Thursday, April 18, 2013

நாவே!ராமரஸம் பருகு!

சதாசிவ பிரம்மேந்திரரின்  "பிபரே  ராமரஸம் "என்ற பாட்டை 
பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குரலில் கேட்கும்போதெல்லாம் 
நான் மிகவும் உணர்ச்சிவசப்படுவதுண்டு .காரணம் ?
1)இயற்றியவர் சதாசிவ பிரம்மேந்திரர் என்பதாலா?
2)அந்தப்பாடலின் வரிகளா ?
3)பாடியவரின்  இழையும் குரலா?
4) எல்லாவற்றையும் விட முக்கியமானது  அது ஸ்ரீராமநாம மகிமையை 
    சொல்வதனாலோ ?

இன்றுவரை  காரணம் புரிபடவில்லை !

பாட்டைத்தழுவி அதே ராகத்தில் பொருந்தும்வகையில் 
தமிழில் எழுதிவிட்டேன் .கண்ணன்பாட்டு  அன்பர்களுக்கு 

 இனிய ராமநவமி  வாழ்த்துக்கள்!

1)சுப்புசார்  ராமரஸத்தை  ரசித்துருசித்து  உருகி 
    அனுபவிக்கும் ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ள :
http://www.youtube.com/watch?v=KuWu4VX_z8I&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=1

2)கலாவின்  குரலில்  ராமரஸ  இனிமையைச்
    சுவைக்க   கீழே:

நாவே!ராமரஸம்  பருகு!





பிபரே ராமரஸம் ரஸனே பிபரே ராமரஸம்

அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம் 

தூரிக்ருத பாதக ஸமஸர்க்கம் 
பூரித நானாவித பல வர்க்கம் 

புன்மையைப் போக்கும் புனித நன்னாமம்.
நன்மைகளனைத்தும் நல்கும் சுநாதம்.
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம் 


ஜனனமரணபய சோக விதூரம் 
சகல சாஸ்த்ர நிகமாகம சாரம் 

பிறவிமரணபயம்  மாய்க்கும் மாமந்த்ரம்.
மறைகளிலே நிறை ஞானத்தின் சாரம்.
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம் 
 

பரிபாலித சரசிஜ கர்ப்பாண்டம் 
பரம பவித்ர க்ருத பாஷாண்டம்

நான்முகன் படைப்பினைக் காத்திடும் கவசம். 
நாத்திகநோய் நீக்கும் ஔடதக்கலசம் . 
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம் 
 

சுத்த பரமஹம்ச ஆஸ்ரம கீதம் 
சுக சௌனக  கெளசிக முக பீதம்

யோகியர் திளைத்திடும் திவ்விய கானம் .
ஞானியர் பருகிடும் தேனிசைப் பானம் . 
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம் 



THANKS: http://sujamusic.wordpress.com/2012/06/07/pibare-ramarasam/

 FROM GOOGLE SEARCH

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP