கே.பி.சுந்தராம்பாள் கண்ணன் பாட்டு பாடுவாங்களா? ராதா சமேதா கிருஷ்ணா!
கண்ணன் பாட்டு நூறாம் பதிவுக் கொண்டாட்டம்-ன்னு சொல்லிட்டு, அது முடிஞ்சவுடன் குமரன் கிட்ட கண்ணனைக் கொடுத்துட்டு, நடையைக் கட்டிறலாம்-னு பார்த்தேன்!
நொங்-ன்னு ஒரு குட்டு, புல்லாங்குழல்-லயே!
அடிங்க...ன்னு வாய் வந்திரிச்சி! திரும்பிப் பாத்தா....
ராதை...ஓ அடிச்சது ராதையா?
அப்படின்னா பரவாயில்லை! அந்த மாட்டுக்காரப் பையன் கண்ணன் தான் கைய வச்சானோ-ன்னு நினைச்சேன்! ராதா சமேதா கிருஷ்ணா-ன்னா ஓக்கே தான்! :)
கம்பீரக் குரல் அரசி, அம்மா, கேபி சுந்தராம்பாள் முருகன் பாட்டு பாடுவாங்க! கலக்குவாங்க! தெரியும்! கண்ணன் பாட்டு பாடுவாங்களோ? இல்லீன்னா...முருகனை அல்லால் வேறோர் குறுகனைப் பாட மாட்டேன்-ன்னு சொல்லிருவாங்களோ??
சேச்சே! அம்மையாருக்கு கனிவான மனசு! கண்ணக் குழந்தையை விரும்பாதாவரும் உண்டோ?
இந்தப் பாட்டு சினிமா, ரீ-மிக்ஸ், Fusion, கச்சேரி-ன்னு எல்லா இடத்திலேயும் பிரபலம்!
ஏன்னா ரொம்ப ரொம்ப சின்னப் பாட்டு!
அதே சமயம் வெஸ்டர்ன் இஷ்டைல்-ல, வேகமா வரும் பாட்டு! Band Music போல களை கட்டும் பாட்டு!
கேளுங்க, கே.பி.எஸ் குரலில்!
அப்படியே, ஒரு Fusion! சாக்ஸபோன்-கத்ரி கோபால்நாத் (DONT MISS!!!)

(எடுப்பு)
ராதா சமேதா கிருஷ்ணா
(ராதா சமேதா)
(தொடுப்பு)
நந்த குமார நவநீத சோரா
பிருந்தா வன கோவிந்த முராரே
(ராதா சமேதா)
(முடிப்பு)
கோபி மனோகர கோகுல வாச
ஷோபித முரளீ கான விலாசா
சுந்தர மன்மத கோடிப் பிரகாசா
(ராதா சமேதா)
ராகம்: மிஸ்ர யாமன்
தாளம்: ஆதி
வரிகள்: ?
குரல்: கேபி சுந்தராம்பாள்
அதே பாடல், பலரின் கைவண்ணத்தில்:
* GNB-GN பாலசுப்ரமணியன் -- (ஷைலஜா அக்காவின் நட்சத்திர ஆணைப்படி!)
* MLV-எம்.எல்.வசந்தகுமாரி, பழைய தமிழ்த் திரைப்படத்தில்
* உன்னி கிருஷ்ணன்
* பம்பாய் சகோதரிகள்
* வயலின்-குன்னக்குடி வைத்தியநாதன்
* வயலின்-கன்னியாகுமரி
* இளவரசர் ராம வர்மா (ஸ்வாதித் திருநாள் பரம்பரையில் வந்தவர்)







