கோகுல கிருஷ்ணா
மார்கழி மாதமாவது கிருஷ்ணன் ஞாபகம் வரணும்ல? ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து...நலந்தானே?
என்ன உன் லீலையோ?
பால் வெண்ணைய் செய்யும் கோபியர் மீது
என்ன உன் மோகமோ?
(கோகுல)
எத்தனையோ குலமிருந்தும் ஆயர் குலத்தில் பிறந்தாய்
எத்தனையோ செல்வமிருந்தும் வெண்ணெயைத் திருடித் தின்றாய்
உலகைக் காக்க வந்து விட்டு உரலில் கட்டுப் பட்டாய்
ஒன்றுமறியா பிள்ளையைப்போல்பல கள்ளத்தனங்கள் செய்தாய்
(கோகுல)
புல்லாங்குழலை ஊதி ஊதி மனதை மயக்குகின்றாய்
மஞ்சள் ஆடை அணிந்து அழகில் மதனை விஞ்சுகின்றாய்
மயிலிறகைச் சூடும் கிருஷ்ணா, என்னையும் சூடிக் கொள்ளாயோ?
மணி மார்பில் மாலையாகும் பேறு எனக்குத் தாராயோ?
(கோகுல)
--கவிநயா
2 comments :
அருமை...
Thank you for your post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News