தீனன் எனைப் போல் வேறெவர் கண்டாய்?

ஸ்ரீநிவாச திருவேங்கடமுடையாய்!
ஜெய கோவிந்த முகுந்தா அனந்தா!
தீன சரண்யன் எனும் பெயர் கொண்டாய்!
தீனன் எனைப் போல் வேறெவர் கண்டாய்?
(ஸ்ரீநிவாச)

ஜகம் புகழும் ஏழுமலை மாயவனே!
திருமகள் அலர்மேல் மங்கை மணாளனே!
ஜகன்னாதா சங்க சக்ர தரனே!
திருவடிக்கு அபயம் அபயம் ஐயா!
(ஸ்ரீநிவாச)

இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இராகம்: ஹம்ஸானந்தி
தாளம்: ஆதி
பாடியவர்: எஸ்.பி.இராம்
பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்.
இந்தப் பாடலை எம்.எஸ். பாடித் தான் முதலில் கேட்டேன். அதைத் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை.