Monday, March 25, 2013

கலையாத கனவொன்று...




கலையாத கனவொன்று தந்தாய் – நீயே
நிலையாக வந்தென்றன் நெஞ்சிலே நின்றாய்!
மலைபோல நம்பிக்கை தந்தாய் – வான்
மழைபோல அன்பினைப் பொழிந்தென்னை வென்றாய்!

வனமான என்வாழ்வில் வந்தாய் – வந்து
வளம்தந்து வசந்தமாய் எனையேந்திக் கொண்டாய்!
மனமெங்கும் உனைநிரப்பி வைத்தேன் – பூ
மணம்வீசும் உன்பெயரில் உயிரெழுதி வைத்தேன்!

சுனைபோலப் பெருகு மென்னன்பு – என்
வினையெல்லாம் நில்லாமல் ஓடுமுன் முன்பு!
உனைமிஞ்சும் அன்பெங்கும் இல்லை – உனை
நினையாது ஒருகணமும் கழிவதே இல்லை!

--கவிநயா

10 comments:

  1. அருமை...

    மிகவும் பிடித்தது முடிவில் நான்கு வரிகள்...

    பலமுறை ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. உங்களுப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி தனபாலன் :) மிக்க நன்றி!

    ReplyDelete
  3. அருமை !
    சுப்புசாரின் பாட்டுக்காக காத்திருந்தேன்.அவர் பாடாததால் நானே"கல்லிலே கலைவண்ணம் கண்டான்"என்ற பாட்டின் மெட்டில் பாடிப்பார்த்து ரசித்தேன்!

    ReplyDelete
  4. சந்தத்தோடு பாடுவதற்கேற்ப அழகாக வந்துள்ளன இனிமையான வரிகள்.

    ReplyDelete
  5. வாங்க லலிதாம்மா! நன்றி :)

    ReplyDelete
  6. நன்றி வசந்த்! நலந்தானே?

    ReplyDelete
  7. நன்றி ராஜேஷ்!

    ReplyDelete
  8. இங்கேயும் வந்துட்டேன்!!!. அழைத்து வந்த லலிதாம்மா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. கண்ணன் பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தெள்ளமுது. மிக்க நன்றி கவிநயா அவர்களே!!

    ReplyDelete