Saturday, January 28, 2012

என் கண்ணனைக் கண்டாயா?


மண்ணே மரமே செடியே கொடியே
கண்ணனைக் கண்டாயா - என்
கண்ணனைக் கண்டாயா?

கண்ணனைக் கண்ட காரணத்தாலே
சமைந்து நின்றாயா – நீ
சமாதி கொண்டாயா?

புல்லே பூவே புதரே என்றன்
கண்ணனைக் கண்டாயா – என்
கள்வனைக் கண்டாயா?

கள்வனைக் கண்ட காரணத்தால்
மெய்சிலிர்த்துக் கொண்டாயா – புளகம்
அரும்ப நின்றாயா?

மலையே மடுவே குன்றே குடிலே
கண்ணனைக் கண்டாயா – என்
மன்னனைக் கண்டாயா?

மன்னனைக் கண்ட காரணத்தாலே
மலைத்து நின்றாயா – நீயும்
சிலையாய் ஆனாயா?

மழையே வெயிலே பனியே என்றன்
கண்ணனைக் கண்டாயா – அவன்
கனிமுகங் கண்டாயா?

கனிமுகங் கண்ட காரணத்தாலே
பனியெனக் கரைந்தாயா – உன்
மனதினை இழந்தாயா?

மயிலே குயிலே கிளியே வளியே
கண்ணனைக் கண்டாயா – என்
கண்ணனைக் கண்டாயா?

கண்ணனைக் கண்ட காரணத்தாலே
மயக்கம் கொண்டாயா – உன்னை
மறந்து நின்றாயா?

இன்னும் ஒருமுறை கண்ணனைக் கண்டால்
கொஞ்சம் இரக்கம் கொள்ளுங்கள் - உடனே
என்னிடம் சொல்லுங்கள்

கண்ணில் நீருடன் காத்திருக்கேனென
அவனிடம் சொல்லுங்கள்!


--கவிநயா

8 comments :

Lalitha Mittal said...

வானத்துநிலவே !நட்சத்திரமே!

மாயனைக்கண்டாயா?ராதை

நேயனைக் கண்டாயா?


"நான் இவன் கண்ணொளிமுன்

மின்மினியோ?"என்று நாணி

முகிலுக்குள் மறைந்தாயா?

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

Kavinaya said...

வாங்க லலிதாம்மா. உங்க வரிகள் ரொம்ப அழகா இருக்கு :)

Kavinaya said...

//அருமையான கவிதை.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.//

மிகவும் நன்றி ஐயா.

In Love With Krishna said...

//
இன்னும் ஒருமுறை கண்ணனைக் கண்டால்
கொஞ்சம் இரக்கம் கொள்ளுங்கள் - உடனே
என்னிடம் சொல்லுங்கள்

கண்ணில் நீருடன் காத்திருக்கேனென
அவனிடம் சொல்லுங்கள்!//

So Beautiful!! <3
Thanku for posting this!!
Even nature is so cruel at times.
Everything u see reminds u of Him!! :((

Kavinaya said...

Thank you ILWK. Glad you liked it.

//Even nature is so cruel at times.
Everything u see reminds u of Him!! :((//

so true! :(

Sankar said...

Kavinaya akka: chance e illa.. :)

//இன்னும் ஒருமுறை கண்ணனைக் கண்டால்
கொஞ்சம் இரக்கம் கொள்ளுங்கள் - உடனே
என்னிடம் சொல்லுங்கள்

கண்ணில் நீருடன் காத்திருக்கேனென
அவனிடம் சொல்லுங்கள்..//

அவங்க எல்லாரும் சொன்ன உடனே என்னிடமும் சொல்லுங்கள்.. :)

Kavinaya said...

//அவங்க எல்லாரும் சொன்ன உடனே என்னிடமும் சொல்லுங்கள்.. :)//

அது சரி :) அவசியம் சொல்றேன்!

//Kavinaya akka: chance e illa.. :)//

நன்றி சங்கர்.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP