில் மேய்ந்திடத்
தொட்டிலில் கண்ணன் எழுச்சி.//
Reminds me of Thiruppaavai. :)

ஷைலஜா said...

//
கோவினங்கள் காடுதேடி கூட்டமாய்ப் போயின;
பாவினங்கள் கோயிலில் பாடுவர். - ஆவினங்கள்
கட்டியக் கூரைத் தொழுவத்தில் மேய்ந்திடத்
தொட்டிலில் கண்ணன் எழுச்சி//////

இந்த வரிகளுக்கே மன்னனாயிருந்தால் பொன்முடிப்புதந்துருப்பேன் அருமை வசந்த்.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP